Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தீரமும் துயரமும் தோய்ந்த திருநாடு

Featured Replies

  • தொடங்கியவர்

நன்றி மல்லை பகிர்வுக்கு

வருகைக்கு நன்றி உடையார்.

  • தொடங்கியவர்

வலியும் வீரமும் சுமந்த வாழ்வு - இதயச்சந்திரன்

[Friday, 2013-05-17 17:06:26]
Puthumaththalamn_150.jpg

திருமலை மாவிலாற்றிலிருந்து

வன்னியின் கிழக்கெல்லை வரை

வெந்து தணிந்தது காடுகள்.

  

மக்கள் கூட்டத்தின் ஈழக்கனவு

குரூரமாக தூக்கி எறியப்பட்டது.

பேரினவாதப் புயல் சுற்றிச் சுழன்றடித்து,

முள்ளிவாய்க்காலை செந்நீரால் மூடிக்கொண்டது.

உருட்டப்பட்ட தலைகள்,

மூடப்பட்ட பதுங்கு குழிகளின் மேல் சிதறிக்கிடந்தன.

உமி ஊதி பொறுக்கியெடுத்த அரிசி, அதனுள் அடங்கிப்போனது.

ஆர்வத்துடன் அவசரமாக மனிதக் கேடயம் பற்றி

பேசிக்கொண்டிருந்தார்கள் பார்வையாளர்கள்.

கருத்துச் சுதந்திரத்தின் வாய் கிழிந்து போனது.

காரியம் முடிந்ததும், மனித உரிமை மீறல் பற்றிப் பேசுவோமென்று

ஐ.நா வும் அடங்கியிருந்தது.

அங்கு இறந்த மனிதர்களோடு வாழும்

துயரம் சூழ்ந்து கொண்டது.

அந்தியேட்டி,காடாத்து விழுமியங்கள்

நினைவில் வந்து போயின.

பறையடித்து ஊர் கூட்ட ஆட்கள் இல்லை.

சேமக்கலம் அடித்துச் செல்லும் இறுதி ஊர்வலம் கனவானது.

இறந்தவரின் பெருமை பேச நேரமில்லை.

அவரோடு வாழ்ந்த நினைவுகளை மீட்ட யாருமில்லை.

கொலைக்களத்தில் அங்கமிழந்த மனிதர்கள் ஏராளம்.

ஒரு கணத்தில் பல இறப்புகள்.

வெறுமைக்கும் இறப்பிற்கும் இடைவெளியற்ற மயானபூமி.

அமரர் ஊர்திகளைக் காணவில்லை.

பேரிரைச்சலுடன் நாலாபுறமும் டாங்கிகள் வருகின்றன.

அனாதையாக இறப்பதன் அர்த்தம் அங்கு எழுதப்பட்டது.

பிரிவிற்கு ஆயத்தமாக பெருங்கூட்டம்.

எமனை நோக்கி ஓடுவதா என்கிற பதட்டம்.

இருந்தாலும் நகர்ந்தாலும் சாவு நிற்சயம்.

பிள்ளைகளாவது பிழைக்கட்டும்.

தம் மீதே கனத்த வெறுப்பு.

விலகிய வேலிக்கு வழக்காடியது

வாசலில் 'நில்' என்று அதட்டியது

தேர்தலில் இரத்தத் திலகமிட்டது

அறிவுக் களஞ்சியம் எரிந்தது

மீண்டும் வீறு கொண்டெழுந்தது

போராடிப்பெற்ற இறைமையை இழந்தது

எல்லாமே நெஞ்சில் நிழலாடியது.

புதுமாத்தளன் இரண்டாகப் பிளந்தது.

இறுதிவரை கூடவந்தவர்கள் எங்கே?

பிரிக்கப்பட்ட ஜெர்மனி போல...

துண்டாடப்பட்ட கொரியா போல...

அங்கு என்ன நடக்கிறது?

நினைத்து அச்சப்படவும் நேரமில்லை.

வாழ்வின் முடிவு எதுவென்று தெரியாமல்

ஓட்டிக்கொண்டிருந்தார்கள்.

கூப்பிடு தொலைவில் போர் குறுகியது.

கடல் விளிம்பில் கண்ட தற்கொடை,

காட்சியாய் பக்கத்தில் விரிந்தது.

காற்று மண்டலத்தை கந்தகத்துகள்கள் அதிர்வித்தன.

இனி ஓட முடியாது.

