Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாத விவாதங்களிற்கிடையே தெரிய வரும் முக்கிய நிலைப்பாடுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாத விவாதங்களிற்கிடையே தெரிய வரும் முக்கிய நிலைப்பாடுகள்

-பீஷ்மர்-

கண்காணிப்புக் குழுவின் நடவடிக்கைகள், அதன் பாதுகாப்பு பற்றிய விடயங்கள் பேசப்பட விருந்த சூழலில் அது பற்றிய தனது கருத்து நிலைப்பாடுகளை இலங்கை அரசாங்கத்துடனிருந்து செயலமர்வு நிலையில் தான் எதையும் பேசமுடியாதென்றும் நோர்வே அரசாங்கத்திடம் அதனை நேரடியாகக் கூறுவதே தனது நிலைப்பாடென்றும் விடுதலைப்புலிகள் அண்மையில் எடுத்த நிலைப்பாடு ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியதாகவுள்ளது.

கண்காணிப்புக் குழுவைப் பற்றியோ ஒழுங்கு செய்த கூட்டத்தையே அரசியல் பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதி என்று எடுத்துகூறி புலிகள் பேச்சுவார்த்தைகளைக் குழப்பிவிட்டனர் என்ற குற்றச் சாட்டை அரசாங்கம் இப்போது சர்வதேச அரங்கிலும் குறிப்பாக உள்நாட்டு நிலையிலும் தனது கேடயமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.

கண்காணிப்புக் குழு கூட்டம் பற்றிய தனது நிலைப்பாடுகளை அரசாங்கக் குழுவுடன் சேர்ந்திருந்து சொல்ல வேண்டியதில்லை என்ற தமது நிலைப்பாட்டை விளக்குவதற்காக விடுதலைப்புலிகள் ஒஸ்லோவில் வெளியிட்ட அறிக்கை அரசாங்கத்திற்கு சில பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ளது. அதன் காரணமாக சென்ற 18 ஆம் திகதி இலங்கையரசாங்கம் சற்று விரிவான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில், விடுதலைப்புலிகள் தமது அறிக்கையில் வற்புறுத்திய இரண்டு விடயங்கள் முக்கியத்துவம் படுத்தப்பட்டுள்ளன.

அ. விடுதலைப் புலிகளின் ஆள்புலம் பற்றியது.

ஆ. தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதித்துவம் பற்றியது.

இவை இரண்டுமே மிக முக்கியமானவை. முதலில் விடுதலைப் புலிகள் எடுத்த நிலைப்பாட்டின் முக்கியத்துவத்தை நோக்குவோம். தாங்கள் எடுத்த தங்கள் நிலைப்பாட்டினதும் நாங்கள் எடுத்த முடிவினதும் அடித்தளமாகக் கொள்ளும் நிலைப்பாட்டையும் விடுதலைப்புலிகள் அதன் அறிக்கையில் விளக்கியுள்ளனர்.

1. தம்மிடத்து ஒரு ஆள்புலம் உள்ளது என்பது.

2. விடுதலைப்புலிகளே இப்பொழுது இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்திற்கான நிறுவனம் என்பது.

இந்த இரண்டிற்கும் பதிலிறுக்குமுகமாக கடந்த 18 ஆம் திகதி அரசாங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் ஆள்புலமாக உள்ள பிரதேசம் விடுதலைப் புலிகளின் அதிகாரத்தினுள் இருப்பினும் இலங்கை அரசாங்கத்தின் நிர்வாக அலகுகளுக்குள்ளேயே வருகின்றது என்பது அவ் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்தகைய பிரதேசங்களிலுள்ள அரசாங்க நிறுவனங்களின் சுருக்கமான விபரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வாதத்தை முன்னெடுக்கும்போது அரசாங்கம் யுத்த நிறுத்த உடன்படிக்கையில் கையெழுத்திட்ட நிலையில் இருந்து மாற்றம் பெறுகிறது. அதாவது கைச்சாத்திட்ட வேளையில் தனக்கு சமனாக விடுதலைப்புலிகளையும் ஏற்றுக்கொண்ட அரசாங்கம் இப்பொழுது தோன்றியுள்ள புதிய அரசியற் சூழ்நிலை காரணமாக அதிலிருந்து பின்வாங்கிப் புலிகள் தமக்கு சமனானவர்கள் அல்ல. அவர்கள் சண்டையிடும் ஒரு குழுவினரே என்கின்ற நிலைப்பாட்டை வலுவாகவே கூறுகின்றனர்.

