Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இஸ்ரேல் - லெபனான் மோதல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லெபனான் எல்லைப் பகுதியில் படைகளை குவிக்கிறது இஸ்ரேல்

ஹெஸ்புல்லா போராளிகளின் பதுங்கு குழிகளையும், சுரங்கப் பாதைகளையும் ஆயுதங்களையும் அழிப்பதற்காக தரை நடவடிக்கையொன்றை மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ள இஸ்ரேலிய இராணுவம், லெபனானுடனான எல்லையில் டாங்கிகளையும் துருப்பினரையும் குவித்துள்ளது.

இஸ்ரேலுக்குத் தீமை விளைவிக்கும் பயங்கரவாதத்திற்கு தீமையை ஏற்படுத்துவதற்கு மட்டுப்படுத்தப்பட்ட தரை இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதாக அந்த நாட்டின் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் டன் ஹலுட்ஸ் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவோம். அதனை எதிர்த்து நாம் போராடாவிட்டால் அது எங்களுக்கு எதிராக போராடும். அதனை நாங்கள் சென்றடையாவிட்டால் அது எங்களை வந்தடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இஸ்ரேலின் தரைவழி இராணுவ நடவடிக்கை எவ்வளவு பலம் வாய்ந்ததாக இருக்கும் என்பது குறித்து அவர் எதனையும் தெரிவிக்கவில்லை.

எனினும், அதிகரித்து வரும் உயிரிழப்புகள் சர்வதேச கண்டனங்கள் போன்றவற்றால் இஸ்ரேல் தனது இலக்கினை அடைவதற்கான காலம் குறைவாகவே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் கொண்டலீசா ரைஸ், மத்திய கிழக்கிற்கான தனது விஜயத்தை ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கின்றார். இஸ்ரேல் இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்து 10 நாட்களுக்குப் பின்னர் அவர் பிராந்தியத்திற்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயமிது.

அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஜெருசலேத்திலும், மேற்கு கரையிலும் இஸ்ரேலிய பிரதமரையும், பாலஸ்தீன ஜனாதிபதியையும் சந்திக்கவுள்ளார்.

எனினும், இஸ்ரேலிற்கும், ஹெஸ்புல்லா போராளிகளுக்கும் இடையில் உடனடி யுத்த நிறுத்தம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை அவர் நிராகரித்துள்ளார். அது பொய்யான வாக்குறுதி என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய வன்முறைகளை முடிவிற்குக் கொண்டு வருவதற்கு முயல்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

லெபனான் மீதான மிக நீண்ட கால ஆக்கிரமிப்பை ஆறு வருடங்களுக்கு முன்னரே இஸ்ரேல் முடிவிற்குக் கொண்டு வந்திருந்தது.

இஸ்ரேல் தற்போது 1978 இற்குப் பின்னர் லெபனான் மீதான பாரிய மூன்றாவது இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளது.

எனினும், லெபனானில் நீண்ட காலம் நிலை கொண்டிருக்கப்போவதில்லை என்பதை அது சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த சில நாட்களாக லெபனானிற்குள் தனது சிறியளவு படையணி செயற்படுவதையும் இஸ்ரேல் உறுதி செய்துள்ளது.

லெபனானுடனான மேற்கு எல்லையில் 500 இஸ்ரேலிய இராணுவத்தினரும், 30 டாங்கிகளும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

1982 இல் மேற்கொள்ளப்பட்டது போல இஸ்ரேல் சூன்ய பிரதேசத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை,மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கை மூலம் ஹெஸ்புல்லா அமைப்பினை பலவீனப்படுத்தவும் இஸ்ரேல் விரும்புகின்றது.

வெள்ளிக்கிழமை சிரியாவுடனான பாதையில் உள்ள பாலமொன்றை இஸ்ரேல் தாக்கி சேதப்படுத்தியுள்ளது.

ஹெஸ்புல்லா அமைப்பினர் தொடர்ந்தும் இஸ்ரேலிய நகரங்கள் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளன.

தென் லெபனானில் சமீபத்தைய விமானத் தாக்குதலில் பலியான 72 பேரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, வெளிநாட்டவர்களை வெளியேற்றுவதற்காக பெய்ரூட் துறைமுகத்தில் பல கப்பல்கள் தரித்து நிற்கின்றன.

