Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'இலங்கையின் மீன் ஏற்றுமதிக்கு எதிராக தடை விதிக்க தீர்மானம்'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

EU_Flag_gif67.gif

இலங்கை கடல் தொழிலாளர்களால் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படும் சட்டவிரோதமான கட்டுப்பாடில்லாத களவான மீன்பிடித்தல் காரணமாக இலங்கையின் மீன் ஏற்றுமதிக்கு எதிராக தடைகளை விதிப்பது தொடர்பாக ஐரோப்பிய நாடாளுமன்றம் யூன் 26 இல் தீர்மானிக்கவுள்ளது என அதிகாரிகள் கூறினர்.

ஆயினும், இந்த பிரச்சினைகள் தொடர்பாக பல நல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதனால் மீன்பிடி அமைச்சு நல்ல முடிவை எதிர்பார்த்துள்ளது என்று மீன்பிடித்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

சட்டவிரோதமான, கட்டுப்பாடில்லாத வகையில் களவாக மீன்பிடித்தல் தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றியம் கடந்த வருடம் இலங்கைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்ததன் பின்னர்  இவற்றை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்ததாக மீன்பிடித்தொழில் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

மீன் பிடிப்பதற்காக சர்வதேச கடலில் களவாக நுழையும் 11 இலங்கை படகுகள் பற்றி ஐரோப்பிய ஒன்றியம் முறையிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சர்வதேச கடலில் மீன் பிடித்தலுக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டங்கள் திருத்தப்படவுள்ளன என்றும் அவர் கூறினார்.

22 பில்லியன் பெறுமதியான மீன் உற்பத்திகளை ஆண்டுதோறும் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையிலிருந்து கொள்வனவு செய்துவருகின்றது.

சட்டவிரோதமான, கட்டுப்பாட்டில்லாத களவான மீன்பிடித்தல், மீன் வளத்தை அருகச்செய்கின்றது. கடல்வாழ் உயிரினங்களின் வாழ்விடத்தை அழிக்கின்றது. போட்டித்தன்மையை திரிபுபடுத்துகின்றது. அத்துடன் குறிப்பாக அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளிலுள்ள கரையோர சமூகங்களின் வாழ்வாதாரத்தை பலவீனப்படுத்துகின்றது என்றும் அவர் சொன்னார்.

சட்டவிரோத மீன்பிடியினால் இலாபமடைய காரணமாகவுள்ள சட்டத்தின் குறைபாடுகளை நீக்க ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாக உழைக்கின்றது என்றும் அவர் கூறினார். 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/65474-2013-04-29-15-27-06.html

 

  • கருத்துக்கள உறவுகள்
ஐரோப்பிய நாடுகளுக்கு இலங்கை மீன்களை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கப்படக் கூடிய சாத்தியம்
 
 

 

 

 

ஐரோப்பிய நாடுகளுக்கு இலங்கை மீன்களை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஜூன் மாதம் 26ம் திகதி இது தொடர்பிலான தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இலங்கை மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவதாகவும், முறைகேடான வகையில் மீன்பிடியில் ஈடுபடுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.  சர்வதேச கடற்பரப்பில் சட்டவிரோதமாக இலங்கை மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதாகவும், இவ்வாறான ஓர் பின்னணியில் இலங்கை மீன்வகைகளை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதனை அனுமதிக்க முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,
 
சர்வதேச மீன்பிடிச் சட்டங்;களுக்கு அமைவாக இலங்கையில் மீன்பிடிக்கப்படுவதாக இலங்கை மீன்பிடி வள அமைச்சு தெரிவித்துள்ளது.இது தொடர்பிலான விசேட அறிக்கையொன்று அண்மையில் பிரசல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
 
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கபபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் இலங்கை ஈடுவதாக ஐரோப்பிய ஒன்றியம் கடந்த ஆண்டே எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
ஐரோப்பிய நாடுகளுக்கு மீன்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் வருடாந்தம் 2.2 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

 http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/91245/language/ta-IN/article.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் பொருளாதார அழிவே இனி எமக்கான மீட்சி 

zimbabwe-100-billion-dollars.jpg

 

இலங்கையின் பொருளாதார அழிவே இனி எமக்கான மீட்சி 

 

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி எமக்கு விடிவாகாது. இலங்கையின் இன்னமும் எமது சகோதரர்கள் இருக்கின்றார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள் நண்பரே. இலங்கை மீது எந்தவித பொருளாதரா அழுத்தங்களும் இல்லாதபோதே எமது மக்களுக்கு தாம் உண்டு மீதமானதை அதையும் கூடிய விலைக்கு விற்றார்கள் இந்நிலையில் பொருளாதார தடைகள் இலங்கை மீது விதிக்கப்பட்டால் எமது மக்களே அல்லல்படுவர். கிடைத்துவந்த சொற்ப உணவுகள் கூட கிடைக்காது எமது உறவுகளுக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி எமக்கு விடிவாகாது. இலங்கையின் இன்னமும் எமது சகோதரர்கள் இருக்கின்றார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள் நண்பரே. இலங்கை மீது எந்தவித பொருளாதரா அழுத்தங்களும் இல்லாதபோதே எமது மக்களுக்கு தாம் உண்டு மீதமானதை அதையும் கூடிய விலைக்கு விற்றார்கள் இந்நிலையில் பொருளாதார தடைகள் இலங்கை மீது விதிக்கப்பட்டால் எமது மக்களே அல்லல்படுவர். கிடைத்துவந்த சொற்ப உணவுகள் கூட கிடைக்காது எமது உறவுகளுக்கு. 

எமது மக்கள் பார்க்காத பொருளாதாரதடையா........... சிங்களவர்கள் அப்படியா???????????

படிக்கப்போனால் வெட்டுபுள்ளி உழைக்கப்போனால் திரத்தியடிக்கப்படல் நிலமில்லை கடலில்லை தமிழனுக்கு

 

Edited by purmaal

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.