Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டாக்டர் சிவசங்கரின் விடுதலைக்காக குரல் கொடுங்கள்

Featured Replies

மருத்துவர் இ.சிவசங்கர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பலரும் கவலை கொண்டுள்ளனர். மனித உரிமைகள் தொடர்பில் டாக்டர் சிவ சங்கர் அதீத கவனம் செலுத்தினார். சாதாரண மக்கள் நசுக்கப்படும் போதெல்லாம் அவர்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டும் என்பது அவரின் கொள்கையாக இருந்தது. அநீதி நடப்பதாக ஒரு மருத்துவர் அறியும் போது அதற்காகக் குரல் கொடுப்பது நியாயமா னது மட்டுமல்ல, மனித உயிர்களைப் பாதுகாக் கின்ற ஒரு உத்தம மருத்துவரின் தார்மீகக் கட மையும்கூட.

 

அதைத்தான் டாக்டர் சிவசங்கரும் செய்திருந்தார். எனினும் மஞ்சள்காமாலைக் கண்களுக்கு எல்லாமும் பயங்கரவாதமாகக் காட்சி கொடுத்து விடுகின்றது.

 

மருத்துவர் ஒருவர் நியாயம் கேட்கிறார் எனில் அவருக்குச் சரியான விளக்கத்தைக் கொடுப்பது தான் ஜனநாயகத்தின் பண்பு. ஆனாலும் டாக்டர் சிவசங்கரின் விடயத்தில் படைத்தரப்பு நடந்துகொண்ட முறை மிகவும் அபத்தமானது. ஒருவர் வெளிப்படையாக -நேரடியாக நியாயம் கேட்கிறார் எனில், அவர் தொடர்பில் பெருமைப் பட வேண்டும்.

 

உள்ளிருந்து வேரறுக்கின்ற இந்த உலகில் நேர்மையும் வெளிப்படைத்தன்மையும் நியாய மான போக்கும் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற சிந்தனையுமே அவசியமானவை.
இவையே நாட்டின் ஒற்றுமைக்கும் இறை யாண்மைக்கும் மக்களின் சுபீட்சமான வாழ்வுக் கும் அவசியமானவை. ஆனாலும் உண்மைகள், கடும் உறைப்பும் கடுப்புமாகிவிட்ட இந்த நாட்டில் டாக்டர் சிவசங்கர் என்ற ஒரு நல்ல ஆத்மா சிறையில் வதைபடு கின்றது-வதைக்கப்படுகின்றது.


இத்தகைய வேதனை தரும் சம்பவங்கள் தொடர்பில் பேசாதிருப்பது பெரும் பிழை. ஆகையால்; மருத்துவர் சங்கங்கள், பொது அமைப்புகள், அரசியல்வாதிகள், கல்வியாளர்கள், அரச உயரதிகாரிகள் அனைவரும் இணைந்து டாக்டர் சிவசங்கரின் விடுதலைக்காகக் குரல் கொடுக்க வேண்டும். டாக்டர் சிவசங்கரின் விடுதலை தொடர்பில் யாழ்ப்பாண மருத்துவர் சங்கம் எடுத்த நடவடிக்கை என்ன?அந்த நடவடிக்கைக்கு கிடைத்த பதில் என்ன? 

 

மேற்கொண்டு, டாக்டர் சிவசங்கரின் விடுத லைக்காக யாழ்ப்பாணத்து மருத்துவப் பெரு மக்கள் முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் என்ன என்பதை எங்களைப் போன்ற சமானியர்கள் அறிய நினைப்பதில் எந்தத் தவறும் இருப்பதா கத் தெரியவில்லை. எனவே மருத்துவர் சங்கம் அவற்றை தெரியப் படுத்துவதோடு மருத்துவர் சிவசங்கரின் விடு தலைக்காக அனைத்துத் தரப்பினரும் குரல் கொடுத்து அவரின் விடுதலையை விரைவுபடு த்த முன்வர வேண்டும்.

 

http://www.valampurii.lk/index.php?option=com_content&view=article&id=587:2013-02-20-07-07-26&catid=79:2012-09-26-08-59-23&Itemid=491

வலம்புரி இரண்டாம் தடவையும் எழுதிவிட்டது. இதில் எதுவும் முன்னேறவில்லை. இராணுவத்தில் சேர்க்க பட்ட பெண்கள் உண்மையான சுதந்திரம் அனுபவிக்கிறார்களாயின் இந்த டாக்கர் இப்படி சிறையை சந்தித்திருக்கமாட்டார்.

நீதிநியாயத்திற்காகவும், மக்கள் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்த பெருமகன் புறக்கணிக்கப் பட்டது மிகத்தவறானது.

மருத்துவர்சங்கம் பிற அமைப்புகள் கட்டாயமாக இதில் அக்கறை காட்டவேண்டும். இராணுவத்தில் சேர்க்கப்பட்ட அபலைப்

பெண்களிற்காகப் பேசப்போனவருக்கு, அதுவும் ஒரு மருத்துவரிற்கு, இப்படி நடந்துள்ளது மிகச் சோகமானது. சமூக அமைப்பினர்,

சட்டத்தரணிகள் போன்றோர் முன்வந்து உதவவேண்டும்.

இராணுவத் தடுப்பில் உள்ள வைத்தியர் சிவசங்கர் மீது வழக்கு      

27/02/2013 at 8:52 am

      

        

court-150x150.jpg

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள வைத்தியர் இரட்ணசிங்கம் சிவசங்கர்

தொடர்பான வழக்கு விசாரணை நாளைய தினம் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இவர்

கொக்காவில் இராணுவ முகாமிற்குள் அத்துமீறி உள்நுழைந்தமை மற்றும்

இலத்திரனியல் உபகரணங்களை கொண்டு சென்றமை தொடர்பில் இராணுவத்தினரால் கைது

செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.கடந்த

ஆண்டு டிசம்பர் மாதம் 29 திகதி கைது செய்யப்பட்ட வைத்தியர் தற்போது

அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். வைத்தியர் சிவசங்கரின்

வழக்கு மீண்டும் நாளை முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு

எடுத்தக்கொள்ளப்படவுள்ளதாக அவரின் சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம்

தெரிவித்தார்.

25 வருடங்களாக  பணியாற்றிவரும் இவர் யாழ் வைத்தியசாலையில் இருந்து கைது

செய்யப்படுவதற்கு இரு வாரங்களுக்கு முன்னரே அனுராதபுரம் போதனா

வைத்தியசாலையின் இரத்தவங்கி பொறுப்பதிகாரியாக கடமையேற்றிருந்தமை

குறிப்பிடத்தக்கது.

http://tamilleader.com/?p=6142

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.