Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவா தீர்மானம் தமிழர்களுக்கு வெற்றியல்ல - ஆனால் சிறிலங்காவுக்கு தோல்வி! - ருத்திரகுமாரன் அறிக்கை

Featured Replies

ஜெனிவா தீர்மானம் தமிழர்களுக்கு வெற்றியல்ல - ஆனால் சிறிலங்காவுக்கு தோல்வி! - ருத்திரகுமாரன் அறிக்கை
3acdfc51-15ee-4aa7-b8a4-2b62001093861.jp


அமெரிக்காவினால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ள இத்தீர்மானம் தமிழ் மக்களின் உணர்வுகளை, எதிர்பார்ப்புகளை நெருங்கி வரவில்லை. இதனால் இத்தீர்மானத்தை நாம் தமிழர்களுக்கு கிடைத்த வெற்றியாகக் கருதமுடியாது. ஆனால் நிச்சயமாக இதனை சிறிலங்காவுக்கான தோல்வியாக நாம் பார்க்கமுடியும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரமதர் வி.ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்கா தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை குறித்து நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி.ருத்திரமாரன் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஐக்கியநாடுகள் மனித உரிமைப் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் 13 அதிகப்படியான வாக்குகளால் நிறைவேறியுள்ளது. 47 நாடுகளை உறுப்பினராக கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் 26 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாகவும் 13 நாடுகள் எதிராகவும் வாக்களிக்க, 8 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாது நடுநிலையும் வகித்திருந்தன.

அமெரிக்காவினால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ள இத்தீர்மானம் தமிழ் மக்களின் உணர்வுகளை, எதிர்பார்ப்புகளை நெருங்கி வரவில்லை. இதனால் இத்தீர்மானத்தை நாம் தமிழர்களுக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதமுடியாது. ஆனால் நிச்சயமாக இதனை சிறிலங்காவுக்கான தோல்வியாக நாம் பார்க்கமுடியும்.
ஜெனிவா தீர்மானம் தமிழர்களுக்கு வெற்றியல்ல - ஆனால் சிறிலங்காவுக்கு தோல்வி! - ருத்திரகுமாரன் அறிக்கை
3acdfc51-15ee-4aa7-b8a4-2b62001093863.jp
அனைத்துலக அழுத்தங்கள் எதுவுமின்றி தான் விரும்பியவாறு அதிகாரத்தை தமிழர் தேசத்தின் மீதும் இலங்கைத்தீவின் ஏனைய மக்கள்மீதும் செலுத்த விரும்பும் மகிந்த இராஜபக்சவின் குடும்ப ஆட்சிக்கு இத்தீர்மானம் ஒரு தொல்லையாகவே இருக்கும். மேலும் இத்தகைய தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் விவாதிக்கப்படுவதும் நிறைவேற்றப்படுவதும் சிங்களம் மறைக்கவும் மறக்கவும் விரும்பும் இறுதிக் போர்க்கால நிகழ்வுகளை அனைத்துலக அரங்கில் வெளிச்சத்துக்கு கொண்டுவருவதற்கு வழிகோலச் செய்கிறது.

கடந்த வருடத்தோடு ஒப்பிடும் போது சிறிலங்காவுக்கான ஆதரவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சிறிலங்காவின் உறுதியான ஆதரவு நாடான யப்பான் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாது நடுநிலைமை வகித்திருப்பதனை இங்கு குறிப்பிடலாம்.

சிறிலங்காவுக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளை சிறிலங்காவின் ஆதரவு நாடுகள் என்பதனைவிட, ஏதோ ஒருவகையில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கைகளுடன் முரண்பட்ட நாடுகள் எனக் குறிப்பிடுவதும் கூடுதல் பொருத்தமாக இருக்கும்.
ஜெனிவா தீர்மானம் தமிழர்களுக்கு வெற்றியல்ல - ஆனால் சிறிலங்காவுக்கு தோல்வி! - ருத்திரகுமாரன் அறிக்கை

இந்த உலகம் அமெரிக்கா தலைமையிலான ஒற்றை உலக ஒழுங்கில் (unipolar world order) இருந்து விலகி பலமுனை உலக ஒழுங்கினுள் (Mulit-polar world order) நுழையும் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம் என்பதனையும் எடுத்தக்காட்டுகிறது. இருந்தபோதும் சிறிலங்கா அனைத்துலக அரங்கில் கூடுதலாக தனிமைப்பட்டு வருகிறது என்பதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை வாக்கெடுப்பு சுட்டிக்காட்டுகிறது.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முன்வைக்கப்படும் தீர்மானங்களில் இரண்டு விடயங்கள் உள்ளடக்கப்படுவது மிகவும் முக்கியமானது.

