Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக 28 இராணுவத்தினரின் விவரங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக 28 இராணுவத்தினரின் விவரங்கள் கண்டுபிடிப்பு

வெலி ஓயா கல்யாணபுர சிறிலங்கா இராணுவ முகாமுடன் இணைந்து பணியாற்றிக் கொண்டு விடுதலைப் புலிகளுக்கு உளவுப் பார்த்ததாக கூறப்படும் இராணுவச் சிப்பாய் ஒருவர் அந்த முகாம் அதிகாரிகளினால் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவரைப் போன்று விடுதலைப் புலிகளுக்கு உளவு பார்த்த மேலும் இராணுவத்தினர் மற்றும் அதிகாரிகள் என 28 பேரின் விவரங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உடனடியாக செயற்பட்ட இராணுவ காவல்துறையினர், மேலும் 5 பேரை கைது செய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். முதலில் கைது செய்யப்பட்டவர் திருகோணமலை கோமரன்கடவெல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் 5 மாதங்களுக்கு முன்னர் இராணுவத்தில் இணைந்த இவர், சிங்கப் படைப்பிரிவினைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.

அவர் வெலிஓயா முன்னணி பாதுகாப்பு அரணில் பணியாற்றிய வேளை அடிக்கடி பதுங்கு குழியிலிருந்து வெளியே சென்று செல்லிடப்பேசியில் அழைப்புக்களை எடுத்துள்ளார். இவரின் நடவடிக்கை குறித்து சந்தேகித்த அந்த முகாமைச் சேர்ந்த சார்ஜன்ட் ஒருவர், அவர் அறியாமலே சில காலம் அவரைக் கண்காணித்துள்ளார். அதன்போது இந்த இராணுவச் சிப்பாய் செய்மதி தொலைபேசியொன்றிலிருந்தே அழைப்புக்களை எடுத்துள்ளாரெனத் தெரியவந்துள்ளது.

செய்மதி தொலைபேசியொன்றை சாதாரண இராணுவச் சிப்பாய் பயன்படுத்துவதற்கு வாய்ப்பில்லை என்பதனையும் அது அதிக பெறுமதி வாய்ந்தது என்பதையும் அறிந்திருந்த சார்ஜன்ட், தான் அறிந்துகொண்டவற்றை தனது உயரதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியதையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணைகளில் அவர் விடுதலைப் புலிகளின் உளவாளியாக செயற்பட்டதும், விடுதலைப் புலிகளே அவருக்கு அந்த தொலைபேசியைப் பெற்றுக் கொடுத்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

தன்னைப் போன்று இராணுவத்தினர், அதிகாரிகள் என மேலும் 28 பேர் இராணுவத்தில் இருந்து கொண்டு விடுதலைப் புலிகளுக்கு தகவல்கள் வழங்குவதாக அந்த இராணுவச் சிப்பாய் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.

இராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படை, இராணுவ கொமாண்டோப் பிரிவு மற்றும் இராணுவ காவல்துறையில் இவ்வாறு விடுதலைப்புலி உளவாளிகள் இருப்பதாக கைது செய்யப்பட்ட இராணுவச் சிப்பாய் கூறியிருப்பதாக இராணுவத்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இராணுவச் சிப்பாய் பாதுகாப்பு முன்னரங்கில் பணியாற்றிய சில நேரங்களில் விடுதலைப்புலி உறுப்பினர்கள் பதுங்கு குழிக்கு வந்து அவருக்கு உணவு மற்றும் பானங்களை வழங்கியிருப்பதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இவர் ஏனைய இராணுவத்தினருடனும் கிராமவாசிகளுடனும் சிநேகமாகப் பழகி வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. விடுதலைப் புலிகள், வெலிஓயா பிரதேசத்தில் எவருடனோ பழகுவதாக இதற்கு முன்னர் இராணுவத்தரப்பினருக்குத் தகவல்கள் கிடைத்திருந்தன.

கைது செய்யப்பட்ட பின்னர் இவரே அந்நபர் எனத் தெரியவந்துள்ளது. இந்த சந்தேக நபர் தமிழ்ப் பெண் ஒருவரையே மணமுடித்துள்ளார். அவரின் சகோதர, சகோதரிகள் விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. வெலிஓயாவில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேச முன்னரங்கில் பணியாற்றுபவர் கைது செய்யப்பட்ட இராணுவச் சிப்பாயின் மனைவியின் சகோதரி என்று கூறப்படுகிறது.

விடுதலைப் புலிகளின் தேவைக்காகவே இந்நபர் இராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக இராணுவத்தரப்பு முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். இவர் மூலம் கண்டறியப்பட்ட ஏனையவர்களும் தொடர்புகள் இருக்கக் கூடும் என்றும் அவர்கள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவு

என்ன கந்தப்பு

புதினத்தின்றை ஊதுகுளலோ நீர் ? வெட்டிறதிலம் ஒட்டிறதிலும் வலு மும்மரமா நக்கிறீர் ? உம்முடை புதினக்காறனுக்கு சொல்லடாப்பா புலிபிடிச்சிட்டான் ஆமியெண்டு எலிக்கதை விடால் ஒழுங்கா செய்திய எழுதச்சொல்லி.அரசாங்கம் என்னத்தைக் சொல்றானே அதைக்காவிஒட்ட தமிழிலை கனபேர் வலுவிண்ணணுகள். உதிலை என்ன லாபம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.