Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமிலத் தாக்குதல்கள்: மறுக்கப்படும் காதல்களின் மறுபக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமிலத் தாக்குதல்கள்: மறுக்கப்படும் காதல்களின் மறுபக்கம்

எஸ். கோபாலகிருஷ்ணன்
 

 

அண்மையில் காரைக்காலைச் சேர்ந்த வினோதினி மற்றும் சென்னையைச் சேர்ந்த வித்யா ஆகிய இளம் பெண்கள் அமிலம் வீசப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள். காதலை மறுத்ததால்தான் இருவருக்குமே இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. மறுக்கப்படும் காதலுக்கு இத்தனை கோரமுகமா என்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவங்களாக இவை அமைந்திருக்கின்றன.

 

காதலுக்கு கண் இல்லை என்பதைக் காதல் சாதி மத வித்தியாசங்கள் பார்ப்பதில்லை என்றும் புரிந்துகொள்ளலாம். இதனால்தான் சாதி மத வேறுபாடுகள் நீங்க, காதல் திருமணங்கள் பெருக வேண்டும் என்று முற்போக்காளர்கள் குரலெழுப்பத் தொடங்கியிருக்கிறார்கள். காதலர் தினத்துக்கு வாழ்த்து தெரிவிக்கிறார்கள். காதலை ஆதரிக்கும் கருத்தரங்குகள், கவியரங்குகள் ஆகியவற்றுக்கு சாதி ஒழிப்புக்காக போராடும் செயற்பாட்டாளர்கள் பங்கேற்கிறார்கள்.

 

ஆனால் காதல் என்பது ஒருவர் சம்பந்தப்பட்டது அல்ல. அதற்கு இரண்டு மனங்களின் ஒத்திசைவு வேண்டும். அது நிகழாமல் போவதால் சில நேரங்களில் மோசமான விளைவுகள் நேர்கின்றன. அவற்றின் உச்சம்தான் அமில வீச்சு. தன்னை நிராகரித்த பெண்ணை வேறு யாரும் ஏற்கக் கூடாது என்ற ஆண்களின் முடிவு அமில வீச்சுக்கு ஒரு காரணம். இது பெண்ணின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்காமல் அவளை ஒரு பொருளாகப் பார்க்கும் மனநிலையின் வெளிப்பாடு.

 

மற்றொன்று அழகு தரும் திமிரால்தான் ஒரு பெண் தன்னை நிராகரிக்கிறாள் என்று நினைக்கும் ஆண்கள் அமிலம் வீசி அவளது அழகைச் சிதைக்க நினைக்கிறார்கள். அழகான பெண் என்றாலே அவள் திமிர் பிடித்தவளாக இருப்பாள் என்ற சிந்தனை சராசரி ஆண்களின் பொதுப்புத்தியில் உறைந்திருப்பதன் விளைவுதான் இது.

 

இரண்டு காரணங்களிலும் பெண்ணின் அழகுதான் குறிவைக்கப்படுகிறது. ஒரு பெண்ணுக்கு அழகுதான் மிக முக்கியமானது. அதைப் பேணுவதுதான் அவளது தலையாய பணி என்று பெண்களுக்குச் சொல்லிக் கொடுக்கும் ஆண் மையச் சமூகம், அந்த அழகு ஆண் ஆள்வதற்கானது என்றும் அந்த அழகை வைத்துத் தன்னை மட்டம்தட்ட ஆண் அனுமதித்துவிடக் கூடாது என்றும் ஆண்களுக்குக் கற்றுக்கொடுக்கிறது. எந்த அழகு பெண்ணுக்கு முக்கியம் என்று சொல்லிக் கொடுக்கப்பட்டதோ அதே அழகு அவளுக்கு ஆபத்தானதாகவும் இருப்பதைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.

 

வினோதினி, வித்யா ஆகியோரின் மரணங்கள் அமில வீச்சு சம்பவங்கள் குறித்த கவனத்தை ஈர்த்திருந்தாலும் அமில வீச்சுக்குப் பெண்கள் பலியாவதோ அடையாளம் காண முடியாத அளவு உடல் சேதத்துக்கு ஆளாவதோ புதிதல்ல.

 

2003இல் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி சோனாலி முகர்ஜி காதலை மறுத்ததற்காக மூன்று இளைஞர்களின் அமிலத் தாக்குதலுக்கு ஆளானார். 22 அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு உயிர் பிழைத்திருக்கிறார். ஆனால் மிகக் கொடுமையாகச் சிதைவுற்ற அவர் முகம் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. இதே முகத்துடனும் உடல் வலிகளுடனும்தான் அவர் இறுதிவரை வாழ வேண்டும்.