முதலாவது, ஈழத்தில் தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசு இனஅழிப்பு (Genocide) புரிகிறது எனும் விடயம் தீர்மானத்தில் உள்ளடக்கப்படல்.

இரண்டாவது, இன அழிப்பில் ஈடுப்பட்டவர்கள் மீது அனைத்துலகப் பொறிமுறை ஒன்றின் ஊடாக, நீதியான பக்கச் சார்பற்ற விசாரணை மேற்கொள்ளப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படவேண்டும் என்பது உள்ளடக்கப்படல்.

இவ் இரண்டு விடயங்களையும் அமெரிக்கத் தீர்மானம் உள்ளடக்கவில்லை. இதனால் இத் தீர்மானத்தை தமிழர்களுக்கு மகிழ்ச்சிதரும் தீர்மானமாக, தமிழர்களைத் திருப்பதிப்படுத்தும் தீர்மானமாக நாம் கருதுமுடியாது.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைப் பேரவையில் அரசுகள் இயங்கும் பொறிமுறையினை அறிந்தவர்கள் என்ற வகையிலும் நலன்களின் அடிப்படையில் அமையும் அரசுகளின் இலாப நட்டக் கணக்குகளின் சூத்திரங்களைப் புரிந்தவர்கள் என்ற வகையிலும் இந்தத் தீர்மானம் எமக்கு ஆச்சரிமானதொன்றாக அமையவில்லை. இருப்பினும் நீதிகோரி நிற்கும் தமிழ் மக்களின் நீதிக்கானகுரல் இத் தீர்மானத்தில் உரியமுறையில் மதிக்கப்படவில்லை என்பது குறித்து நமது அதிருப்தியினை பதிவுசெய்ய விரும்புகிறோம்.

குறைந்தபட்சம் இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்பதுகூட தீர்மானத்தில் உரியவகையில் உள்ளடக்கப்படவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கும் விடயமாகும்.

மதஅடிப்படையிலும் அரசியல் கருத்து அடிப்படையிலும் இலங்கைத்தீவில் மனிதஉரிமைகள் மீறப்படுகின்றன என்று குறிப்பிடும் இத்தீர்மானம், இலங்கைத்தீவில் பாரியமுறையில் மனித உரிமை மீறல்கள், தமிழினம் என்ற அடிப்படையிலேயே மீறப்படுகின்றன என்ற உண்மையை சுட்டிக்காட்டாமையை நாம் கண்டிக்கின்றோம்.

இத் தருணத்தில், நாம் கவனத்திற் கொள்ளவேண்டிய சில விடயங்களை மக்களுடன் பகிர்ந்துகொள்ளுதல் முக்கியம் எனக் கருதுகிறேன். நாம் உலக அரசுகளுடன் நமக்கு நியாயம் கிடைப்பதற்காக அரசியல் இராஜதந்திர வழிகளில் தொடர்சியாகப் போராடவேண்டியவர்களாக உள்ளோம்.

இலங்கைத்தீவில் சிங்கள அரசாங்கம் தமிழீழ மக்கள் மேல் கட்டவிழ்த்து விட்டுள்ள கொடூர வன்முறை இன அழிப்பின் (Genocide) பாற்பட்டது என்பதைப் புரிந்துகொள்வது ஒன்றும் கடினமான விடயமல்ல. இருப்பினும் இதனை இனஅழிப்பாக வெளிப்படுத்தாது வன்னிப் போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்தது இரு தரப்பிரானாலும் புரியப்பட்ட போர்குற்றம் என்ற நிலைப்பாட்டையே அனைத்துலக அரசுகள் கொண்டிருக்கின்றன.

இன அழிப்பை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் அதற்கு பாதுகாப்பான தீர்வாக பாதுகாப்பு, (self defense) தன்னினம் பேணுதல் (self preservation) ஆகிய சர்வதேச சட்ட தார்மீகக் கோட்பாடுகளின் அடிப்படையில் பரிகார நீதியாக (remedial justice) தமிழீழத் தனிஅரசு அமைக்கும் நிலையை ஏற்றுக்கொண்டாக வேண்டிய நிலை அனைத்துலக அரசுகளுக்கு ஏற்படும். இதன் காரணமாக உண்மை தெரிந்திருந்தும் இந்தப் பிரச்சனையை தாம் பேணவிரும்பும் எல்லைகளுக்குள்ளேயே சுழல விடுகின்றன.

