Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தியாளர் சம்பத் லக்மல் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சற்கின்ட சிங்கள நாளிதழின் செய்தியாளர் சம்பத் லக்மல் இன்று காலை இனந்தெரியாத நபர்களினால் தெகிவளையில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இவர் இராணுவ அரசியற் கட்டுரைகளை மேற்குறித்த பத்திரிகையில் எழுதிவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் பத்திரிகையாளர்கள் கொல்லப்படும்போது பார்த்துக்கொண்டிருந்த அரசு இனி என்ன செய்கிறது என்று பார்ப்போம்.

இறந்தவர் பற்றிய விபரங்கள் கிடைக்குமா?

எவ்வின பத்திரிகையாளர்கள் இப்படி கொல்லப்பட்டாலும் மிகவும் கவலைக்குரிய விடயம்...இலங்கையில் ஜனநாயகம் எவ்வளவு கேவலமான நிiலியில் இருக்கிறது என்றதற்கு இன்னொரு சாட்சி.

இந்த மனித உரிமைக்கு குரல்கொடுக்கும் சர்வதேச நிறுவனங்கள் ஏதாவது செய்வார்களா?

இலங்கைஅரசு ஒட்டுப்படையைக்கொண்டு தமிழ் செய்தியாளர்களை அழிப்பது எல்லோரும் தெரிந்தவிடயம்..

ஆனால் சிங்கள செய்தியாளர்களை அழிப்பது இப்போது அதிகரித்துவரும் சிங்கள பாதாளக்கோஸ்டியினரின் னைவரிசை என நினைக்கிறேன்..

அத்துடன் தென்பகுதி கட்சிகளின் உட்பிரச்சினைகளை விமர்சிக்கும் சிங்கள செய்தியாளர்களுக்கு நடப்பது இது தான்..

செய்தியை தெரிவித்தமைக்கு உங்களுக்கு நன்றிகள் விளங்காப்பயல்

சிறிலங்கா புலனாய்வுத்துறையை விமர்சித்த சிங்கள ஊடகவியலாளர் சுட்டுக்கொலை

"சத்தின" சிங்கள நாளேட்டின் முன்னாள் பாதுகாப்புத்துறை தொடர்பான பத்தி எழுத்தாளரும் ஊடகவியலாளருமான லக்மல் சம்பத் இன்று ஞாயிற்றுக்கிழமை அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

சிங்கள ஊடக உலகின் பிரபல எழுத்தாளரான சம்பத், சிறிலங்கா இராணுவ புலனாய்வுத்துறையில் இடம்பெற்று வரும் ஊழல்கள் பற்றியும் சிறிலங்கா இராணுவக்கட்டமைப்பின் பல்வேறு மட்டங்களில் நடைபெற்று வரும் லஞ்ச முறைகேடுகள் பற்றியும் பாதாள உலகக் கும்பல்களுடன் அவற்றுக்கும் உள்ள தொடர்புகள், அவற்றின் நடவடிக்கைகள் பற்றியும் தனது பத்திகளில் துணிச்சலாக எழுதி வந்தார்.

இன்று காலை இவரை சந்திக்க கிரியந்தனையில் உள்ள இவரது வீட்டுக்கு வந்த நபர் ஒருவர் வெளியில் அழைத்துச் சென்றதாகவும் நேரமாகியும் வீடு திரும்பாததால் தேடிச் சென்றபோது தெகிவளை விஜயா வீதியில் சுடப்பட்ட நிலையில் சடலமாக கிடந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சிறிலங்கா இராணுவத்தின் புலனாய்வுத்துறை சம்பந்தமாக இவர் தனது பத்தியில் வெளிக்கொணர்ந்த விடயங்கள் சிறிலங்கா புலனாய்வுத்துறை வட்டாரங்களை கடும் சீற்றத்துக்கு உள்ளாக்கியிருந்தது என்றும் இதனால் இவர் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்பட்டு வந்தார் என்றும் ஆனாலும் சம்பத் எவருக்கும் அஞ்சாமல் தொடர்ந்தும் தனது பத்திகளில் துணிச்சலாக எழுதி வந்தார் என்றும் சிங்கள ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவரது கட்டுரைகள் இருதின, லக்பிம, சத்தின ஆகியவற்றில் வெளிவந்திருந்தன. இவற்றை விட ரின்.என்.எல். தொலைக்காட்சிக்கும் இவர் பணியாற்றியிருந்தார்.

