Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனீவாத் தீர்மானம்; பொறுத்திருந்து பார்க்க வேண்டும்

Featured Replies

யுத்தம் முடிவடைந்த போதிலும்  சிறுபான்மை தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலங்கை மீது மீண்டும் உலகின் பார்வை திரும்பியுள்ளது.

 

தமிழ் மக்கள்  சித்திரவதை செய்யப்பட்டிருப்பதாக கடந்த செவ்வாய்க்கிழமை  மனித  உரிமை கண்காணிப்பகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதேவேளை, ஐ.நா. மனித உரிமை பேரவை அமர்வில் கொழும்புக்கு எதிராக  அமெரிக்காவின் அனுசரணையுடன்  தீர்மானம் முன்வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில், புதுடில்லியில் உள்ள இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் மனித உரிமை துஷ்பிரயோக, குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இலங்கை ஒதுக்கப்பட்ட நாடாக வந்துகொண்டிருக்கிறதா? என்பது பற்றி அவர் என்ன  நினைக்கிறார் என்பது போன்ற  கேள்விகளுக்கு  பதிலளித்துள்ளார். நீட்டா பலா விற்கு அலெட் நெட் சார்பில்  இலங்கை உயர்ஸ்தானிகருடன் எடுத்த பேட்டி இங்கு தரப்படுகிறது.

 

 

 

கேள்வி: பிரிட்டன் போன்ற நாடுகளில் புகலிடம்கோரிய இலங்கைத் தமிழர்கள் தொடர்பான பேட்டிகளை அடிப்படையாகக் கொண்ட மனித உரிமை கண்காணிப்பகம் புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. யுத்தம் முடிந்து கிட்டத்தட்ட 4 வருடங்கள் கடந்த நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும்  தமிழ்ப் புலி ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்பட்டோர் மீது வல்லுறவையும் சித்திரவதையையும் பாதுகாப்புப் படையினர் பயன்படுத்துவதாக அவர்கள் (இலங்கை புகலிடம் கோருவோர்) கூறுகிறார்கள் இதற்கு தங்களின் பதில் என்ன?


பதில் : ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமர்வு இடம்பெறும் தருணத்தில் இலங்கையை மனித உரிமைகள் பேரவை மையப்படுத்துவதாகத் தோன்றுகிறது. அங்கு இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவர உள்ளது. எமது நாட்டுக்கு அவப் பெயரை ஏற்படுத்தும் முயற்சியாக இந்த அறிக்கை காணப்படுகிறது. உலகம் முழுவதும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன. இலங்கையை மட்டுமே  தொடர்ந்து இலக்கு வைப்பது ஏன்? அவர்கள் சில சமயம் அமெரிக்க அரசாங்கத்துடன் செயற்படக்கூடும்.  மனித உரிமைகள் பேரவையில்  தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ள தருணத்திலே மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்பதை நான் துணிந்து கூறுவேன். இந்த மாதிரியான இலக்கு வைக்கப்பட்ட இலங்கை மீதான விமர்சனம் வரவேற்கக் கூடியது அல்ல. அது உதவியாக அமையாது.  நல்லிணக்கத்தை  இது எமக்கு  கொண்டு வரப்போவதில்லை.

 

 

 

கேள்வி: இந்த அறிக்கையில் 75 பேர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளை நீங்கள் மறுக்கின்றீர்களா ? இராணுவமும் பொலிஸாரும்  வல்லுறவு மேற்கொண்டதாகவும் சிகரெட்டினால் மார்பகங்களில், பிருஸ்ட பாகங்களில் சுட்டதாகவும், பலவந்தமாக ஒப்புதல் வாக்குமூலங்களை பெற்றுக் கொள்வதற்காக பயங்கரமான துஷ்பிரயோகத்தை மேற்கொண்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.


பதில் :  பொருளாதார அகதிகள் என்று கூறப்பட்ட  குழு ஒன்று உள்ளது. அகதி அந்தஸ்து பெறுவதற்கு அல்லது பொருளாதார அந்தஸ்து பெற்றுக் கொள்வதற்கு அவர்களுக்கு நல்ல கதை ஒன்று தேவைப்படுகிறது.  உரிய விசாரணை புகலிடம்  அல்லது அகதி அந்தஸ்து அபிவிருத்தி அடைந்த நாட்டில்  பெற்றுக் கெள்வதற்கான விடயங்கள் என்றே  நாங்கள் நம்ப வேண்டியுள்ளது.  இலங்கை நீதிமன்ற முறையின் கீழ் முறையான விசாரணை மேற்கொள்ளப்படும் வரை இந்த குற்றச்சாட்டுகளை எம்மால் ஏற்றுக்கொள்ள  முடியாது. விசேட நடைமுறைகள் இருக்கின்றன.

 

அவற்றின் முலம் அவற்றின் விசாரணைகளை மேற்கொள்ளமுடியும். பரிந்துரைகளை மேற்கொள்ள முடியும். அந்த விசாரணையின் மூலம்  நடைமுறைகளைப் பின்பற்றி வருகிறோம். மனித  உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் தமக்கு நீதி வழங்குவோர் விடயங்களின் அடிப்படையில்  குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. அவர்களுக்கு யார் நீதி வழங்குகின்றார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. ஆதலால் நாங்கள் சந்தேகத்தை கொண்டிருக்கின்றோம் இந்த விடயத்தில்  தற்போதைய காலப் பகுதியானது முக்கிய உள்நோக்கம் கொண்டதாக  இருக்கின்றது என்று நாங்கள் நினைக்கின்றோம். இலங்கை  பெரியதொரு நாடு அல்ல. உலகில் மிகவும் சக்தி வாய்ந்த நாட்டினதும் அவர்களினது அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்களுடனும் எம்மால் போராட முடியாது அவர்களிடம் பெருந்தொகை பணம் உள்ளது. ஆயினும் எதனைக் கூற விரும்புகிறோமோ அவற்றை கூறுவதற்கான உரிமையை நாங்கள் கொண்டிருக்கின்றோம். நாங்கள் ஜனநாயக நாட்டினைக் கொண்டுள்ளோம். நிலைமையை எவரும் வந்து பார்த்து அறிந்து கொள்ள முடியும்.


