Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவாவில் எடுபடாமல் போன இந்தியாவின் திருத்தங்கள் – ‘ரைம்ஸ் ஒவ் இந்தியா‘ தகவல்

Featured Replies

ஜெனிவாவில் எடுபடாமல் போன இந்தியாவின் திருத்தங்கள் – ‘ரைம்ஸ் ஒவ் இந்தியா‘ தகவல் [ வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2013, 01:29 GMT ] [ கார்வண்ணன் ]

UNHRC-meet.jpgதிமுகவைத் திருப்திப்படுத்துவதற்காக, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்த தீர்மானத்தில், இந்தியா ஏழு திருத்தங்களை முன்வைத்ததாகவும், ஆனால் அவற்றை அமெரிக்கா முறைப்படி நிராகரித்து விட்டதாகவும் ‘ரைம்ஸ் ஒவ் இந்தியா‘ செய்தி வெளியிட்டுள்ளது. 

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைப் பாதுகாப்பதற்கு, திமுகவை மீண்டும் அதனுள் கொண்டு வருவதற்காக, அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில் ஏழு திருத்தங்களைச் செய்வதற்கு, இந்திய வெளிவிவகார அமைச்சுக்கு கடந்த புதன்கிழமை இந்திய அரசாங்கம் உத்தரவிட்டிருந்தது. 

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், நிதிஅமைச்சர் ப.சிதம்பரம், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாய், ஐ.நாவுக்கான இந்திய வதிவிடப் பிரதிநிதி திலீப் சின்ஹா ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தின் முடிவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இந்தத் திருத்தங்கள் இந்திய - சிறிலங்கா உறவுகளை கடுமையான வீழ்ச்சிக்குள் தள்ளக்கூடியவை. 

எழுத்து மூலம் இந்தியா முன்வைத்த இந்தத் தீர்மானங்களை அமெரிக்காவும், இணை அனுசரணை நாடுகளும் நிராகரித்து விட்டன. 

கடுமையாக முன்வைக்கப்படும் தீர்மானம், அதற்கு ஆதரவளிக்கக் கூடிய நாடுகளின் தொகையை குறைத்து விடும் என்ற காரணத்தின் அடிப்படையிலேயே அமெரிக்கா இந்தத் திருத்தங்களை நிராகரித்துள்ளது. 

முன்னதாக அமெரிக்கா முன்வைத்த தீர்மான வரைவு சிறிலங்காவுக்கு எதிராக கடுமையான தொனியில் அமைந்திருந்தது. 

அதனை, கொழும்பும் புதுடெல்லியும் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில், நீர்த்துப் போகவைக்க இந்திய அதிகாரிகள் பல இரகசியப் பேச்சுக்களை நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. 

உள்நாட்டு அரசியல் நிலைமைகளால், இந்தியா தீர்மானத்தில் மீண்டும் திருத்தம் செய்ய முயன்றது, புதுடெல்லியின் வெளிவிவகாரக் கொள்கையை புதிய தாழ்வு மட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளது. 

திருத்தத்தை அமெரிக்கா நிராகரித்ததை அடுத்து, வாய்மொழித் திருத்தத்தை முன்வைக்குமாறு நேற்றுக்காலை இந்திய அரசாங்கம் உத்தரவிட்டது. 

புதன்கிழமை இரவு நடந்த அனைத்துக்கட்சி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில், சிறிலங்காவுக்கு எதிரான நாடாளுமன்றத் தீர்மானத்தை மத்திய அரசாங்கம் கொண்டு வருவதற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன. 

அது, வாய்மொழித் திருத்தத்துக்கான தேவையைக் குறைத்து விட்டது. 

ஏனைய அனுசரணை நாடுகள் தீர்மானத்தை ஆதரிக்க வாய்ப்பில்லை என்பதால், பேரவையில் இந்தியா தனிமைப்படுத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்கியது. 

முடிவில் இந்தியா, சில நாட்கள் முன்னதாக, மீளாய்வு செய்யப்பட்டதன் அடிப்படையில் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தது. 

தீர்மானத்துக்கு ஆதரவாக 25 நாடுகள் வாக்களித்தன. 13 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. 

8 நாடுகள் நடுநிலை வகித்தன. காபோன் மட்டும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. 

எட்டு ஆசிய நாடுகளும், இரண்டு லத்தீன் அமெரிக்க நாடுகளும், மூன்று ஆபிரிக்க நாடுகளும் சிறிலங்காவுக்கு ஆதரவாக நின்றன. 

இதன் உடனடி விளைவாக, திருகோணமலையில் உள்ள இந்திய எண்ணெய்க் கூட்டுத்தாபனத்தின் வசம் உள்ள சில எரிபொருள் குதங்களை மீளப்பெறவுள்ளதாக சிறிலங்கா அறிவித்துள்ளது. 

சிறிலங்கா அனைத்துலக சமூகத்தை திருப்திப்படுத்தும் வகையில் பொறுப்புக்கூற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாக ஜெனிவாவுக்கான இந்தியப் பிரதிநிதி திலீப் சின்ஹா தெரிவித்துள்ளார். 

இது சுதந்திரமான விசாரணை என்ற பதத்தை விட வலிமையானது என்றும், அனைத்துலக விசாரணையை என்பதை விட நலிவானது என்றும் அவர் கூறியுள்ளார். 

இந்தியா அயல்நாட்டுடன் எடுத்துள்ள இந்த இறுக்க நிலை, கொழும்பை மேலும் சீனாவை நோக்கித் தள்ளிவிடக் கூடும்” என்றும் ரைம்ஸ் ஒவ் இந்தியா தெரிவித்துள்ளது.

http://www.puthinappalakai.com/view.php?20130322107987

  • கருத்துக்கள உறவுகள்

 

காபோன் மட்டும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. 