புதினம்.

1021fc.jpg

லக்மல் சம்பத் த சில்வாவின் உடலும்

குடும்பத்தினரும்..........

நன்றி: லக்பிம

இப்படி சிங்கள பத்திரிகைகளில் உள்ள ஓரிரு நடுநிலமை ஊடகவியலாளர்களையும் கொன்றுவிட்டு இலங்கை அரசு ஜனநாயக அரசு என்று கூறி உலகத்தை ஏமாற்றி வருகின்றது. சர்வதேச நாடுகள் இப்பொழுதாவது இலங்கையில் உள்ள ஜனநாயகத்தைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். :wink:

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள ஊடகவியலாளர் படுகொலை ஏன்? இராணுவ உயர் அதிகாரிக்கு தொடர்பு!: நாடாளுமன்றில் பரபரப்பான தகவல்கள் அவிசாவளையில் ஐந்து தமிழர்கள் தலை துண்டிக்கப்பட்ட சம்பவத்தின் குற்றவாளிகளை அறிந்திருந்ததால்தான் சிங்கள ஊடகவியலாளர் லக்மல் சம்பத்தை சிறிலங்கா இராணுவத்தின் லெப்டினென்ட் நிலை அதிகாரி ஒருவர் படுகொலை செய்தார் என்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் பரப்பரபான தகவல்கள் அம்பலமாகியுள்ளன.

நாடாளுமன்றில் அவசரகால சட்ட நீட்டிப்பு மீது இன்று வியாழக்கிழமை நடைபெற்ற விவாதத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் நாடாளுமன்ற உறுப்பினர் ரங்க பண்டார கூறியதாவது:

சிங்கள ஊடகவியலாளர் படுகொலையில் தொடர்புடையோர் யார் என்பது அம்பலமாகிவிட்டது. இராணுவத்தின் லெப்டினென்ட் ஒருவரும் அவரது சகாக்களும் லக்மல் சம்பத்தின் படுகொலையில் தொடர்புடையவர்கள் என்று எங்களுக்குத் தெரிய வந்துள்ளது.

அவிசாவளையில் ஐந்து தமிழர்கள் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையோரை லக்மல் சம்பத் அறிந்திருந்தமையினால்தான் அவர் கொல்லப்பட்டுள்ளார் என்றார் ரங்க பண்டார.

மலையக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வி.ராதாகிருஸ்ணன் கூறியதாவது:

அவசரகாலச் சட்டத்தின் கீழ் வடக்கு - கிழக்கு மற்றும் கொழும்பில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். நீதிக்குப் புறம்பான படுகொலைகளில் அரச படையினரும் புலனாய்வுத்துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்போது லக்மல் சம்பத் படுகொலையில் இராணுவத்தின் லெப்டினென்ட் நிலையில் உள்ள அதிகாரிக்குத் தொடர்பிருப்பதாக தெரியவந்துள்ளது.

லக்மல் சம்பத் ஒரு சிங்களவராக இருந்தபோதும் அவிசாவளையில் ஐந்து தமிழ் இளைஞர்கள் தலை துண்டிக்கப்பட்டு நிர்வாணமாக வீசப்பட்ட சம்பவத்தின் சந்தேக நபர்களை அறிந்திருந்திருக்கிறார். ஆகையால் சிங்கள ஊடகவியலாளர் படுகொலை குறித்து அரசாங்கம் உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார் ராதாகிருஸ்ணன்.

இதையடுத்து சிறிலங்கா நாடாளுமன்றில் அவசரகால சட்டம் மேலும் ஒரு மாதத்துக்கு இன்று நீட்டிக்கப்பட்டது. இச்சட்ட நீட்டிப்பு தீர்மானத்தை பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க நாடாளுமன்றில் தாக்கல் செய்தார்.

இதனிடையே பெயர் வெளியிட விரும்பாத காவல்துறை அதிகாரி ஒருவர், லக்மல் சம்பத் படுகொலை தொடர்பாக சிறிலங்கா இராணுவ புலனாய்வுத்துறை அதிகாரி மற்றும் இரு இராணுவத்தினரை கல்கிசை சிறிலங்கா காவல்துறையினர் நேற்று புதன்கிழமை கைது செய்துள்ளதாக ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். இருப்பினும் இதுவரை எவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவில்லை.

-புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.