Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களுக்குகுந்தகமாக இருக்க நாம் விரும்பவில்லை. ஹக்கீம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்குகுந்தகமாக இருக்க நாம் விரும்பவில்லை. ஹக்கீம்

Hakeem_aa-300x224.jpg

தமிழர்களுக்கு வாய்ப்பான மாகாண ஆட்சியொன்று அமையுமாக இருந்தால் அதற்கு குந்தகமாக இருக்க நாம் விரும்பவில்லை. ஹக்கீம்

எங்களது பார்வையில் வடமாகாணம் தமிழ் மக்களை பெரும்பாண்மையாக கொண்டது. எங்களுக்கு நடக்கும் அநியாயங்கள் முடிவுக்கு வரவேண்டியதை போல தமிழர்களுக்கு அநியாயம் நடந்தாலும் நேர்மையாக பேசும் கட்சியாகத்தான் நாங்கள் இருக்க முடியும் . அவர்களுக்கு வாயப்பான மாகாண ஆட்சியொன்று அமையுமாக இருந்தால் அதற்கு குந்தகமாக இருக்க நாம் விரும்பவில்லை ஆனால் அவர்களோடு சேர்ந்து நாம் ஆட்சிஅமைக்க போகின்றோம் என்பது அர்தமல்ல . அரசாங்கத்துக்கு விரோதமாக நாங்கள் செயற்பட போகின்றோம் என்பதும் அல்ல .ஜனனாயகத்துக்கேற்ப தேர்தல் நடாத்தப்பட வேண்டும்.

 

டக்கில் தேர்தலை பின்போடாது ஜனநாயகத்திற்கு அமைய நடத்த வேண்டுமென வவுனியாவில் ஞாயிற்றுகிழமை (05) நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுடனான சந்திப்பில் கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார் .

அங்கு உரையாற்றும் பொழுது அவர் மேலும் தெரிவித்தவையாவன .

இந்த கட்சியை கட்சியை பலவீன படுத்துவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளின் விளைவாக நாங்கள் தொடர்ந்து தண்டிக்கப்பட்டு வந்திருக்கின்றோம் . இந்த அரசாங்கத்துக்குள் ஓர் எதிர்கட்சியாகவே பார்கின்ற ஒரு நிலைமை இருக்கின்றது

தேர்தலுக்காக நான் இங்கு வரவில்லை . எங்களது பாராளுமன்ற உறுப்பினர் வன்னி மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடுவதற்கு என்னிடம் காலத்தை ஒதுக்கித்தருமாறு கேட்டிருந்தார் இன்று கட்சி போராளிகளை சந்திக்க கிடைத்ததையிட்டு மகிழ்சியடைகின்றேன்

எங்களுடைய அணுகுமுறை வித்தியாசமானது  இங்குள்ள அமைச்சரின் அணுகுமுறையை என்னால் அங்கீகரிக்க முடியாது .

தமிழ் மக்கள் பெரும்பான்மையாக  வாழுகின்ற பிரதேசங்களில் அவர்களின் அரசியல் தலைமையுடன் பேச்சுவார்த்தை நடாத்தி புரிந்துணர்வுடன் விடயங்களுக்கு தீர்வு காண்பதுவே சிறந்த வழிமுறையாகும் .இதுவே முஸ்லிம் காங்கிரஸின் அணுகுமுறையாகும்

சண்டித்தனமாக பிரச்சினைகளை அணுகுவது ஆரோக்கியமானது அல்ல . இதுவே முஸ்லிம் காங்கிரஸின் நிரந்தரமான நிலைப்பாடாகும் . சிங்களவர் பெரும்பான்மையினராக வாழும்பிரதேசங்களிலும் இதே நிலைப்பாடுதான் .

அவ்வாறே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அம்பாறை மாவட்டத்தில் தழிழ் மக்களுக்கு சில விட்டுக் கொடுப்புகளை செய்ய வேண்டிய தேவையுள்ளது நாங்கள் எங்கு பெரும்பாண்மையாக வாழ்கின்றோமோ அங்கு சிறுபான்மையாக வாழும் சமுகத்தினரை அனுசரித்து செல்ல வேண்டிய அவசியம் இருக்கின்றது

கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிட்டு வெற்றியீட்டிய போதும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி அமைக்கவில்லை என்ற விமர்சனம் இன்னும் இருந்து வருகின்றது ஆனால் சரியான ஒரு கட்டத்தில்தான் அவ்வாறான தீர்மானத்திற்கு நாங்கள் வரலாம்.

