Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏன் இன்னும் சிங்களத்தின் குகைக்குள் பதுங்கல்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு எதிரான போரினை முன்னெடுத்த காலங்களில்தான் முஸ்ஸிங்களின் உதவி சிங்களத்திற்கு தேவைப்பட்டது. தமிழர்களை கேள்வி பார்வையின்றி கைது செய்வதற்கும், வதை செய்வதற்குமான சட்ட மூலத்தை மாதத்திற்கு மாதம் நீடித்துக் கொள்வதற்காக நாடாளுமன்றத்தில் முஸ்லீம் அரசியல் கட்சிகளை பயன்படுத்திக் கொண்டது சிங்களம்.

06042013%20006.jpg

அன்றைய காலகட்டத்தில் பதவிக்கும் பட்டத்திற்கும் ஆசைப்பட்ட முஸ்லீம் அரசியல் தலைவர்கள் பெரும்பான்மையான சிங்களத்துடன் சேர்ந்து தமிழ் இனத்தை கொன்றுகுவித்தனர். சிங்களத்துடன், இணைந்து ஊர்காவல் படை என்ற போர்வையில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பல இடங்களில் படுகொலைகளையும் மேற்கொண்டனர்.

 

1985 ஆண்டுக்குப் பின்னர் முஸ்லீம்களின் அரசியல் வளர்ச்சியென்பது, தமிழர்களை கொலை செய்வதும், சிங்களத்திற்கு பக்கவாத்தியம் பாடியும்தான் வங்கோரோத்து அரசியல் செய்தனர். அதனையே இன்றும் தொடர்ந்து கையாண்டுவருகின்றார்கள். முஸ்லீம்களின் அரசியலை கடந்த 2009 ஆம் ஆண்டு வரைக்கும் கச்சிதமாக பயன்படுத்திய சிங்களம், சர்வதேசத்தின் மூலம் இலட்சக் கணக்கான தமிழர்களை இனப் படுகொலை செய்து போரை முடிவுக்குக் கொண்டுவந்த பின்னர் முஸ்லீம்களையும் கையுதறிவிட்டனர்.

 

ஒரு சிறுபான்மை இனத்தை கொன்றொழிக்கும் போது வேடிக்கை பார்த்தவர்கள், இன்று தனது சமூகத்திற்கு பாதிப்புக்கள் ஏற்படுகின்ற வேளையில், தமிழர்களின் உதவிகளை நாடுவது அரசியல் தர்மமா? அல்லது சுயநல அரசியல் தேவைக்கான தாகமா?

 

சிறீலங்கா பௌத்த நாடு, பௌத்தம் மாத்திரம்தான் இங்கு வாழ முடியும் எனத் திண்ணம் கொண்டுள்ள சிங்களத்துடன் ஏனைய மதத்தவர்கள் வாழ முடியாது என்பதை அறுபது ஆண்டு காலமாக தமிழ் இனம் உரத்து குரல் கொடுத்துவருகிறது. முள்ளிவாய்க்கால் பகுதியில் மூர்க்கத்தனமாக, மனிதகுலமே அருவருக்கத்தக்க செயலில் சிங்களம் ஈடுபட்ட போதிலும், இன்றுவரை சிங்களத்தின் காலில் விழாத இனம்தான் தமிழ் இனம்.

 

தமிழனுக்கு தன்மானம் பெரிதென்று வாழ்பவன்தான் தமிழன். அற்ப சொற்ப சலுகைக்காக சிங்களம் போடும் எலும்புத் துண்டைக் காவுதல் தமிழனின் வழக்கமல்ல. தமிழர்கள் வந்தான்-வரத்தான் அல்ல, பெயர் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியளவுக்கு தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்த இடம் எமது தாயகப் பூமி. நாம் பூர்விக மக்கள். நாங்கள் யாரிடமும் மண்டியிட வேண்டியதில்லை. சில புல்லூருவிகளினாலும், சில தேசத் துரோகிகளினதும் தேசத் துரோகத்தனத்தினால் தமிழ் இனத்தின் மன்னர்களை வெற்றி கொண்ட சிங்களம் இன்றுரை அதனையே செய்து முள்ளிவாய்க்காலில் பாரிய இனப் படுகொலையை அரங்கேற்றியுள்ளது.

