Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிகரிக்கும் கடத்தல் சம்பவங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதிகரிக்கும் கடத்தல் சம்பவங்கள்

[02 - July - 2006] [Font Size - A - A - A]

சிவநடேசன்

* இயக்கத்துக்கு ஆள் திரட்டும் கருணா குழுவின் முயற்சி

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயுதக் குழுக்களினால் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கடத்தப்படும் சம்பவம் அதிகரித்து வருகின்றது. பாடசாலை மாணவர்களின் நிலையும் கேள்விக்குறியாகியுள்ளது. கல்வி வளமும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

1988-89 காலப்பகுதியில் இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்பின் போதும் அன்றிருந்த இயக்கங்கள் நூற்றுக்கணக்கான அப்பாவி இளைஞர்களை பலிக்கடாவாக்கினார்கள். இதில் ஈ.பி.ஆர்.எல்.எவ்., ஈ.என்.டீ.எல்.எவ். போன்றவர்கள் அதிகளவான இளைஞர்களை தமது அணியில் கட்டாயப்படுத்தி இணைத்துக் கொண்டார்கள்.

இவர்களில் கணிசமானவர்கள் தப்பி ஓடினார்கள். ஏனையோர் செய்யவழியின்றி அவர்களுடன் சேர்ந்து இயங்கினர். இந்திய இராணுவத்துடன் இணைந்து அவர்களினால் வழங்கப்பட்ட ஆயுதங்களை கொண்டு பயிற்சி வழங்கப்பட்டு தமிழ்த் தேசிய இராணுவம் என பெயர் சூட்டப்பட்டது.

இலங்கையிலிருந்து இந்திய இராணுவம் வெளியேறியபோது அவர்களுடன் இணைந்த இயக்கத்திற்கு ஏராளமாக இராணுவ தளபாடங்கள் மற்றும் ஆயுதங்களை வழங்கி சென்றார்கள். இருந்தாலும் எந்த இயக்கங்களும் மக்கள் மத்தியில் நிலைத்து நிற்கவில்லை. காரணம் இவர்கள் மாறுபட்ட கொள்கை கொண்டவர்கள். மக்கள் விடுதலை பெறவேண்டும் என்பதற்கே ஆயுதம் ஏந்தினார்கள். ஆனால் மக்களுக்கு எதிராகவே ஆயுதங்களை பயன்படுத்திக் கொண்டார்கள். அன்றிருந்த இந்திய இராணுவத்தினர் தமிழர்களை மூட்டிவிட்டு வேடிக்கை பார்த்தார்கள். அதேபோன்ற நிலைதான் இன்று உருவாகியுள்ளது.

மட்டக்களப்பு, வாழைச்சேனை, சந்திவெளி, கல்குடா, மாங்கேணி, கிரான் ,கண்ணங்கிராமம், இருதயபுரம் போன்ற இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் கருணா குழுவினர் இராணுவத்தின் பாதுகாப்புடன் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு வருகின்றார்கள். அவர்களின் உதவியுடன் இளைஞர்களை கடத்திச் செல்கின்றார்கள். வாழைச்சேனை பகுதியில் இடம்பெறும் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் அனைத்தும் பொலிஸாருக்கு நன்கு தெரியும். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

இதேபோன்று வாழைச்சேனை மீன்பிடி துறைமுக இராணுவத்தினரும் அவர்களுடன் சேர்ந்து இயங்கும் ஈ.பி.டி.பி.யினரும் பூரண ஆதரவு வழங்கி வருகின்றார்கள். அண்மையில் நூற்றுக் கணக்கான இளைஞர்கள் வெள்ளை வானில் ஈ.பி.டி.பி. அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களின் உறவினர்கள் ஈ.பி.டி.பி. அலுவலகத்திற்கு முன்பாக அழுது புலம்பியுள்ளார்கள்.

கடத்தப்பட்டவர்கள் அனைவரும் இராணுவம், பொலிஸாருக்கு தெரியவே கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.

கருணா குழுவினரால் கடத்தப்படும் இளைஞர்கள் தொடர்பாக பொலிஸ் மற்றும் மனித நேய அமைப்புக்களிடம் முறைப்பாடு செய்ததால் உயிராபத்தினை அப்பகுதி மக்கள் எதிர்நோக்கியுள்ளார்கள். அத்துடன் பொலிஸாரிடம் தெரிவித்தும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் யாரிடம் சொல்லி அழுவது என்று தெரியாமல் மக்கள் தடுமாறுகின்றார்கள். ஆண்பிள்ளைகள் உள்ள குடும்பத்தினர் அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருப்பது போன்று நிம்மதியின்றி வாழ்கின்றார்கள். இதுதவிர பாடசாலை மாணவர்கள் மாலை நேரவகுப்பு சென்று வீடுதிரும்ப சற்றுதாமதமாகினால் பெற்றோர் படும்பாடு சொல்ல முடியாது.

இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி வளம் பாதிக்கப்படுவதுடன் எதிர்காலத்தில் கல்வியின் விகிதாசாரம் குறைவடையும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. அதுமாத்திரமல்ல, இளைஞர்கள் ஆயுத பயிற்சியினை தவிர வேறு எந்த துறையிலும் அறிவும் பெறமாட்டார்கள் என்பதுதான் உண்மை. இதற்கு உதாரணமாக மட்டக்களப்பு திராய்மடு கடல்கோளினால் பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதியில் பாடசாலைக்குச் செல்லும் சிறார்கள் பாடசாலை செல்லாது இரவு வேளையில் ஆயுதங்கள் சகிதம் வீடுவீடாக சென்று மிரட்டிவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றார்கள். இவற்றுக்கு கருணா குழுவின் உறுப்பினர்கள் தான் இவர்களை வழிநடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிடிக்கப்பட்டவர்கள் அனைவரும் வெலிக்கந்தை தீவுச்சேனை பகுதியில் பயிற்சி வழங்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இவர்கள் அனைவரும் மீண்டும் தமிழ் மக்களுக்கு எதிரான போராட்டத்திற்கு தயாராகி வருவதாகவே உணரவேண்டியுள்ளது. அண்மையில் கருணா அவர்கள் லண்டன் வானொலியில் தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாக கூறியிருந்தார். யார் பயங்கரவாதம், யார் மக்களை பாதுகாப்பது என்பது புரியாத புதிராகவுள்ளது.

இவ்வாறான கடத்தல் மூலம் கருணா குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து காட்டுவதற்கு முற்படுகின்றார்கள். இவர்களின் நோக்கம் நான்காம் கட்ட ஈழப்போர் ஆரம்பிக்கப்பட்டால் வடபகுதியை இலகுவாக விடுதலைப் புலிகள் தமது வசமாக்கிவிடுவார்கள். முழு பார்வையும் வடபகுதியில் தான் இருக்கும். கிழக்கில் மட்டுப்படுத்தப்பட்டளவிலான தாக்குதல் இடம்பெறும். இதனால் இராணுவத்தின் உதவியுடன் கிழக்கில் அதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தினை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

எந்தவொரு நாட்டிலும் இராணுவமாக இருக்கலாம் அல்லது இயக்கங்களாக இருக்கலாம் கட்டாயப்படுத்தி ஆளணியினை அதிகரிக்க முடியாது. 2002 ஆம் ஆண்டுக்கு முன்பு கடுமையான யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இலங்கை இராணுவத்தில் இருந்து 30,000 க்கும் அதிகமான இராணுவத்தினர் தப்பியோடினார்கள். சம்பளத்திற்காக வந்தவர்கள் உயிரை இழக்க விரும்பவில்லை.

கருணா குழுவினால் கடத்தப்பட்டவர்களுக்குக் கூட யுத்தத்திற்கான பயிற்சி வழங்கப்படும் என்பதற்கு இல்லை. இவர்களுக்கு ஆயுத பயிற்சி மாத்திரமன்றி சண்டையிடுவதற்கான வியூகங்களை அறிந்திருக்க மாட்டார்கள். இதற்கு உதாரணமாக 5 ஆம் மாதம் தீவுச்சேனையில் இடம்பெற்ற விடுதலைப் புலிகளின் தாக்குதலின் போது கருணா தரப்பில் 30க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் கொல்லப்பட்டார்கள். காரணம் இவர்களுக்கு போதிய பயிற்சி வழங்கப்படவில்லை.

இவர்கள் பேட்டிகள், அறிக்கைகள் மூலமாக தாக்குதல்களை விரிவுபடுத்தியிருப்பதாக தெரிவிக்கலாம். ஆனால், உண்மையில் இராணுவத்தினர் புலனாய்வுப் பிரிவு மற்றைய ஆயுதக் குழுக்களின் உதவியுடனும் தான் இவர்கள் செயற்படுகின்றார்களே தவிர தனித்துவமான முறையில் இவர்கள் செயற்படவில்லை.

அண்மையில் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான பங்குடாவெளி இலுப்படிச்சேனை பகுதியில் கிளேமோர் தாக்குதல் மேற்கொண்ட ஆழ ஊடுருவும் மூன்று உறுப்பினர்கள் விடுதலைப் புலிகளினால் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் தெரிவித்த தகவலின் படி மட்டக்களப்பு பல்பொடி கொம்பனி புலனாய்வு துறையின் முகாமின் சுரேஷ் (இவர் சிங்களவர் ஆனால் தமிழ் பெயரை வைத்திருப்பதாகவும் தெரிய வருகிறது) என்பவர் தான் தங்களை இயக்கி வருவதாக கூறினார்கள். நவரெட்ணம் பிரதாப் என்ற புளொட் உறுப்பினர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டது.

வட பகுதியில் கூட ஆழ ஊடுருவும் அணியின் தாக்குதல் முறியடிக்கப்பட்டது. அதிலும் இராணுவ வீரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை தெரிந்த விடயமே. அரசாங்கம் கருணா குழுவின் பெயரை நன்கு திட்டமிட்ட முறையில் பயன்படுத்தி தமிழருக்கு எதிரான படுகொலைகளை மேற்கொண்டு வருகின்றது.

http://www.thinakkural.com/news/2006/7/2/a...es_page5590.htm

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தென் தமிழீழத்தின் அபிவிருத்திக்காகப் போராடப் போகிறோம் என்றனர், தமிழீழம் வேண்டாம் என்றனர், தற்போது பயங்கரவாதத்தை அழிக்கப் போகின்றோம் என்கின்றனர். கடைசியில் தென் தமிழீழ மக்களின் அழிவிற்குத்தான் இவர்கள் வழிவகுக்கின்றனர். இவர்களை மக்கள் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளனர்.

தமிழர்களிட்டை காசெல்லாத்தையும் புடுங்கிப்போட்டு, சிங்களவர்களில பாய்வாங்கள். அப்ப அனுபவிப்பீனம் பாம்புக்கு பால் வார்த்ததின் பலனை.

இத்துரோகிகளுக்கு முடிவுகாலம் வெகு தூரத்தில் இல்லை...

ஆடுமட்டும் ஆடட்டும்...பார்ப்போம்....ம்ம்ம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.