Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அகதிகளான இராமேஸ்வரம் சென்ற மூன்று இளைஞர்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் இருந்து 3 இளைஞர்கள் இன்று அகதிகளாக இராமேஸ்வரம் சென்றுள்ளார்கள். ஈழப்போர் முடிந்து 4 ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில் ஈழத்திலிருந்து அகதிகள் வரத் தொடங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா படையிற்கும் இடையே நடந்த மோதலால் அப்பாவி தமிழர்கள் லட்சக்கணக்கானோர் படையினரால் கொல்லப்பட்டனர்.

 

இதனால் உயிர் பிழைக்க வேண்டி 2009ம் ஆண்டு வரை ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக இராமேஸ்வரம் வந்தனர். இறுதி போர் முடிவுற்ற நிலையில் அகதிகள் வருகை முற்றிலும் நின்று போனது.

 

இந்தநிலையில் சாவகச்சேரி முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த இளைஞர்கள் 3 பேர் இன்று அதிகாலை தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் வந்திறங்கினர்.

 

புதுகுடியிருப்பு வல்லிபுனம் பகுதியை சேர்ந்த பிரசாந்த் (19)சாவகச்சேரியை சேர்ந்த வசந்தகுமார் (24) விஜயராஜ் (24) ஆகிய மூவரும் சாவகச்சேரியில் இருந்து பேருந்து மூலம் மன்னார் வந்துள்ளனர்.அங்கிருந்து நேற்று இரவு 8 மணியளவில் பிளாஸ்டிக் படகு ஒன்றில் தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர். நள்ளிரவில் அரிச்சல்முனை பகுதியில் இவர்களை இறக்கி விட்ட பின்னர் அந்த படகு திரும்பி சென்றுவிட்டது.இரவு முழுவதும் அரிச்சல் முனை பகுதியில் இருந்த இவர்கள் இன்று காலை தனுஷ்கோடி காவல் நிலையத்திற்கு வந்தனர்.

 

எனினும் அவர்களிடம் விசா மற்றும் பாஸ்போர்ட் போன்ற முறையான ஆவணங்கள் ஏதும் இல்லாததால் மத்திய மற்றும் மாநில உளவு பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு அதன்பின்னர் அவர்கள் மண்டபம் முகாமிற்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

refugee%203.jpg

 

http://www.sankathi24.com/news/28603/64//d,fullart.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களின் பேச்சுவழக்கு கிழக்கு மாகாணத் தமிழர்கள் போல இருப்பதால் சந்தேகிக்கப்பட வேண்டியுள்ளது என ஒரு ஊடகம் எழுதியுள்ளது....

'தமிழ்நாட்டுக்கு அகதிகளாக மேலும் இலங்கையர்'

 

இலங்கையின் வடபகுதிகளில் தமிழர்களுக்கெதிரான வன்முறைகள் அண்மைக்காலங்களில் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்திருக்கும் மூன்று இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் முறையான ஆவணங்களில்லாது இந்தியா வந்திருப்பதால் அவர்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றக்காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயராஜ் (26), வசந்த்குமார் (24) மற்றும் முல்லைத்தீவைச் சேர்ந்த பிரசாத் (19) ஆகிய மூவர் இன்று செவ்வாய் அதிகாலையில் தனுஷ்கோடி அருகே தனியார் படகுகளில் இறக்கிவிடப்பட்டு, பின்னர் ராமநாதபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

அப்போது அவர்கள் கடந்த சில நாட்களாகவே வடபகுதிகளில் வெள்ளை வான் கடத்தல் மீண்டும் துவங்கிவிட்டதாகவும் தெருக்களில் நடமாடவே தமிழிளைஞர்கள் அச்சப்படுவதாகவும், இனியும் அங்கிருப்பது ஆபத்தென்பதால் இந்தியாவுக்குச் சென்று தம் குடும்பத்தினர் கூறிய ஆலோசனையில்பேரில் இந்தியா வந்ததாகவும் கூறியிருக்கின்றனர்.

