Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் புத்தாண்டு என்றால் என்ன?

Featured Replies

 

06-1365245180-samudrika-pattu2-6001-300xதமிழ் மாதங்களில் முத்திரை பதிக்கும் மாதம் சித்திரை என்பார்கள். இந்த சித்திரை பிறக்கும் தினத்தையே தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம்.
ஆங்கிலத்தில் ஜனவரி, பிப்ரவரி என்று 12 மாதங்கள் உள்ளன. அதே போன்று சித்திரை, வைகாசி என்று 12 தமிழ் மாதங்கள் உள்ளன.
சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டே தமிழ் மாதங்கள் கணிக்கப்படுகின்றன. அதனால் தமிழ் மாதங்கள் சூரிய மாதங்கள் என்றும் அழைக்கப்படுகிறது.
ராசி சக்கரத்தை பொருத்த வரை சூரியன் மேஷ ராசிக்குள் நுழைந்து வெளியேறும் காலம் சித்திரை மாதமாகும். 31 நாட்களை கொண்ட சித்திரை மாதம் ஆங்கில மாதத்தில் ஏப்ரல் 14ம் தேதி துவங்கி மே மாதம் 14ம் தேதி வரை உள்ள நாட்களாகும்.
சித்திரை தமிழ் மாதங்களில் முதல் மாதம் என்பதால் அம்மாதப் பிறப்பை தமிழர் புத்தாண்டு என்று கொண்டாடுகிறோம். தமிழ் புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவில் கோவில்களில் விசேஷ பூஜைகள் செய்யப்படும். மக்கள் இந்த ஆண்டு இனிய ஆண்டாக அமைய வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள்.
புத்தாண்டையொன்டி மக்கள் வீட்டை சுத்தம் செய்து மாவிலை தோரணம் கட்டி, புத்தாடை அணிந்து சாமியை கும்பிட்டு மகிழ்வர். அன்றைய தினம் உணவில் வேப்பம்பூவை சேர்த்துக் கொள்வார்கள்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதுக்கும் திரிசா படம் வேணுமாக்கும்.

 

அன்பண்ணா இப்ப போன 14ந்திகதி பிறந்த ஆண்டு தமிழுக்கு எத்தினையாம் ஆண்டு?

 

  • தொடங்கியவர்

அப்ப மயூரன் திருவள்ளுவருக்கு முன்னம் தமிழர் வாழவில்லையா ? கேள்வி எப்பிடியும் கேட்கலாம்..

 

கிமு. கிபி மாதிரி தி-மு தி.பி என்று சொல்லி சொல்லலாம் இதை எப்பிடி சொல்லலாம்???

 

  • தொடங்கியவர்

காலம்காலமா இருக்கும் சித்திரப் தமிழ்ப் புத்தாண்டை இடையில் ஆரியக் கதை சொல்லி தமிழர் திருநாளாம் தைபொங்கல் விழாவை புத்தாண்டு என்று கூரலமொ? தி.மு தி.பி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை ஆனால் தமிழர் புத்தாண்டு தான் பிரச்னை

 

ஏன் நீங்கள் தொல் காப்பியர் காலத்தில் இருந்து என்ன மாட்டீர்களோ?

 

 

பண்டைக்காலத்தில் பாண்டிய நாட்டில் இருந்து தமிழ் வளர்த்ததாகக் கருதப்படும் மூன்று தமிழ்ச் சங்கங்களில் இடைச் சங்க காலத்தின்[5] இறுதியில் இந் நூல் எழுதப்பட்டதாகச் சிலர் கருதுகிறார்கள். இதன் அடிப்படையிலும், இறையனார் களவியல் உரை என்னும் நூலில் காணப்படும் மேற்படி சங்கங்கள் செயற்பட்ட கால அளவுகளை அடிப்படையாகக் கொண்டும், தொல்காப்பியம் கி.மு 5000 ஆண்டளவில் ஆக்கப்பட்டது என்று இவர்கள் கணித்தார்கள். எனினும் தற்காலத்தில் பெரும்பாலான ஆய்வாளர்களால் இது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தெ. பொ. மீனாட்சிசுந்தரம், இலக்குவனார் போன்றவர்கள் இந்நூல் கி.மு 700 ஆம் ஆண்டளவில் ஆக்கப்பட்டதாகக் கருதினார்கள். வேறு சிலர் இதன் காலத்தை கி.மு 500-க்குச் சிறிது முன்பின்னாகக் கணிப்பிட்டார்கள். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆராய்ச்சித் துறைத் தலைவராகப் பணியாற்றிய எஸ். வையாபுரிப் பிள்ளையும் வேறு சில வெளிநாட்டு அறிஞர்களும் தொல்காப்பியத்தின் காலத்தை மேலும் பின் தள்ளி கி.பி 3 ஆம் நூற்றாண்டு என்றனர். தொல்காப்பியம் பல ஆசிரியர்கள் கொண்டது என்போரின் கருத்தோ, கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பெற்று கி.பி. 5-ஆம் நூற்றாண்டு வரை இந்நூல் எழுதப்பெற்றது என்பதாகும். எனினும், இது கிறிஸ்துவுக்கு முற்பட்டது என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாகும். .

