Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அஸாத் ஸாலியின் உடல்நிலை மோசம்;! - விடுதலை செய்யப்படும் வரை எதனையும் உட்கொள்ளப் போவதில்லை என சபதம்!!

Featured Replies

அஸாத் ஸாலியின் உடல்நிலை மோசம்;! - விடுதலை செய்யப்படும் வரை எதனையும் உட்கொள்ளப் போவதில்லை என சபதம்!!

7a58eb6f-ef05-4bcf-b6dc-872be8f59aa61.jp

'உடலை விட்டு உயிர் பிரிந்தாலும் பரவாயில்லை. என்னை விடுதலை செய்யும் வரை உணவையோ, மருந்தையோ உட்கொள்ளப் போவதில்லை' என கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் அஸாத் ஸாலி தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் பயங்கரவாதச் தடைச்சட்டத்தின் கீழ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பின்னர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அஸாத் ஸாலி தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

தான் கைதுசெய்யப்பட்டது சட்டவிரோதமானது என்றும், தன் மீது வீண்பழி சுமத்தப்பட்டுள்ளது என்றும் குற்றம் சுமத்தும் அஸாத் ஸாலியின் உடல் நிலை மோசமடைந்து வருகிறது என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

'சேலைன்' ஏற்றப்படுவதையும், மருந்துகளையும் மிகக்கண்டிப்புடன் ஏற்க மறுத்து வரும் அஸாத் ஸாலி, தான் விடுதலை செய்யப்படும் வரை எதனையும் உட்கொள்ளப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அஸாத் ஸாலியின் இந்த அதிரடி முடிவால் கவலையடைந்துள்ள வைத்தியர்கள், அவருக்கு சேலைன் ஏற்றுவதற்கு பகீரத முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அது பலளிக்கவில்லை.

அதேவேளை, அஸாத் ஸாலியை வைத்தியசாலையின் 55வது அறைக்குச் சென்று பார்வையிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான சுமந்திரனுக்கும், அஸாத் சாலியின் மனைவிக்கும் மாத்திரம் நேற்று சனிக்கிழமை மதியம் பலத்த கட்டுப்பாடான அறிவுறுத்தல்களுக்கு மத்தியில் சிறிலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அனுமதி வழங்கப்பட்டது.

அஸாத் ஸாலியை பார்வையிட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு அனுமதி வழங்கிய சிறிலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவினர், அவருக்கு பல அறிவுறுத்தல்களை வழங்கியதுடன் அவரது கையடக்கத் தொலைபேசியை உடன் எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை.

அஸாத் ஸாலியை நேற்று வைத்தியசாலைக்குச் சென்று பார்வையிட்டு விட்டு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் 'பொங்குதமிழ்' இணையத்தளத்திற்கு கருத்துத் தெரிவிக்கையில்,

'சிறிலங்கா குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அஸாத் ஸாலியை விசாரணை செய்து வருகின்றனர். அந்த விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கிவரும் அஸாத் ஸாலி, தனது பக்க கருத்துகளையும் கூறியுள்ளார்.

இந்தியாவிலிருந்து வெளிவரும் ஜுனியர் விகடனுக்கு அஸாத் ஸாலி வழங்கிய பேட்டி குறித்தே சிறிலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரித்துள்ளனர். அதற்கு அஸாத் ஸாலி பதிலளித்துள்ளார்.

எனக்கு தமிழ் மொழியில் நல்ல பாண்டித்தியம் இல்லை.  அதனால், நான் கூறிய விடயத்தை திரிபுபடுத்தி எழுதிவிட்டனர். அதனை நான் அவர்களுக்கு உடனடியாக சுட்டிக்காட்டி எனது மறுப்பையும் ஈ.மெயில் மூலமும் அனுப்பி வைத்துவிட்டேன். அதனை அவர்களும் ஏற்றுக் கொண்டு பிரசுரிப்பதாக கூறியுள்ளனர்' என்று சிறிலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பதிலளித்தேன்' என அஸாத் ஸாலி  தன்னிடம் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக், ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஜயலத் ஜயவர்த்தன, கொழும்பு மேயர் முஸம்மில், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் வை.எ ல்.எஸ். ஹமீத் ஆகியோர் நேற்று அஸாத் சாலியை பார்வையிட வைத்தியசாலைக்கு சென்ற போதும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் சிறிலங்கா குற்றப் புலனாய்வுப்  பிரிவின் பிரதிப் பணிப்பாளர் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு அனுமதி கோரிய போதிலும் மேலிட உத்தரவுக்கமைய அனுமதி வழங்க முடியாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, அஸாத் ஸாலியின் ஆதரவாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் என நூற்றுக்கணக்கானோர் நேற்று  வைத்தியசாலையை சூழ்ந்து நின்றனர்.