 

கேள்வி: புலம் பெயர்ந்த தமிழர்களுடன் கதைக்கின்றீர்களா?

 

பதில் : ஆம் . அவர்கள் மிகவும் செயற்பாட்டுடன் இருக்கின்றார்கள். ஆனால், புலம்பெயர்ந்த  தமிழர்கள் மத்தியில் சில தீவிரவாதக் குழுக்கள் புலிகளின் நிதியை பயன்படுத்தி உள்ளனர். அவர்கள் ஆயுதக் கொள்வனவுக்காக அதை பயன்படுத்தியுள்ளனர். இப்போது இலங்கைக்கு எதிராக  பிரசாரம் செய்வதற்காக அந்தப் பணத்தை பயன்படுத்துகின்றார்கள். புலிகளை  அழிக்க முடிந்ததையிட்டு அவர்கள் குழம்பியுள்ளனர். ஆதலால் அவர்களின் நிதி இந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகின்றது. இந்த கதைகளை புனைகின்றனர். இலங்கைக்கு எதிராக அழுத்தங்களைக் கொண்டு வரவும், அபகீர்த்தியை ஏற்படுத்தவும் அவர்கள் செயற்படுகின்றனர்.

 

 

 

 

கேள்வி :  தற்போது  ஐ.நா. மனித உரிமை பேரவையில் அமெரிக்காவினால் இரண்டாவது தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளதாக நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். மனித உரிமை விவகாரத்தில் கொழும்பை விமர்சித்து தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது. இதற்கு பிரிட்டன், கனடா, ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு வழங்கும் சாத்தியப்பாடு காணப்படுகின்றது. இது தொடர்பாக  நீங்கள் கவலை கொண்டுள்ளீர்களா ?


பதில் : இதை வேண்டப்படாத தீர்மானமாக  நாம் கருதுகின்றோம். நாங்கள்  சரியான திசையில் சென்று கொண்டிருக்கின்றோம். மேலும் கால அவகாசத்தினை மட்டுமே நாம் கோருகின்றோம். நல்லிணக்க ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட சிறந்த திட்டம் எம்மிடம் உள்ளது. நாம் அவற்றை படிப்படியாக அமுல்படுத்தி வருகின்றோம். எவராவது குற்றச்சாட்டுகளை தெரிவித்து அதில் உண்மையிருப்பதை எமது சொந்த விசாரணைப் பொறிமுறைகள் முலம்  நிரூபிக்கப்பட்டால்  நாங்கள் அதன் மூலம்  நடவடிக்கை எடுப்போம்.

இலங்கை தொடர்பாக சர்வதேச விசாரணை தேவையில்லையென நாங்கள் கருதுகிறோம்.

 

எமது நாடு ஜனநாயக நாடு. எமது நிறுவனங்கள் உள்ளன. படையினர் இலங்கையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளனர். அவர்கள் கடுமையான யுத்தத்தில் வெற்றிகண்டுள்ளனர்.  எந்தவொரு ஜனநாயக நாடாவது தமது படையினர் மீது சர்வதேச விசாரணையை நடத்த இடமளித்துள்ளதா? என்பது குறித்த எனக்கு கூறுங்கள். தமது படையினருக்கு எதிராக தமது வல்லமை வாய்ந்த நாடுகளே குற்றச்சாட்டுகளை கொண்டிருக்கின்றன. ஆனால் அந்த நாடுகள் சர்வதேச விசாரணைக்கு வழிதிறந்துவிட்டனவா ? இல்லை. இலங்கையும் அதே உரிமையைக் கொண்டிருக்கின்றது. எமது சொந்த பொறிமுறையூடாக நாம் விசாரணை நடத்துவோம்.


 

கேள்வி:  இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்று கொண்டு வரப்படவுள்ளது. இந்நிலையில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இலங்கை ஒதுக்கி வைக்கப்படும் நாடாக உருவாகி வருவது குறித்து நீங்கள் கவலையடையவில்லையா ?

 

 

பதில் : தீர்மானம் தொடர்பாக நாம் பொறுத்திருந்து தான்  பார்க்க வேண்டியுள்ளது. உதாரணமாக தீர்மானத்துக்கு எதிராக இஸ்ரேல் போன்ற நாடுகளும் உள்ளன. ஆனால், அமெரிக்க  இஸ்ரேலின் உறவுகளைப் பார்த்தால் அவை இரண்டும் சிறப்பான நட்பு நாடுகளாக இருக்கின்றன. ஆதலால், நாடொன்றிற்கு எதிராக கொண்டு வரும் தீர்மானமானது உலகில் ஏனைய பகுதியினர் உங்களுக்கு எதிராக இருப்பார்கள் என்று அர்த்தப்படுத்துவதாக அமையாது. தீர்மானத்தை ஏற்றுக் கொள்வதா, இல்லையா என்பது எம்மைப் பொறுத்த விடயம். நாங்கள் விரும்பாவிடில் தீர்மானத்தை எம்மால் நிராகரிக்க முடியும்.

 

http://www.thinakkural.com/index.php?option=com_content&view=article&id=3144:q-----&catid=293:article&Itemid=542

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.