Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலட்சாதிபதியான யாசகியின் கதை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலட்சாதிபதியான யாசகியின் கதை

  By Nirshan Ramanujam 
2013-02-15 10:11:06
 
வழமைபோல சனநெரிசலுடன் நீர்கொழும்பிலிருந்து கொழும்பை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தது அந்த அதிவேக ரயில் வண்டி.
 
தொழில் நிமித்தம் தலைநகருக்கு வருவோர், பாடசாலை மாணவர்கள், இதர பயணிகள் என ஒவ்வொரு ரயில் பெட்டியும் நிரம்பி வழிந்தது.
 
அப்போதுதான் அந்த யாசகம் கேட்கும் குரல் சற்று தூரத்திலிருந்து சத்தமாக கேட்கத் தொடங்கியது.
சோகம் கலந்த தொனி, பசியை வெளிச்சமிட்டுக்காட்டும் முகம், நிமிர்ந்து நடக்க முடியாதவளாய் ஒரு யாசகப் பெண் பயணிகளிடையே தன் இன்னல்களைக் கூறிக் கெஞ்சியவளாய் நடந்து வருகிறாள்.
 
அவள் ஒரு சிங்களப் பெண்.
 
கணவன் தன்னை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டதாகவும் பிள்ளைகளைக் கவனிப்பதற்கும் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் கொஞ்சம் பணம் கொடுத்து உதவி செய்யுங்கள் எனக் கேட்டுக்கொண்டு வந்தவள், திடீரென தனது அடிவயிற்றைக் காட்டி சுகப்படுத்த முடியாத கட்டியொன்று இருப்பதாகவும் குறிப்பிட்டாள்.
 
அனுதாப்பட்ட பயணிகள் தங்களுக்கு இயன்றவரையில் பணம் கொடுத்து உதவினார்கள்.
 
அதே ரயிலில் ரயில்வே பாதுகாப்புத் திணைக்களத்தின் உதவி அத்தியட்சகர் அனுர பிரேமரத்ன, மற்றும் பரிசோதகர் பி.எம்.யு.ஜே. ஏக்கநாயக்க ஆகியோர் பயணிகளின் பாதுகாப்பின் நிமித்தம் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
 
இவர்கள் இருவருக்கும் அந்தப் பெண்ணை விசாரிக்க வேண்டும் என எண்ணத் தோன்றியது.
 
சாதாரணமாக சில கேள்விகளைக் கேட்ட உத்தியோத்தகர்களுக்குக் கிடைத்த பதில் அந்த யாசகப் பெண்ணிடம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு இட்டுச் சென்றது.
 
ஆம்! ஓடும் ரயிலில் யாசகம் செய்து நாளொன்றுக்கு 3000 முதல் 4000 ரூபா வரையில் பணம் ஈட்டுவதாக அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்.
 
அதாவது மாதமொன்றுக்கு 1 இலட்சத்துக்கு மேல் வருமானம் கிடைக்கிறது.
 
இந்தப் பணம் நாளொன்றில் இருவழிப் பயணத்தில் மாத்திரம் கிடைக்கிறது என்பதுதான் அடுத்த அதிர்ச்சித் தகவல்.
விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை அதிவேக ரயில் துரித கதியில் கொழும்பு கோட்டையை அடைந்தது. பாதுகாப்பு உத்தியோத்தகர்கள் இருவரும் அந்த யாசகப் பெண்ணை கோட்டை ரயில் நிலைய பாதுகாப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.
 
கோட்டை ரயில் நிலைய பாதுகாப்புப் பிரிவில் அப்போது கடமையிலிருந்து பிரதான அதிகாரி கே. லலித் குமார விசாரணைகளை மேற்கொண்டார்.
 
அவரிடம் அந்த யாசகப் பெண் கூறிய தகவல்கள் இவை,
என்னை ஒன்றும் செய்துவிடாதீர்கள். நான் களவு எடுப்பதில்லை. வஞ்சகம் செய்வதில்லை. யாசகம் கேட்கிறேன் அவ்வளவுதான்.
 