அவர்களிடம் சந்தேகப்படும்படியான எப்பொருளும் இல்லை, அவர்கள் கூறுவதும் உண்மை போலவே தெரிகிறதென்றாலும், முறையான ஆவணங்களின்றி இந்தியா வந்திருப்பதால் அவர்கள் மீது வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைது செய்து மாஜிஸ்ட்ரேட் முன் ஆஜர்படுத்தியதாக உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர்கள் பின்புலம் குறித்து சரிவர அறிந்த பின் அவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்களா அல்லது அகதி முகாம்களுக்கு அனுப்பப்படுவார்களா என்பதை மாநில அரசுதான் முடிவு செய்யும் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/04/130402_newrefugees.shtml


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

ஈழத்தில் தொடரும் அடக்குமுறை. மூன்று ஈழத் தமிழர்கள் தமிழகத்தில் தஞ்சம்!

 

1364925809.jpg

 

ஈழப்போர் முடிந்து 4 ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில் ஈழத்திலிருந்து ஏதிலிகளாக தமிழர்கள் வரத்தொடங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈழம் புதுகுடியிருப்பு வல்லிகுளம் பகுதியை சேர்ந்த பிரசாந்த் (19), சாவகச்சேரியை சேர்ந்த வசந்தகுமார் (24), விஜயராஜ் (24) ஆகிய மூவரும் சாகவச்சேரியில் இருந்து பேருந்து மூலம் மன்னார் வந்துள்ளனர். அங்கிருந்து நேற்று இரவு 8 மணியளவில் பிளாஸ்டிக் படகு ஒன்றில் தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர். நள்ளிரவில் அரிச்சல்முனை பகுதியில் இவர்களை இறக்கி விட்ட பின்னர் அந்த படகு இலங்கைக்கு திரும்பி சென்றுவிட்டது. இரவு முழுவதும் அரிச்சல் முனை பகுதியில் இருந்த இவர்கள் இன்று காலை தனுஷ்கோடி காவல் நிலையத்திற்கு வந்தனர்.

திரு.விஜயராஜ் அவர்கள் கூறுகையில் : 'இலங்கையில் உள்ள சாவகசேரியில் ஒளிப்படப்பிடிப்பாளராக பணி செய்து வந்தேன். விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்காப் படையினருக்கும் சண்டை நிறைவுக்கு வந்த பின்னரும் அங்குள்ள தமிழ் ஆட்கள் நிம்மதியா இருக்க முடியல. விசாரணைங்கிற பேரால தமிழ் பொடியன்கள படையினர் அழைச்சிட்டு போறதும், ஆட்களை கடத்திட்டுப் போறதும் தொடர்ந்துகிட்டேதான் இருக்கு. அங்க இருந்தா உயிருக்கு உத்த‌ரவாதம் கிடையாது. அதனாலதான் எங்கட அப்பா என்னை தமிழகத்துக்கு அனுப்பி வச்சாங்க. ஈழத்தில் தமிழ் ஆட்களுக்கு எல்லாம் கொடுக்குறதா அரசாங்கம் சொல்லுது. ஆனா, எதுவும் உருப்படியா கிட்டால. காவல்துறை வேலைக்கு ஆட்கள் எடுத்தாலும் எங்கட ஆட்கள காவல்துறையில் அடிமையாத்தான் நடத்துறாங்க. சேவை அடிப்படையில் பனி உயர்வும் கிடையாது. ஒரு இடத்தை விட்டு வேற இடத்துக்கு நகந்தாலே சோதனைதான். அடையாள அட்டை இல்லாம எங்கயும் வெளிக்கிட முடியாது. என்னோட சகோதரர் கனடாவில் இருக்கார். நான் தமிழகத்தில் வேல பார்க்கலாம்னு ஏதிலியாக வந்துட்டேன். என்னை போன்ற ஆட்கள் ஈழத்தில் நிறைய இருக்காங்க. ஆனா, அவங்கல்லாம் அங்கிருந்து வெளியேறுவது மிகுந்த சிரமம்.