இத்தகைய அரசுகளை நாம் எவ்வாறு அணுகப் போகிறோம்? இது குறித்த மூலோபாயத்தையும் தந்திரோபாயத்தையும் நாம் நன்கு வடிவமைத்துக் கொள்ளவேண்டும்.

முள்ளிவாய்க்கால் ஊடாக நாம் படித்துக் கொண்ட முக்கிய பாடங்களில் ஒன்று, நம்மிடம் எவ்வளவுதான் நியாயம் இருந்தாலும், எவ்வளவுதான் அர்பணிப்பு இருந்தாலும், எவ்வளவுதான் வீரம் இருந்தாலும், பலம் மிக்க அரசுகள் எதிரியுடன் கைகோர்க்குமேயானால் நாம் வெற்றியடைய முடியாது என்பதுதான்.

இதனால் இன்று நமது மூலோபாயமாக பலம்மிக்க அரசுகளுக்கும் நமது எதிரியான சிங்கள அரசுக்கும் உள்ள நெருக்கத்தை எவ்வாறு குறைத்துக்கொள்வது என்பது குறித்தும், பலம்மிக்க அரசுகளுடன் நாம் எவ்வாறு நமது உறவுகளை வளர்த்துக்கொள்ளப் போகின்றோம் என்பது குறித்தும் இருக்கவேண்டும். இதற்காக நாம் நமது நலன்களை அனைத்துலக அரசுகளிடம் பலியிடமுடியாது. அதேவேளையில் அனைத்துலக அரசுகளும் உடனடியாக தமது நலன்களை முழுமையாக கைவிட்டு நியாயத்தின் அடிப்படையில் நம்மை ஆதரித்துகொள்ளும் எனவும் எதிர்பார்க்க முடியாது. இதனால் பலம்மிக்க அரசுகளை கையாள்வதற்கு நாம் இரண்டு தந்திரோபாயங்களை கையாளல் பயன்தரும் எனக் கருதுகிறேன்.

முதலாவது, நமது நலன்களையும் பலம்மிக்க அரசுகளின் நலன்களையும் எவ்வாறு இணையவைப்பது என்பது குறித்து சிந்திப்பதும் அதற்கான திட்டங்களை வகுத்துக் கொள்வதுமாகும். அது இராஜதந்திரமட்டத்தில் நடைபெற வேண்டியது.

இரண்டாவது, நாம் மக்களாக அரசுகளுடன் ஜனநாயகவழியில் அரசியல் ரீதியாகப் போராடுவது.

இவ் இரண்டு வழிமுறைகளும் ஒன்றோடொன்று கைகோர்த்துச் செல்லவேண்டும். அரசுகள் தமது நலன்கள் என்ற அச்சில் சுழல்பவை. ஆனால் இந்த அரசுகளை இயக்குவதில் அரசியல் தலைவர்களுக்கு முக்கிய பங்குண்டு.

அரசியல் தலைவர்களுக்கு மக்கள் ஆதரவு என்பது மிகவும் முக்கியமானது. மக்கள் ஆதரவை வென்றெடுத்தல் என்பது அரசியல் தலைவர்களுக்கு முக்கியமான நலன்சார் விடயமாகும். அதனால் அரச இயந்திரத்துக்கும் அரசியல் தலைவர்களுக்குமான நலன்கள் எல்லா விடயங்களிலும் ஒன்றாக அமைந்து விடுவதில்லை. பல சந்தர்ப்பங்களில் மக்கள் ஆதரவினை இழந்துவிடக்கூடாது என்பதற்காக அரச தலைவர்கள் தமது அரசின் அரசியல் நிலைப்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்த நிர்ப்பந்திக்கப்படுவதுண்டு.

இந்தப் பின்னணியில் நாம் தமிழகத்தில் இடம்பெறும் மாணவர் போராட்டங்களை நோக்கும்போது அவற்றின் முக்கியத்துவத்தினை நாம் புரிந்துகொள்ளமுடியும். மக்களின் ஆதரவுடன் நடைபெறும் தமிழக மாணவர் போராட்டங்களுக்கு தமிழக மற்றும் இந்திய அரசியல் தலைவர்கள் தமது நிலைப்பாடுகளை மாற்றவைக்கக்கூடிய ஆற்றல் உண்டு.

