Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அல்லைப்பிட்டி மக்களை நிவாரணத்தின் பெயரால் ஏமாற்றிய இராணுவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அல்லைப்பிட்டி மக்களை நிவாரணத்தின் பெயரால் ஏமாற்றிய இராணுவம்

யாழ்ப்பாணம் தீவகத்தில் உள்ள அல்லைப்பிட்டி பகுதியில் கட்டாயப்படுத்தி மீளக் குடியேற்றிய மக்களை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சிறிலங்கா இராணுவத்தினர் நிவாரணம் தருவதாகக் கூறி ஏமாற்றியுள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தை இராணுவத்தினர் தமது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக தென்னிலங்கை மக்களுக்கு காட்டும் முயற்சியாக தென்னிலங்கை ஊடகவியலாளர்கள் விமானம் மூலம் யாழ். குடாநாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.

அவர்கள் அல்லைப்பிட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது மக்கள் இருப்பதாக காட்ட முற்பட்ட இராணுவத்தினர் நிவாரணம் தருவதாக அமைச்சர் மற்றும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தமைக்கு இணங்க நிவாரணம் எடுத்துச் செல்லப்பட்டது.

அனைவரும் குறிப்பிட இடத்தில் வந்து பெற்றுச் செல்லும் படி இராணுவத்தினர் தெரிவித்தனர்

அதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட இடத்திற்கு மக்கள் சென்று சேர்ந்ததும் பொது மக்களை சுற்றி துப்பாக்கிகளுடன் இராணுவத்தினர் காவல் இருக்க தென்னிலங்கைப் ஊடகவியலாளர்கள் தகவலைத் திரட்டிச் சென்றனர்.

கடற் தொழிலாளர் சங்கத்தின் பிரதி நிதியொருவர் இந்த கபட நாடகம் தொடர்பாக கருத்துக் கூறுகையில்,

எம்மை யாழ்ப்பாணத்தில் இருந்து டக்ளஸ் தேவானந்தா மற்றும் அரசாங்க அதிபரும் மறைமுகமாக அச்சுறுத்தி இங்கு கொண்டு வந்தனர்.

அவர்கள் மீண்டும், செய்த கொலையை செய்யவில்லை என்று கூறுவது போல் தற்போது இந்த விடயத்திலும் எம்மை ஏமாற்றியுள்ளனர் என விரக்தியுடன் தெரிவித்தார்.

அதேபோல் யாழ்ப்பாணத்தில் உலக வங்கியுடன் உறுதுணையுடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வீட்டுத் திட்டத்தில் பல பாதிக்கப்பட்ட மக்கள் பலத்த ஏமாற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

வீடுகள் பகுதியாக உடைந்தவர்களும் மற்றும் குறைந்த காணிகள் உள்ளவர்களும் இத்தகைய ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது.

கடந்த காலத்தில் வீடுகள் உடையும் போது குறிப்பிட்ட அளவு காணியில்தான் வீடுகள் கட்டியிருந்தோம்.

தற்போது அரச உத்தியோகத்தர்கள் எமக்கு காணியின் அளவு போதாது எனக் கூறி வீட்டுத் திட்டம் தர மறுத்து வருகின்றனர் என்று அம்மக்கள் தெரிவித்தனர்.

கொழும்பு பிரதேசத்தில் மிகவும் குறுகிய நிலப்பரப்பில் கூட வீடுகள் கட்டப்படுவதுடன் மாநகர சபையும் அணுமதியும் வழங்கி வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தைப் பொறுத்த வரையில் இதனைச் செயற்படுத்தாமல் எமக்கு நிலம் போதாது எனக்கூறி பாதிக்கப்பட்ட எம்மைப் புறம் தள்ளி பணம் படைத்தவர்களுக்கும் பெரிய காணிகள் உள்ள வசதியானவாகளுக்கும் கிடைத்து வருகின்றது.

இதே போன்று வீடுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கான பகுதிக் கொடுப்பனவும் தற்போது வழங்கப்படமாட்டாது எனத் தெரிவித்து பகுதியாக உடைந்தவர்களுக்கும் கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை. கடந்த காலத்தில் வழங்கப்பட்ட போதிலும் இந்தாண்டு புதிய நடைமுறை பின்பற்றப்படுகின்றது.

-புதினம்

எற்கனவே கஸ்டபடுபவர்களுக்கு இப்படியா?? என்னமாதிரி ஆட்கள் இவர்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.