இவ்வாறு இவர் கூறியதிலிருந்து நமக்கு தெரிவது . இன்னும் தமிழர்கள் அங்கு சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியவில்லை . அடக்குமுறைக்கு அஞ்சியே தினம் தினம் வாழும் நிலை அங்கு உள்ளது என்பதே ஆகும் . இதற்கெல்லாம் ஒரே தேர்வு ஈழத் தமிழர்களிடையே தனி ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு எடுப்பது தான் .
 

http://newsalai.com/details/3-Tamil-Eelam-youths-seeks-asylum-in-TN.html#.UVubJjeG2Qt

Edited by துளசி

தமிழகத்தில் தரையிறக்கப்படும் சிங்கள உளவாளிகள்!
புதன்கிழமை, 03 ஏப்ரல் 2013 15:52

தமிழீழ மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அவர்கள்மீது இனப் படுகொலை புரிந்த சிங்கள ஆட்சியாளர்கள் அனைத்துலக விசாரணைக் குழுவால் விசாரிக்கப்பட்டு, போர்க் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும். தமிழீழ மக்களுக்கு நிரந்தரத் தீர்வு வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்து அவர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடாத்த வேண்டும் என்ற முதன்மைக் கோரிக்கைகளுடன் தொடரும் தமிழக மாணவாகளது போராட்டம் இந்திய காங்கிரஸ் ஆட்சியாளர்களை மட்டுமல்ல, சிங்கள ஆட்சியாளர்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழக மாணவர்களது உறுதியான, அர்ப்பணிப்பு மிக்க போராட்டங்கள் தமிழக மக்கள் மத்தியில் தமிழீழம் குறித்த விழிப்புணர்ச்சியினை உச்ச நிலைக்கு உயர்த்தியுள்ளது. தமிழக மாணவர்களது போராட்டத்திற்கு ஆதரவாக, பல்வேறு தளங்களிலும் போராட்டங்கள் பெருகி வருகின்றன. தமிழகத்தின் குக் கிராமங்களுக்கும் இந்தப் போராட்டம் விரிந்து செல்கின்றது. இன்று, திரைப்பட நடிகர் - நடிகைகளையும் இந்தப் போராட்டம் களத்தில் இறக்கியுள்ளது.

தமிழினப் படுகொலையின் பங்காளிகளான காங்கிரஸ் கட்சி பலத்த நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில், கடந்த ஒன்பது வருடங்களாக காங்கிரஸ் ஆட்சியின் அத்தனை கொடூரங்களுக்கும் உறுதுணையாக உடன் இருந்த தி.மு.க.வும் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ளது. தமிழீழம் விடுதலை பெறாதுவிடின் தமிழகம் அமைதி கொள்ளாது என்பது நிச்சயமான நிலையில், இந்திய - சிங்கள ஆட்சியாளர்கள் அதனை முறியடிப்பதற்கான அத்தனை முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்கள்.

தமிழக மக்களது தமிழீழம் சார்ந்த உணர்வினையும், எழுச்சியினையும் முறியடிப்பதற்கு சிங்கள ஆட்சியாளர்கள் தம்மால் பயிற்றுவிக்கப்பட்ட பல தமிழ் உளவாளிகளை இராமேஸ்வரம் ஊடாக தமிழகத்தில் தரையிறக்கி வருகின்றது. தமிழகத்தில், கடந்த சில நாட்களாக இந்த இளைஞர்கள் அகதி என்ற போர்வையில் தமிழ் நாட்டினை வந்தடைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் கிழக்கு மாகாண வட்டாரத் தமிழ் பேசுவதையும் இவர்கள் வழங்கிய தொலைக்காட்சி நேர்காணலில் நன்றாகப் புரிந்து கொள்ள முடிகின்றது. தமிழக மக்களது போராட்டங்கள் இலங்கைத் தமிழர்களுக்கு பாதகமான பல விழைவுகளை ஏற்படுத்தி வருவதாக இவர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார். பெரும்பாலும், இவர்கள் சிங்கள இராணுவ உளவுப் பிரிவால் ஏதோ தீய நோக்கத்திற்காகவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள் என்றே நம்பப்படுகின்றது.