 

அமெரிக்காவின் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்து 26 ஆவது நாடாகியது.

 

இந்தியா தான் தீர்மானத்தை நலிவுற செய்தது.

இந்த முறை அமெரிக்கா வேண்டுமென்றே காங்கிரசை சாடையாக விட்டுப்பிடித்திருக்கலாம். 

 

குறைந்த பட்சம் 2009ல் போர் முடிந்ததிலிருந்துதன்னும் இந்தியா ஐ.நா மனித உரிமைகள் சபையில் தனது பலத்தை காட்டி தமிழரை நசுக்குவதற்கு பல முயற்சிகள் எடுத்து வெற்றி கண்டு வந்தது. இந்தியா சபைக்கு வெளியே காட்டி வந்த துரோகத்தனத்தை பற்றி சொல்லெயும் அண்மையில் கடைசி நேரத்தில் நடந்த சமாதான பேச்சு வார்த்தைகளுக்கு என்ன நடத்தது என்பதை விபரிக்கும் போது விளக்கியிருந்தார். அதாவது சொல்லெயும் சமாதான பேச்சு வார்த்தகளில் ஈடுபட்டிருந்த காலத்தில் இந்தியா எதற்கும் ஒத்துழைக்க மறுத்ததென்பது மட்டுமல்ல, அமெரிக்க கப்பல் ஒன்றை பாவித்து அவசியமானவர்களை வெளியேற்ற என்று கேட்ட போது, இந்தியா தமிழர் யாருமே உயிருடன் தப்பக்கூடாது என்று நினைத்து அதற்கு உடன்பட அடியொட்ட மறுத்துவிட்டது.  2009ன் போர் முடிவுக்கு முன்னால் நடந்தவையாக சொல்லெயுமால் சொல்லபட்டவை இவை. 

 

ஆக இந்தியக் காங்கிரஸ் போருக்கும் முன்னும், பின்னும் தமிழரை அழிப்பதிலும், தமிழருக்கு நீதி கிடைக்காமல் செய்வதிலும் காட்டிய அக்கறை பற்றி அமெரிக்கா பல இடங்களில் அனுபவப்பட்டிருக்கிறது. இதில் இந்தியா அமெரிக்காவை இன்னொரு தி.மு.க என்று நினைத்து தனக்கு வேண்டிய போது தமிழரை துன்புறுத்த ஆயுதமாக மட்டும் பாவித்து வந்ததை அமெரிக்கா பார்த்துத்தான் வைத்திருந்திருக்கும்.  தமிழர் மீது இருந்த காழ்ப்புணர்வால் சோனியா-மன்மோகன் காங்கிரஸ் தமிழருடன் சமரசம் செய்துகொள்ள மறுத்தது மட்டுமல்ல, இந்த விடையத்தில் தனது நட்புக்கரத்தை நீட்டிய அமெரிக்காவுடன் தன்னும் இணங்கி நடக்க விரும்பவில்லை.

 

ஆனால் தன் தலைக்கு ஆபத்து வந்த போது மட்டும் கோளைத்தனமாக இரவிரவாக ஓடிச்சென்று அமெரிக்காவின் காலில் விழுந்து தன்னை காப்பாற்றும் படி கேட்டு கெஞ்சியது.காங்கிரசின் தரக்குறைவான, இழிதனமான செய்களைகளை பல ரோவின் கைக்கூலி அரசியல் ஆய்வாளர்கள் இந்தியாவின் பிராந்திய அரசியல் புவிசார் பாதுகாப்புக்கொள்கையாக எழுதி வந்தனர். இருட்டை பாவித்து கொள்ளை அடிக்கும் கள்ளனை போல, சோனியாவின் முட்டாள்த்தமான பழிவாங்கல்களை சந்தர்ப்பமாக பயன்படுத்திய  இலங்கையின் பயங்கரவாதத்தை, அரச அடிவருடிகள், இலங்கையின் ராஜதந்திரமாக வருணித்தார்கள். இன்று இலங்கை அவலத்தில் மாட்டியிருக்கு. வேட்டைக்கு போன சிங்கத்தின் பின்னால் புதினம் பார்க்க போன மான் மாதிரி இந்தியாவும் மாட்டியிருக்கு. அதிலிருந்து தப்பத்தான் இந்தத் தடவை காங்கிரஸ் ஓடிப்போய் அமெரிக்காவின் காலில் விழுந்தது.

 

அமெரிக்காவின் உலக அரசியல் அனுபவத்தின் முன்னால் காங்கிரசின் புவிசார் அரசியல் புருடாவும், இலங்கையின் ராஜதந்திரத் திருகுதாளமும் கேள்விக்குறியாகி வருகின்றன. 

 

காங்கிரஸ் என்ற ஆடு இந்த முறை தான் வெட்டிய குழியில் வந்து தானே விழுந்திருக்கிறது. தேர்தலிற்கு முன் அதற்கு எழுந்த வெளியே வரத்தக்க சந்தப்பம் குறைவு. இலங்கை இனி இந்த காங்கிரஸ் என்ற ஆடுமீது ஏறிநடந்து குழியை கடக்கத்தக்க சந்தர்ப்பமும் குறைவு. இதானால் இலங்கையும் குழிக்குள் விழத்தான் போகிறது.

 

எப்படி முன்னைய இந்தியாவின் முயற்சிகள் நிரந்தரமாக இலங்கையை மனித உரிமைகள் சபையில் கப்பாற்றுவதில் இருந்து தவறினவோ அதே மாதிரியே இந்த முறை காங்கிரசையும் காப்பாற்றத் தவறிவிட்டது. 

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.