தற்போது இடம்பெற்றுவரும் தமிழக மாணவர் போராட்டங்கள் இன அழிப்பு குறித்தும் அனைத்துலக விசாரணையையும் சுதந்திர தமிழீழம் குறித்தும் ஈழத்தமிழ் மக்களுக்கான அரசியல் வாக்கெடுப்பினையும் வலியுறுத்துகின்றன. ஈழத் தமிழ்மக்கள் பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் சமத்துவமாகவும் வாழ்வதற்கு சுதந்திர தமிழீழம் தவிர்ந்த மாற்றுவழி இல்லை என்பதனை நன்கு புரிந்துகொண்டவர்களாகவே தமிழக மாணவர்கள் களம் இறங்கியுள்ளார்கள்.

ஈழத்தமிழ் மக்களுக்காக போராட்டக் களத்தில் குதித்திருக்கும் தமிழக மாணவ சமுதாயத்தின் கரங்களை நாம் தோழமை உணர்வுடன் பற்றிக் கொள்கின்றோம். மாணவர்களின் போராட்டங்களை ஆதரித்து நிற்கும் அரசியல் தலைவர்களோடும் தமிழக மக்களுடனும் நாம் தோழமையோடு நமது கரங்களை இணைத்துக் கொள்கின்றோம்.

நாம் விரும்புகிறோமோ இல்லையோ தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வெற்றி இந்திய அரசை தம் வசப்படுத்துவதில் தமிழகம் அடையும் வெற்றியில் பெரிதும் தங்கியுள்ளது என்பது அரசியல் யதார்த்தமாக உள்ளது.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் தென்னாசியப் பகுதியில் இந்தியா ஒரு முதன்மைச்சக்தி என்ற அடிப்படையிலும், வளர்ச்சியடையும் உலகசக்தி என்ற அடிப்படையிலும் தான் உலக இராஜதந்திரக் கணக்கு எழுதப்படுகின்றது, உலக ஒழுங்கு தீர்மானிக்கப்படுகின்றது. இதனால் தென்னாசியாவில் தமிழீழம் என்னும் புதியநாடு உருவாவதில் இந்தியாவின் பாத்திரம் முக்கியமானது.

இதனால் நாம் தமிழீழ விடுதலை போராட்டத்தின் வெற்றிக்கான நமது மூலோபாயத்தில் இந்திய அரசு சுதந்திரத் தமிழீழத்தை அங்கீகரிக்க வைக்கும் இலக்கினை கொண்டவர்களாக இயங்கவேண்டும். இது உடனடியாக சாத்தியப்படாத விடயமாக இருக்கலாம். ஆனால் உள்நாட்டு நிலமைகள் அந்நாட்டின் வெளிநாட்டுக் கொள்கைகளில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தமுடியும். உதாரணமாக ஐக்கியநாடுகள் மனிதஉரிமைப் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்துக்கு மலேசியா எதிர்த்து வாக்களிக்காமல் நடுநிலை வகித்துள்ளது. சிறிலங்காவை நட்பு நாடாகக் கொண்டிருந்தபோதும் மலேசியத் தமிழ்மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டிய ஒரு சூழ்நிலையே மலேசிய அரசு இந்த முடிவு எடுப்பதற்கு முக்கிய காரணம்.

தமிழகத்தில் ஈழம் தொடர்பாக ஈழமக்கள் தொடர்பாக எழுகின்ற போராட்டங்கள், நிலைப்பாடுகள் தமிழகம் மற்றும் இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் ஏற்படுத்தும் தாக்கங்கள் ஊடாக இந்திய அரசின் முடிவுகளில் செல்வாக்கு செலுத்தக்கூடிய ஆற்றல் கொண்டவை. இதில் தமிழக மாணவர்களின் பங்கு முதன்மையானது. தமிழக மாணவர்கள் தமது சக்தியை நன்கு வெளிப்படுத்தியுள்ளனர். மாணர்கள் தமது போராட்டங்களை இந்தியா தமிழீழத்தை அங்கிகரிக்க வேண்டிய ஒரு சூழலை ஏற்படுத்தும்வரை ஒரு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொடர்வதனை காலம் வேண்டி நிற்கின்றது.

