Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சென்னையில் உலக செஸ் போட்டி: ஜெயலலிதா அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் நவம்பர் 6ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை உலக செஸ் சாம்பியன்ஷிப் நடைபெறும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று 110வது விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில், "மனதிலும், உடலிலும் உறுதியுள்ள இளைய தலைமுறையினரை உருவாக்குவதிலும், சர்வதேச அளவில் நமது நாட்டின் பெயரை நிலைநிறுத்துவதிலும் இன்றியமையாத் தன்மையை வகிப்பது விளையாட்டு என்று சொன்னால் அது மிகையாகாது. இளைய சமுதாயத்திற்குத் தேவையான நற்பண்புகளை புகட்டி அவர்களை பொறுப்புள்ள மனிதர்களாக மலரச் செய்யும் விளையாட்டுத் துறைக்கு எனது தலைமையிலான அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது என்பதை மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள்.

இதன் ஒரு பகுதியாக, கடந்த 2011 ஆம் ஆண்டு உலக சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் Kirsan Illyumzhinov, என்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து 2012 ஆம் ஆண்டுக்கான உலக சதுரங்க வாகையர் போட்டியினை சென்னையில் நடத்தும்படி என்னிடம் வேண்டுகோள் விடுத்தவுடன், இதுவரை இந்தியாவில் நடைபெறாத இந்த உலக சதுரங்க வாகையர் போட்டியினை 20 கோடி ரூபாய் செலவில் சென்னையில் நடத்த ஒப்புதல் அளித்தேன்.

இருப்பினும், இந்தப் போட்டியை நடத்துவதற்காக நடத்தப்பட்ட ஏலத்தில், அதிகத் தொகையினை ரஷ்ய நாடு குறிப்பிட்டதால், 2012 ஆம் ஆண்டுக்கான உலக சதுரங்க வாகையர் போட்டி ரஷ்ய நாட்டில் நடைபெற்றது. 2012 ஆம் ஆண்டுக்கான உலக சதுரங்க வாகையர் போட்டியினை நடத்த தமிழ்நாடு முன் வந்ததைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள உலக சதுரங்க வாகையர் போட்டியினை ஏல முறையின்றி சென்னையில் நடத்த உலக சதுரங்க கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

உலக சதுரங்க கூட்டமைப்பின் வேண்டுகோளினை ஏற்று, 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள உலக சதுரங்க வாகையர் போட்டியினை சென்னையில் நடத்த அரசு முடிவு செய்துள்ளது என்பதையும், இதற்கென 29 கோடி ரூபாய் நிதியினை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்யும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் போட்டிகள் ஐந்து முறை உலக வாகையர் பட்டம் சூடிய தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், தற்போதைய உலக சதுரங்க வாகையருமான கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் தற்போதைய உலக தர வரிசையில் முதல் சதுரங்க வீரராகவும், FIDE தர வரிசைப் பட்டியலில் இதுவரை உயர்ந்த அளவில் 2,872 புள்ளிகள் பெற்று முன்னணியில் உள்ள நார்வே நாட்டைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன் ஆகியோருக்கும் இடையே நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சர்வதேச அளவிலான இது போன்ற போட்டிகள் சென்னையில் நடத்தப்படுவதன் மூலம் இளைய சமுதாயத்தினர் இடையே சதுரங்க விளையாட்டினை பயில்வதற்கான ஆர்வம் மேலும் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், பல சதுரங்க விளையாட்டு வீரர்களை உருவாக்கவும் வழிவகுக்கும்" என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

http://www.vikatan.com/new/article.php?module=news&aid=13622

காங்கிரசுக்கு உதவுவதற்காக முள்ளிவாய்க்காலை மூடி மறைக்க நடந்த செம்மொழி மகாநாட்டிலும் பார்க்க இது நல்ல கொய்யகம்.

 

வரவேற்கிறோம்.

 

செல்வழிக்கபடும் பணம் தமிழ் நாட்டு கட்டுமாணங்களை உயர்த்த வேண்டும். ஆசிய விளையாட்டு மாதிரி இந்திய கட்டுமான கொந்துராத்துகார் எதையும் ஏமாற்ற இடம் கொடுக்க கூடாது. ஜெயலலிதா அம்மையார் பொறுப்பெடுக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.