Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கைப் போர்.. புளொட்டின் மாலைதீவு கள்ளன் - பொலிஸ் விளையாட்டு எல்லாம் இந்தியாவால் தான் - கோத்த பாய..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் நடந்த போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்சே

 

இலங்கையின் உச்சகட்ட போர் நடைபெற்ற வேளையில், கடைசி 100 நாட்களில் நடைபெற்ற போர் குற்றங்கள் தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகளின் கீழ் ஐ.நா. மன்றம் விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நா. சபைக்கான இந்தியாவின் (முன்னாள்) நிரந்தர உறுப்பினர் ஹர்தீப் சிங் பூரி சமீபத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.
 

இதற்கு பதிலளித்த இலங்கை அதிபர் ராஜபக்சே, 'இலங்கையில் நிகழ்ந்த தீவிரவாதம் குறித்து குரல் எழுப்பாதவர்கள், போர் கால அத்துமீறல்கள் குறித்து விசாரணை கோருவது வேடிக்கையாக உள்ளது' என்று கூறியிருந்தார்.
 

இந்நிலையில், தனி ஈழம் கோரிக்கையுடன் கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையில் நடைபெற்ற யுத்தத்திற்கு இந்தியாதான் காரணம் என இலங்கை இப்போது குற்றம் சாட்டியுள்ளது.
 

இது தொடர்பாக இலங்கை ஊடகத்திற்கு பேட்டியளித்த பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்சே, 'இலங்கையில் தீவிரவாதத்தை உருவாக்கிய பொறுப்பில் இருந்து இந்தியா எப்போதுமே விலகிவிட முடியாது.
 

இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையீடு செய்த 1988ம் ஆண்டின்போது இந்தியாவால் பயிற்சியளிக்கப்பட்ட இலங்கை தீவிரவாதிகள், மாலைத்தீவின் மீது தாக்குதல் நடத்தியதையும், இச்சம்பவத்தின் பிறகு இலங்கை அரசு சந்தித்த நெருக்கடிகளையும் இந்தியா உணர வேண்டும்' என்று கூறியுள்ளார்.

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=96617

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இதை பயங்கரவாத புரஃபசர் ஏற்கனவே சொல்லித் திரியுறாரே.. ஆனால் அதெல்லாம் மேற்குலக ஊடகங்களில் வராது.. வியாபாரம் பாழாகிவிடும்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சர்வதேசத்திற்குப் போவான்.. இங்க யாழில் உள்ள மாற்றுக்கருத்து மரத்தவர்கள் இப்பவும் புலி வாந்தி தானே எடுத்துக் கொண்டு திரியினம்.

 

எமது விடுதலைப் போராட்டம் பயங்கரவாதமாக முக்கியமான காரணங்களில் சில...

 

1. டக்கிளஸ் தேவானந்தா அமெரிக்க தம்பதிகளான அலன் தம்பதிகளைக் கடத்தி செய்த சித்து விளையாட்டு அசிங்க அரசியல். இன்றும் அதையே அவர் தொடர்கிறார்.

 

2. புளொட் பேமாளிகள் மேற்கொண்ட அநாவசிய நடவடிக்கையே.. மாலைதீவு மீதான தாக்குதல். இதுவே எமது போராட்டம் பிராந்திய அச்சுறுத்தல் வாய்ந்தது என்பதை உலகிற்கு முதலில் உணர்த்தியது.

 

எல்லாத்திற்கும் ராஜீவ் காந்தி கொலையை முன்னிறுத்திறது தான்... மாற்றுக்கருத்து மரத்தவர்களின் தற்போதைய பாஷன். புலிகளை மீளாய்வு செய்ய ஐயர் குய்யர் என்று ஆயிரம் பேர் இருக்கினம்.. ஆனால்.. போராட்ட காலம் முழுவதும்.. இந்தத் துரோகிகள் எமது போராட்டத்தை நலிவடையச் செய்ய மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து யாரும் மீளாய்வும் செய்வதில்லை. அவைக்கு புத்திமதியும் சொல்வதில்லை.

 

ராஜீவ் கொலை இந்தியப் படைகள் ஈழத்தில் நடந்து கொண்ட முறையோடு.. தொடர்பு படுத்தப்பட்டுப் பார்க்கப்பட்டாலும்.. அது ஒரு சர்வதேசச் சதி..!

 

ஆனால் என்ன புலிகளை அதில் மாட்ட வைத்து.. அழித்தது தான்.. சிங்களம் பெற்றுக் கொண்ட பெரு வெற்றி..! அங்கு அழிக்கப்பட்டது புலிகள் அல்ல.. ஒட்டுமொத்த தமிழினமும் என்பதை இன்று தான் தமிழ் மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்..!

 

அங்கு அழிக்கப்பட்டது புலிகள்.. தமிழ் மக்கள் மட்டுமல்ல.. இந்திய நலனும் என்பதை இந்தியாவை சிங்களம் மிக விரைவில் உணர வைக்கும்..! எல்லாம் நன்மைக்கே..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  அர்ஜுன் அண்ணா உங்களை தான் கூப்பிடுறாங்க!! :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.