'அஸாத் ஸாலியின் உடல் நிலை மோசமடைந்து வருகின்றது. அவரை நாங்கள் பார்க்க வேண்டும். ஒரு தடவையேனும் அவரைக் காட்டுங்கள்' என அங்கு குழுமி நின்றோர் சிறிலங்கா பொலிஸாரிடம் கேட்ட போதிலும், அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

நேற்றிரவு கிடைத்த வைத்தியசாலை தகவல்களின் படி, அஸாத் ஸாலியின் உடல்நிலை மோசமாகவுள்ளதாகவும், உண்ணவிரதத்தை அவர் மேலும் தொடருவாராயின் உடல் நிலை மேலும் மோசமடையும் எனவும் தெரியவருகின்றது.

சமூகத்துக்காகவும், மார்க்கத்துக்காகவும் மரணித்தாலும் மரணிப்பேனே தவிர, எதனையும் உட்கொள்ள மாட்டேன் என அஸாத ஸாலி வைத்தியர்களிடம் உறுதியாகக் கூறியுள்ளார் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.

 

 

http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=7a58eb6f-ef05-4bcf-b6dc-872be8f59aa6

அஸாத் ஸாலியை பார்க்க தடையை மீறி நுழைந்து ஜயலத் ஜயவர்த்தன அதிரடி!

0e5c718f-3301-422b-ad11-2e11901b5aca1.jp

சிறிலங்கா பொலிஸாரின் தடையையும் மீறி அஸாத் ஸாலியை பார்வையிட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குள் நுழைந்த சம்பவம் ஒன்று நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

அஸாத் ஸாலியை பார்வையிட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஜயலத் ஜயவர்தன, ஆளும்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் ஆகியோர் நேற்று கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்றிருந்தனர்.

ஆனால், இவர்களுக்கு சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினர் அனுமதி வழங்க மறுத்ததை அடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினருடன் தர்க்கத்தில் ஈடுபட்டார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் வைத்தியசாலை வாயிலை பலவந்தமாகத் திறந்த அவர், 'நான் ஒரு வைத்தியன். என்னை வைத்தியசாலைக்குள் செல்லவிடாமலும், நோயாளியை பார்க்கவிடாமலும் தடுக்க எவராலும் முடியாது' எனக் கூறி அஸாத் ஸாலியை அனுமதித்துள்ள 55ஆம் இலக்க அறையை நோக்கிச் சென்றார்.

இதனையடுத்து பரபரப்படைந்த சிறிலங்கா பொலிஸாரும், புலனாய்வுப் பிரிவினரும் இடைநடுவில் அவரை  மறித்து அதற்கப்பால் அவரை போக விடாமல் தடுத்து வைத்தியசாலையை விட்டு வெளியேற்றினர்

  • கருத்துக்கள உறவுகள்

------

 

இந்தியாவிலிருந்து வெளிவரும் ஜுனியர் விகடனுக்கு அஸாத் ஸாலி வழங்கிய பேட்டி குறித்தே சிறிலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரித்துள்ளனர். அதற்கு அஸாத் ஸாலி பதிலளித்துள்ளார்.

எனக்கு தமிழ் மொழியில் நல்ல பாண்டித்தியம் இல்லை.  அதனால், நான் கூறிய விடயத்தை திரிபுபடுத்தி எழுதிவிட்டனர். அதனை நான் அவர்களுக்கு உடனடியாக சுட்டிக்காட்டி எனது மறுப்பையும் ஈ.மெயில் மூலமும் அனுப்பி வைத்துவிட்டேன். அதனை அவர்களும் ஏற்றுக் கொண்டு பிரசுரிப்பதாக கூறியுள்ளனர்' என்று சிறிலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பதிலளித்தேன்' என அஸாத் ஸாலி  தன்னிடம் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 

அஸாத் ஸாலி, ஜீனியர் விகடனுக்கு கொடுத்த பேட்டியை... யாராவது இணைத்து விடுங்கப்பு.

அஸாத் ஸாலி, ஜீனியர் விகடனுக்கு கொடுத்த பேட்டியை... யாராவது இணைத்து விடுங்கப்பு.

 

 

http://www.jaffnamuslim.com/2013/05/blog-post_9063.html

 

 

இதில் இருக்கின்றது

Untitled.jpg

azath-salley.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு... நன்றி வந்தியத்தேவன்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.