Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று, என்ன விவாதிக்கப்பட்டது? கலைஞர் பேட்டி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

k%20eelam%203.jpg

 

18-dmk-mps5-300.jpg

என்ன விவாதிக்கப்பட்டது? என்ன முடிவெடுக்கப்பட்டது? :

கலைஞர் பேட்டி

இலங்கை விவகாரத்தில் மத்திய அரசின் நிலை பற்றி திமுக தலைவர் கலைஞருடன் விவாதிக்க இன்று மாலை மத்திய அமைச்சர்கள் குலாம்நபி ஆசாத், ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி ஆகியோர் சென்னையில் கலைஞர் இல்லத்திற்கு வந்தனர்.

இந்த ஆலோசனைக்கு பின்னர் கலைஞர் செய்தியாளர்களை சந்தித்தார்.

இன்று மாலையில் காங்கிரஸ் தலைவர்கள் உங்களை வந்து சந்தித்திருக்கிறார்கள். என்ன விவாதிக் கப்பட்டது? என்ன முடிவெடுக்கப்பட்டது?

இன்று மாலையில் என்னைச் சந்தித்தவர்களிடம் நான் உறுதியாக தெரிவித்திருப்பது - “இலங்கை அரசாலும், இலங்கை அரசின் நிர்வாகத்தில் உள்ளவர்களாலும், இலங்கைத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை போர்க்குற்றங்கள் என்றும், இனப் படுகொலை என்றும் பிரகடனப்படுத்த வேண்டும்.”

அடுத்தபடியாக, “நம்பகத் தன்மை வாய்ந்த சுதந்திரமான பன்னாட்டு ஆணையம் ஒன்றை அமைத்து, குறிப்பிட்ட காலவரையறைக்குள் இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள், மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள், பன்னாட்டு மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் மற்றும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று திருத்தங்கள் கொடுக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொண்டேன்.

 

நான் மேற்சொன்ன இந்தத் திருத்தங்கள் அடங்கிய தீர்மானத்தை இந்திய நாடாளுமன்றத்திலும் உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அவர்களும் அதற்கு ஆவன செய்வதாக உறுதி அளித்துச் சென்றிருக்கிறார்கள்.

நாடாளுமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டுமென்று நீங்கள் கேட்டுக் கொண்டதாகவும், அவர்கள் உறுதி அளித்துச் சென்றிருப்பதாகவும் சொல்கிறீர்கள். ஆனால் குலாம் நபி ஆசாத் எங்களிடம் கூறும்போது, இங்கே பேசப்பட்டவைகளை பிரதமரிடம் சென்று தெரிவிப்போம் என்றுதான் சொல்லியிருக்கிறார். உறுதிமொழி கொடுத்ததாக அவர் சொல்லவில்லையே?

அவர்கள் எங்களிடம் சொன்னதை உறுதி அளித்ததாக நம்பித்தான் நான் உங்களிடம் சொல்லியிருக்கிறேன்.

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஏற்கனவே இருந்த “இறுக்கம்” இப்போது தளர்ந்திருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமா?

இலங்கைத் தமிழர்க்கு நாங்கள் நினைத்ததெல்லாம் நடந்தால்தான் இலங்கைத் தமிழர் பிரச்சினையிலே “இறுக்கம்” தளர்ந்ததாக அர்த்தம்.

அமெரிக்கா தீர்மானத்தில் நீங்கள் கேட்கும் திருத்தங்களை இந்தத் தருணத்தில் கொண்டு வருவது சாத்தியமானது தானா?

அமெரிக்க தீர்மானத்தில் நாங்கள் கேட்கும் திருத்தங்களையும் இணைத்துக் கொண்டு வர வேண்டுமென்று நாங்கள் ஏற்கனவே சொல்லியிருக்கிறோம்.

 

நன்றி நக்கீரன்.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை  இந்தாள் பொழுதுபோகேல்லை எண்டு செய்யிற வேலையெல்லாத்தையும் ...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை  இந்தாள் பொழுதுபோகேல்லை எண்டு செய்யிற வேலையெல்லாத்தையும் ...

 

மினக்கெட்டு... இணைக்க வேண்டாம். என்று சொல்லுகிறீகள் என்று... புரியுது. :D 

ஆள் எடுக்கிற, எடுப்பையும்... சனம் பார்க்கட்டுமன். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் எங்களிடம் சொன்னதை உறுதி அளித்ததாக நம்பித்தான் நான் உங்களிடம் சொல்லியிருக்கிறேன்.

இரண்டரை மணித்தியாலம் கருணாநிதி பேசியது இம்புட்டுதான்....எதாவது விளங்குதா விளங்கினவங்க ஒருக்கா விளக்கம் சொல்லுங்க..!

அமெரிக்கத் தீர்மானம் நீர்த்துப்

போனமைக்கு மத்திய அரசே காரணம்! - கருணாநிதி குற்றச்சாட்டு!!

