Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழம் கோரி நடிகர் சூர்யா & கார்த்தி ரசிகர்கள் நாளை பிரமாண்ட உண்ணாவிரதம்!l

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழர்களுக்கு தனி தமிழ் ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாவட்ட சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர் மன்றத்தினர் நாளை பிரமாண்ட உண்ணாவிரதம் நடத்துகின்றனர்.

 

சுதந்திர தமிழ் ஈழத்துக்கான போராட்டம் வரலாறு காணாத அளவில் தமிழகத்தில் நடந்து வருகிறது. மாணவர்கள் முன்னெடுத்த இந்தப் போராட்டம் மக்கள் போராட்டமாக வடிவம் பெற்றுள்ளது.

 

குறிப்பாக, இதுவரை ஈழப் பிரச்சினை குறித்து பாராமுகமாக இருந்த ஐடி பணியாளர்கள், அரசு ஊழியர்கள் எல்லாம் வீதிக்கு வந்து போராடுகின்றனர்.

 

தனித் தமிழ் ஈழம் மலர வேண்டும், உலகெங்கும் பரவிக் கிடக்கும் உறவுகள் சுதந்திர ஈழத்தில் ஒன்று சேர வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது.

 

நடிகர்களின் ரசிகர்களும் இந்தப் போராட்டத்தில் கைகோர்த்துள்ளனர். முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்கள் உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

 

இப்போது நடிகர் சூர்யா மற்றும் அவர் தம்பியும் நடிகருமான கார்த்தியின் ரசிகர்களும் களமிறங்கியுள்ளனர்.

 

இவ்விரு நடிகர்களின் சென்னை மாவட்ட ரசிகர்கள் இணைந்து நாளை சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையின் எதிரே, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர். இந்த உண்ணாவிரதத்தை பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=3747

 சுதந்திர தமிழ் ஈழத்துக்கான போராட்டம் வரலாறு காணாத அளவில் தமிழகத்தில் நடந்து வருகிறது. மாணவர்கள் முன்னெடுத்த இந்தப் போராட்டம் மக்கள் போராட்டமாக வடிவம் பெற்றுள்ளது.

 

 

- ஐ.ஐ.ரி. போன்ற மாணவர்கள் ஊடாக இந்திய பிரச்சனையாக மாற வைக்க வேண்டும்
- வரும் பொது தேர்தலில் எந்த கட்சியும் பெரும்பான்மை வகிக்க முடியாது என்ற நிலையில் எமது கோரிக்கைகள் முக்கிய இடம் பிடிக்க வேண்டும்
- வரும் விடுமுறையிலும் தொய்யாமல் கொண்டுசெல்லவேண்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

v-suryakarththirasikar%20%282%29.jpg

photo.gifஈழத்  தமிழர்களுக்கு தனி தமிழ் ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி வட  சென்னை  , தென் சென்னை மற்றும் மத்திய சென்னை மாவட்ட சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர் மன்றத்தினர் இன்று சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தினை நடத்துகின்றனர்.

சுதந்திர தமிழ் ஈழத்துக்கான போராட்டம் வரலாறு காணாத அளவில் தமிழகத்தில் நடந்து வருகிறது. மாணவர்கள் முன்னெடுத்த இந்தப் போராட்டம் மக்கள் போராட்டமாக வடிவம் பெற்றுள்ளது.

10 கோரிக்கைகளை முன்வைத்து இவ் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடக்கி உள்ளனர்.

1. தனித் தமிழீழம் அமைய ஈழத் தமிழர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு

2. சர்வதேச மனித உரிமை அமைப்புகளும், ஊடகங்களும் இலங்கையில் நடந்தது திட்டமிட்ட இனப் படுகொலை என்பதற்கு அளித்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் இலங்கை அரசு மீது நடவடிக்கை

3. சர்வதேச அமைப்புகள் மூலம் நியாயமான போர்க்குற்ற விசாரணை

4. இனப்படுகொலைக்குக் காரணமான ராஜபக்ச மற்றும் இலங்கை இராணுவக் கட்டமைப்பை தண்டிக்க வகை செய்தல்

5. தமிழர் பகுதியிலிருந்து இராணுவத்தை முற்றிலுமாக வெளியேற்றுதல்

6. தமிழரிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களை திருப்பித் தருதல் மற்றும் தமிழர் பகுதிகளில் திட்டமிட்டு நடத்தப்பட்ட சிங்கள குடியேற்றங்களை அப்புறப்படுத்துதல்

7. எந்தவித காரணமும் இல்லாமல் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 10 ஆயிரம் தமிழ் இளைஞர்களை விடுவித்தல்

8. யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுத்து நிறுத்துதல்

9. தமிழக மீனவர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள கடற்படை மீது கடும் நடவடிக்கை

10. உலகத் தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதத்தில் முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தனித் தமிழ் ஈழம் உள்ளிட்ட தீர்மானங்களை உடனே நிறைவேற்றுதல்

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடைபெறுகின்றது.

 
pic unclear

Edited by nunavilan

சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர் மன்றத்தினர் நடத்திய உண்ணாவிரதம். :(

 

ஈழத்திற்காக போராடுவோம்.

இதில் ஈழம் முதல்படுத்தி காட்ட பட்டிருக்கிறதா. அசிங்கதிலும் அசிங்கம் ஈழத்துக்கு போராட சொன்னால் போராடுகிறார்கள் கூத்தாடிக்காக.

தமிழினம் அழியும் காரணம் இதுவே..... மக்களே புரிஞ்சிகோங்க தமிழகம் ஏன் முன்னேறவில்லை என்று. இனி எவரேனும் இப்படி செய்தால் அவர்களுக்கு பாடம்புகட்ட தமிழன் முன்வர வேண்டும் ...

 

17794_3922515680417_1862775672_n.jpg

 

(முகநூல்)

Edited by துளசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.