Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மகிந்தவும், கோத்தாவும் சூழ்ச்சி! - விக்கிரமபாகு கருணாரட்ன குற்றச்சாட்டு!!

Featured Replies

அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மகிந்தவும், கோத்தாவும் சூழ்ச்சி! -
விக்கிரமபாகு கருணாரட்ன குற்றச்சாட்டு!!

 

Maithiri.jpg

 

 

சிறிலங்கா அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக ஜனாதிபதி மகிந்தவும், படைத்துறைச்  செயலாளர்
கோத்தபாயவுமே சூழ்ச்சிகளை வகுத்து வருகின்றனர் எனக் குற்றஞ்சாட்டும் நவசமசமாஜக்
கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன, கொலை அச்சுறுத்தலின் பின்னணியிலும் இவர்கள்தான்
செயற்படுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் பதவியிலிருந்து
தூக்கி எறிவதற்கான முதற்கட்ட நடவடிக்கையே அமைச்சர் பசிலுக்கு தேசிய அமைப்பாளர்
பதவி வழங்கப்பட்டமையாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

'எனது சுயரூபத்தைக் கலைப்பதற்கு ஊடகங்களின் ஊடாக சூழ்ச்சிகள்
மேற்கொள்ளப்படுகின்றன. அது கைகூடவில்லையானால் என்னைக் கொலை செய்வதே அடுத்தகட்ட
நடவடிக்கையாக இருக்கும். தற்போதே எனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது' என்று சிறிலங்கா சுதந்திரக்
கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம்
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி
விக்கிரமபாகு கருணாரட்ன மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும்
கூறியவை வருமாறு:

'மைத்திரிபால சொல்வதைப் பார்த்தால் அவருக்கு அரச உயர்மட்டத்தில்
இருந்தே கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் ஜனாதிபதியும், படைத்துறைச் செயலாளரும்
உள்ளனர் என்றே எண்ணத் தோன்றுகின்றது.

அலரி மாளிகையில் வைத்தே அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக
சூழ்ச்சி வகுக்கப்படுகின்றது. அடுத்த ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்தே அவருக்கு
எதிராக சூழ்ச்சிகள் அரச மட்டத்தில் நடக்கின்றன. அரசின் விரோதச் செயற்பாடுகளை
மைத்திரிபால சிறிசேன அண்மைக்காலமாக எதிர்த்து வந்தார். முஸ்லிம் விரோதச்
செயற்பாட்டையும் அவர் கண்டித்தார்.

எனவே, அவரின் செயலாளர் பதவியைப் பறிப்பதற்குத் திட்டம் வகுக்கப்படுகின்றது. இதன் முதற்கட்டமாக
பசிலுக்கு தேசிய அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மைத்திரிபால தூக்கப்பட்ட
பின்னர் பசிலே அந்த இடத்துக்கு வருவார்' என்று விக்கிரமபாகு கருணாரட்ன மேலும் தெரிவித்துள்ளார்.


http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=7edc00a3-e679-4ce0-a8cb-96816e3e0c0f
 

படம்: http://www.mahaveli.com/?attachment_id=21557

 

 


 

பழைய செய்தி: கையளவு உள்ளம் வைத்து கடல் போல் ஆசை வைத்து விளையாட சொன்னான்னடி....

 

... பிரதமர் பதவிக்கான கனவு கலைந்து போனதால் அமைச்சர் சிறிசேன கீழ்த்தரமான அரசியல் பிரசாரம்

04 Aug 2012

பிரதமர் பதவிக்கான கனவு கலைந்து போனதால் அமைச்சரமைத்திரிபால சிறிசேன மறைந்த காமினி திசாநாயக்காவை பயன்படுத்தி கீழத்தரமான அரசியல்
பிரசாரத்தை மேற்கொள்வதாக ஐ. தே. கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

தமது தொகுதியான பொலநறுவைக்கும், நாட்டுக்கும் அமைச்சர் சேவைகளை செய்திருப்பாரானால்
மேற்கண்டவாறு ‘‘வாக்கு பிச்சை’’ கேட்க வேண்டிய அவசியமிருந்திருக்காது ௭ன்றும்
அக்கட்சி தெரிவித்துள்ளது. ஐ.தே.கட்சியின் தலைமையகமான ‘‘சிறிகொத்தா’’ விடுத்துள்ள
விசேட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

1994 இல் இடம்பெற்ற தேர்தலில் காமினி திசாநாயக்காவை தோல்வியடையச் செய்வதற்காக ரணில் விக்கிரமசிங்க சந்திரிக்கா
பண்டாரநாயக்காவுக்கு தகவல்களை வழங்கினாரென அமைச்சர் மைத்திரிபால சிறிசேன
வெளியிட்டுள்ள கருத்தை அருவருப்புடன் நிராகரிக்கின்றோம்.

1994 ஆம் ஆண்டு தேர்தல் நடந்து முடிந்து 18 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் திடீரென
நித்திரையிலிருந்து ௭ழுந்தவர் போல் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன குறுகிய அரசியல்
நோக்கங்களுக்காக இவ்வாறான பிரசாரத்தை முன்னெடுத்துள்ளமை புலனாகிறது.


௭திர்வரும் மாகாண சபைத் தேர்தலில் பொலநறுவை மாவட்டத்தின் ஐக்கிய மக்கள்
சுதந்திர முன்னணியின் தேர்தல் நடவடிக்கையில் தலைமைப் பதவியை அமைச்சரே
வகிக்கின்றார். இத் தேர்தலின் தோல்வியின் பின்னர் அவரது பிரதமர் பதவிக்கான கனவு
கலைந்து விடும்.

மறைந்த காமினி திசாநாயக்க மீது அன்பு கொண்டுள்ள வாக்குகளை
ஜனாதிபதி மகிந்த ராஜாபக்ஷவிற்கு வழங்குமாறு வாக்கு பிச்சையில் இறங்கியுள்ளார்.
தாம் சார்ந்த மாவட்டத்திற்கும் நாட்டுக்கும் சேவைகள் செய்திருப்பாரானால்
இவ்வாறு வாக்கு பிச்சை கேட்க வேண்டிய அவசியமில்லை.

சுகாதார அமைச்சில் இடம்பெறும் ஊழல் மோசடிகளை மூடி மறைப்பதற்காகவும் இது போன்ற பிரசாரங்களை
முன்னெடுக்கின்றார். கௌரவமான அரசியலிலிருந்து இந்தளவிற்கு கீழ்மட்டத்திற்கு
அமைச்சர் மைத்திரிபால சிறிசேன வீழ்ந்திருப்பது கவலையளிக்கின்றது ௭ன்றும்
அவ்அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

http://maavirarmann.com/news-newsid-35628.html

 

Edited by மல்லையூரான்

cartoon.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.