Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்காவின் அடுத்த கட்ட நகர்வு என்ன? - அமெரிக்கத் தூதுவர்

Featured Replies

  
    

அமெரிக்காவின் அடுத்த கட்ட நகர்வு என்ன? - அமெரிக்கத் தூதுவர் [ செவ்வாய்க்கிழமை, 09 ஏப்ரல் 2013, 10:08 GMT ] [ கார்வண்ணன் ] us_embassy_colombo_logo.jpg

[கொழும்பில் நேற்று அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் வெளிநாட்டு செய்தியாளர் சங்கத்தில் நிகழ்த்திய உரையின் முதல் பகுதி இது.]

சிறிலங்கா தொடர்பான அமெரிக்காவின் அடுத்த கட்ட நகர்வு என்ன என்பது குறித்து உரையாற்றும்படி கேட்கப்பட்டுள்ளேன்.

முதலில் நாங்கள் சிறிலங்காவுடனான, சிறிலங்கா மக்களுடனான எமது உறவை வெகுவாக மதிக்கிறோம் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.

சிறிலங்காவின்
தற்போதைய நிலைமையை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பது குறித்தும், சில
வாரங்களுக்கு ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இரண்டாவது தீர்மானத்தை

முன்வைக்க அமெரிக்கா முடிவு செய்தது ஏன் என்பது குறித்தும் சற்றுப் பேசுவதற்கு நான் விரும்புகிறேன்.

சிறிலங்கா மக்களுடன் அமெரிக்க மக்கள் நெடுங்கால நட்புறவையும், ஒத்துழைப்பையும் கொண்டுள்ளனர்.

1800ம் ஆண்டுகளில், அமெரிக்க அரசின் பிரதிநிதி ஒருவர் முகவர் போன்று சிறிலங்காவில் செயற்பட்டிருந்தார்.

கப்பல்களில் வரும் அமெரிக்க மாலுமிகளை பதிவு செய்வதற்காக அவர், காலி கோட்டை விடுதியின் தாழ்வாரத்தில் அமர்ந்திருந்தார்.

இப்போது அமெரிக்கத் தூதரகம் மிகவும் பரபரப்பாக இயங்குவதைக் காணலாம்.

இப்போது 21ம் நூற்றாண்டில், சிறிலங்காவுடனான எமது உறவுகள் ஆழமாகவும், விரிவாகவும் தொடர்கிறது.

இன்று நாம் சிறிலங்காவின் அபிவிருத்திக்கும் மனிதாபிமானப் பணிகளுக்கும் உதவும், மிகப் பெரிய பங்காளர்களில் ஒருவராக இருக்கிறோம்.

கல்வி மற்றும் பொது சமூகத்துக்கான பெரிய உதவியாளராகவும் அமெரிக்கா உள்ளது.

அவசியமான நேரங்களில் சிறிலங்காவின் மிக நல்ல நண்பனான அமெரிக்கா இருக்கிறது.

2004ல் சுனாமி அழிவுகள் ஏற்பட்டபோது சிறிலங்காவுக்கு உதவ முன்வந்த முதல் நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று.

அழிவு ஏற்பட்ட சில நாட்களில் ‘யு.எஸ்.எஸ். துலுத்‘ உதவிகளை வழங்க இங்கு வந்தது.

தீவின் அனைத்து சமூகங்களும் அழிவுகளில் இருந்து மீள்வதற்கு உதவிய முன்னணி பங்காளராக நாம் இருந்தோம்.

எண்ணற்ற
தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள், சிறிலங்கா அதிபர் ரணசிங்க பிறேமதாசவின்
படுகொலை போன்ற பத்தாண்டுக்கணக்கிலான விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை -
விடுதலைப்
புலிகளின் தீவிரவாத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர, எல்லா வழிகளிலும்
சிறிலங்கா அரசாங்கம் மற்றும் மக்களுக்கு அமெரிக்கா உதவியது.

நாமும் கூட தீவிரவாதத்துக்கு முகம் கொடுத்தவர்கள். அது நாட்டையும் சமூகத்தையும் எவ்வாறு சீரழிக்கும் என்பதை நாம் அறிவோம்.


விடுதலைப் புலிகளை முறைப்படி, தீவிரவாத அமைப்பாக அறிவிப்பதில் அமெரிக்கா தான் முன்னால் இருந்தது.

இந்த
அறிவிப்பு விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு ஆதரவு வலையமைப்புகளை பெரிதும்
வலுவிழக்கச் செய்வதில் முக்கியமான பங்கை ஆற்றியதுடன், அதன் இறுதியான
முடிவுக்கு உதவியாக அமைந்தது.

விடுதலைப் புலிகள் இயக்கம் இன்றைய
நாள் வரை, அமெரிக்காவில் வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில்
உள்ளது. நீண்டகாலமாகத் தொடர்ந்த வன்முறைகளால் சிறிலங்கா முழுவதிலும் உள்ள
குடும்பங்களும், சமூகங்களும் பாதிக்கப்பட்டது எமக்குத் தெரியும்.

நல்ல வேளைகளிலும் கெட்ட நேரங்களிலும் சிறிலங்கா மக்களின் நீண்டகால நண்பனாக நாம் இருந்திருக்கிறோம்.

தீவிரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக, தேசிய பாதுகாப்பை நிர்வகிப்பது சவாலானது என்பது எமக்குத் தெரியும்.

அதற்கு இணையான முக்கியமான சவால், கடினமான நேரங்களில் ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகளையும், சட்டத்தின் ஆட்சியையும் பாதுகாப்பது.

அமெரிக்காவும் சிறிலங்காவும் நீண்டகால பலமான உறவைக் கொண்டுள்ளன.

வரலாற்று ரீதியான அந்த உறவு, ஜனநாயக மதிப்புகளை அடிப்படையாக கொண்டது.

அத்தகைய பெறுமானங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது, அமெரிக்கா அதுபற்றி துல்லியமாகப் பேசும்.

சிறிலங்காவில்
குறிப்பாக ஊடகங்கள் மீதான தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் குறித்து
அமெரிக்கா கரிசனை கொண்டுள்ளது என்பது உங்களில் பலருக்குத் தெரியும்.

முக்கியமான பல ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

2009ல்
நிகழ்ந்த சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை, 2010ல்
பிரகீத் எக்னெலிகொட கடத்தல், 2011 ஜுலையில் உதயன் செய்தி ஆசிரியர்
ஞானசுந்தரம் குகநாதன் மீதான தாக்குதல் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் மீதான பல
தாக்குதல்கள் இன்னமும் தீர்க்கப்படவில்லை.

ஊடகங்களுக்கு எதிரான
தாக்குதல்கள் இன்று வரை தொடர்கின்றன என்பது இந்த அறையில் உள்ள
ஊடகவியலாளர்களுக்குத் தெரியும் என்பதை நான் அறிவேன்.

அபூர்வமாகவே சந்தேகநபர்களை கைது செய்யப்படுவர் அல்லது கைது செய்யப்பட்டவர்கள் பெரும்பாலும் தண்டிக்கப்படுவதில்லை.

கடந்தவாரம் கூட, கிளிநொச்சியில் உள்ள உதயன் பணியகம் மீது முகமூடி அணிந்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இது உதயனுக்கு எதிரான தொடர்ச்சியான தாக்குதல்களில் ஒன்று. கடந்த பல ஆண்டுகளாக அதன் பணியாளர்கள் தாக்கப்படுகின்றனர்.

இந்தப்
பிரச்சினையை நான் எழுப்புவதற்கு காரணம், அமெரிக்கா எப்போதும் கருத்துச்
சுதந்திரத்துக்கான உலகளாவிய உரிமையை பாதுகாப்பதற்காக பணியாற்றுகிறது.

ஊடகங்கள் உள்ளிட்ட எல்லா தனிநபர்களுக்கும் கருத்துச் சுதந்திரம் உள்ளது என்று நாம் நம்புகிறோம்.

இது ஜனநாயகத்துக்கு அவசியமானது மட்டுமல்ல, தனிப்பட்ட உரிமை.

மற்ற ஜனநாயக அமைப்புகளையும், பெறுமானங்களையும் விமர்சனம் மூலம் பாதுகாக்கிறது.

பங்கேற்பு ஜனநாயகம் ஒன்றில் மக்கள் தமது நாட்டின் நிலைமை, அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்த துல்லியமான தகவலைப் பெற வேண்டும்.

இந்தநிலையில்
உதயன் மீதான தாக்குதல் குறித்து முழுமையான விசாரணை நடத்தி குற்றவாளிகளை
தண்டிக்க வேண்டும் என்று நாம் சிறிலங்கா அதிகாரிகளை கேட்கிறோம்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் பல பரிந்துரைகளில், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்தரத்துக்கு ஆதரவளித்தலும் ஒன்று.

ஜெனிவாவில் அண்மையில் கொண்டு வரப்பட்ட 2013 மார்ச் தீர்மானத்திலும் கூட இந்தப் பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளது.

அண்மையில் அமெரிக்கா கரிசனை வெளியிட்டுள்ள பிரச்சினைகளில், தலைமை நீதியரசருக்கு எதிரான பதவிநீக்க நடைமுறையும் ஒன்று.

[மிகுதி விரைவில்…]

http://www.puthinappalakai.com/view.php?20130409108077

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மனுசி...134 இலக்க பஸ்ஸில்..போற ஆள் போல கிடக்கு....அடிக்கடி மாத்தி கதைக்கிறா....அல்லது கெரி அண்ணை வந்து..ஏடு புரட்டுகிறார் போலகிடக்கு...

  • தொடங்கியவர்

இப்போ புதிய லொபியிங் கம்பனி. TAG என்று பெயர். சீனா இதுக்கெல்லாம் இலங்கைக்கு நேராக பணம் கொடுக்கிறார்கள்.   ராஜாங்க அமைச்சு பக்கம்   இனி அப்பிடியும் இப்படியும் தான். ஆனால் ஐ.நா.பக்கம். நாம் தொடந்து கவனம் செலுத்தலாம். அந்த பக்கம் இருப்பவர்கள் பழைய ஆட்கள்தான். மேலும் தமிழக மாணவர் இந்தியா மீது அழுத்தம் பொடுவத்தால் அந்த பக்கம் முன்னேற்றம் காணலாம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.