Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீதிபதிக்கே இப்படி என்றால்???

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். மேலதிக நீதிவான் ஷ்ரீநிதி நந்தசேகரனின் வாகனத்தை பின் தொடர்ந்து சென்ற இராணுவத்தினர் பரமேஸ்வராச் சந்திக்கு அருகே அதனை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளனர்.

எனினும், பொதுமக்களின் முயற்சியால், ஏற்படவிருந்த பெரும் விபரீதம் தவிர்க்கப்பட்டதுடன், நீதிவானின் பாதுகாப்பு பொலிஸ் அதிகாரி ஒருவரும், கார்ச் சாரதியும் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற இராணுவத்தினரின் இத்தகைய எதேச்சதிகார நடவடிக்கை காரணமாக திருநெல்வேலிப் பகுதியெங்கும் நேற்று ஞாயிற்றுக்கிழமை பெரும் பதற்றம் நிலவியது.

நீதிவானின் பிள்ளையை தனியார் கல்வி நிறுவனமொன்றிலிருந்து ஏற்றி வருவதற்காகச் சென்றபோதே காலை 10.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நீதிவானின் கார் அவரது பாதுகாப்புப் பொலிஸார் ஒருவருடன் பலாலி வீதியூடாக கந்தர்மடம் சந்தியிலிருந்து பரமேஸ்வரா சந்தியை நோக்கி சென்று கொண்டிருந்தது.

அவ்வேளை, ஆட்டோ ஒன்றில் கனரக ஆயு

தங்களுடன், சுடுவதற்குத் தயாரான நிலையில் இராணுவத்தினர் குறித்த காரை துரத்தி வந்துள்ளனர்.

இதனை அவதானித்த அப்பகுதியில் நின்ற பொதுமக்கள் சுதாகரித்துக் கொண்டு அது நீதிவானின் கார் எனவும், சுட வேண்டாம் என்றும் கூக்குரலிட்டுள்ளனர்.

இந்த நிலையில், நீதிவானின் காரை நோக்கி இராணுவத்தினர் தாக்குதல் நடத்தப்போவதை அறிந்து கொண்ட வேறு வாகன சாரதி ஒருவர் வேகமாக நீதிவானின் காரை முந்திச் சென்று இராணுவத்தினர் சுடுவதற்காக துரத்தி வருகின்றனர் என நீதிவானின் கார்ச் சாரதியிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, நீதிவானின் கார் அந்த இடத்திலேயே சடுதியாக நிறுத்தப்பட்டது. பின்னர் காரைத் துரத்தி வந்த இராணுவத்தினர் காரில் இருந்தவர்களை அச்சுறுத்தியுள்ளனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த பகுதிக்கு நேரில் சென்ற நீதிவான் ஷ்ரீநிதி நந்தசேகரன் அப்பகுதியில் உள்ள இராணுவக் காவலரணில் நின்ற இராணுவத்தினரிடம் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக விளக்கம் கோரியுள்ளார்.

பொறுப்பற்ற வகையில் அதற்குப் பதிலளித்த அந்த முகாம் பொறுப்பதிகாரி, அவசர காலச் சட்டத்தின் கீழ் எங்களுக்கு அனைத்து வாகனங்களையும் சோதனையிட அதிகாரமுண்டு. நாங்கள் நினைத்திருந்தால் அனைவரையும் சுட்டுவிட்டு பின்னர் மன்னிப்புக் கோரியிருக்க முடியும்" என எதேச்சதிகாரமாக பதிலளித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக நீதிவான் இராணுவக் கட்டளை அதிகாரியான கேணல் பெரேராவிடமும், யாழ். பொலிஸ் நிலையம் ஆகியவற்றில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதேவேளை, முன்னரும் ஒரு தடவை நீதிவானின் வாகனத்தை றக்கா வீதியில் வைத்து மறித்த இராணுவத்தினர் வாகனத்தை கடுமையாகச் சோதனையிட்டதுடன் சாரதியையும் அச்சுறுத்தியுள்ளனர்.

நீதிவானின் கணவரும் இதேபோன்று பல்வேறு தடவை இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளதாகவும

நீதி தேவதைக்கே இந்த நிலை எண்டா ............. நாங்கள் எல்லாம் எந்த மூலைக்கு............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த ஜனநாயகத்க்கு குரல் கொடுக்கிறவையும், நீதி நியாயம், சமநிலை என்று கருத்துக் கொடுக்குறவையின்ர குரல் ஒண்டும் இதற்கு எதிரா எழுந்ததாய் இன்னும் தெரியவில்லை. கற்பினிப்பெண்ணை குண்டுதாரி ஆக்கினதெண்டு உவை எத்தினை ஆக்கினப்பட்டவை இப்ப ஒரு பெண் நீதவானுக்கு கொலைமிரட்டல் நடந்துள்ளது. கூக்குரலிட்டமாதிரி தெரியவில்லை. அரசாங்க அதிகாரிக்கே இப்படி என்றால் தனிப்பட்ட மக்கள் எப்படிப்பாதிக்கப்படுவார்கள

மேலும், அவசரகாலச் சட்ட விதிகளின்படி சந்தேகம் என்றால் எவரையும் சுடுவோம் என இராணுவத்தினர் எச்சரித்துள்ளனர். ஆனால், அவசரகால சட்ட விதிகளின் பிரகாரம் அவ்வாறு எவரும் எதேச்சதிகாரமாக செயற்பட முடியாது. அதற்கு எந்தச் சட்டத்திலும் இடமில்லை.

