Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்ணாவிரதம் இருந்த மாணவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி!

Featured Replies

உண்ணாவிரதம் இருந்த மாணவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி!

 இலங்கைக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து வந்த மாணவரை கல்லூரி பேராசிரியர் திட்டியதால் மனம் உடைந்த அந்த மாணவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மாணவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 3 பேரும் சென்னை லயோலா கல்லூரி மாணவர் கார்ல்மார்க்ஸ் தலைமையில் கல்லூரி வளாகத்தில் 4வது நாளாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் மத்திய அரசு பிரதிநிதி தங்களிடம் நேரில் பேச்சுவார்த்தை நடத்த வர வேண்டும் என்பது மாணவர்களின் முக்கிய கோரிக்கை.

இதனிடையே, பட்ஜெட் விளக்கப்  பொதுக் கூட்டத்தி்ற்காக வரும் சனிக்கிழமை காலை காரைக்குடி வருகிறார் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம். அந்த நேரத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடந்து விடக் கூடாது என்பதற்காக மாணவர்களை இரவோடு இரவாக கைது செய்வதற்கான முயற்சியிலும் இருக்கிறது போலீஸ்.

இதனிடையே, உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து உடன் அமர்ந்த மண்ணியல்துறை முதலாமாண்டு மாணவர் காளிராஜை நேற்று விலங்கியல் துறைத் தலைவர், போராட்டத்தில் கலந்து கொண்டதை கண்டித்து திட்டினாராம். இதனால் மனஉளைச்சல் அடைந்த காளிராஜ் தனது சொந்த ஊரான பரமக்குடிக்கு சென்று நேற்றிவு விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் காளிராஜ்.

கல்லூரி மாணவர் விஷம் குடித்த விவகாரம் போராட்டக் களத்தில் இருக்கும் மாணவர்கள் மத்தியில் கடும் கொந்தளி்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, மாணவிகளை செல்போனில் படம் எடுத்ததை கண்டித்ததால் மாணவன் காளிராஜ் தற்கொலை முயற்சி மேற்கொண்டதாகவும், பிரச்னையை திசை திருப்ப மாணவன் இப்படி நடந்து கொண்டதாகவும் பேராசிரியர்கள் கூறியுள்ளனர்.

 

http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13337:karaikkudi&catid=36:tamilnadu&Itemid=102

தற்கொலை செய்தால் கோழைத்தனம் என்கிறார்கள் சிலர்.
மாணவர்கள் மத்தியில் சமுதாய விழிப்புணர்வு இல்லை என்கிறார்கள் சிலர்.

 

 

ஆனால் சனநாயக நாட்டில் அகிம்சை வழியில் போராடுபவர்களை மறுதலிப்பவர்களும் இவர்கள் தான்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

உண்ணாவிரதம் இருந்த மாணவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி!

 இலங்கைக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து வந்த மாணவரை கல்லூரி பேராசிரியர் திட்டியதால் மனம் உடைந்த அந்த மாணவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மாணவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அந்தப் பேராசிரியரும்.... ஒரு காலத்தில், மாணவராய் இருந்தவர் தான். மாணவர்களின் உணர்வை, அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

மாணவன் காளிராஜ் விரைவில் நலம்பெறவேண்டும்..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.