Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படை மீண்டும் வெறித் தாக்குதல்! 16 தமிழக மீனவர்கள் கைது.

Featured Replies

 
கச்சதீவு அருகே இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கைச் சிங்கள கடற்படை மீண்டும் வெறித் தாக்குதலை நடத்தி உள்ளது.  அத்துடன், இலங்கை கடற் பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த 16 தமிழக மீனவர்களை இலங்கை கடற் படையினர் இன்று கைது செய்துள்ளனர்.

தமிழக மீனவர்கள் மீது நடுக்கடலில் சிங்கள கடற்படை தாக்குதல் நடத்தி வருவது கடந்த சில நாட்களாக தொடர் கதையாக உள்ளது.

கச்சதீவு அருகே நடைபெறும் இந்த தாக்குதலின் போது மீன்பிடி வலைகளும் சேதப்படுத்தப்பட்டு வருகிறது.

இராமேஸ்வரத்தில் இருந்து நேற்று 200 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

கச்சதீவு அருகே இவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த சிங்கள கடற்படை வெறித்தாக்குதலை நடத்தியுள்ளது.

மேலும் மீனவர்களின் வலைகளையும் அறுத்து சேதப்படுத்தி உள்ளனர்.

காலையில் சென்ற மீனவர்களை இரவு வரை மீன்பிடிக்க விடாமல் சிங்கள கடற்படையினர் துன்புறுத்தியதாக, இன்று காலை கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர்.

இந்த தாக்குதல் மீனவர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தாக்குதலை நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

16 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது

இலங்கை கடற் பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த 16 இந்திய மீனவர்களை இலங்கை கடற் படையினர் இன்று கைது செய்துள்ளனர்.

புத்தளம், கல்பிட்டி கடலில் வைத்து கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திய மூன்று இந்திய மீன்பிடி படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

கடல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படை வீரர்கள் கல்பிட்டி கடலில் சட்ட விரோதமாக இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருப்பதை அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து 3 மீன்பிடி படகுகளையும் கைப்பற்றிய கடற்படையினர்இ இதிலிருந்து 16 இந்தியர்களையும் கைது செய்துள்ளனர்.

 

http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13074:fisherman-tamlnadu&catid=36:tamilnadu&Itemid=102

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.