Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முத்தையா முரளிதரன் பந்தோடு விளையாடுவதுடன் தனது எல்லையை நிறுத்திக்கொள்ள வேண்டும்

Featured Replies

 

முத்தையா முரளிதரன்… ஒரு கிரிக்கட் வீரர். சிறந்த சுழற் பந்து வீச்சாளர். அது மட்டுமே அவருக்கான அடையாளம். அவர் தமிழர் என்பதால் சிங்களத்தால் கௌரவிக்கப்பட்டவர் அல்ல. மாறாக, ஒரு டக்ளஸ் தேவானந்த போல்… ஒரு கருணா போல்… ஒரு கே.பி. போல்… தேவையின் நிமித்தம் சிங்களத்தால் அரவணைக்கப்பட்டவர். அதாவது, முற்று முழுதான சிங்கள கிரிக்கட் அணிக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுக்க முத்தையா முரளிதரன் தேவைப்பட்டார் என்பதற்கு அப்பால் வேறு எதுவும் இல்லை.

 
mahinda-rajapaksa-muttiah-muralitharan-2
 
இலங்கைத் தீவில் இன முரண்பாடுகள் உச்ச நிலையில் இருந்த போதும் முத்தையா முரளிதரன் சிங்கள அணிக்காகப் பந்து எறிந்துகொண்டுதான் இருந்தார். யுத்தம் உச்சக்கட்டமாக நடைபெற்றுக்கொண்டிருந்த நாட்களிலும் அவர் வாய் பேசாமல் பந்தை எறிந்துகொண்டு இருந்தார். சிங்களப் படைகளால், ஆயிரக்கணக்கான தமிழர்கள் யுத்த நெறிகளையும் மீறிய குண்டு வீச்சுகளில் கொல்லப்பட்ட போதும் அவர் சிங்களத்திற்காகப் பந்தை எறிந்து கொண்டிருந்தார். யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், மூன்று இலட்சம் தமிழர்கள் முள்வேலி முகாமுக்குள் முடக்கப்பட்ட போதும், எண்ணற்ற இளைஞர்கள் தெரிந்தெடுத்துச் சுட்டுக் கொல்லப்பட்டபோதும், தமிழ் யுவதிகள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு, தனம் அறுக்கப்பட்டுக் கோரமாகக் கொலை செய்யப்பட்ட போதும் வாய் திறக்காமல் முத்தையா முரளிதரன் சிங்களப் பந்தை வீசிக்கொண்டுதான் இருந்தார்.
 
தமிழீழத்தில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள், இன அழிப்பு நடவடிக்கைகள், தமிழர்களுக்கெதிரான இன வன்முறைகள் எதுவும் முத்தையா முரளிதரனுக்கு எந்தச் சலனத்தையும் கொடுக்கவில்லை. மாறாக, சிங்கள கிரிக்கெட் அணியின் வெற்றி குறித்தும், அதனால் தனக்கு கிடைக்கக்கூடிய பெயர், புகழ், பணம் குறித்தும் மட்டுமே அவர் சிந்தித்திருந்தார். அதனால், தமிழினத்தின் எந்த அவலங்களும் அவரை எதுவும் செய்யவில்லை.
 
அதனால்தான் ‘இலங்கையில் கடந்த காலங்களில் போர்ச்சூழல் இருந்தது. ஆனால் தற்போது தமிழர்கள் இலங்கையில் அமைதியாகவே வாழ்கின்றனர். இதனை இந்திய அதிகாரிகள் இலங்கையில் தமிழர்களாகிய நாங்கள் எப்படி வாழ்கிறோம் என்பதை வந்து பார்க்க வேண்டும்’ என்று சிங்களத்திற்காகப் பரிந்து பேசுகின்றார் முத்தையா முரளிதரன்.
 
முத்தையா முரளிதரனுக்கு எந்தத் தமிழர்களைத் தெரியும்? எத்தனை தமிழர்களைத் தெரியும்? தமிழர்கள் இலங்கையில் நிம்மதியாகவும், அமைதியாகவும் வாழ்வதாக முத்தையா முரளிதரன் நம்பினால், தமிழ் மக்கள் தமக்கு என்ன வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமையை அவர்களிடம் விட்டுவிடும்படி தமிழகத்தின் இளைய தலைமுறையும், தமிழக அரசும் கேட்பதை முத்தையா முரளிதரனும் உரக்கச் செல்வதுதானே முறை. அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழும் தமிழர்கள் நிச்சயமாக சிங்களத்திடமிருந்து பிரிந்து செல்லவேண்டும் என்று நினைப்பதற்குச் சாத்தியம் இல்லையே.
 