எனது கணவர் என்னை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். அவர் பிரிந்து சென்று நீண்டநாட்கள் ஆகிவிட்டன. என்னுடைய இரு குழந்தைகளையும் பராமரிக்க வேண்டிய பொறுப்புக்கு உள்ளானேன். பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க வேண்டும், பாடசாலைக்கு அனுப்ப வேண்டும், இதர தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என சவால்கள் பல என்முன் இருந்தன.
 
தீவிரமாக சிந்திக்கையில் தான் என் அடி வயிற்றில் உள்ள கட்டியைக் காட்டி ஏன் யாசகம் கேட்கக் கூடாது என நினைத்தேன். எனக்கு சிறு வயது முதலே அடி வயிற்றில் சிறு கட்டியொன்று இருக்கிறது. அது இப்போது பெரிதாகிவிட்டது.
எனக்கு வேலை செய்யத் தெரியாது. அதனால் யாசகம் கேட்பது என தீர்மானித்து வீதியோரங்களில் திரிந்தேன். அதன் பின்னர்தான் ரயிலில் யாசகம் கேட்கிறேன்.
 
கடவுள் துணையாலும் பொதுமக்களின் ஆசிர்வாதத்தாலும் நானும் பிள்ளைகளும் நன்றாக இருக்கிறோம்” எனக் கூறியிருக்கிறாள்.
 
ஏன் அந்தக் கட்டியை சுகமாக்கிக்கொள்ள முடியாது எனக் கேட்டதற்கு, அப்படி சுகமாக்கிக்கொண்டால் வேறு தொழில் செய்ய முடியாது. பிள்ளைகளையும் பார்க்க முடியாது. இப்போது என் பிள்ளைகள் எந்தக் குறையும் இல்லாமல் கல்வி கற்கிறார்கள் எனப் பதில் கிடைத்தது.
 
அந்த யாசகப் பெண்ணிடம் நடத்திய விசாரணைகளில் கிடைத்த மேலும் ஒரு தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மாதத்தில் எல்லா நாட்களும் ரயிலில் யாசகம் செய்வதை வழமையாகக் கொண்டிருக்கும் இந்தப் பெண் போயா தினங்களில் களனி விகாரையில் முழு நாளையும் கழிக்கிறாள். அங்கு நாளொன்றுக்கு அவளுக்குக் கிடைக்கும் வருமானம் சராசரியாக 9 ஆயிரம் ரூபா.
 
அனுதாபம் காரணமாகவே மக்கள் பணம் தருவதாகவும் கடவுளின் கருணையே தன்னை வாழவைப்பதாகவும் அவள் குறிப்பிடுகிறாள்.
 
மக்களின் நம்பிக்கையை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இந்த யாசகப் பெண் மாளிகாவத்தை மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டாள்.
 
நீதவான் அயேஷா ஆப்தீன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட அப்பெண்ணுக்கு 6 மாத சிறைத் தண்டனையும் 2 ஆயிரம் ரூபா அபராதப் பணமும் விதிக்கப்பட்டது.
 
அவளுடைய வங்கிக் கணக்கில் இலட்சக்கணக்கான பணம் இருப்பதாகவும் அவை தொடர்பான தகவல்களை வெளியிட்டால் அவளது பாதுகாப்பில் பிரச்சினை ஏற்படுவதாகவும் கூறி உண்மையான சேமிப்புத் தொகையை பொலிஸார் வெளியிடவில்லை.
இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிச்சைக்காரர்களின் நாளாந்த வருமானம் குறித்து பல்வேறு வகையில் சிந்திக்கத் தூண்டியது.
 
இப்போது பஸ்களிலும் ரயில்களிலும் பிச்சை எடுப்பது அரசாங்கத்தினால் முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் போலியான காரணங்களைக் கூறி மக்களை ஏமாற்றும் யாசகர்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
-ஆர்.நிர்ஷன்
  • கருத்துக்கள உறவுகள்

பிச்சைக் காரிக்கு அழகான் தமிழ் யாசகி ....பகிர்வுக்கு நன்றி .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.