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சிறிலங்கா

அரசாங்கத்தின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை, இந்தியாவின் சார்பில்

முழுவதுமாக ஏற்றுக் கொண்டு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையிலேயே

அமெரிக்கத் தீர்மானம் நீர்த்துப் போகச் செய்யப்பட்டிருப்பதாக தி.மு.கவின் தலைவர்

கருணாநிதி குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கைத் தமிழ் மக்கள் மீதான படுகொலையை ஒரு இனப்படுகொலையாக அறிவிக்க

வேண்டும் என்றும், போர்க்குற்றங்கள்

மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்

என நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் மத்திய அரசிடம் தி.மு.கவின்

தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இது தொடர்பில் மத்திய அரசிடம் இருந்து எவ்வித பதிலும் கிடைக்காத

நிலையில் மத்திய அமைச்சரவை மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆகியவற்றில்

இருந்து வெளியேறுவதாக நேற்று அவர் அறிவித்து, தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் தமது

இராஜினாமாக் கடிதத்தை கையளித்து வரும் ஒரு பரபரப்பான சூழ்நிலையில் அவர் இன்று

வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில்

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

'இலங்கை அரசாலும், இலங்கை

அரசின் நிர்வாகத்தில் உள்ளவர்களாலும் இலங்கைத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட

தாக்குதல்களை 'போர்க்குற்றங்கள்' என்றும், 'இனப்படுகொலை' என்றும் பிரகடனப்படுத்த

வேண்டும் என்றும்; 'சுதந்திரமான

பன்னாட்டு ஆணையம் ஒன்றை அமைத்து,

குறிப்பிட்ட கால வரையறைக்குள் இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள், மனித இனத்துக்கு எதிரான

குற்றங்கள், பன்னாட்டு

மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் மற்றும் இலங்கைத் தமிழர்களுக்கு

எதிரான இனப்படுகொலைகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும திமுக இரண்டு

திருத்தங்களை வலியுறுத்தியது.

அந்தத் திருத்தங்களை இந்திய நாடாளுமன்றத்தில் உடனடியாகத் தீர்மானமாக

நிறைவேற்றி; அமெரிக்கத்

தீர்மானத்தில் அந்தத் திருத்தங்களையும் இணைத்து ஆதரித்திட வேண்டும் என்று 19.3.2013 அன்று

நான் சொன்னேன்.

நான் தெளிவாகச் சொன்னதை முதல்வர் ஜெயலலிதாவும், ஒரு சில ஊடகங்களும்

சரியாகப் புரிந்து கொள்ளாமலோ அல்லது உள்நோக்கத்துடனேர் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில்

தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்குப் பதிலாக, இந்திய நாடாளுமன்றத்தில்

தீர்மானம் நிறைவேற்றினாலே போதும் என்று நான் சொன்னதைப் போல விமர்சனம்

செய்திருப்பது கண்டனத்திற்குரியதாகும்.

இலங்கையில் ராஜபக்ச அரசால் நடத்தப்பட்டது இனப்படுகொலையே என்பதையும், சுதந்திரமான பன்னாட்டு

ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்பதையும், அந்த ஆணையம் குறிப்பிட்ட காலவரையறைக்குள் விசாரணையை நடத்தி முடிக்க

வேண்டும் என்பதையும் முதலில் இந்திய அரசு ஏற்றுக் கொண்டு, அதனையொட்டி

நாடாளுமன்றத்தில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றிட வேண்டும்.

அந்தத் தீர்மானத்தை அமெரிக்கத் தீர்மானத்தோடு இணைத்து, ஐ.நா மனித உரிமைகள்

ஆணையத்தில் கொண்டு வர வேண்டு மென்பதுதான் நமது விருப்பமும் வேண்டுகோளுமாகும்.

ஆனால் இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணை வேண்டும்

என்ற கோரிக்கை, அமெரிக்கத்

தீர்மானத்தில் இப்போது இடம் பெறவில்லை. அதற்குப் பதிலாக, இலங்கை அரசே விசாரணை நடத்த

வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. அமெரிக்கத் தீர்மானம் நீர்த்துப் போனதற்குப் பின்னணியில்

இந்தியாவும் உள்ளதாக 'அம்னெஸ்டி

இண்டர் நேஷனல்' எதிர்ப்புத்

தெரிவித்துள்ளது. இப்படி அமெரிக்கத் தீர்மானம் பெருமளவுக்கு நீர்த்துப்

போய்விட்டது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் நடைபெற்ற ஆய்வின்போது, இலங்கை அரசு சார்பில்

வைக்கப்பட்ட அறிக்கையை, இந்தியாவின்

சார்பில் முழுவதுமாக ஏற்றுக் கொண்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையிலேயே

அமெரிக்கத் தீர்மானம் நீர்த்துப் போகச் செய்யப்பட்டிருக்கிறது.

தி.மு.கழகம் முன்வைத்த திருத்தங்களும் மத்திய அரசால் முறையாக

பரிசீலிக்கப்படவில்லை. இந்தச் சூழ்நிலைகளிலேதான் தி.மு.கழகம் தனது நிலைப்பாட்டை

அறிவித்து, ஐக்கிய

முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகிக் கொள்வது என்ற முடிவை மேற்கொண்டது. இதனைத்

தெளிவாக தி.மு.கழகம் தெரிவித்திருந்த போதிலும் வேண்டுமென்றே சிலர் திட்டமிட்டு

திசைதிருப்பி விஷமப் பிரச்சாரம் செய்வது கண்டிக்கத்தக்கது' என இவ்வறிக்கையில் மேலும்

தெரிவிக்கப்பட்டுள்ளது.

3/20/2013 4:11:48 AM

 

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=51c5af1d-d8e0-417c-b8ca-2c3426d93dd2

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தலைவர் முடிவு எடுக்க நான்கு வருடம் எடுத்தது...அதே முடிவை எடுக்க பண்ண மாணவர்களுக்கு நான்கு நாள்களே ஆனது இதுதான் மாணவர் ..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.