Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழ அகதி முகாம்களில் துணைப்படைக்கு ஆள்திரட்ட "றோ' உதவி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் உள்ள ஈழ அகதி முகாம்களில்

துணைப்படைக்கு ஆள்திரட்ட "றோ' உதவி?

தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழ் அகதிகள் மத்தியில் இருந்து துணைப்படைக்கு ஆள்களைத் திரட்டும் முயற்சிகளுக்கு இந்தியாவின் உளவு அமைப்பான "றோ' உதவுவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இலங்கையில் இராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் துணைப்படை களும், ஒட்டுப் படைகளும் தற்போது தமது அணிகளுக்கு ஆள்திரட்டும் முயற்சிகளை இந்தியாவில் ஆரம்பித்திருக்கின்றன என்றும் இந்திய செய்தி ஏஜென்ஸிகளை ஆதாரம் காட்டி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கைத் துணைப்படைகளின் இந்த முயற்சிக்கு இந்தியாவின் உளவு அமைப்பான "றோ'வின் மறைமுக உதவி கிடைப்பதாகவும், இந்திய இணையத்தளம் ஒன்றை ஆதாரம் காட்டி "தமிழ்நெற்' இணையத்தளம் தகவல் வெளியிட்டிருக்கின்றது. தற்போது கருணா குழுவுடன் சேர்ந்து விடுதலைப் புலிகளுக்கு எதிரான அணியாகச் செயற்பட்டுவரும் பரந்தன் ராஜன் தலைமையிலான ஈழத் தேசிய ஜனநாயக முன்னணியே (ஈ.என்.டி.எல்.எவ்) இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஈழ அகதிகள் மத்தியில் இருந்து தமது அணிக்கு இளைஞர்களை கூலிக்கு சேர்த்துக்கொள்ள முயன்று வருகின்றது.

தமிழகத்தில் உள்ள ஈழ அகதி முகாம்களில் தங்கியுள்ள இளைஞர்களை அணுகி அவர்களுக்குப் பணம் வழங்கி அவர்களை கருணா அணியில் சேர்ப்பதற்கு ஈ.என்.டி.எல்.எவ். முயன்று வருகின்றது என்று உள்ளூர் பத்திரிகைத் தகவல்களை ஆதாரம் காட்டி அந்த இந்திய இணையத்தளம் தெரிவித்திருக்கிறது.

இவ்வாறு ஒட்டுப்படைக்கு ஆட்சேர்க்கப்படும் ஒருவருக்கு ஆரம்பத்தில் பத்தாயிரம் ரூபா வழங்கப்படுவதாகவும், அவர்கள் பின்னர் இலங்கையில் சென்று செயற்படும்போது மேலும் கூலிப்பணம் அதிக தொகையில் வழங்கப்படும் என்று உறுதிமொழி அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

2004ஆம் ஆண்டு ஏப்ரலில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணா பிரிந்து சென்றபின்னர் புலிகளுக்கு எதிராக உருவாக்கப்பட்ட கூட்டுத்துணைப்படை அணியில் ஈ.என்.டி.எல்.எவ். அமைப்பு இணைந்து செயற்பட்டு வருகிறது என்றும்

புலிகளுக்கு எதிரான பலமான அணி ஒன்றை உருவாக்குவதற்கு ஈ.என்.டி.எல்.எவ். அணியை "றோ' அமைப்பு பயன்படுத்துகின்றது என்றும் அறிக்கைகள் குறிப்பிடுவதாக அந்தச் செய்தி கூறுகின்றது.

அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் மறைவாகச் செயற்பட்ட பரந்தன் ராஜன் கடந்த மே மாதம் அங்கு தேர்தல் மூலம் ஆட்சி மாற்றம் இடம்பெறுவதற்கு சில வாரங்கள் முன்பாக பெங்களூர் சென்றடைந்தார்.

தற்போது அவர் எங்கிருக்கிறார் என்பது பொலிஸாருக்குத் தெரியவில்லை.

ஆனால், வேறு சில இநதிய அதிகாரிகளின் தகவலின்படி ராஜன் இப்போது இலங்கையின் மட்டக்களப்பில் கருணா அணியினர் செயற்படுகின்ற பிரதான பகுதியில் தங்கியுள்ளார் என்று தெரிகிறது.

இப்படி அந்த இந்திய இணையத்தள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

-உதயன்

þ¨¾ò¾¡§É þÅí¸û «ó¾¿¡û ¦¾¡¼ì¸õ

¦ºöЦ¸¡ñÊÕ츢Èí¸û.

¦¸¡ïº¿¡û §À¡¸ ENDLF ìÌõ ±¾¢Ã¡¸ þý¦É¡Õ

¬ÔòìÌØ¨Å ¯ÕÅ¡ìÌÅ¡í¸û.

