Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு இந்தியா ரூ. 500 கோடி உதவி

Featured Replies

இலங்கைக்கு இந்தியா இந்த ஆண்டு ரூ. 500 கோடியை இலவசமாக வழங்குகிறது.

 

இது முந்தைய ஆண்டை காட்டிலும் ரூ. 210 கோடி கூடுதலாகும். இந்தியா அதன் அண்டை நாடுகளுக்கு உதவி செய்கிறது. அதற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ரூ. 5,550 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிதியில் இலங்கைக்கு ரூ. 500 கோடி மானியமாக வழங்கப்படுகிறது. கடந்த நிதியாண்டில் ரூ. 290 கோடி வழங்கப்பட்டது. அதற்கு முந்தைய ஆண்டில் ரூ. 181.84 கோடியே வழங்கப்பட்டது.

 

ஆகவே கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக ரூ. 210 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

இலங்கையில் தமிழர்களை மறுகுடியமர்வு செய்ய இலங்கை அரசு பயன்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு தமிழக கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

 

இலங்கை ஒரு போதும் தமிழர்களுக்கு இந்த நிதியை பயன்படுத்தாது என்றும் சிங்களவர்கள் பயன்பெறும் வகையிலே திட்டங்களை செயல்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளன. இந்த நிதியால் கட்டப்படும் விடுதிகளில் சிங்களவர்களைத்தான் இலங்கை அரசு குடியமர்த்தும் என்றும் குற்றச்சாட்டப்பட்டுள்ளது. ஆகவே, இந்த விவகாரத்தை மீண்டும் பாராளுமன்றத்தில் எழுப்ப அ.தி.மு.க, தி.மு.க, வ. கம்யூனிஸ்டு போன்ற கட்சிகள் தீர்மானித்துள்ளன.

 

இலங்கைக்கு மட்டுமல்லாது, வங்கதேசம், பூடான், மியான்மர், ஆப்கானிஸ்தான், மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு மானிய நிதி வழங்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானுக்கு இந்த முறை ரூ. 548 கோடி வழங்கப்படுகிறது. வங்க தேசத்திற்கு ரூ. 580 கோடி கொடுக்கப்படுகிறது.

 

http://www.thinaboomi.com/2013/03/02/19830.html

  • தொடங்கியவர்

இலங்கைக்கு நிதியுதவி வழங்கக்கூடாது: ராமதாஸ்

 

இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா 500 கோடி ரூபாவை நிதியுதவி வழங்கக்கூடாது. அதன் மூலமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரனை இலங்கைப் படையினர் கொடூரமாக கொலை செய்ததை அறிந்து உலகம் முழுவதும் தமிழர்கள் கொந்தளிப்பில் இருக்கின்றனர்.


ஆனால் நாங்கள் படுகொலை செய்யவில்லை என்று முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க அவர் முயற்சிக்கின்றார்.

 

இவ்வாறான நிலையில் அவர் தலைமையிலான அரசாங்கத்திற்கு உதவிகளைச்செய்யக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தால், காஷ்மீர் மனித உரிமை மீறல் தொடர்பாக ஐ.நா.வில் நாங்கள் பேச வேண்டியிருக்கும் என்று ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது கண்டிக்கத்தக்கதாகும்.

சீனா பக்கம் இலங்கை சாய்ந்து விடக் கூடாது என்ற சொத்தைக் காரணத்தைக் கூறி ராஜபக்ஷ அரசுக்குச் சாதகமாகவே மத்திய அரசு நடந்துகொள்கிறது.

 

ஈழத்தில் உள்ள தமிழர்களின் உடைமைகளைப் பறித்துக்கொண்டு, அவர்களை விரட்டியடிக்கும் வேலையில் இலங்கை அரசு ஈடுபட்டிருக்கும் நிலையில், அந்த அரசுக்கு 500 கோடி ரூபாவை நிதியுதவியாக மத்திய அரசு அளித்துள்ளது.


ஈழத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக இந்தியா வழங்கும் நிதி முழுவதையும் சிங்களர்களுக்கு வீடுகள் கட்டித் தரவும், சிங்களப் படையினருக்குச் சிறப்பு வசதிகளைச் செய்து தரவும் இலங்கை அரசு செலவழித்து வருகிறது.

 

இந்நிலையில் இலங்கைக்கு இந்தியா மேலும் நிதியுதவி அளிப்பது தமிழர்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்காது. தமிழர்கள் பகுதிகள் சிங்களமயமாக்கத்தான் பயன்படும்.


எனவே, இந்தியாவை மிரட்டும் ராஜபக்ஷேவுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டுமே தவிர, அவருக்குப் பணிந்து 500 கோடி ரூபாவை பரிசாக வழங்கக்கூடாது.

 

இலங்கைக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிதி உதவியை ரத்து செய்ய வேண்டும். இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கான தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டுவந்து நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

 

- See more at: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/59924-2013-03-03-10-59-24.html#sthash.B5vdzw1e.dpuf

  • தொடங்கியவர்

4sircartoon_7.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.