Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க பிரேரணை குறித்து இலங்கை பீதியடையவே தேவையில்லை!- சுப்பிரமணியசுவாமி

Featured Replies

அமெரிக்க பிரேரணை குறித்து இலங்கை பீதியடையவே தேவையில்லை!- சுப்பிரமணியசுவாமி

[ செவ்வாய்க்கிழமை, 26 பெப்ரவரி 2013, 12:27.06 AM GMT ]

subra_swamy.jpg

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள  பிரேரணை

தொடர்பில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கை பீதியடையத் தேவையில்லை என

இந்திய ஜனதாக் கட்சியின் தலைவர் கலாநிதி சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.

பயங்கரவாதத்தை தோற்கடித்து இலட்சக் கணக்கான பொதுமக்களை மீட்டெடுத்த

அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க பெரும்பாலான நாடுகள் தயாராக உள்ளதாகவும் அவர்

சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச ரீதியில் இந்தியா எடுக்கின்ற அநேகமான தீர்மானங்களின் பின்னணியில்

இருப்பது அரசியல் நோக்கங்கள் என்று கூறிய அவர், அவ்வாறான நோக்கங்களில்

தெளிவைக் காணக் கூடியதாக இருப்பது இல்லை என்றும் கூறினார்.

இஸ்ரவேலை எடுத்துக்கொண்டால், இந்தியா அநேகமான சந்தர்ப்பங்களில் முட்டாள்தனமான முடிவுகளுக்கு வந்துள்ளது.

இலங்கை தொடர்பில் இந்தியாவிலுள்ள பெரும்பான்மையானோர் அமெரிக்காவின் பிரேரணைகளுக்கு ஆதரவு வழங்காது என்றும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய அமெரிக்க குடியரசு அரசியல் நோக்கங்க ளுக்காக செயற்படுவதாக

சுட்டிக்காட்டிய அவர், அமெரிக்காவுக்கு மனித உரிமைகள் தொடர்பில் அவ்வளவு

நல்லபிப்பிராயம் இல்லை எனவும் கூறினார்.

இவற்றை அடிப்படையாக வைத்து பார்த்தால், இவ்வாறான பிரேரணைகள் தொடர்பில்

எந்தவித பீதியும் அடையத் தேவையில்லை. அவ்வாறு முக்கியமானது எதுவும் இல்லை

எனவும் இந்திய ஜனதாக் கட்சியின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

 

 

நல்லவர்களின் உயிர் வேளைக்கு போகிறது. இப்படியானவர்களின் உயிர் மட்டும் எப்படி நீண்ட காலம் இருக்கிறது என்பது தான் புரியவில்லை.

இந்த ஆளும் ஒரு பயங்கரவாதி தான் :icon_mrgreen:

 

குறிப்பாக காணாமல் போனவர்கள் இருக்கிறார்களா இல்லையாவென நீண்டநாட்களாக காணாமல்போனோரது குடும்பங்கள் அலைந்து திரிகின்றன. இந்நிலையில் அவர்களது குடும்பங்கள் காணாமல் போனோர் தொடர்பாக தகவல்கள் எதனையும் பெறமுடியாது அலைந்து திரிகின்றன. இத்தகைய சந்தர்ப்பத்தை பயன்படுத்தியே தற்போது காணாமல்போனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்களை வழங்கி அவர்களது வாய்களை மூடிவிட அரசு முற்பட்டுள்ளது. யாழ்.குடநாட்டில் 1996 முதல் 2002 வரையிலும் அதே போன்று 2006 முதல் தற்போது வரையுமாக இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். அதே போன்று வன்னியின் இறுதி யுத்த நடவடிக்கைகளின் போதும் அதன் பின்னராக சரணடைந்தவர்களுமாக ஆயிரக்கணக்கானவர்கள் பற்றிய தகவல்கள் இன்று வரை இல்லாதேயுள்ளது.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=117913

  • கருத்துக்கள உறவுகள்

சுப்றமணியசாமி ஒரு சுய விளம்பர பிரியன்... எதாவது காமெடி பண்ணிட்டே இருப்பான் .

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பிரமணியன் சுவாமி - ஆரிய மாயை = பூச்சியம் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.