இப்படிச் செய்வதன் மூலம் வட,கிழக்குப் பிரதேசங்களில் தமக்கே முன்னுரிமையுண்டு என்பதை அரசு வற்புறுத்துகிறது. தங்களது நிர்வாக இயந்திரத்திடமே நடை முறையிலுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. இப்படிச்சொல்லும் போது நீங்கள் ஏன் அப்பகுதியை ஒரு தனித் தமிழீழமாக பிரகடனப்படுத்தவில்லை என்ற கேள்வியை மிகுந்த மறைமுகமாகக் கேட்கிறது. அத்துடன் நின்று விடாமல் சற்று மேலே போய் வட, கிழக்கிற்கு வெளியே வட,கிழக்கில் இருப்பதிலும் பார்க்க அதிகமான தமிழர்கள் வாழ்கிறார்கள் என்றும் கூறுகிறது.

இப்படிச் கூறுவதற்கான பிரதான காரணம் வடக்கு, கிழக்கிற்கென தனியானதொரு அலகு வேண்டுவதில்லை என்பதை மிகுந்த சூசகமாகத் தெரிவிக்கின்றது. இதன் மூலம் சமஷ்டித் தீர்வுகூட தேவையில்லை என்பதை அரசாங்கம் தெட்ட தெளிவாக எடுத்துக் கூற முற்படுகிறது. இந்த நிலைப்பாடுகள் ஜே.வி.பி., ஹெல உறுமயவின் அடிப்படையான நிலைப்பாடுகளாகும்.

வடக்கும் - கிழக்கும் மத்திய பிரதேசங்கள் போல் பல்லின, பல்லாண்டு, பல்மத அம்சங்களைக் கொண்டது என்று கூறுவதன் மூலம் வட, கிழக்கிற்கு வெளியே நடைபெறும் அதே அமைப்புதான் வடக்கு - கிழக்கிற்கும் பொருந்தும் என்பது இலை மறைகாயாய் சொல்லப்படுகிறது.

இதைவிட பாரதூரமானது இரண்டாவது அம்சம். அதில் விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் அல்ல என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. அது எடுத்துக்கூறப்பட்ட முறைமை மிகுந்த ஆழமான உள்ளார்த்தங்களைக் கொண்டுள்ளது.

விடுதலைப் புலிகளே இன்றைய நிலையில் தமிழ் பிரச்சினைகளை எடுத்துக் கூறுபவர்களாக இருக்கின்ற நிலைமையை உள்வாங்கி அரசாங்கம் தனது நிலைப்பாட்டை சுற்றிவளைத்து எடுத்துக் கூறுகிறது.

இதன்படி, விடுதலைப் புலிகள் தமிழர் பிரச்சினையை எடுத்துக் கூறுபவர்களாக இருப்பதன் காரணத்திற்காக தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகக் கொள்ளக்கூடாது என்ற தமது நிலைப்பாட்டை இன்னொரு வகையில் அரசு வெளிப்படுத்தியுள்ளது.

அதாவது, பேச்சுவார்த்தைகளுக்கு மாத்திரமே விடுதலைப் புலிகள் என்றும் சமாதானம் எனும்போது தாங்கள் வேறு பலருடன் தமிழ் சக்திகளுடன் கருத்துப் பரிமாறிக் கொள்ள விரும்புகிறோம் என்பதை சொல்லாமலே சொல்கின்றனர். இது மிகவும் ஆழமானதொரு விடயம். ஏனெனில், விடுதலைப் புலிகளுடன் பேசி ஒப்புக் கொள்ளப்படும் சமாதானத் தீர்வினை (அப்படியொன்று வந்தால்) நிர்வகிக்கும் தனியுரிமை புலிகளுக்கு சென்று விடுமே என்ற பயம் இதன்மூலம் நன்கு தெரிகிறது.

இதிலும் பார்க்க முக்கியம் விடுதலைப் புலிகளுக்கு மேலதிகமாக யார் யாருடன் பேச வேண்டும் என்பது பற்றிக் கூறாமல் இருப்பதுதான். நிச்சயமாக இது முஸ்லிம்கள் பற்றியது அல்ல. அரசாங்கம் இப்பொழுது தன்னோடுள்ள தமிழ் ஆதரவாளர்களையும் விடுதலைப் புலிகளுக்குச் சமனாகக் கொண்டு வரவிரும்புகின்ற கருத்து இதன் மூலமாக தெட்டத் தெளிவாகத் தெரிகிறது.