 

சோனாலி முகர்ஜியின் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 2006இல் அளித்த தீர்ப்பில் அமில விற்பனையை முறைபடுத்த வேண்டும் என்றும் இது குறித்த மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளையும் கலந்தாலோசித்து விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

 

சில மாதங்களுக்கு முன் அமில விற்பனை குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்ற விசாரணை வந்தபோது அமில விற்பனையை முறைப்படுத்த மத்திய அரசு எந்த வலுவான நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று தெரியவந்திருக்கிறது.

 

வினோதினி பல நாட்கள் போராடி உயிரிழந்த பின் அமில விற்பனையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். மத்திய அரசு செய்ய முனையாததை மாநில அரசு செய்ய முன்வந்திருப்பது ஆறுதலளிக்கும் விஷயம்தான் என்றாலும், அமில வீச்சு சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள் நடத்தப்படும் விதம் கவலைக்கிடமாகவே உள்ளன.

 

நெருப்புக் காயங்களுக்கான சிகிச்சைகளை வழங்குவதில் சிறந்தது என்று நம்பப்படும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார் வினோதினி. அவருக்கு அங்கே சிகிச்சை அளித்த மருத்துவர் வி.ஜெயராமன் பணி ஓய்வுபெற்றுச் சென்றதும் அவர் தொடர்ந்து பணியாற்றிய தனியார் மருத்துவமனைக்குத் தன்னை மாற்ற வேண்டும் என்று வினோதினி கோரினார். அதை ஏற்று தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவர் உயிரிழந்ததும் அந்த மருத்துவமனையில்தான். உயிருக்காகப் போராடும் நோயாளி தன்னைத் தனியார் மருத்துவமனைக்கு மாற்றச் சொல்லும் அளவுக்கு நம் அரசு மருத்துவமனைகள் இருப்பதைப் பற்றி நம் அரசு கவலை கொண்டதாகத் தெரியவில்லை.

 

வினோதினியின் சிகிச்சைக்கான பணத்தைத் திரட்ட முடியாமல் அவரது பெற்றோர் தடுமாறிக்கொண்டிருந்தபோது வினோதினியின் உறவினர் ரமேஷிடம் பேசியவர்கள் சமூக வலைதளங்களில் பண உதவிக்காக வேண்டுகோள் விடுத்ததன் பயனாக ஒரளவு நிதி திரட்ட முடிந்தது.

 

வினோதினி இறந்து ஒரு சில நாட்களில் அமில வீச்சினால் பாதிக்கப்பட்டு உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்த வித்யாவின் தாய் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் வசதிகள் சரியாக இல்லை என்றும் அவரைத் தனியார் மருத்துவமனைக்கு மாற்ற பண உதவி தேவைப்படுவதாகவும் அரசுக்குக் கோரிக்கை விடுத்தார். வித்யா படுக்கவைக்கப்பட்டிருந்த படுக்கை விரிப்பில் சீழ் படிந்திருந்ததாகவும் அதனை மாற்றக்கூட மருத்துவமனை ஊழியர்கள் முன்வரவில்லை என்றும் வித்யாவின் உறவினர்கள் வேறொரு படுக்கை விரிப்பை வாங்கி வந்து அவரை அதில் படுக்க வைத்தார்கள் என்றும் செய்திகள் வெளியாயின. ஆனால் அடுத்த ஒரு சில நாட்களில் பலியான வித்யாவின் உடலை வாங்க மறுத்த அவரது தாய், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மருத்துவ வசதிகள் மிக மோசமாக இருந்ததாகக் குற்றம்சாட்டினார்.

 

இவை எதையும் அரசு பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. அரசு மருத்துவமனைகளின் சிகிச்சை வசதிகள் இத்தனை மோசமாக இருப்பது குறித்து அரசு இதுவரை எந்த நடவடிக்கையையும் அறிவிக்கவில்லை.

 

அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை வசதிகள் சரியாக இல்லை. தனியார் மருத்துவமனைகளின் சிகிச்சைக் கட்டணத்தைச் செலுத்த ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரால் முடியவில்லை. அந்த விதத்திலும் அரசு அவர்களுக்கு உதவ முன்வரப்போவதில்லை. இதே நிலை தொடர்ந்தால் அமில மரணங்களும் தொடரும் என்று பயப்படாமல் இருக்க முடியவில்லை.