சிங்கள தேசத்தின் கிரிக்கெட் வீரராக உலகிற்கு அறிமுகமான முத்தையா முரளிதரன், சடுதியாகவே ஒரு சமூக விஞ்ஞானியாகி, ‘கடந்த காலத்தில் நடந்ததை மறக்க வேண்டும்’ என்ற தத்துவத்தையும் தமிழர்களுக்கு உபதேசித்துள்ளார். எதை மறக்கவேண்டும் என்று முத்தையா முரளிதரன் சொல்ல வருகின்றார்? தாயைக் கொன்றதையா…? தங்கையை கொடூரமாகக் கற்பழித்து, அவளது தனம் அறுத்து சிங்களவன் தன் வீரத்தை நிரூபித்ததையா…? பிஞ்சுக் குழந்தைகள் தலையில் நஞ்சுக் குண்டை வீசியதையா…? 90 ஆயிரம் தமிழ்ப் பெண்களை விதவையாக்கியதையா…? சிங்கள இன வன்முறைகளை எதிர்த்துக் களமாடிய குற்றத்திற்காக நிர்வாணப் படுத்தித் தலையில் சுட்டுக் கொன்றதையா…? பச்சிளம் பாலகனுக்கு பிஸ்கற் கொடுத்துவிட்டு, அது தொண்டைக்குள் இறங்குவதற்கு முன்பாக அவன் நெஞ்சில் சுட்டுக் கொன்றதையா…? எதை மறக்கச் சொல்கின்றார் முத்தையா முரளிதரன்?
 
அதுவே உன் தாயாக இருந்தால், உன் தங்கையாக இருந்தால், உன் அண்ணனாக இருந்தால், உன் மனைவியாக இருந்தால்… உன் வாயில் அப்படி ஒரு வார்த்தை வெளிவந்திருக்குமா…? என்று எங்கள் தமிழர்கள் பொங்கி எழுந்தால்… முத்தையா முரளிதரன்… வெட்கமாக இருக்கின்றது… உன்னையும் ஒரு தமிழன் ஏற்றுக் கொள்வதிலும் அவர்களுக்குச் சங்கடமே மிஞ்சும்.
 
எங்கள் உறவுகளைக் கொன்றபோதும், எரித்தபோதும், புதைக்க போதும், புழுவைப் போலவே நசுக்கியபோதும் கவலையே கொள்ளாத முத்தையா முரளிதரன், ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடும் இலங்கை வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை வருத்தமளிக்கிறது’ என்று வாய் கூசாமல் சொன்னதை… தமிழுலகம் மட்டுமல்ல, மனித நேயம் மிக்க எந்தச் சமூகமும் ஏற்றுக்கொள்ளாது.
 
‘இது கிரிக்கெட்டிற்கு வருத்தமான நாள்’ என்று சிங்களத்திற்காக வரிந்து கட்டும் முத்தையா முரளிதரன், மனிதமே வெக்கி மருகிநிற்கும் ஈழத்து இறுதிப் போர்க் கணங்கள் ‘மனிதத்திற்கே வருத்தமான நாள்’ என்று சொல்ல மறுத்தது சிங்களம் போடும் இரையினாலா…? சிங்களமே தன் பிறப்பின் மூலம் என்ற நம்பிக்கையினாலா…?
 
எது எப்படி இருந்தாலும், முத்தையா முரளிதரன் பந்தோடு விளையாடுவதுடன் தனது எல்லையை நிறுத்திக்கொள்ள வேண்டும். மாறாக, தமிழினத்தின் உணர்வுகளோடு விளையாட முற்பட்டால்… அது தவறான விளைவுகளையே அவருக்கு ஏற்படுத்தும்.
 
- அகத்தியன் -

www.irruppu.com

  • கருத்துக்கள உறவுகள்

 
முத்தையா முரளிதரன், ஒரு மலையகத் தமிழன் என்று பெருமைப் பட்டோம்.
பந்து வீச்சில்... உன்னை, அவுஸ்தேரேலியா குற்றம் சாட்டிய போது... கிளர்ந்து எழுந்தோம்.
தமிழ்நாட்டில், நீ.. கலியாணம் கட்டிய போது.... தொப்புள் கொடி உறவு என மகிழ்ந்தோம்.
உனது, ஒரு... வார்த்தையால்..... அத்தனையும்... கரியாக்கி விட்டாய்...
*** *** உன், ஒருவனின் மட்டும் தமிழினம் தங்கியிருக்கவில்லை.

நியானி: மேற்கோள் நீக்கப்பட்டுள்ளது. கண்ணியமற்ற சொற்கள் தணிக்கை

Edited by நியானி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.