 

அப்போதும், எமது உரிமைக்காக தாயகத்தில் மாத்திரமல்ல, புலம்பெயர் இடங்ளிலும் போராட்டங்களை மேற்கொண்டுவருகின்றனர். எமது தொப்புள் கொடி உறவுகளும் தமிழகத்தில் எமக்காக குரல் கொடுத்துவருகின்றனர். எவ்வாறாயினும், கடந்த காலக் கசப்பான சம்பவங்கள் அனைத்தையும் மறந்து கடந்த ஆண்டு 2012 இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையைக் கொண்ட சிறுபான்மையினர் ஒன்றிணைந்து ஆட்சி அமைப்போம் எனச் சில விட்டுக் கொடுப்புக்களை மேற்கொண்டனர்.

 

பெரும்பான்மை சிங்களத்தின் நெடுங்கயிற்றை விழுங்கிக் கொண்டு சுயஉரிமைக்கான அனைத்தையும் உதறித்தள்ளினர் முஸ்லீம் அரசியல் தலைவர்கள். உரிமைப் போராட்டம், உரிமைப் போராட்டம் என மேடை போட்டு கத்தும் முஸ்லீம் அரசியல்வாதிகள் இன்று தனது இனத்தின் அனைத்து உரிமை மாத்திரமல்ல, கலை, கலாச்சார விழிமியங்களையும் சிங்களம் ஆதிக்கம் செய்ய முற்படுகிறது. பத்துக்கு மேற்பட்ட இடங்களில் மதச் சின்னங்களை உடைத்துள்ள சிங்கள ஆதிக்கம் கொண்ட அரசு, மறுபுறத்தில் பௌத்தம், பிற மதங்களை மதிப்பதாக உலகுக்கு சாக்குப் போக்கான கருத்துக்களை கூறித் தப்பித்துக் கொள்கிறது.

 

போர்க்குற்றம் மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் சுருக்குக் கயிறு கழுத்தில் ஏறுவதைத் தடுப்பதற்காக ஐ.நாவில் முஸ்லீம் நாடுகளின் உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக இவ்வாறான கருத்துக்களை தெரிவித்துக் கொள்ளும் மகிந்த அரசு, அதேசமயத்தில் இன்று முஸ்லீம்களின் பொருளாதாரத்தில் கைவைக்கத் தொடங்கியுள்ளது.

 

இது ஒரு சாதாரண பௌத்த துறவிகளின் நடவடிக்கையல்ல, மிகப் பெரியளவில் திட்டமிட்டு இராணுவத்தின் பின்புலத்திலேயே இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகிறது. விசஜந்தான ‘பொது பல சேனா’ எனும் கொடிய நச்சுத் தன்மையான அமைப்பின் பின்னணியில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபாய ராஜபக்சவே செயற்பட்டுவரும் நிலையில் இது நன்கு புலனாகும். சிறுபான்மை இனம் தமது தன்மானத்துடன் வாழ்வோம் என கடந்த மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அழைப்பு விடுத்தது, அதனையெல்லாம் காலால் உதைத்து தள்ளிவிட்டு இன்று வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டவுடனேயே தமிழ் தரப்புடன் பேசுவதற்கு தயார் என சிங்கள அரசுடன் இணைந்து செயற்படும் முஸ்லீம் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

உண்மையில் தனது இனத்திற்காக குரல் கொடுப்பவர்கள் என்றால், தம்புள்ளையில் பள்ளிவாசல் தாக்கப்பட்டவுடனேயே சிங்கள அரசாங்கத்திலிருந்து உடனடியாக வெளியேறியிருக்க வேண்டும். முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகள் தலைக்கு மேல் சென்ற போதும், சிங்களத்துடன் இணைந்துகொண்டு தமிழர்களை பேச்சுக்கு அழைப்பது எந்த வகையில் நியாயம்?, தமிழ் தலைமைகள்தான் இந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளுமா?

 

முஸ்லீம்களை ஏமாற்றும் கருத்துக்களை கூறிக் கொண்டு சிங்களத்தின் குகைக்குள் பதுங்காமல் மகிந்தாவுடன் கூட்டுச் சேர்ந்துள்ள அனைத்து முஸ்லீம் அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் தமது பதவிகளை தூக்கியெறிந்துவிட்டு தமது மக்களுக்காக குரல் கொடுப்பார்களாயின் அவர்கள் உண்மையில் வரவேற்கப்படுவார்கள். ஆனால் அவ்வாறு செய்வதற்கு இன்றுவரை முஸ்லீம் தலைமைகள் தயாராக இல்லையே..?

 

- கிழக்கில் இருந்து  எழுவான்  

நன்றி: ஈழமுரசு

 

http://www.sankathi24.com/news/28707/64//d,fullart.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான்   பச்சை மட்டையடி என்கிறது...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.