இத்தகைய அடிப்படைச் சட்டங்கள் கூடத் தெரியாதவர்கள் எவ்வாறு சட்டத்தையும், ஒழுங்கையும் பாதுகாக்கப் போகிறார்கள் எனக் கேள்வி எழுப்பினார்

.

இப்பத்தான் இவருக்கு விளங்கிச்சுதோ? :roll:

:roll: :wink: :twisted: நீதிவானின் வாகனத்துக்கு அச்சுறுத்தல் விடுத்தமை

படையினரின் காட்டு மிராண்டித்தனமான செயற்பாடு

தமிழ் மாணவர் ஒன்றியம் பலத்த கண்டனம்

நீதிவானின் வாகனத்துக்கு அச்சுறுத்தல் விடுத்த சீருடையினர்இ சம்பவம் தொடர்பாக அறிய முயன்ற நீதிபதியை அச்சுறுத்தியது காட்டு மிராண்டித்தனமான செயற்பாடாகும்.

இவ்வாறு பலத்த கண்டனம் தெரிவித்துள்ளது யாழ். மாவட்ட தமிழ் மாணவர் ஒன்றியம்.

"நீதிபதிக்கு சுடுகுழல் நீட்டும் அரச பயங்கரவாதிகள் தமிழனுக்கு எவ்வாறு நீதி தருவார்கள்' என்ற தலைப்பில் நேற்று ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பத்திரிகைச் செய்திக் குறிப்பு வருமாறு:

யாழ். பலாலி வீதிஇ பரமேஸ்வரா சந்திப் பகுதியில் யாழ். மேலதீக நீதிவான் ஸ்ரீநிதிநந்தசேகரனை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்ட ஸ்ரீலங்கா இராணுவத்தின் திட்டமிட்ட அநாகரிகமான செயற்பாட்டினை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இனவாதிகளின் இன வெறித்தாண்டவத்தின் உச்சக்கட்டம் யாழ் குடாநாட்டில் இடம் பெற்று வரும் நிலையில் தமிழ் பேசும் மக்கள் செய்வது அறியாது விழிபிதுங்கி நிற்கின்றார்கள்.

காலம் காலமாக தமிழினத்தை ஏமாற்றி அரசியல் நடத்திய சிங்களத்தலைவர்கள் பட்டியலில் மஹிந்த ராஜபக்ஷ முதுசத்தைப் பேணுவதில் முன்மாதிரியாகச் செயற்பட்டு வருகிறார். சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக தமிழர்களை ஏமாற்ற நினைக்கும் மகிந்த ராஜபக்ஷவிடமிருந்தோஇ அவரினால் ஏவிவிடப்பட்டிருக்கும் இராணுவம் என்னும் பயங்கரவாதிகளிடமிருந்தோ எமது உரிமையின் எவ்வளவு பங்கேனும் பெறமுடியாது என்பதை இந்த பயங்கரவாதச் சம்பவம் உணர்த்துகின்றது.

நடுவு நிலைமை தவறாத நீதித்துறைக்கு நேர்ந்த இந்த நிலைமை ஒட்டு மொத்த தமிழினத்துக்கும் விடுக்கப்பட்டிருக்கின்ற இறுதி எச்சரிக்கையாகும். அரச பயங்கரவாதம் தமிழ் மக்கள் மீது மோசமாக பிரயோகிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை கண்டும் காணாதவாறு மௌனிகளாயிருக்கும் சர்வதேசம் இனியாவது வாய்திறக்க வேண்டுமென வேண்டுகிறோம்.

அரசின் இவ்வாறான திட்டமிட்ட செயற்பாடுக்கு முடிவு வெகு தூரத்தில் இல்லை என்று அதில் உள்ளது. :evil: :twisted: :?:

நன்றி ......யாழ் உதயன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு மிருகம் ஒரு மனிதனை விரட்டுகின்றது. அதற்க்கு, மனிதன் என்பதால் மட்டுமே திரத்துகின்றது. அதற்க்கு நீதிபதியார்? சட்டத்தரணி யார்? என்று தெரியாது. அதே போல தான் சிங்கள மிருகங்கள் தமிழ் மனிதர்களை கொல்கின்றனர். இவர்களுக்கு தமிழ் மனிதர்களை கொன்றால் சரி, அது வைத்தியரா, நீதவானா, மாணவனா, என்பது முக்கியமல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.