Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சி உதயன் அலுவலகம் மீது தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கிளிநொச்சி உதயன் அலுவலகம் மீது தாக்குதல்
03 ஏப்ரல் 2013
 
கிளிநொச்சியில் அமைந்துள்ள உதயன் பத்திரிகையின் அலுவலகம் மீது இன்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
 
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் குறைந்தபட்சம் மூன்று பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
மேலும் கட்டடத்திற்கும், வாகனங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
பத்திரிகைகளை விநியோகத்திற்காக அனுப்பும் நோக்கில் வானிலிருந்து இறக்கிய தருணத்தில் இனந்தெரியாத நபர்கள் தாக்குதலை நடத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
uthayan%201.jpg
தாக்குதலில் காமயடைந்த இரண்டு பணியாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
ஏனையவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது,
 
இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
 தாக்குதலில் அலுவலகம் சேதமடைந்திருப்பதுடன் பத்திரிகை விநியோகப் பணிக்காகச் சென்ற இரு பணியாளர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:
வழமைபோன்று பத்திரிகை விநியோகப் பணியில் ஈடுபடும் வாகனத்தில் பத்திரிகைகளை எடுத்துச் சென்று யாழ் - கண்டி நெடுஞ்சாலை, கரடிப்போக்குச் சந்தியி்ல் அமைந்துள்ள உதயன் அலுவலகத்தில் பத்திரிகைகளை இறக்குவதற்கு ஆயத்தமானபோது அலுவலகத்தில் அயலில் உள்ள ஆட்களற்ற கட்டடங்களினுள்ளும், பற்றைகளுக்குள்ளும் மறைந்திருந்து வெளிப்பட்ட காடையர்கள் வாகனத்தில் வந்த பணியாளர்களைக் கொட்டன்களினால் தாக்கிக் காயப்படுத்தியதோடு, அலுவலகத்தினுள்ளே புகுந்து அடித்து நொருக்கியிருக்கின்றனர்.
 
சம்பவத்தில் படுகாயமடைந்த இரண்டு பணியாளர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
ஏனையவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகியிருக்கின்றனர். அலுவலகம் முற்றாகச் சேதமடைந்திருக்கிறது. சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
 
அண்மைக்காலமாக பத்திரிகைகள் மக்களின் கைக்குச் செல்வதைத் தடுப்பதற்கான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
குறிப்பாக வன்னிப் பிராந்தியத்தில் திட்டமிட்ட முறையில் விநியோகப் பணிகளைத் தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதோடு, பத்திரிகை விற்பனையாளர்களும் கடும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர்  என்பதும் குறிப்பிடத்தக்கது.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

சிங்கள பயங்கரவாதம் உதயனை அழிப்பது இல்லை தமது ஊதுகுரலாக்குவது என்பதில் விடாப்பிடியாக நிற்கின்றது.

 

உதயனுக்கு எமது ஆதரவை வழங்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

உதயன் தாக்குதலை கண்டிக்கிறார் கரு ஜயசூரியா!

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை மீதான தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
karu.jpg

இலங்கையினில் மாற்றுக்கருத்துக்களை வெளிட சுதந்திரமில்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது.இந்தத்தாக்குதலின் மூலம் வடக்கு மக்களின் மாற்றுக்கொள்கைகளை வகிக்கும் உரிமைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக உணர்கின்றேன்.

தற்போது வடக்கு மக்கள் மாற்றுக் கருத்துக்களை வெளியிடும் உரிமைக்கு மீளவும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இனந்தெரியாத ஆயுததாரிகள் எதிரிகளைத் தாக்கி எவ்வித பாதிப்பும் இன்றி தப்பிச் செல்லக் கூடிய சூழ்நிலை நாட்டில் காணப்படுகின்றது. மாற்றுக் கருத்துக்களை ஏற்றுக் கொள்கின்றோமோ இல்லையோ அவற்றுக்கு மதிப்பளிக்க வேண்டுமென கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

 

http://www.pathivu.com/news/24156/57/d,article_full.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.