 
370px-Palm_leaf_-_Tamil_Tholkaapiam.JPG
magnify-clip.png
மூல ஓலையுடனான தொல்காப்பிய அமைப்பு

தொல்காப்பியம் 1602 பாக்களால் ஆனது. இதன் உள்ளடக்கம், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது எழுத்ததிகாரம் தனிமொழியிலும், புணர்மொழியிலும் உள்ள எழுத்துகளைப் பற்றிக் கூறுகிறது. இரண்டாவது சொல்லதிகாரம் மொழித்தொடர் (syntax) அமையும் பாங்கைச் சொல்கிறது. மூன்றாவது பொருளதிகாரம் எழுதப்படும் நூலிலுள்ள வாழ்க்கைப் பொருளையும், அப்பொருள் சொல்லப்பட்டுள்ள யாப்பு, அணி முதலான பாங்குகளையும், தமிழ்மரபையும் விளக்குகிறது.

 

அகத்தியம், மிகப் பழைமையான தமிழ் இலக்கண நூல் எனக் கருத்தப்படுகின்றது. அகத்தியர் என்பவர் இயற்றிய நூலாதலால் இது அகத்தியம் என்று வழங்கப்படுகின்றது. முதல், இடை, கடை என வரையறுக்கப்படும் முச் சங்க காலங்களிலும் இதுவே, தமிழ் இலக்கணத்துக்கான, முதல் நூலாகத் திகழ்ந்தது என்று ஆய்வாளர் கருதுகின்றனர். இது, பிற்கால இலக்கண நூல்களைப்போல், இயற்றமிழுக்கு மட்டுமன்றி, இசை, நாடகம் ஆகிய முத்தமிழுக்கும் இலக்கணம் வகுத்ததாக நம்பப்படுகின்றது. தற்காலத்தில் அகத்தியத்தின் சில பகுதிகள் மட்டுமே பல்வேறு நூல்களில் இருந்து கிடைத்துள்ளன[மேற்கோள் தேவை]. இப்பொழுது நமக்குக் கிடைக்கும் மிகப் பழைய தமிழ் நூலான தொல்காப்பியத்துக்கு மூலநூலும் இதுவே ஆகும்.

  • அகத்தியர் இயற்றிய நூல் அகத்தியம். முச்சங்க வரலாற்றில் வரும் நூல்

 

மு. வரதராசனின் தமிழ் இலக்கியம் என்னும் நூலில் தரப்பட்டிருக்கும் தமிழ் இலக்கிய கால வகைப்பாட்டை அடிப்படையாகக் கொண்ட வகைப்பாடு பின்வருமாறு.

  • பழங்காலம்
  • இடைக்காலம்
  • இக்காலம்
  • பத்தொன்பதாம் நூற்றாண்டு
  • இருபதாம் நூற்றாண்டு
  • இருபத்தோராம் நூற்றாண்டு

 

 

 

நன்றி

 

விக்கிப்பீடியா

 

அன்பண்ணா திருவள்ளுவர் ஆண்டு என்ற குறுகிய வட்டத்துக்குள் தமிழரின் ஆண்டுக்கணக்கை வரையறை செய்வதில் எனக்கும் உடன்பாடு இல்லை. ஆனால் தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் ஆண்டுமுறைகளுள் திருவள்ளுவர் ஆண்டு ஏற்புடையதாய் உள்ளது. தொல்காப்பியத்தின் வயதை சரிவர நிர்ணயிக்க முடியாத நிலையில் அதனை வைத்து ஆண்டை நிர்ணயிப்பது சற்றுச்சிரமமே??

ஆனால் இது எத்தனையாம் ஆண்டு என்று தெரியாத ஒரு ஆண்டை எவ்வகையில் ஏற்றுக்கொள்வது  என்றுதான் புரியவில்லை.

மாறாக அறுபது பெயர்களைக் கொண்ட ஒரு சுழற்சி ஆண்டாகவே இது பார்க்கப்படுகின்றது. அந்தப் பெயர்களும் எதுவும் தமிழில் இல்லை. 

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழின் கால அளவுகளில் கிழமை பெயர் 7, மாதம் பெயர் 12 என்று இவை எப்படி மீண்டும் மீண்டும் சுழன்று வருகின்றனவோ அதுபோல் வருடங்களும் 60 முறைக்கு ஒரு தரம் அதே பெயருடன் மீண்டும் வரும். பழைய காலத்தில் நிகழ்ந்தவற்றைப் பற்றி குறிப்பிடும்போது "இற்றைக்கு 3000 வருடங்களுக்கு முன்னர்" என்ற பதத்தை பயன்படுத்துவர். இற்றைக்கு 2000 வருடங்களுக்கு முன்னர் இஜேசு பிறந்தார் என்றுதான் சொல்வோமேயல்லாது இஜேசு 0-ஆம் பிறந்தார் என்று சொல்வதில்லை. இப்போது நடப்பில் இருப்பது விஜய வருடம்.

Edited by vanangaamudi

வணங்காமுடி அணணை ஜேசு சுமார் 2000 வருடங்களுக்கு முன் பிறந்தார் எண்டு சொல்லுறம்தானே? அந்த 2000 ஆண்டுக்கு முன் என்று சொன்னால் அது அந்தக்காலத்தைத்தான் குறிக்கும். சுழற்சிமுறையிலை 2000 ஆண்டு திரும்ப வராது அதனால் கணக்கிடுவதில் பிரச்சனையில்லை. ஆனால் தமிழ் ஆண்டு என்று முன்வைக்கப்டும் இந்த ஆண்டு மீள வரும்போது 2000 ஆண்டுகளில் ஷசமார் 33 முதல் 34 விஜய வருடம் வந்திருக்கும். ஒருவரின் பிறப்பை எந்த விஜயவருடமென்று எப்படி கூறுவது. ஒரு வரலாற்று சம்பவத்தை எந்த விஜயவருடம் என்று எப்படி அறுதியிடுவீர்கள்.  (இந்த ஆண்டுகளின் பெயர் தமிழ் என்றால் இப்போது நாம் பேசும் மொழி வேறா)

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.