மிகப் பெரிய திட்டமிடலுடன் சிங்கள அரசால் தமிழகத்தில் களம் இறக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் குறித்து தமிழக மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிங்கள அரசின் இந்தச் சதி முயற்சிக்கு இந்திய காங்கிரஸ் ஆட்சியாளர்களும் உடந்தையாக இருக்கும் பட்சத்தில், தமிழகத்தில் தமிழ் மக்களைக் குழப்பும் வகையிலான வன்முறைச் சம்பவங்கள் இவர்களால் தோற்றுவிக்கப்படலாம். அல்லது, அமைதியான மாணவர் போராட்டங்களில் குழப்பங்களையும் வன்முறைகளையும் தோற்றுவிக்க முயலலாம். அதனைச் சாட்டாக வைத்து, மாணவர் போராட்டங்களைத் தடை செய்வதற்கு முயற்சி செய்யலாம்.

இது வெறும் ஊகங்களின் அடிப்படையிலான சந்தேகங்கள் அல்ல. தமிழ் மக்களை அடக்குவதற்கு சிங்கள - இந்திய ஆட்சியாளர்கள் எதையும் செய்வார்கள் என்பதை நாம் கடந்து வந்த பாதை நன்றாகவே கற்றுத் தந்துள்ளது. தேசியத் தலைவர் அவர்களது காலடியிலேயே கருணா என்ற கருநாகத்தை உருவாக்கிய சிங்கள ஆட்சியாளர்கள் தமிழகத்தில் நடைபெறும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பார்வையாளராக நின்று ரசிக்கப் போவதில்லை. புலம்பெயர் தமிழர்களது மீள் எழுச்சியை நிர்மூலம் ஆக்கும் சிங்கள முயற்சியில் பிரான்சின் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் பரிதி சுட்டுக் கொல்லப்பட்டதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

ஒன்றரை இலட்சம் தமிழ் மக்களை இனப் படுகொலை செய்து பெற்ற வெற்றி கைநழுவிப் போவதற்கு சிங்கள தேசம் அவ்வளவு இலகுவில் விட்டுவிடாது. சிங்களத்தின் அத்தனை கொடூரங்களுக்கும் பக்கத் துணையாக இருந்துவரும் காங்கிரஸ் ஆட்சியாளர்களும் உச்சத்தைத் தொட்டுவரும் தமிழக மாணவர்கள் போராட்டத்தைத் தொடர அனுமதிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. நட்பு நாடு என்ற ஒரே தகமைக்காக 600 தமிழக மீனவர்களைப் பலி கொள்ளவும், ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்கள் வதை படவும் அனுமதிக்கும் இந்திய காங்கிரஸ் ஆட்சியாளர்கள், தமிழகத்தின் உள்ளேயும் சிங்களக் கொடூரங்களை அனுமதிக்க மாட்டார்கள் என்று நம்ப முடியாது. ஏனென்றால், காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் தமிழக மக்களால் புதைகுழி வெட்டப்படுகின்றது என்பதை அவர்கள் நன்றாகவே புரிந்துகொண்டுள்ளார்கள்.

 

 - இசைப்பிரியா -

 

(முகநூல்)

 

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு கடற்படையையும் தாண்டி தமிழ் நாடு வந்தது சந்தேகமாக உள்ளது.

இவர்களை பார்க்கும் போது தமிழர்கள் போல தெரியவில்லை...சிங்கள இராணுவ வீரர் போலுள்ளது..

எதுக்கும் சீமான் போன்றோர் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.