இன்று அரசாங்கத்தோடு இருக்கும் அத்தனை பிரச்சனைகளுக்கு மத்தியில் தண்ணீரில் எண்ணெய் மாதிரிதான் முஸ்லிம் காங்கிரஸ் இருக்கின்றது .வாகனத்தில் ஆணி கழன்ற சில்லு ஆகத்தான் நாங்கள் பார்கப்படுகின்றோம்

கடந்த மே தின கூட்டமொன்றில் அமைச்சர் விமல் வீரவன்ச பகிரங்கமாக சொன்ன விடயமாக  வட மாகாண தேர்தல் வந்தால் முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் தேசிய கூட்டமைப்போடு சேர்ந்து விடும் என்றோ அல்லது வடக்கையும் கிழக்கையும்  இணைப்பதற்கு உடந்தையாகி விடுவோம் என்றோ அவருடைய கற்பனையில் படுகின்ற விடயங்களையெல்லாம் கூறிய நிலவரத்தை பார்கின்றோம் .

வடமாகாணத்தில் தேர்தலே நடத்த கூடாதென்று அமைச்சர் ரிசாதின் கட்சியும் சொல்லுகின்றது. விமல் வீரவன்சவும் சொல்லுகின்றார் . அதில் மட்டும் அவர்கள் இருவருக்கும் உடன்பாடு. சம்பிக ரணவக்கவும் அவர்களோடு இந்த விடயத்தில் இணைந்து கொள்கின்றார்அந்த நிலைப்பாட்டில் முஸ்லிம் காங்கிரஸ் இருக்க முடியாது.

எங்களது பார்வையில் வடமாகாணம் தமிழ் மக்களை பெரும்பாண்மையாக கொண்டது. எங்களுக்கு நடக்கும் அநியாயங்கள் முடிவுக்கு வரவேண்டியதை போல தமிழர்களுக்கு அநியாயம் நடந்தாலும் நேர்மையாக பேசும் கட்சியாகத்தான் நாங்கள் இருக்க முடியும் . அவர்களுக்கு வாயப்பான மாகாண ஆட்சியொன்று அமையுமாக இருந்தால் அதற்கு குந்தகமாக இருக்க நாம் விரும்பவில்லை ஆனால் அவர்களோடு சேர்ந்து நாம் ஆட்சிஅமைக்க போகின்றோம் என்பது அர்தமல்ல . அரசாங்கத்துக்கு விரோதமாக நாங்கள் செயற்பட போகின்றோம் என்பதும் அல்ல .

ஜனனாயகத்துக்கேற்ப தேர்தல் நடாத்தப்பட வேண்டும்.

இன்று வடக்கில் முஸ்லிம்கள் இழந்து நிற்கும் அவர்களது வாக்குரிமையை பெற்றுக் கொள்வதற்கு ஏற்ற வகையில் அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் பத்திரமொன்றை சமர்பிக்கவுள்ளேன் அதில் மாற்று வழியொன்றை அறிமுகப்படுத்தி புதிய சட்டதிருத்தத்தை கொண்டுவர வழிகாணப்படும்.

சாத் சாலி உடனடியாக விடுவிக்கப்பட வேண்டுமென நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் கூறினார்.

வவுனியாவில் ஞாயிற்றுகிழமை (05) முற்பகல் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வடமாகாண புனரமைப்புக்கூட்டத்தில் வவுனியா மன்னார் இ முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த வன்னி கட்சி உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

றோயல் கார்டன் ஹோட்டலில் நடைபெற்ற இக் கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிபாவா பாறுக் இ பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அங்கு உரையாற்றும் போது கைது செய்யப்பட்டுள்ள ஆசாத்சாலி பற்றி அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது :

இன்று எனது மனச்சாட்சியை உறுத்திக்கொண்டிருக்கும் ஒரு முக்கிய பிரச்சினை பற்றி முதலிலேயே பேச வேண்டும் இந்த அரசாங்கத்தில நீதி அமைச்சராக இருக்கும் எனக்கு அரசாங்கம் செய்யும் எல்லாவற்றிலும் உடன்பாடாக இருக்க முடியாது .

இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சி என்று ஒன்று நடக்கின்றது என்ற விடயத்திற்கு அத்தாட்சியாக இருக்கவேண்டிய நானே உண்மையிலேயே உடன்பட முடியாத நிலையில் இருக்கின்றேன் என்பதை பகிரங்கமாக சொல்லுகிறேன் . அண்மைக்காலமாக இந்த அரசாங்கத்திற்கு எதிராக பல விமர்சனங்கள் இருந்து வருகின்றன .