 

ஒரு பேருந்து விபத்து நடந்தால் பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாகப் பண உதவி வழங்கப்படுகிறது. ஏனெனில் அதில் அரசு வாகனம் சம்பந்தப்பட்டிருக்கிறது. விபத்தின் பின்னணியாக அரசின் கவனமின்மை சுட்டிக்காட்டப்படும் வாய்ப்பிருக்கிறது. மோதிக்கொண்ட வாகனங்கள் தனியார் வாகனங்களாக இருந்தாலும் இழப்பு அதிகமாக இருந்தால் உடனே நிவாரணம் வழங்கப்படுகிறது. ஆனால் ஒரு தனி நபர் தாக்குதலுக்கு ஆளானவர் மன்றாடிக் கேட்டுக்கொண்டாலும் மனிதாபிமான அடிப்படையிலாவது அதற்கான பண உதவியைச் செய்ய அரசு பரிசீலிப்பதுகூட இல்லை என்பது வேதனை தரும் உண்மை. அரசு சம்பந்தப்பட்ட விஷயம் அல்லது பல உயிர்கள் பலியாவது ஆகிய தருணங்களில்தான் அரசு கவலைப்படுமா என்ற கேள்வி எழுகிறது.

 

காதல் என்பது தனக்குப் பிடித்தவரைத் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரத்தின் குறியீடு. அது இதுபோன்ற சம்பவங்களால் பெண்களுக்கும் பெற்றோருக்கும் அச்சமூட்டும் விஷயமாகவே மாறுகிறது. கூடுமானவரை இனி ஆண்களுடன் பழகுவதை தவிர்க்கவே பெண்கள் பழக்கப்படுத்தப்படுவார்கள். தைரியமான பெண்கள்கூட அமில வீச்சு போன்ற சம்பவங்களால் சற்றேனும் அச்சம் கொள்ளவே செய்வார்கள். தன்னிடம் இன்று நேசமாகப் பழகும் ஒரு ஆண் நாளை காதல் விண்ணப்பம் போடலாம், அதை ஏற்க முடியாத நிலையில் தான் இருக்கும்போது அவன் கோபம் கொண்டு அமிலம் வீசலாம் என்னும் சாத்தியக்கூறு ஒவ்வொரு பெண்ணின் உளவியலிலும் பாசிபோலப் படர்ந்துவிடத்தான் செய்யும். இது ஆண் - பெண் உறவின் இயல்புத் தன்மையையே பாதித்துவிடும் அளவுக்கு வலுவானது. வெளியே சென்றாலே ஆண்களால் ஆபத்து என்று வீட்டுக்குள்ளேயே பெண்களை முடக்குவதற்கான தூண்டுதல் பெற்றோருக்கு ஏற்படும்.

 

இதுபோன்ற சம்பவங்கள் சமுதாயத்தில் ஏற்படுத்தும் மிக மோசமான தாக்கம் இதுதான்.

 

  • கருத்துக்கள உறவுகள்

அமிலங்கள் குறிப்பாக பாதிப்புள்ள அமிலங்கள் கிடைக்கும் வழிமுறைகளைக் கண்டறிந்து அகற்றுவது சிறந்த வழி.

 

பெரும்பாலான அமிலங்கள்.. கார் மற்றும் வாகன பற்றரிகளில் பயன்படுத்தும் அமிலங்களில் இருந்து தான் சாதாரணமானவர்களை அடைகிறது. இங்கு மிக வலுவான ஒரு கண்காணிப்பை.. சட்ட அமுலாக்கத்தைக் கொண்டு வருவதன் மூலமும்.. அமில உற்பத்தியாளர்கள் மத்தியில் கடுமையாக சட்ட அமுலாக்கம் கண்காணிப்பை கொண்டு வருவதன் மூலம்.. இதனை மிகச் சுலபமாக கட்டுப்படுத்தலாம்.

 

அதேபோல்.. ஆயுதங்களின் பரவலை தடுப்பதன் மூலம் ஆயுத வன்முறைக்கு முடிவு கட்டலாம்.

 

அதைவிட்டிட்டு.. சும்மா நீட்டுக்கு கட்டுரை எழுதி.. சனத்தை பயப்பிடுத்திறதால ஒன்றும் ஆகப்போறதில்லை..! :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.