தமிழகத்தில் என்ன நடக்கின்றது என்பதனை அமெரிக்கா உன்னிப்பாக தொடர்ச்சியாக அவதானித்துக்கொண்டு இருக்கிறது என்பதையும் நான் இவ்விடத்தில் பதிவுசெய்துகொள்ள விரும்புகிறேன். தமிழகம் இந்தியாவின் முதன்மை மாநிலங்களில் ஒன்று. தமிழகம் மீது அமெரிக்கா கொண்டுள்ள அக்கறையினை அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்க செயலாளர் Hillary Clinton தமிழகத்துக்கு வருகை தந்தமை ஊடாகவும் நாம் புரிந்து கொள்ளமுடியும். அதனால் தமிழகத்தில் இடம்பெறும் போராட்டங்களுக்கு இந்தியாவில் மட்டுமல்ல, ஈழத் தமிழ் மக்கள் விடயத்தில் அனைத்துலக மட்டத்தில் தாக்கம் செலுத்தும் ஆற்றல் உண்டு என்பதனையும் நாம் இங்கு குறித்துக்கொள்ள வேண்டும்.

ஐக்கிய நாடுகள் நிறைவேறியுள்ள தீர்மானம் நமது மக்களுக்கு நீதிதரும் வகையில் அமையவில்லை என்பதால் நாம் நம்பிக்கை இழக்கத் தேவையில்லை. சலிப்புக் கொள்ளவும் தேவையில்லை. நாம் நமது இலக்கில் முன்னேறிவருகிறோம். நாம் இன்று ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பாங்-கி மூன் இன் சட்டஆலோசகர்கள் கூறியபடி, செயலாளர் நாயகம் ஐக்கிய நாடுகள் சாசனத்தின் 99வது பிரிவின் கீழ் அவருக்குள்ள உள்ளார்ந்த அதிகாரத்தின் அடிப்படையில் சர்வதேச விசாரணைக் குழுவை அமைக்கும்படி கோரி மூன்றுமாதகால உலகளாவிய ரீதியில் கையெழுத்து வேட்டையை மனிதஉரிமை அமைப்புக்களுடனும் ஏனைய தமிழ் அமைப்புக்களுடனும் சேர்ந்து நாம் இன்று ஆரம்பிக்கின்றோம்.

அத்துடன் 2012 நவம்பர் மாத ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் உள்ளார்ந்த அறிக்கையில் கூறப்பட்ட செயலாளர் நாயகத்தின் இன அழிப்பைத் தடுக்கும் பிரிவினால் இலங்கைத் தீவில் உள்ள தமிழர்கள் தொடர்பாக தயாரிக்கப்பட்ட 2007ம் ஆண்டு அறிக்கையையும் தமிழர்கள் தொடர்பான ஏனைய ஆவணங்களையும் வெளியிடுமாறு கோரும் கையெழுத்து வேட்டையினை உலகளாவிய ரீதியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இன்று ஆரம்பிக்கின்றது. அடிக்குமேல் அடிஅடித்தால் அம்மியும் நகரும் என்பது நம்மிடையே உள்ள ஒரு பழமொழி.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரனது ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=3acdfc51-15ee-4aa7-b8a4-2b6200109386

முத்தி விட்டது .

Kerry calls upon SL to fulfill its commitments
 
The US today asked Sri Lanka to take meaningful action and to fulfill its public commitments on longstanding issues of reconciliation and accountability, hours after the United Nations Human Rights Council adopted a Washington-sponsored resolution against the island nation.
 
"This resolution, which builds on a similar 2012 resolution, re-affirmed that Sri Lanka must take meaningful action on reconciliation and accountability in order to move forward," US Secretary of State John Kerry said after the passage of the resolution in Geneva, which among others was supported by India.


"The United States¸ together with international partners, calls upon the Government of Sri Lanka to fulfill its public commitments to its own people on these longstanding issues," he said.
 

While some important progress has been made, there is much work still to be done, he added.
"We look to the Government of Sri Lanka to implement the recommendations of the Lessons Learnt and Reconciliation Commission (LLRC) and to reverse recent negative developments on rule of law and human rights. The United States stands ready to assist with this vital work," Kerry said.
 

The resolution seeks Lanka to conduct an "independent and credible" probe into allegations of human rights violations.(Outlook India)

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.