Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரச சார்பற்ற அமைப்புகள் அமர்வில்; அரசுக்கு எதிராக சாட்சியமளிக்க தமிழ் உறவுகள் ஜெனிவாவுக்கு

Featured Replies

இன்று ஆரம்பமாகும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில், காணாமற்போனவர்களின் உறவுகளும் அடுத்த வாரமளவில் சாட்சியம் அளிக்க உள்ளனர். அவர்களை அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை மனித உரிமைச் செயற்பாட்டு அமைப்புகளும், அரச சார்பற்ற அமைப்புகளும் மேற்கொண்டுள்ளன.

ஜெனிவா மனித உரிமைகள் குறித்த ராஜதந்திர சமர்க்களத்தில் இலங்கை விவகாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில், அரசுக்கு எதிராகச் சாட்சியமளிப்பதற்கு காணாமற்போனோரது உறவினர்களும் ஜெனிவாவுக்கும் செல்லவுள்ளனர்.

இவர்களை ஜெனிவாவுக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை மனித உரிமைச் செயற்பாட்டு அமைப்புகளும், அரசசார்பற்ற அமைப்புகள் சிலவும் மேற்கொண்டு வருகின்றன.

அரசுக்கு எதிராக சாட்சியமளிப்பதற்கு இந்தக் குழுவில் காணாமற்போனோர்களின் "உறவினர்கள் சிலரும், காணாமல் போனோர்கள் சம்பந்தமான அமைப்புகளின் பிரதிநிதிகள் சிலரும் உள்ளடங்குகின்றனர்.

அரச பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் அமர்வு, அரசசார்பற்ற அமைப்புகள் கலந்துகொள்ளும் அமர்வு என ஐ.நா. மனித உரிமைப் பேரவை கூட்டத் தொடரில் இரண்டு பிரிவுகளாக அமர்வுகள் நடைபெறும்.

அதில் அரசசார்பற்ற அமைப்புகளினது அமர்வின்போது அதன் பிரதிநிதிகள் மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகளின் இராஜதந்திரிகளுக்கு, நாடுகளின் மனித உரிமை நிலைவரம் தொடர்பில் விளக்கமளிப்பர். அதன்பொருட்டு அவர்கள் ஆதாரங்களை சமர்ப்பிப்பதுடன் சாட்சிகளையும் முன்னிலைப்படுத்துவர்.

அந்த அடிப்படையில் இலங்கையின் மனித உரிமை நிலைவரங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும்போது, சாட்சியங்களாகப் பயன்படுத்தவே காணாமல் போனோரது உறவினர்கள் ஜெனிவாவுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

அதற்கான ஏற்பாடுகளை அரசசார்பற்ற நிறுவனங்களும், மனித உரிமை அமைப்புகளும் செய்து வருகின்றன. இவர்கள் அடுத்தவாரமளவில் ஜெனிவா நோக்கிப் பயணிப்பர் எனத் தெரியவருகிறது.

 

http://onlineuthayan.com/News_More.php?id=564551859325612803

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Sri Lanka is trying to blink the screening of no fire zone movie at HRC. Letter is here

http://www.stillcountingthedead.com/wp/wp-content/uploads/2013/02/Letter-to-the-President-Human-Rights-Council-2.pdf

  • தொடங்கியவர்

இந்தப்படம் பொய் என்கிறார்கள், பிறகு ஏன் அது திரையிடப்படுவதை  தடைசெய்ய முனைகிறார்கள்? :o

  • தொடங்கியவர்

ஜெனிவாவில் இராஜதந்திரிகளுடனான சந்திப்புக்களில் தமிழர் அமைப்புக்கள்

 

ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 22வது கூட்டத் தொடரில் புலம்பெயர் தமிழ் மக்களின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் குழுக்கள் கலந்து கொண்டு சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகளுக்கு சிறிலங்காவின் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றம் தொடர்பாக விளக்கமளிக்க உள்ளனர்.

 

 

இதற்காக ஜெனிவாவுக்கு நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகள், மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை கனேடிய தமிழர் காங்கிரஸ் அமெரிக்க தமிழ் அரசியல் செயலவை ஆகிய அமைப்புக்களின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் குழு ஜெனிவாவில் முகாமிட்டுள்ளது.


இராஜதந்திரிகளை தனித்தனியாக சந்திக்கும் அதேவேளை மனித உரிமை அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்படும் குழு நிலை விவாதங்களிலும் கலந்து கொண்டு தமிழ் மக்கள் எதிர்நோக்கியிருக்கும் நெருக்கடிகள் குறித்து விளக்கம் அளிக்க உள்ளனர்.

 

இதேவேளை இலங்கையிலிருந்து வருகை தர இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஐ.நா.மனித உரிமை கூட்டத்தொடருக்கு வெளியே இராஜதந்திரிகளை சந்தித்து பேசுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

 

 

இதேவேளை இலங்கையிலிருந்து மனித உரிமை செயற்பாட்டாளர் குழுவும் ஜெனிவாவுக்கு வருகை தந்துள்ளது. இக்குழு இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள், நீதித்துறை மற்றும் ஊடகத்துறை மீது சிறிலங்கா அரசு மேற்கொண்டுவரும் அச்சுறுத்தல் குறித்தும் இராஜதந்திரிகளை சந்தித்து விளக்க உள்ளனர்.

 

சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையில் ஜெனிவாவுக்கு வருகை தந்திருக்கும் சிறிலங்கா அரச குழுவும் தமக்கு ஆதரவு தேடுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

 

http://www.thinakkathir.com/?p=48390

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.