Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்மையில் யார் முட்டாள்.. நாமா.. ராஜபக்சேவா..??!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
போர் நடந்தபோது ஏழு நாட்டு இராணுவமும் இலங்கைக்கு உதவி செய்தது. இதில்
அமெரிக்கா கடந்த ஆண்டு ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றியது. இந்தியாவும் பல்
பிடுங்கப்பட்ட தீர்மானத்தை ஆதரித்தது. கொலைக்காரனே போர்குற்றத்தை
விசாரித்து தண்டனை கொடுக்கவேண்டும் என்று உலகத்திலேயே ஒரு வினோதமான அறிவுரையை ஐ.நா.வும் உலக நாடுகளும் இலங்கைக்கு வழங்கியது. "இனப்படுகொலை" என்று சொல்லாமல் "போர்குற்றம்" என்று சொல்கிறது. "சுதந்திர ஈழத்தை" பற்றி பேசாமல் "சரிகட்டுதல்"-ஐ பற்றி பேசுகிறார்கள்.

ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றியவுடன் நாமெல்லாம் அப்பாடா என்று
மகிழ்ச்சியடைந்தோம். இந்தியா ஆதரித்தவுடன் நமது மக்கள் ஏதோ இனி அவர்கள்
வாழ்வில் விடியல் ஏற்பட்டுவிடும் என்று சிந்தனை இழந்தோம். நடக்கும்
அரசியலை, இராஜதந்திரத்தை, ஏமாற்று வேலையை புரிந்துகொள்ளகூட திராணி இல்லாமல்
நாம் இங்கே தலைவன், தலைவி என்று ஆதாரித்துகொண்டிருக்கிறோம். தமிழர்களது
மூளை மழுங்கழிக்கப்பட்டது. இந்த வருடமும் அதேபோன்ற ஒரு நாடகமே நடக்கிறது.

எல்லோரும் சேர்ந்தே போரை நடத்தினார்கள். எல்லோரும் இலங்கையில் மூதலிடு
செய்துள்ளனர் (இலங்கை ஒன்றும் பெரிய சந்தை கிடையாது...கேந்திர
முக்கியத்துவம் வாய்ந்த இடமாக உள்ளதால் போட்டி போட்டு கொண்டு
ஒட்டிகொண்டுள்ளனர்). இதை புரிந்துகொண்டுள்ள இலங்கை அரசாங்கம் ஆட்டம்
போட்டுகொண்டிருக்கிறது.

போரை நடத்தியவர்களே ஐ.நா.வில் தீர்மானம்
கொண்டு வருவார்களாம். போரை நடத்தியவர்களே அத்தீர்மானத்தை ஆதரிப்பார்களாம்.
இனப்படுகொலையை போர்க்குற்றம் என்று சொல்வார்கள். சர்வதேச சமுதாயம்
விசாரிக்காமல் இலங்கையே விசாரித்து அவர்களே தண்டனை கொடுத்துக்கொள்ள
வேண்டுமாம். தனிநாட்டை, சுதந்திர ஓட்டெடுப்பை பற்றி பேசாமல் மறுசீரமைப்பை
பற்றி பேசுகிறது. சுதந்திர போராளிகளை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி
முடக்கி வைத்துள்ளது (அகிம்சை முறையில் போராடிய நெல்சன் மண்டேலாவையே
தீவிரவாதிகள் என்றவர்கள்தானே இவ்வுலகத்தார்).

உலகம் ஒரு நாடகம் ஆடுகிறது. இந்தியா ஒரு கள்ள நாடகம் போடுகிறது. அதைவிட கொடுமை தமிழக
அரசியல்களமும் அரசியல்வாதிகளும் போடும் நாடகம்...இத்துணை இலட்சம் மக்கள்
கொல்லப்பட்டபோதும், இன்றும் அங்கு நடைபெற்று கொண்டிருக்கும் உளவியல் போரை,
கலாச்சார சீரழிவை பார்த்துகொண்டிருக்கும்போதும் அடுத்த தேர்தலை வைத்தே
தமிழ்நாட்டில் அரசியல் நகர்வு நடந்துகொண்டிருக்கிறது...

தமிழினம் இவ்வளவு கொடூரமான இழப்பை சந்தித்ததை பார்த்த பின்பும் தமிழக அரசியல்வாதிகள்
இன்று வரை ஓரணியில் சேராமல் இருப்பது தமிழினத்தின் மிகப்பெரிய சாபக்கேடு...!

(காவிரி பிரச்சனை என்றாலும், அணுக்கழிவை கோலாரில் கொட்டுவோம் என்று
சொன்னதுதான் கர்நாடகாவின் ஆளும் கட்சி, எதிர் கட்சி, மத்திய அமைச்சர் என்று
பார்க்காமல் ஒற்றுமையாக போராடி இரண்டே நாட்களில் பின்வாங்க வைத்தார்கள்
அவர்கள் (திராவிடர்கள்) எங்கே தமிழர்கள் (திராவிடர்கள்) எங்கே...)

அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் என்பது மறுசீரமைப்பை இன நல்லிணக்கத்தை.. மட்டுமே
வழியுறுத்துகிறது [அதாவது LLRC பரிந்துரைகளுக்குள் தமிழர்களின் அபிலாசைகளை கட்டிப்போட நினைக்கிறது.] இனப்படுகொலை என்று சொல்லாமல் போர்குற்றம் என்று மட்டுமே
சொல்கிறது. மேலும் இலங்கை அரசாங்கமே அவர்களுடைய போர்க்குற்றத்தை விசாரித்து
கொள்ள வேண்டுமாம். கொலை செய்தவனே அவனை விசாரித்து தண்டனை கொடுத்து
கொள்ளவேண்டுமாம். அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தினால், இந்தியா
ஆதரிப்பதை தமிழர்கள் வரவேற்றாலோ, மகிழ்ச்சி அடைந்தாலோ தமிழர்களை விட
முட்டாள்கள் யாரும் இல்லை...

இராஜபக்சே தமிழர்களை முட்டாளாக நினைப்பதைவிட தமிழக அரசியல் தலைவர்கள் தமிழர்களை முட்டாளாக செய்வதைத்தான் ஜீரணிக்கவே முடியவில்லை...

அடுத்த தேர்தலுக்காக நடக்கும் நாடகமே இன்று யாவும் நடந்துகொண்டிருப்பது...மீண்டும் ஏமாற்றமடைய தமிழா தயாரா இரு...
 
535409_10200573395915633_678121385_n.jpg

 

What they wanted..?! they wanted to kill and they done it.. now continuing another drama..! this is what called "democracy" :(
 
நன்றி முகநூல்..!

Edited by nedukkalapoovan

வருகின்ற ஐ. நா தீர்மானம் இலங்கைக்கு நெருக்கடி தரும்?
>> நெருக்கடி இலங்கைக்கு கிடையாது, ராஜபக்சேவிற்கு.

 

 

ஐ. நா தீர்மானம் ராஜபக்சே அரசினை முழுமையாக தண்டிக்குமளவு வலுவுள்ளதாக இருக்குமா?
>> போர்க்குற்றவிசாரணை என்கிற பெயரில் விசாரணை இன்னும் அடுத்த 20-30 ஆண்டுகள் நடைபெரும். இது தான் சிலியிலும், லைபீரியா, போஸ்னியாவிலும் நடந்தது. சூடான் உள்ளிட்ட நாடுகளுக்கு சர்வதேச விசாரனை அறிவிக்கப்பட்ட போதிலும் அல்.பசீர் என்கிற சூடானின் போர்க்குற்றவாளி அதிபர் தண்டிக்கப்படவில்லை.

 

 

அமெரிக்கா முன்மொழியும் ஐ. நா தீர்மானத்தினால் தமிழர்களுக்கு என்ன பயன்?
>> தற்போதய ஐ. நா தீர்மானத்தில் , ’நல்லிணக்கம்’ தமிழ்-சிங்கள மக்களிடத்தில் ஏற்படுத்த ராஜபக்சே முனையவில்லை எனவே இலங்கை அரசே நடத்திய LLRC நல்லிணக்க ஆணையத்தில் சொல்லப்பட்ட பரிந்துரைகளை ஒன்றன்பின் ஒன்றாக நடைமுறைப்படுத்த வழியை ஏற்படுத்துவது என்பதே. இதனால் என்ன பயன் என்ன என்பது உங்கள் அறிவிற்கு விடுகிறேன்.

 

 

 

இந்த தீர்மானத்தினால் அமெரிக்கா-மேற்குலகம் எதை சாதிக்க நினைக்கிறது?.
>> தனக்கு கட்டுபட்டு ராகபக்சே நடக்க வேண்டும் அல்லது அவ்வாறு பொம்மையாக செயல்படக் கூடிய ரணில் போன்றோரை முன்மொழிந்து ஆட்சி மாற்றத்தினை இந்தியாவும், அமெரிக்காவும், மேற்குலகமும் செயல்படுத்தும்.

 

ராஜபக்சேவிற்கு பதில் ரணில் அல்லது சந்திரிகா இதுவே தமிழர்களுக்கான தீர்வு. யார் கையில் சாக விருப்பம் என்று கேட்கிறார்கள்.