ஆட்களின் கைதுஇ விடுதலை தொடர்பான விடயங்கள் சர்ச்சைக்குரியனவாகவுள்ளன என்ற ஆத்திரத்தை அவற்றோடு தொடர்புபட்டவர்கள் என்னுடன் பகிர்ந்து கொண்டிருக்கின்ற நிலையில் அவற்றைவிடுத்து இப்பொழுது தனிமனிதர் ஒருவரை பற்றி கதைக்கின்றேன் .

கடந்த வியாழக்கிழமை ஆசாத்சாலி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் எமது கட்சியின் சார்பில் கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டவர் . அந்த தேர்தல் மேடைகளில் கடிவாளம் இல்லாமல் பேசிகின்றவர் என்றபடியால் அரசாங்கத்தோடு முரண்பாடுகளை தோற்றுவிக்கின்ற வகையில் பேசுவதை தவிர்த்துக்கொண்டால் நல்லதென நான் அவரிடம் கூறியிருந்தேன்.

இருந்தாலும் அவரது அரசியல் செய்யும் பாணி அவ்வாறான படியால் தேர்தல் முடிவுகளின் பின்பும் அவரது அரசியல் அவ்வாறே தொடரந்;தது .ஆனால் அண்மைக்காலமாக சில தீவிரவாத அமைப்புகள் முன்னெடுத்த பிரசாசரங்கள் மிகத் தீவிரமாகவும் இனமுறுகளை ஏற்படுத்த கூடியதாக இருந்த படியால் இந்த ஆசாத்சாலி என்பவரின் பேச்சுக்கள் இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு பெரும் ஆறுதலாக இருந்தது .

காரணமில்லாமல் யாரையும் கைது செய்ய முடியாது . என்ன குற்றத்துக்காக அவர் கைதுசெய்யப்பட்டார் என பொலிஸ் தரப்பில் இது வரை சொல்லப்படாத நிலையில் அவரை கைது செய்து இருப்பது படு பாதகமான விடயமாகும் .

நேற்று அரசாங்க பத்திரிகையான ‘சிலுமின’ வில் அவர் ஒரு பயங்கரவாத குழுவோடு தொடர்புபட்டுள்ளதாக வெளிவந்துள்ளது என்னுடைய பார்வையில் இந்நாட்டின் உளவுத்துறைக்கு அதைவிட பெரிய அவமானம் இருக்க முடியாது.

ஆசாத்சாலி பயங்கரவாதியாக அல்லது பயங்கரவாதத்தை உருவாக்குபவராக இருந்தால் இவரைவிட இன்னும் எத்தனையோ பேர்களை கைது செய்திருக்க வேண்டும் . இது வெட்கித்தலைகுனிய வேண்டிய விடயம். சட்டத்தின் ஆட்சியென்பது இவ்வாறான மோசமான செயல்களால் கேள்விக்கு உட்படுத்தப்பட்டு விமர்சிக்கப்படுகின்றது .

அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் . இதை முஸ்லிமகாங்கிரஸ் அரசியலாக்க விரும்பவில்லை. நான் அரசியலில் புள்ளிபோட்டுக்கொள்பவனாக என்னை ஒரு போதும் அடையாளம் காட்டியவன் அல்லன் .

ஆனால் சரியான விடயங்களை சரியான சந்தர்பங்களில் பேசித்தான் ஆக வேண்டும் . இந்த விடயத்தில் அரசாங்கம் பக்கச்சார்பாக நடந்து கொண்டதாகத்தான் பலரும் கூறுகின்றனர் .அவர்களோடு நாங்களும் உடன்பட்டாகாக வேண்டும் என்பதை தெளிவாக சொல்லுகிறேன்.

சனிக்கிழமை (4) மினுவாங்கொடையில் நடைபெற்ற எழுத்தாளர் மு.பஷீரின் சிறுகதை தொகுதி வெளியீட்டு நிகழ்வில் பிரதம அதியாக கலந்து கொண்டு உரையாற்றிய பொழுதும் அமைச்சர் ஹக்கீம் ஆசாத்சாலி விடுதலை செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

http://www.supeedsam.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95/

 

தமிழர்களுக்குகுந்தகமாக இருக்க நாம் விரும்பவில்லை. ஹக்கீம்

 

இந்த நீர்க்குமிழி ஞானோதயம் எத்தனை நாளைக்கு நீடிக்கும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.