Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'யாழ் கைதடிப்பகுதியில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் இருந்து 16 சிறுமியர்கள் காணவில்லை'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

60%20(11)(27).jpg

-எஸ்.கே.பிரசாத்
 
யாழ் கைதடிப்பகுதியில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் இருந்து 16 சிறுமியர்கள் காணாமல் போயுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று திங்கட்கிழமை காலை 11 மணி தொடக்கம் காணாமல் போயுள்ளதாக சிறுவர் இல்ல நிர்வாகம் மற்றும் சிறுவர் இல்லத்தில் தங்கியுள்ள பிள்ளைகள் சார்பாக இரண்டு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சாவகச்சேரி பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் பரிசோதகர் இராஜசிங்க தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாக கைதடியில் உள்ள தனியார் சிறுவர்  இல்லத்தில் 35 மேற்பட்ட சிறுவர்கள்  வாழ்ந்துவருவதாகவும் அண்மைக்காலமாக இவர்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் விரக்கதியடைந்த சிறுமி ஒருவர் நேற்று ஞாயிற்றிக்கிழமை தற்கொலை செய்ய முயற்சித்துள்ளதாக ஏனைய பெண் பிள்ளைகளால் இது தடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இது தொடர்பில் சிறுவர் இல்ல நிர்வாகத்திடம் கேட்டபோது அவ்வாறான சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றும் 10 பேர் மட்டுமே காணாமல் போயுள்ளதாகவும் இதில் ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு உத்தியோகஸ்த்தரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் வடமாகாண சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு உத்தியோகஸ்த்தரிடம் கேட்டபோது இது தொடர்பான தகவல்களை தன்னால் தரமுடியாது என்றும் அவ்வாறு தகவலை தான் வெளியில் சொன்னால் தனது பதவிக்கு ஆபத்து ஏற்படும் என்றும் எற்கனவே நான்கு வருடங்களில் 10 மேற்பட்ட இடமாற்றங்களைப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/63974----16--.html

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சண்டை நடக்கிற நேரத்தில எண்டா 50 மீட்டர் தூரத்தில ரெண்டு பக்கமும் ராணுவ காவலரண் .... எண்டு எழுதுவாங்க ...... கப்பெண்டு பிடிச்சிடலாம்.....

ஒட்டுக்குழு எண்டு கூட எழுத காணேல்ல .... மூண்டாம் தரப்பு பயிற்சிகாக ....புடிச்சதாயும் எழுதி காணேல்ல. ..

 

ம் .....ஒரே மர்மமா இருக்கு...

சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு உத்தியோகஸ்த்தரிட்ட தான் .... அவர விசாரிச்சா .... விடை கிடைச்சிடும்....

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். கைதடி சிறுவர் இல்லத்திலிருந்து காணாமற்போன சிறுமிகளில் மூவர் வைத்தியசாலையில்

 

student_tamils.jpg

யாழ். கைதடிப் பகுதியில் உள்ள சிறுவர் இல்லத்திலிருந்து காணாமற்போன சிறுமிகளில் மூவர் யாழ். போதனா வைத்தியசாலையில் உள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். யாழ். கைதடிப் பகுதியில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் இருந்து 11 சிறுமியர்கள் காணாமல் போயுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

நேற்று (15) காலையிலிருந்து சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக சிறுவர் இல்ல நிர்வாகம் சாவகச்சேரி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் இவர்களில் மூவர் யாழ். போதனா வைத்தியசாலையில் உள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் சாவகச்சேரி பொலிஸார்  தெரிவித்தனர்.

கைதடியில் உள்ள இந்த தனியார் சிறுவர் இல்லத்தில் 35 மேற்பட்ட சிறுவர்கள் வாழ்ந்து வருவதாகவும் இவர்கள் அண்மைக் காலமாக பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்காரணமாகவே இவர்கள் தப்பிச் சென்றுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் சிறுமிகள் காணாமற் போனமைக்கான காரணம் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

 

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=20287:2013-04-16-08-25-59&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் போன சிறுமிகளில் எழுவர் கைது

 

TM60(83).jpg

-சுமித்தி தங்கராசா ,எஸ்.கே.பிரசாத்

யாழ். கைதடி பகுதியில் உள்ள சிறுவர் இல்லத்திலிருந்து காணாமல் போன சிறுவர்களில் கைது செய்யப்பட்ட சிறுமிகளில் ஏழுபேரும் வைத்திய பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் செ. ஸ்ரீபவானந்தராஜா இன்று தெரிவித்தார்.

குறித்த சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த 16 சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டின் பிரகாரம் சிறுமி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சிறுமியின் உதவியுடன் ஏனைய சிறுமிகள் பிடிக்கப்பட்டு நேற்று இரவு சாவகச்சேரி பொலிஸாரினால் யாழ். போதனா வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைக்காக அனுமதிக்கபப்ட்டுள்ளனர்.