இவை மிக மிக ஆழமான விடயங்கள். வெறுமனே வாத விவாதங்களுக்காகக் கொண்டுவரப்படும் வாதங்கள் என்று புறந்தள்ளிவிடக் கூடாது. இவற்றிற்கு ஒரு ஜனநாயக முலாம் பூசி இந்தியாவையும் சர்வதேச நாடுகளையும் நம்பவைக்கின்ற ஒரு போக்குமுள்ளது என்பதையும் மறந்துவிட கூடாது.

இந்த நிலையில் இலங்கைத் தமிழர் உரிமைப் போராட்டத்தில் நியாயபாடுகளையும் இலங்கை முழுவதிலும் சம அந்தஸ்து கொடுக்க மறுக்கப்பட்டதன் பின்னரே வட, கிழக்குப் பிரதேசம் முக்கியப் படுத்தப்பட்டது என்பதும், இதற்கு பண்டாரநாயக்காவே ஒத்துக் கொண்டார் என்பதும் இன்று முற்றிலும் மறுக்கப்பட்ட விடயங்களாகி விட்டன.

இப்பொழுதுள்ள வாதம் ஜே.வி.பி., ஹெல உறுமயவின் "ஏக்கிய" (ஒரு நிலைப்பட்டதென்ற) என்ற வாதமாகும். இதனுள் மாநிலத்தில் சுயாட்சி என்ற நிலைப்பாட்டிற்கே இடமில்லை. அதிகாரப் பரவலாக்கத்திற்கு இடமில்லை.

இந்த உள்ளார்த்தங்களை நன்கு விளங்கிக் கொண்டு அரசின் இந்தப் போக்குகளுக்கு எதிராக தமிழர் கோரும் நியாயங்களை முன்வைக்க வேண்டுவது சிவில் நிறுவனங்களின் அத்தியாவசிய கடமையாகியுள்ளது. வடக்கு, கிழக்கிலுள்ள பல்கலைக்கழக ஆசிரியர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், பாடசாலை ஆசிரியர்கள் போன்ற தொழிலின்மையாளர் நிறுவனங்கள் இவை பற்றி எதுமே பேசாமல் இருக்கின்றன.

இவர்களுக்கு ஏற்கனவே சற்று தயக்கமான சுபாவம் உண்டு. இப்பொழுது கடந்த 3,4 மாதங்களாக ஏற்பட்டுள்ள இராணுவம் பற்றிய பயம் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.

"பயங்கரவாதத்திற்கெதிரான" மேற்கொள்ளப்படுகின்றன என்ற பெயரில் அரசாங்கம் மேற்கொள்ளும் குண்டு வீச்சுகளைப் பற்றி வாய் திறக்காத குழுமங்களே ஜனநாயகத்தின் பேரால் விடுதலைப் புலிகளுக்கு சமனாகக் கொண்டு வரப்படுவர் என்பதைக் கூறுவதற்கு அதிக ஊகம் வேண்டியதில்லை.

எங்கோ இடியிடித்து மின்னலடித்து எங்கோ மலைபெய்தது போல திடீரென இந்தியா தனது நிலைப்பாட்டை தெட்டத்தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.

எக்காரணம் கொண்டும் அப்பாவித் தமிழ் மக்கள் மீது அடக்கு ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்படக் கூடாது என்பதில் இந்தியா மிகுந்த கவனம் செலுத்தியுள்ளதை இந்திய தொலைக்காட்சி நிறுவனங்கள் பேசுகின்றன.

இந்தியாவின் கண்களை மறைத்து எடுக்கப்பெற்று வந்த நடவடிக்கைகள் இனித் தொடர வாய்ப்பில்லை.

புகலிட தமிழ் நிறுவனங்கள் சில இராணுவத்திற்காக அனுதாபப்படும் உட்சண்டைக் குத்துப்பாடுகள் நிலவும் அதேவேளையில் இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் இராணுவத்தினரிடம் நடவடிக்கையொழுக்கம் (டிசிப்பிளின்) குறைவு என்று கூறியிருப்பது நிச்சயமாக ஒரு புதிய பரிமாணமே.

தமிழ் மக்களின் அறிவு ஜீவிகளும் சமூக ஆர்வலர்களும் எடுத்துக் கூற வேண்டிய விடயங்கள் பல உள்ளன. இது பற்றிய உடனடி ஊக்கம் அவசியமாகிறது.

-தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.