Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம் சமூகத்தை காட்டிகொடுக்கும் தலைமைகளுக்கு முதலில் நாய்ப்பட்டி கட்ட வேண்டும்: அப்துல் மஜீத்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் சமூகத்தை காட்டிகொடுக்கும் தலைமைகளுக்கு முதலில் நாய்ப்பட்டி கட்ட வேண்டும்: அப்துல் மஜீத் மாநகர சபை அமர்வுகளுக்கு கறுப்பு பட்டி அணிந்து வருவதை விட பதவிகளுக்கு வாலாட்டும் தமது தலைவர்களுக்கு முதலில் நாய்ப்பட்டி அணிவிப்பதற்கு இவர்கள் முன்வர வேண்டும் என முஸ்லிம் மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பில் அக்கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இந்த நாட்டின் வரலாற்றில் என்றுமே கண்டிராத அளவு இனத்துவேசம் இந்த ஆட்சியில் பகிரங்கமாக பேசப்பட்டுக்கொண்டிருக்கும் போது பூனைக்கு மணி கட்டுவது யார், எப்படி என்று தெரியாமல் முஸ்லிம் கட்சித் தலைமைகள் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. தங்களது சுய நல பதவிகளுக்கு ஆப்பு வந்து விடும் என்ற அச்சத்திலேயே இவர்கள் இவை பற்றி பாராளுமன்றத்தில் பேசாமல் மூடிய அறைக்குள் இருந்து கொண்டு குசு குசுக்கின்றனர்.

முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் ஆபத்து பற்றி இவர்கள் பேசுவார்கள் என நம்பி இவர்களுக்கு வாக்களித்த முஸ்லிம் சமூகம் இன்று நாதியற்று தத்தளித்துக்கொண்டிருக்கும் அதே வேளை சமூகத்தக்காக தமது சுயநலன்களை வீசி விட்டு களத்தில் குதித்திருப்போரைக்கூட இனங்கண்டு அவர்களை ஆதரிக்கத்தெரியாத ஒரு சமூகமாகவும் முஸ்லிம் சமூகம் இருக்கிறது

முஸ்லிம்களின் பிரச்சினைக்கு ஒரு மாகாண சபை உறுப்பினர் கண்டன தீர்மானம் கொண்டு வருகிறார். இன்னொருவர் கறுப்பப்பட்டி அணிகிறார். கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஒருவரோ தமது தலைவர்களின் மௌனம் பாராட்டுக்குரியது என வெட்கமில்லாமல் வாலாட்டுகிறார். இவர்கள் இந்த அரசாங்கத்தின் வால்களாக ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.

ஒரு அறிக்கை விட்டதற்காக பொலிஸ் மற்றும் இரகசிய பொலிசாரின் கெடுபிடிகளுக்கு நாம் முகம் கொடுக்கும் போது இத்தனை பகிரங்கமாக போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. பன்றியின் உருவத்தில் அல்லாஹ் என்ற அழகிய வார்த்தையை எழுதி அமவதிக்கப்படுகின்றன. இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது நன்கு தெரிந்த நிலையிலும் இவற்றை பாராளுமன்றத்தில் கண்டித்துப் பேசாமல் இவர்களின் சுயநலத்துக்காக வாலாட்டிக்கொண்டிருக்கின்றனர்.

தமது சுயநலனுக்காக சமூகத்தை காட்டிக்கொடுத்து அற்ப சலுகைகள் எனும் எலும்புத் துண்டுகளுக்காக வாலாட்டிக்கொண்டிருக்கும் தமது தலைமைகளுக்கு முதலில் நாய்ப்பட்டி அணிவிக்க வேண்டும் என்றார்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=3378

முஸ்லீம் மக்களுக்காக கூட்டமைப்பு குரல்கொடுக்கவேண்டியது அவர்களின் அரசியல் கடமையாகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

குரல்கொடுத்தால் மட்டும் ?? :rolleyes:

குரல்கொடுத்தால் மட்டும் ?? :rolleyes:

 

முஸ்லீம் மக்கள் தமிழர்களுடன் சேர்ந்து ஒரு அரசியல் தீர்வை பெறுவதற்கு அவ்வாறான அணுகுமுறை தேவையானது.

முஸ்லீம் மக்களுக்காக கூட்டமைப்பு குரல்கொடுக்கவேண்டியது அவர்களின் அரசியல் கடமையாகின்றது.

 

இது வேலியில் போகிற ஓணானை எடுத்து வேட்டியில் விடுகிற கதை. அவர்கள் என்னதான் உரிமை, கடைமை என்று பேசினாலும் அவர்கள் வேலை முடிந்ததும் கடைசியில் மதம் என்கிற வகையில் ஒன்றுசேர்ந்து கடையைக் கட்டிவிடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இது வேலியில் போகிற ஓணானை எடுத்து வேட்டியில் விடுகிற கதை. அவர்கள் என்னதான் உரிமை, கடைமை என்று பேசினாலும் அவர்கள் வேலை முடிந்ததும் கடைசியில் மதம் என்கிற வகையில் ஒன்றுசேர்ந்து கடையைக் கட்டிவிடுவார்கள்.

இதுதான் எனது கருத்தும் .. இப்போது அணியை மாறவேண்டியது அவர்களே..

முஸ்லீம் மக்களுக்காக கூட்டமைப்பு குரல்கொடுக்கவேண்டியது அவர்களின் அரசியல் கடமையாகின்றது.

 

தமிழர்கள் முஸ்லிம்களை சகோதர இனம் என நினைத்தாலும் அவர்கள் எம்மை அவ்வாறு நினைப்பதில்லை. எமக்கெதிராகவும் சிங்களவர்களுக்கு ஆதரவாகவும் நடக்கிறார்கள். இனியும் அவர்களுக்காக குரல்கொடுத்தாலும் நலன்களை எல்லாம் பெற்றுக்கொண்டும் அவர்கள் எமக்கெதிராக தான் நடப்பார்கள். அவர்களாக திருந்தாதவரை நாமாக சென்று சேர முயற்சித்து எந்த பிரயோசனமும் இல்லை. (அதுவும் தமிழர்கள் நாம் எம்மையே பார்க்க முடியாமல் இருக்கும் சந்தர்ப்பத்தில்....)

 

  • கருத்துக்கள உறவுகள்

இது வேலியில் போகிற ஓணானை எடுத்து வேட்டியில் விடுகிற கதை.

அவர்கள் என்னதான் உரிமை, கடைமை என்று பேசினாலும் அவர்கள் வேலை முடிந்ததும் கடைசியில் மதம் என்கிற வகையில் ஒன்றுசேர்ந்து கடையைக் கட்டிவிடுவார்கள்.

 

இதுதான் எனது கருத்தும்...................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.