5000 அமெரிக்க பிரஜைகள் வெள்ளிக்கிழமை வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பிரான்ஸ், ஐக்கிய நாடுகள் செஞ்சிலுவைச் சங்கம் போன்றவை பாரிய மனிதாபிமான நெருக்கடி தோன்றும் அபாயம் குறித்து எச்சரித்துள்ளன

Dinakural

லொபனான் நாட்டவர் தங்கள் தலையில் தாமே மண்ணள்ளி போட்டுள்ளார்கள் சிரியா நாட்டு படைகளை எவளவு கட்டாயப்படுத்தி வெளியேற்றினார்கள் அதைப்பெரிய சந்தோசமாக கொண்டாடினார்கள் இப்ப அனுபவிக்கினம் நாம் இந்தியரை வரவேற்றது போல் சிரியா படைமட்டுமிருந்திருந்தால் இப்ப நடைப்பதே வேற!

ஓய் ளொள்ளா அமெரிக்கா தன்ர செல்லப்பிள்ளை இஸ்ரேலுக்கு உதவியை நிறுத்தும் வரை (அதாவது யாருக்கும் தெரியாமல் பின்புறத்தால் செய்யிற உதவியை ) ஓருத்தரும் இஸ்ரேலை புடுங்க ஏலாது !!

சிரியா படை யை தட்டிப்பரவிப்போடுவாங்கள்

சோனியளுக்கை ஒற்றுமை இல்லை சுத்தி வர இருக்கினம் உதவலாம் தானே

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உடனடி யுத்த நிறுத்தத்திற்கு கொண்டலீசா ரைஸ் அழைப்பு

இஸ்ரேலிற்கும் ஹெஸ்புல்லா அமைப்பிற்கும் இடையே உடனடி யுத்த நிறுத்தமொன்று ஏற்பட வேண்டுமென அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் கொண்டலீசா ரைஸ் வேண்டுகோள் விடுத்துள்ள அதேவேளை, ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவர் இஸ்ரேலிற்கு எதிராக தொடர்ந்தும் ரொக்கட் தாக்குதல்களை மேற்கொள்ளப் போவதாக வருவதாக தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் முழுமையான யுத்தமொன்று மூளுவதை தடுப்பதற்காக அப்பிராந்தியத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரைஸ், தென் லெபனானில் உடனடியாக யுத்த நிறுத்தம் ஏற்படுவதற்கான தேவையுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இதற்கான சூழ்நிலைகள் சரியாக அமைய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தநிறுத்தம் ஏற்படுவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துவது மிக முக்கியமானது. யுத்த நிறுத்தம் அவசரமானதென நாங்கள் கருதுகிறோம் என ரைஸ் தெரிவித்துள்ளார்.

யுத்தநிறுத்தம் நீடிக்கக் கூடிய சூழ்நிலைகளும் அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

லெபனானில் உருவாகியுள்ள மனிதாபிமான நெருக்கடிக்கு தீர்வுகாண விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய விமானங்கள் திங்கட்கிழமை தொடர்ந்தும் தென் லெபனான் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன.

எனினும், இஸ்ரேலின் இந்த தாக்குதல்கள் தமது ரொக்கட் தாக்குதல்களை நிறுத்தப்போவதில்லை என ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தென் லெபனானிலிருந்து ஹெஸ்புல்லா அமைப்பினர் அகற்றப்படுவதை உறுதி செய்யவும்,சிரியாவுடனான லெபனான் எல்லையை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவும் சர்வதேச படையணியொன்றிற்கு தற்காலிகமாக ஆதரவளிக்க தயார் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

கடந்த 12 நாட்களாக இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கை காரணமாக லெபனானில் 369 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று பிரான்சில் நடைபெற்ற சாவிலும் வாழ்வோம் நிகழ்வு இடத்துக்கு அருகே

லெபனான் மக்களின் போராட்டமும் இடம்பெற்றது.

lebanon1lt3.jpg

lebanon3hr2.jpg

lebanon4ps5.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.