இவ்விடயம் சம்பந்தமாக யாழ். போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியிடம் வினவிய போது,

'பல்வேறு பொலிஸ் நிலையங்களிலும் இருந்து சிறுமிகள் அனுமதிக்கப்படவுள்ளதாகவும் தற்போது ஏழு சிறுமிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சில சிறுமிகள் தாங்களாகவே வைத்தியசாலையில் வந்திருப்பதாகவும் குறித்த சிறுமிகளிடம் வைத்திய பரிசோதனை மேற்கொள்ளப்படவிலை என்றும் இன்று மாலைக்குள் சிறுமிகள் மீதான வைத்திய பரிசோதனை மேற்கொள்ளவுள்ளது'  என்றார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/64002--7-.html

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கைதடி சிறுவர் இல்ல விவகாரம்: முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் (Exclusive)

 

கைதடியில் அமைந்துள்ள இரட்சண்யசேனை (Salvation Army House - Kaithady) இல்லத்தில் இருந்து சிறுமிகள் சிலர் காணாமல் போனமை தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக யாழ். போதனா வைத்தியசாலைப் பிரதிப் பணிப்பாளர் செ. ஸ்ரீபவானந்தராஜாவிடம் தொலைபேசி ஊடாக வினவினோம். 

 

கைதடியில் அமைந்துள்ள இரட்சண்யசேனை (Salvation Army House - Kaithady) இல்லத்தில் இருந்து சிறுமிகள் சிலர் காணாமல் போனமை தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக யாழ். போதனா வைத்தியசாலைப் பிரதிப் பணிப்பாளர் செ. ஸ்ரீபவானந்தராஜாவிடம் தொலைபேசி ஊடாக வினாவினோம்."யாழ். கைதடி பகுதியில் உள்ள இரட்சண்யசேனை இல்லத்திலில் இருந்து காணாமல் போன சிறுவர்களில் கைது செய்யப்பட்ட சிறுமிகள் ஏழு பேரை நேற்று இரவு (09.05 அளவில்) யாழ்ப்பாணப் பொலிஸார் வைத்திய பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். மேலும் இன்றைய தினம் இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சிறுவர் நீதிமன்ற நீதவான் குறித்த சிறுமியர்களை திருநெல்வேலி - கோண்டாவில் பகுதியில் அமைந்துள்ள கருணை இல்லத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்" எனக் கூறினார்.

அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட சிறுமியர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டனவா? என வினவியபோது, "அவ்விடயம் நீதிமன்றத்துடன் தொடர்புபட்டது. அதன் காரணத்தால் தற்போது அது தொடர்பாக எதுவும் கூற முடியாதுள்ளது. இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமியர் ஏழு பேரும் 10 தொடக்கம் 20 வயதிற்கு உட்பட்டவர்கள்" என அவர் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், "இணையத்தளங்கள் சிலவற்றில் நான் கருத்துத் தெரிவித்ததாகக் கூறப்படும் செய்தியில் எவ்விதமான உண்மையும் இல்லை. நான் இப்பொழுதுதான் முதன் முதலாக இவ்விடயம் தொடர்பாக வீரகேசரிக்குக் கருத்துத் தெரிவித்துள்ளேன்" எனக் கூறினார்.

 

உமாச்சந்திர பிராகாஷ்

 

 

http://www.virakesari.lk/article/local.php?vid=4005

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கைதடி சிறுவர் பற்றி  பத்தாண்டுகளுக்கு முன்பே நான் அறிந்திருந்தேன்

மேலிடத்துக்கு அறிவித்திருந்தேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

sri_gif22.gif

-சுமித்தி தங்கராசா

யாழ். கைதடி பகுதியில் உள்ள சிறுவர் இல்லத்திலிருந்து காணாமல் போன சிறுமிகளில்  கைது செய்யப்பட்ட ஏழு சிறுமிகள் தொடர்பிலான வைத்திய அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். என வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் செ. ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்தார்.

அந்த ஏழு சிறுமிகளும் வைத்திய பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் சொன்னார்.

அந்த சிறுமிகள் தொடர்பிலான வைத்திய அறிக்கை சட்ட வைத்திய அதிகாரியினால் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

வைத்திய பரிசோதனை அறிக்கை நீதிமன்றிற்கு சமர்ப்பிக்கும் வரை சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்களா?  இல்லையா? என்பது பற்றிய கருத்துக்கள் வெளியிட முடியாதென்றும் அவர் மேலும் கூறினார்.

அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரசாங்க அதிபர் பணிப்பு

இதேவேளை, கைது செய்யப்பட்ட சிறுமிகள் தொடர்பான  அறிக்கையை சமர்ப்பிக்குமாறு யாழ். மாவட்ட சிறுவர், அபிவிருத்தி குழு உத்தியோகத்தர்களுக்கு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் பணித்துள்ளார்.

இச்சிறுவர்களின் மீது துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது. அவ்வாறு துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானவர்கள் தொடர்பிலான அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறு பணித்துள்ளார்.

