Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரத் பொன்சேகா மீது தாக்குதல்: உயிருடன் இருக்கிறார் தற்கொலைதா

Featured Replies

சரத் பொன்சேகா மீது தாக்குதல்: உயிருடன் இருக்கிறார் தற்கொலைதாரி என அறிவிக்கப்பட்ட "மஞ்சுளாதேவி"

[வெள்ளிக்கிழமை, 14 யூலை 2006, 17:07 ஈழம்] [கொழும்பு நிருபர்]

சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியவர் என அடையாளம் காணப்பட்டிருந்த கணபதிப்பிள்ளை மஞ்சுளாதேவி என்பவர் உயிருடன் இருப்பதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது என்று சிறிலங்காவின் இரகசியப் பிரிவு வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

முதலில் ரம்புக்கனையிலும் பின்னர் வெலிவேரியவிலும் வசித்து வந்த தற்கொலைதாரி மஞ்சுளாதேவி என அடையாளம் காணப்பட்டதுடன் அவரின் அடையாள அட்டையையும் இரகசியப் பிரிவினர் கண்டுபிடித்திருந்ததாக கூறப்பட்டது.

பின்னர் மஞ்சுளாதேவி சிறு வயதில் தங்கியிருந்ததாகக் கூறப்படும் அநுராதபுரம் புத்தளம் வீதியிலிருக்கும் வீட்டிற்குச் சென்ற இரகசியப் பிரிவினர் மஞ்சுளாதேவியின் பெற்றோரிடம் அவரின் புகைப்படத்தைக் காண்பித்து விவரங்களைக் கேட்டபோது புகைப்படத்தில் இருப்பது தங்களின் மகள் அல்ல என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

அந்தப் பெயரைக் கொண்ட தங்களின் மகள் கிளிநொச்சியில் வாழ்ந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர் 6 மாதங்களுக்கு முன்னரும் கிளிநொச்சியிலிருந்து தங்களின் வீட்டிற்கு வந்து சென்றதாகவும் அந்தப் பெற்றோர் கூறியதாக இரகசியப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

அவர் அடிக்கடி தங்களுடன் தொலைபேசியில் உரையாடுவதாகவும் இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தின் பின்னரும் அவர் தங்களுடன் தொடர்பு கொண்டதாகவும் அந்தப் பெற்றோர் கூறியுள்ளனர்.

இதற்கமைய மஞ்சுளாதேவி என்பவர் உயிருடன் இருப்பது உறுதியாகியுள்ளது. தற்கொலைதாரியின் உண்மையான பெயர் மஞ்சுளாதேவி இல்லை என்றும் அந்தப் பெயரைப் பயன்படுத்தி போலி அடையாள அட்டை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் இரகசியப் பிரிவினர் சந்தேகிக்கின்றனர்.

இந்த கண்டுபிடிப்பினையடுத்து இராணுவத் தலைமையக குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகள் வேறு பக்கம் திரும்பியிருப்பதாக இரகசியப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

தற்கொலைதாரிக்கு மஞ்சுளாதேவி என்ற பெயரில் அடையாள அட்டையை தயாரித்து வழங்கிய ரம்புக்கனையைச் சேர்ந்த சிங்கள கிராம அலுவலகரும் இரகசியப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிங்களப் பெண்ணை மணமுடித்துள்ள வெலிவேரியவைச் சேர்ந்த தமிழரே 5,000 ரூபாவைக் கொடுத்து தற்கொலைதாரிக்கு இந்த அடையாள அட்டையைத் தயாரித்துக் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய தாக்குதலை நடத்திய தற்கொலைதாரி யாரென்பதைக் கண்டறிவதற்காக இரகசியப் பிரிவினர் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன

http://www.eelampage.com/?cn=27534

  • தொடங்கியவர்

சரத் பொன்சேகா மீது தாக்குதல்: உயிருடன் இருக்கிறார் தற்கொலைதாரி என அறிவிக்கப்பட்ட "மஞ்சுளாதேவி"

என்னப்பா இது பொன்சேகா மீது தாக்குதல் பெண் கர்ப்பம் எண்டு எல்லாம் கண்டு பிடிக்கும் வையின்(france wijnபாலசுப்பிரமணியமும் யார் அந்த பெண் என்று கண்டு பிடித்து கொடுக்க மாட்டாவோ/? :!: :?: :idea:

பாவம் சரத்பொன்சேகா கொலைமுயற்சியை கண்டுபிடிக்கமுதல், சிறீலங்காவின் இரகசியபொலீசார் கனபேர் விசர்ஆஸ்கத்திரியில் அட்மிட் ஆகப்போகினம். :P

அமெரிக்க, இங்கிலாந்து, இந்திய அதிகாரிகளிட்டை பயிற்சி பெற்றவை என்றா சும்மாவா?? :D:lol:

கொஞ்சக்காலத்தில் இது தற்கொலைத் தாக்குதலே இல்லை. கைக்குண்டு எறிந்தே கொல்லப்பட்டார் என்றும் செய்தி வரும். எதற்கும் நாங்கள் தயாராக இருப்போம். சிரிக்கத்தான். :lol::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.