Á¡¨Ä¾£×ôÒÃ𺢠þ¾üÌ ´Õ ¿øÄ ¯¾¡Ã½õ.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அகதிமுகாம்களிலுள்ள இளைஞர்களை `பண ஆசை' காட்டி துணைப் படையில் இணைப்பு

தமிழகத்திலுள்ள அகதிமுகாம்களிலிருந்து இளைஞர்களை பண ஆசை காட்டி இலங்கையிலுள்ள இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணைப் படைகளுக்கு ஆட்சேர்ப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள `தென் செய்தி' வார இதழ் இந்த வேலைக்காக தமிழ்க் குழு உறுப்பினர்கள் சிலர் தமிழ் நாட்டில் பகிரங்கமாக செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த வார இதழ் மேலும் தெரிவித்ததாவது;

2005 ஆம் ஆண்டின் நடுவில் தமிழ் நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக சதி வேலைகள் செய்வதற்கும் பொய்ப் பிரசாரம் செய்வதற்கும் பரந்தன் ராசன் இலங்கை அரசினால் அனுப்பி வைக்கப்பட்டார். துரோகக் குழு ஒன்றினைச் சேர்ந்த இவரும் தோழர்களும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான சுவரொட்டிகள் துண்டறிக்கைகள் ஆகியவற்றை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

இது குறித்து தென் செய்தி 16.02.2006 இதழில் முதல் பக்கத்தில் பரந்தன் ராசன் குழுவினரின் நடவடிக்கைகள் குறித்து செய்தி வெளியிட்டிருந்தது.

முந்திய அ.தி.மு.க. அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து பரந்தன் ராசனையும் அவரது குழுவினரையும் கைது செய்து செங்கல்பட்டுச் சிறையில் அடைத்தது. இவர்களை விடுவிக்க டெல்லியிலிருந்து றோ உளவுத் துறை அதிகாரிகள் தமிழகத்திற்கு விரைந்து வந்தனர். அப்போதைய முதலமைச்சரைச் சந்தித்துப் பேச முயற்சி செய்தனர். ஆனால், அவர்கள் முயற்சி வெற்றிபெறவில்லை.

பின்னர், இனி இந்தியாவிற்குள் அடியெடுத்து வைக்கமாட்டோம் என்ற உறுதிமொழியை பரந்தன் ராசன் குழுவினர் எழுத்துபூர்வமாக கொடுத்ததின்பேரில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டு கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பொதுவாக இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் யாரும் மீண்டும் இந்தியா திரும்ப அனுமதிக்கப்பட்டதில்லை. ஆனால், பரந்தன் ராசன் குழுவினர் மீண்டும் இந்தியா திரும்பி பெங்களூரில் தங்களது தலைமை அலுவலகத்தை அமைத்துக் கொண்டு செயல்படத் தொடங்கினார்கள். தமிழ் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் இப்போது தமிழகத்தில் பகிரங்கமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

தமிழ் நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களுக்குச் சென்று அங்குள்ள இளைஞர்களிடம் பொய்யான வாக்குறுதிகளைத் தந்து ஆள் சேர்க்கிறார்கள். சிங்கள இராணுவத்தின் துணைப் படையில் சேர்ந்தால் மாதம் 10,000 ரூபா ஊதியம் கிடைக்கும் என்றும் வேறுபல சலுகைகளும் அளிக்கப்படும் என்றும் கூறி இளைஞர்களைத் திரட்டி கொழும்பிற்கு அனுப்பி வைக்கிறார்கள். அங்கு இவர்களுக்கு இராணுவம் ஆயுதப் பயிற்சி அளிக்கிறது. அதன்பின் இவர்கள் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அங்கு இவர்கள் விடுதலைப் புலிகளின் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர் ஆகியோரை வேட்டையாடி கொன்று குவிக்கிறார்கள். இதற்கான பழி கருணா கும்பல் மீது சுமத்தப்படுகிறது.

கருணா கும்பலில் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரைத் தவிர வேறு யாரும் இல்லை. எனவே, தமிழ் இளைஞர்களைக் கொண்டே தமிழர்களை அழிக்கும் வேலையை இலங்கை இராணுவம் செய்வதற்கு முகவராக பரந்தன் ராசன் செயல்படுகிறார். தமிழ் நாட்டில் அகதிகள் முகாம்களுக்கு நேரில் சென்று பகிரங்கமாக ஆள் திரட்டி வரும் இவருக்கு றோ உளவுத்துறையின் முழுமையான ஆதரவு உள்ளது. அந்தத் தைரியத்தில்தான் இவ்வாறு செயல்படுகிறார்.

துரோகப் படைக்கு ஆள் திரட்டும் பரந்தன் ராசனின் நடவடிக்கைகள் தமிழ் நாட்டில் தங்கு தடையில்லாமல் நடைபெற்று வருகிறது. பொலிஸில் அவர் மீது பல வழக்குகள் இருந்த போதிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.