 

தமிழர் பிரச்சனையில் எதற்காக இவர்கள் அக்கறை காட்டுகிறார்கள்.?.
>> சிங்களத்தினை கையாள்வதற்கு துருப்புச் சீட்டு “தமிழர் பிரச்சனை” . தமிழர்களுக்கு பிரச்சனை இருக்கும் வரையில் சிங்களத்தினை மிரட்ட முடியும்.

 

 

இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களிக்குமா?
>> வாக்களிக்கும். ஏனெனில் இது இலங்கைக்கு எதிரானது இல்லை என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். தெற்காசிய பிராந்தியத்தில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை நாங்களும் ஏற்கிறோம் என்பதை சூசகமாக வெளிப்படுத்தவே இந்த வாக்கெடுப்பு. இதன் மூலமாக இரண்டு பயன்கள் . 1. தமிழர்களை திருப்தி படுத்தி விட முடியும். 2. இலங்கை அரசிடம் தமக்கு தேவையான ’செபா’ போன்ற ஒப்பந்தங்களை நிறைவேற்றிக்கொள்ள முடியும். சர்வதேச நகர்வுகளையும், நுணுக்கங்களையும் தமிழர்களிடத்தில் மறைத்து தமிழீழக் கோரிக்கையை தவிர்த்து விட முடியும்.


 

தமிழர்கள் என்ன நிலைப்பாட்டினை எடுக்கவேண்டும்?

>> சர்வதேச விசாரனையை வரவேற்கிற அதே நேரத்தில் , பாதிப்புக்குள்ளான தமிழர் சமூகத்திற்கு தீர்வாக ‘ தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பினை நடத்தி, இலங்கை அரசின் அரசியல் சாசனத்தினையும், சன நாயகத்தினையும் ஏற்றுக்கொள்கிறீர்களா அல்லது தனி நாடு அமைக்க விருப்பமா? “ என்கிற கோரிக்கை அடிப்படையில் கருத்தரிந்து நடைமுறைப்படுத்த வேண்டும். என்று ஒற்றைக்கோரிக்கையினை ஒன்றுஅட்டு வைக்கவேண்டும். நாம் தவணைமுறையில் விடுதலையை நோக்கி பயணிக்க முடியாது. ஒற்றை முழக்கம் வைக்கப்படுதல் அவசியம். அதைத் தவிர்த்த வேறெதுவும் காலத்தால் நம்மை பிளவுபடுத்திவிடும்.

 

 

 

ஐ. நா தீர்மானத்தின் அரசியலை எவ்வாறு புரிந்து கொள்ளலாம்?
>> இதன் அரசியல் அர்த்தம் - இது இலங்கைக்கும் மேற்குலகித்திற்கும் நடக்கும் பனிப்போர், இதில் தமிழர் தீர்வினைப் பற்றிய விவரங்கள் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் வைக்கப்படவில்லை.. ஆகவே இதற்கு தமிழர்களின் அரசியல் தீர்விற்கும் நேரடியாக தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. சர்வதேச விசாரனையை முழுமனதுடன் வரவேற்கிறோம், ஆனால் தமிழர்களுக்கு இதில் தீர்வினை வெளிப்படையாக சர்வதேசம் அறிவிக்க வில்லையெனில், இது , தமிழர்களுக்கானது என்று நாம் ஏற்றுக்கொள்ளமுடியாது. நாம் பகடைக்காயாக பயன்படுத்தப்பட எத்தனை காலம் அனுமதிக்கப்போகிறோம்?... இந்தியா இலங்கை ஒப்பந்தம் போன்றதொரு ஒப்பந்தமாக அமையாமல் தடுப்பது நமது வரலாற்று கடமை. செய்வோமா?....


 

பேசுங்கள். விவாதியுங்கள். பகிருங்கள்.

மே பதினேழு இயக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஐநா தீர்மானத்துக்கும் தமிழர்களின் உண்மையான நீதியான சமாதானத்துக்கும் தொடர்பில்லை.

 

பல நாடுகளுள் இந்த இலங்கையும் ஒரு காலாள் (pawn) மேற்குலக நாடுகளுக்கு. இந்தக் காலாட்படையின் பக்கம் நல்ல அடிவிழுந்து அரசன் தோல்வியைத் தழுவும் நிலையில் இருந்தார். அதை இந்த மேற்கு நாடுகளும், இந்தியாவும் சேர்ந்து சமாதானம் பேசி இழுத்துவந்து எதிராளியின் பக்கத்தைத் தொட வைத்தார்கள்.

 

அந்தக் கரையைத் தொட்ட காலாள் இழந்த அரசியை (Queen) எடுத்துவிட்டார்.. :D இப்ப அரசி ஓடித்திரியிறா.. கொண்டுபோய் விட்ட இந்தியாவாலும், மேற்குலக நாடுகளாலும் பிடிக்கமுடியாமல் இருக்கு.. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.