Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தூதருக்கு இந்தியா சம்மன்

Featured Replies

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்ற விவகாரம் தொடர்பாக இந்திய அரசு இலங்கை தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

 

 

இது தொடர்பாக டெல்லியில் இலங்கை தூதரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேரில்அழைத்து, கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை மனிதாபினத்துடன் இலங்கை அரசு நடத்த வேண்டும் என்றும், கைதான மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?N=94208

  • கருத்துக்கள உறவுகள்
இதெல்லாம் ஒரு சமன், 
...... தூ, மானம் கெட்டவங்கள்    
  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தியை படித்து தன்னும் ஒரு சில தமிழ் நாட்டு மக்களுக்கு சூடு சுரணை வருமா.....

இந்த சமன் எந்த சொற்கூட்டல்?(Salmon, Summon)

 

நீங்கள் இனிமேல் நாங்கள் பிடிக்கும் மீன்களை பறிக்க ஆயுதங்கள், கடல்படை படகுக்கு அலைய வேண்டியதில்லை. அதுதான் நாங்களே உங்களுக்கு சமன்  கொடொடுத்துடுகிறோம் என்றார்கள் போலிருக்கு. :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆருக்கு காதிலை, பூச்சுத்றியள்.
உங்கடை... சமன் பேப்பரை வேண்டி, அவன் பின் பக்கத்தை துடைப்பான் தெரியுமோ.....toiletpaperroll2.jpg

  • தொடங்கியவர்

தமிழக மீனவர்கள் தாக்குதல் தொடர்பாக இலங்கை தூதரை அழைத்து கண்டிக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

 

தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் பிரச்னை குறித்து, இலங்கைத் தூதரை அழைத்து கண்டிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.மேலும், பிடித்துச் செல்லப்பட்ட ராமேசுஸ்வரம் மீனவர்கள் மீது எந்த குற்ற வழக்குகளும் தொடராமல் அவர்களை விடுவிக்க வேண்டுமெனவும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில்:

 

 

ராமேசுவரம் மீன்பிடித் தளத்தில் இருந்து 9 இயந்திர படகுகளுடன் 53 மீனவர்கள் கடந்த 13 ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களை கைது செய்த இலங்கை கடற்படை, தலைமன்னார் மற்றும் நெடுந்தீவு (டெல்ஃப்ட் தீவு) ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். குறுகலான பாக்ஜல சந்தி பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதைத் தவிர அவர்களுக்கு வேறுவழியில்லை. இந்தச் சூழலில், பாக்ஜல சந்தி பகுதியில் தமிழக அரசையோ அல்லது அதனுடைய மீனவர்களையோ கலந்து ஆலோசிக்காமல் இலங்கை அரசே தன்னிச்சையாக சர்வதேச எல்லைக் கோட்டை வகுத்துள்ளது.இரு நாடுகளுக்கு இடையிலான மீன்பிடி பிரச்னைகளில், ஒரு நாட்டைச் சேர்ந்த மீனவர்களை தாக்கியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும், அவர்களை குற்றவாளிகள் போன்று நடத்துவம், கைது செய்வதும் தீர்வாக அமையாது என்ற எனது கருத்தை தாங்கள் ஒப்புக் கொள்வீர்கள்.


இந்திய மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடிக்கும் போது அவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதும், கைது செய்வதும் சமீப காலங்களில் தொடர்கதையாகி வருவது கவலை அளிப்பதாக உள்ளது. கச்சத்தீவு பகுதியில் தன்னிச்சையாக சர்வதேச எல்லைக் கோட்டை இலங்கை அரசு வகுத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

 

மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்துக்காக மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்படும் போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமென்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால், தாங்கள் மெளனம் சாதிப்பது தமிழக மீனவர்கள் மீது மத்திய அரசுக்கு அக்கறை இல்லை என இலங்கை அரசு நினைத்து விடக் கூடாது.தூதரை அழைக்க வேண்டும்: தமிழக மீனவர்கள் மீது தொடர்ச்சியாக நடத்தப்படும் தாக்குதல் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக, தில்லியில் உள்ள இலங்கைத் தூதரை அழைத்து இந்தியா தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும். மேலும், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மீது எந்த குற்றவழக்குகளும் இல்லாமல் அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். அந்த நாட்டு அரசை தாங்கள் அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

 

http://dinamani.com/latest_news/article1501549.ece

இந்திய மீனவர்கள் 60 பேர் கைது

                                                         ff7c351c5d4018614eaa4b6884d9e9f1.jpg

                            

                                                        

கச்சதீவில் வைத்து இந்திய

மீனவர்கள் 60 பேர் இன்று காலை இலங்கை கடற்படையினரால் கைது

செய்யப்பட்டுள்ளதாக பம்பன் மீனவர் சங்க தலைவர் யூ. அருளானந்தம்

தெரிவித்துள்ளார். 

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள்

தங்கச்சி மடத்தைச் சேர்ந்தவர்கள் எனவும்,கைதானவர்கள் அனைவரும் நெடுந்தீவு

பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

 

இதன்போது இலங்கை கடற்படையினரிடமிருந்து

தப்பிச் செல்ல முற்பட்ட மீனவர்கள் 20 பேர் தாக்குதலுக்கு இலக்கான நிலையில்

இராமேஸ்வரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக

மாவட்ட வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை நேற்று இரவு 19 இந்திய மீனவர்கள் தலைமன்னார் கடற்பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 
14 மார்ச் 2013, வியாழன் 12:45 பி.ப

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.