Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத்தின் ஊன்றுகோல்

Featured Replies

இராணுவத்தின் ஊன்றுகோல்

-ஞாபகன்

Friday, 21 July 2006

சிறிலங்கா இராணுவம் தனது பலம்சார் வல்லமை பற்றிய ஐயங்கள் பலவற்றோடு இருக்கின்றது. தனித்து சிறிலங்கா இராணுவம் என்ற கட்டமைப்புக்குள் இருக்கும் முப்படைகளோடும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முடக்கி, முறியடித்துவிட இயலாது என்று நம்புகின்றது. தென்னிலங்கை மக்களிடம் தனது வல்லமை பற்றி என்னதான் பிரதாபம் பேசமுற்பட்டாலும் அதன் உளவியல் சாதகமற்றே இருக்கின்றது.

இதனை ஆணித்தரமாக கூறுவதற்கு ஒட்டுப்படைகள் என்று தமிழர்கள் கூறுகின்ற துணை ஆயுதக்குழுக்களை கட்டிஅணைத்து வைத்திருக்கின்றமையை நல்லவலுவான ஆதாரமாக காட்டலாம். தமிழ் மக்களின் படைபலத்தை கட்புலரீதியாக துண்டுபட்டிருப்பதாக, பிரிவுபட்டிருப்பதாக காட்டுவதற்கும் அதனை தனது தரைப் படையோடு பக்கத்துணையாக வைத்திருப்பதற்கும் இன்றுவரை முயன்று வருகின்றது.

புரிந்துணர்வு உடன்பாட்டுக்கு வெளியே சிறிலங்கா அரசும் படைகளும் ஒட்டுக்குழுக்களை வைத்துக் கையாள்வதற்கு எந்த தடைகளும் இல்லை. ஆனால், புரிந்துணர்வு உடன்படிக்கை அதனை பலமாக நிராகரிக்கும் - அதனை உடன்படிக்கையை மீறும் செயலாக விபரிக்கும் சரத்துக்களைக் கொண்டது.

இதன்காரணமாக ஒட்டுப்படைகளை தான் கையாளும் விடயத்தை பலமாக திரும்பத்திரும்ப மறுக்கவேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் இருக்கின்றது. சிறிலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதிக்குள் ஒட்டுப்படைகளின் தளங்கள் இருப்பதை சர்வதேச பத்திரிகையாளர்கள், போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் என்று பல தரப்பினரும் சான்றுகளோடு நிறுவிய பின்னரும் மேற்சொன்ன காரணங்களுக்காக அவற்றை மறுத்து வந்தது.

அதேவேளை விடுதலைப்புலிகள் சிறிலங்கா இராணுவத்தின் ஒட்டுக்குழுக்கள் என குற்றம்சாட்டும் குழுக்களை தனித்து விடுதலைப்புலிகளுக்கு எதிராக இயங்குபவைகள் என்று சித்திரிக்க பாடுபட்டு வருகின்றது. இதன்மூலம் போர் நிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கை அமுலில் இருக்கும்போதே அவர்கள் மீதான தாக்குதல்களையும் நடத்துவதை சாத்தியமாக்கி இருக்கின்றது.

உடன்படிக்கை நடைமுறையில் இருக்கும் போதே பிரதானமாக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் அதற்கு அடுத்த கட்டமாக வடபகுதியிலும் விடுதலைப்புலிகளை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தியது. இதனை படையினருடன் சேர்ந்து இயங்கும் ஒட்டுக்குழுக்களே ஆரம்பத்தில் நடத்தி வந்தன.

விடுதலைப்புலிகள் முதற்கட்ட ஜெனீவா பேச்சுக்களில் தாக்குதல்களை நடத்தும் ஒட்டுக்குழு உறுப்பினர்களின் பெயர் விபரங்கள், அவர்கள் தங்கியிருந்து செயற்படும் இராணுவ முகாம்கள் போன்றன பற்றிய விபரங்களை சமர்ப்பித்து இதற்கு முடிவுகட்ட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர். இதனை அங்கு ஏற்றுக்கொண்ட அரச தரப்பு பின்னர் அவ்வாறெல்லாம் இல்லை, தகவல்கள் பிழையானவை என்ற பாணியில் கதைத்தன.

ஆனால், அதன்பின்னர் தான் விடுதலைப்புலிகள் மீதான ஒட்டுப்படைகளின் தாக்குதல்கள் அதிகரித்தன. அதேநேரம் ஜெனீவாப் பேச்சுக்களின் பின்னர் தான் தாக்குதல் நடத்தவென ஊடுருவி வந்த ஒட்டுப்படை உறுப்பினர்களும் விடுதலைப் புலிகளிடம் அகப்பட்டனர். அகப்பட்டவர்கள் தம்மை வழி நடத்தியவர்கள், வழிநடத்தியவர்களின் இருப்பிடங்கள் போன்றன பற்றிய விபரங்களை பகிரங்கப்படுத்தினர்.

இது சிறிலங்கா அரசுக்கும் இராணுவத்துக்கும் கடுமையான நெருக்குவாரத்தை ஏற்படுத்தியது. இதற்கு இடையில் சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா குண்டுத்தாக்குதலுக்கு இலக்காகி படுகாயம் அடைந்தார். தொடர்ந்து மூன்றாவது நிலை உயர் அதிகாரி லெப்.ஜெனரல் பாரமி குலதுங்க கொல்லப்பட்டார். இவர் ஆழ ஊடுருவும் படையை வழிநடத்தியவர் என்று கருதப்பட்டார்.

இதுவரைக்கும் ஒட்டுப்படைகளைக் கொண்டும் ஒட்டுப்படைகளோடு இணைந்தும் தாக்குதல் நடத்திவந்த இராணுவம் அவற்றுக்கும் தமக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்த வந்தது. அதுவரைக்கும் சிறிலங்கா இராணுவத்தின் நேரடித் தொடர்பு பற்றிய வெளிப்படையான சான்றுகள் முன்வைக்கப்பட்டிருக்கவில்ல

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.