இவ்வாறு சிறுவர் இல்லங்களில் தங்கியிருக்கும் சிறுவர்களுக்கு சிறுவர், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சிறந்த பாதுகாப்பு வழங்க வேண்டும், துஷ்பிரயோகம் மேற்கொள்பவர்கள் மீதான சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அத்துடன், இச்சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுவர்கள் மீதானதும், அதிகாரிகள் மீதும் உரிய விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் பொலிஸாரிடம் யாழ். அரச அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/64056-2013-04-16-13-20-08.html

 

இது போன்ற அமைப்புக்களால் நடாத்தப்படும் இல்லங்களை நிர்வகிப்பவர்கள் பெருபாலும் தீய நோக்கங்களின் அடிப்படையில் செயற்படுகின்றனர். அவர்கள் செய்யும் சமூகவிரோத செயல்களுக்காக அவர்களுக்கு கணிசமான பணம் வெளிநாட்டு மத நிறுவனங்களில் இருந்து வருகிறது.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.கைதடி சிறுவர் இல்ல பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்

 

-சுமித்தி தங்கராசா

யாழ். கைதடி சிறுவர் இல்ல பொறுப்பாளரை 14 நாட்களுக்கு விளக்க மறியலில் வைக்குமாறு யாழ். சிறுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைதடி சிறுவர் இல்ல பொறுப்பதிகாரி குணசீலனையே எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சிறுவர் நீதிமன்ற நீதிபதி கருப்பையா ஜீவராணி உத்தரவிட்டுள்ளார்.

யாழ். கைதடி சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுவர்கள் 16 பேரில் 12 பேரை காணவில்லை என்று சிறுவர் இல்லத்தினரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடந்த திங்கட்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டையடுத்து 12 சிறுவர்கள் கைது செய்யப்பட்ட யாழ். போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியிடம் வைத்திய பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். அத்துடன் சிறுவர் இல்ல பொறுப்பதிகாரியும் கைது செய்யப்பட்டார். அதன் பின்பு, யாழ். சிறுவர், பெண்கள் பிரிவு பொலிஸாரினால் யாழ். சிறுவர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.


இதனையடுத்தே சிறுவர் இல்ல பொறுப்பாளரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டதாக சாவகச்சேரி பொலிஸார் இன்று தெரிவித்தனர். அத்துடன் கைது செய்யப்பட்ட மற்றும் சிறுவர் இல்லத்தில் உள்ள சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனரா? என்பது தொடர்பிலான மருத்துவ சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/64094-2013-04-17-06-15-27.html

 

 

 

கைதடி சிறுவர் இல்ல பொறுப்பதிகாரி குணசீலன் என்பவரும் கத்துறுசிங்காவின் தப்பியோடிய ஆமிக்காரின் நிரலில் உள்ளவரா?

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகத்துடனான முரண்பாடுகளினாலேயே கைதடி சிறுவர் இல்லத்திலிருந்து சிறுமிகள் வெளியேறினார்கள் - யாழ். அரசாங்க அதிபர் 

 

S._Arumainayaham-seithy-150.jpg

யாழ்ப்பாணம் கைதடி தனியார் சிறுவர் பாதுகாப்பு இல்ல நிர்வாக முகாமையாளருக்கும் அந்த இல்லத்தில் இருந்த சிறுமிகளுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடுகளினாலேயே சிறுமிகள் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். அனைத்து சிறுமியருக்கும் தற்போது பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கைதடி இரட்சண்யசேனை இல்லத்திலிருந்து 12 சிறுமியர் வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இவர்கள் மீது பாலியல் ரீதியான குற்றங்கள் இடம்பெற்றிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டது. வெளியேறிய சிறுவர்கள் உடனடியாக மீட்கப்பட்டதுடன் சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த ஏனைய சிறுவர்களுடன் வேறொரு இல்லத்துக்கு மாற்றப்பட்டனர். இது தொடர்பாக நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் புதிய நிர்வாகத்தின் கீழ் அதே சிறுவர் இல்லம் மீண்டும் இயங்குவதற்கு பணிப்புரை வழங்கப்பட்டது. இந்நிலையில் பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

  

இவ்விடயம் தொடர்பாக யாழ். மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுவினரிடம் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பணித்திருந்தேன். அவர்கள் என்னிடம் தெரிவித்ததாவது "நீதிமன்றத்தினால் அனுதிக்கப்பட்டிருந்த 16 சிறுமிகளுமே சிறுவர் இல்லத்திலிருந்து வெளியேறுவதற்கு முயற்சித்துள்ளனர். மீட்கப்பட்ட சிறுமியரை மருத்துவப் பரிசோதனை செய்து அவ்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது நாம் அவர்களுக்கு முழுப் பாதுகாப்பு வழங்கியுள்ளோம். குறித்த சிறுவர் இல்லத்தை பெண்களின் முகாமைத்துவத்தின் கீழ் கொண்டுவரவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். அதேவேளை யாழ். மாவட்டத்தில் இயங்கும் அனைத்து சிறுவர் இல்லங்களையும் கூட்டுக் குழுவின் மூலமாக கண்காணிக்கவுள்ளோம்" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=80710&category=TamilNews&language=tamil

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.