மண் அணைக்காவலரண்கள் உடைந்து

உயிர்விழுங்கிகள் குண்டு மழை பொழிந்தன.

தொலைபேசியில் வந்த மரணச் செய்திகள்

இறந்து போயின.

வாழ்வும் சாவும் இனி அவர்களோடுதான் என்று முடிவாயிற்று.

கடல்வாசல் மூடி கொடியும் ஏற்றிவிட்டான் எதிரி.

எறிகுண்டுகள் பிதுங்கி எறிந்த மக்கள்

ஒற்றையடிப் பாதையில்

கொலைக்களம் நோக்கி நகர்கின்றனர்.

பாதை எங்கும் பிணக்குவியல்.

என்னையும் கூடிச் செல்லுங்களென்று கெஞ்சும்

கால்களற்ற மனிதர்கள்.

குழந்தை இறந்தது தெரியாமல்

அரவணைத்துச் செல்லும் தாய்மார்.

சொந்த மண்ணில் தலைகுனிந்தபடியே நடந்தாலும்

அவர்களோடு இறுதிவரை நின்றோம் என்கிற சிறிய ஆறுதல்.

இம்மாந்தரை மோசமான அன்னியர் போல்

வரவேற்கும் ஆக்கிரமிப்பாளன்.

இந்த மண் இனி எங்கள் சொந்த மண் என்றான் அவன்.

போராளிகளை ஏற்றிச்செல்ல பேரூந்துகள் நின்றன.

அவர்களை அடையாளம் காட்ட

சில காக்கை வன்னியர்கள் தயார் நிலையில்.

பிரிவோம் சந்திப்போம் என அங்கும் ஒரு பிரியாவிடை.

கொல்வதும், உயிரோடு வைத்திருப்பதும் உனது விருப்பம்

என்றானபின், நம்பிக்கையும் அவன் கைகளில்தான்.

காலம் தனக்கேற்றவாறு உருண்டோடியது.

பயங்கரவாதத்திரை போட்டு பாதகங்கள் மறைக்கப்பட்டன.

பதுங்கு குழிகளிலிருந்து

திறந்தவெளி வதை முகாம்களில் மக்கள்.

ஐ.நா. மூனும் வந்தது வேடிக்கை பார்க்க.

எல்லாமே நன்றாக நடப்பதாக உபதேசம் செய்தது.

முள்வேலிக்குள் முகாரிகள் கேட்பதில்லை என்றது.

இப்போ...இன அழிப்பின் பங்காளிகள்

விடுதலைக்கீதம் இசைக்கின்றார்.

கொன்றவர்கள் தண்டிக்கப்படுவார்களென்று

நம்பச் செய்வதில் தீவிரமாகவே இருக்கின்றார்.

தீர்மானங்கள் தமக்கானதெனச் சொல்வதில்லை .

நம்மவர்க்கும் அதனை விழுங்குவதில் ஒரு சுகம்.

அடுத்த தீர்மானம்வரை நீதிக்காகக் காத்திரு.

குளம் வற்றும்வரை பொறுத்திரு.

நிலம் போனாலும் மீட்பர்கள் அதனை

பெற்றுத் தருவார்களென்று நம்பிக்கை கொள்.

நீங்கள் போராடாமலே விடுதலை வாங்கித்தரும்

இரட்சகர்கள் இவர்களென்று நம்பு.

இப்படியான தரகு மீட்பர்களின்

அடிபணிவு கீதம் பலமாகக் கேட்கிறது.

பயணித்த பாதை

குரூரமும் வன்மமும் வஞ்சகமும் சூழ்ச்சியும்

தன் முனைப்பும் சந்தேகமும் நிரம்பியதொரு

வாழ்வின் இருண்ட பக்கங்கள்.

அங்கு மகிழ்ச்சியும் இருந்தது

துரோகங்களுக்கும் குறைவில்லை.

துயரமும் இருந்தது

நிலம் மீட்ட நிம்மதியும் இருந்தது.

இனிவரும் காலம்

பட்டறிவின் பரிசோதனைக் களம்.

இன அழிப்பின் புதிய பரிமாணங்கள்

துல்லியமாக வெளிப்படும் காலம்.

ஆதலால்.....

இன அடியழித்தலை நிறுத்த

மக்களை அணிதிரட்ட

உறுதி பூணுவோம் இந்நாளில்.

-ஒரு பேப்பர்-

http://www.seithy.com/breifNews.php?newsID=82907&category=TamilNews&language=tamil

 

அதே தலைப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.