Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிங்கள தேசியவாத நோய் காவிகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் அத்தனை உயிரினங்களையும் தாக்கவல்ல நோய்க் கிருமிகள் பல்வேறு வகைகளில் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு எனத் தொற்றிக் கொள்கின்றன. சில கிருமிகள் காற்று மூலமாகவும், சில தண்ணீர் மூலமாகவும், உணவு மூலமாகவும் தொற்றுகின்றன. வேறு சில கிருமிகள் நேரடித் தொடர்புகளினால் பரம்புகின்றன.

295617_463807707026521_1023501703_n.jpg

இந்தக் கிருமிகள் பரவிவிடாமல் எவ்வளவுதான் முன் நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், இவற்றை முற்றாக இல்லாமல் ஆக்குவது இன்றுவரை முடியாத காரியமாகவே உள்ளது. 

ஒரு காலத்தில் கொள்ளை நோய் என்ற 'கொலரா' என்ற வயிற்றுப்போக்கு நோய் ஏராளமானவர்களைக் காவு கொண்டதன் பின்னர் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அம்மை நோய்க்கான காரணங்களும் கண்டறியப்பட்டு, மனிதப் பேரழிவுகள் தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனாலும் புதிது புதிதாக நோய்க் கிருமிகள் மனித உடலுக்குள் புகுந்து கொண்டு, புதிய வியாதிகளை உருவாக்குகின்றன. இதனைத் தடுப்பதற்கான போராட்டங்களும் தொடர்கின்றன. 

ஒரு வகையில், நோய்களைத் தடுப்பதற்கான ஆய்வுகள் நடைபெறும் அதே வேளையில், அந்த நோயக் கிருமிகள் மூலம் எதிரிகளை அழிப்பதற்கான வக்கிர முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டே வருகின்றன. தற்போது, 'எயிட்ஸ்' என்ற பெயரில் மனித குலத்திற்குச் சவால் விடும் நோய்க் கிருமிகளை அமெரிக்காவே உற்பத்தி செய்தது என்ற குற்றச்சாட்டும் பரவலாக உள்ளது. செவ்விந்தியர்களை முற்றாக அழிப்பதற்கு 'அம்மை' நோய்க் கிருமிகளைப் பயன்படுத்தியதாகவும் அமெரிக்கர்கள் மீது வரலாற்றுக் குற்றச்சாட்டும் உண்டு. அம்மைக் கிருமிகள் உட்செலுத்தப்பட்ட கம்பளிப் போர்வைகளை அவர்களுக்கு இலவசமாக வழங்கி, அவர்களை இல்லாமல் ஆக்கியதாகவும் வரலாற்றுக் குறிப்பு உண்டு. 

நோய்க் கிருமிகள் தொற்று ஏற்படும் எல்லோருமே நோயாளிகள் ஆகிவிடுவதில்லை. ஆனால், அந்த தொற்றுக்குள்ளான மனிதர்கள் மூலமாக, நோய்க் கிருமிகள் மற்றவர்களை இலகுவாகச் சென்றடைந்துவிடும். அவரை, கிருமிகள் நோய் காவியாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. அந்த நோய் காவியாகச் செயற்படுபவர் தன்னிடம் அந்த நோய்க் கிருமிகள் இருப்பதாக ஒருவேளை அறிந்தும் இருக்க முடியாது. ஆனாலும், அவர் மூலமான ஆபத்துக்களை நிராகரிக்கவும் முடியாது. 

அரசியல் ஆய்வுக்கும், நோய் பரப்பலுக்கும் என்ன தொடர்பு என்று திகைக்கிறீர்களா...? இது புரிந்தால் மட்டுமே நம்மை நோக்கி அனுப்பப்படும் நோய் காவிகளிடமிருந்து நாம் தப்பித்துக்கொள்ள முடியும். ஒரு பேராபத்திலிருந்து தமிழ்த் தேசியத்தைக் காப்பாற்ற முடியும். 

சிங்கள ஆட்சிபீடம் பல நூறு நோய் காவிகளைப் புலம்பெயர் தேசங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது. இவர்கள் அனைவரும், தமிழ்த் தேசிய கருத்தியல் நீக்கப்பட்டு, சிங்கள தேசியவாதம் என்ற நோய்க் கிருமியின் தொற்றுக்குள்ளாக்கப்பட்டு, புலம்பெயர் தமிழர்களை நோக்கி அனுப்பப்பட்டுள்ளார்கள். அனுப்பப்படுகின்றார்கள். இந்த ஆபத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

சில நாட்களுக்கு முன்னர், கொழும்பிலிருந்து அனுப்பப்பட்ட இப்படியான ஒரு நோய் காவியை நான் சந்திக்க நேர்ந்தது. முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவு கூர்ந்து, புலம்பெயர் தமிழர்கள் மீள் எழுச்சி கொள்ளும் நாட்களில் இவர் தெரிவித்த கருத்துக்கள் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கவில்லை. 

'நீங்கள் இப்படியான போராட்டங்கள் மூலம், மகிந்தவை இன்னமும் பலப்படுத்துகின்றீர்கள். அவரது செல்வாக்கு சிங்களவர்கள் மத்தியில் இன்னமும் உயர்வதற்கு மட்டுமே இந்தப் போராட்டங்கள் உதவுகின்றது...' என்று என்னையும் நோய் முழுக்குச் செய்ய முற்பட்டார். அத்துடன் மட்டும் அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. பிரபாகரன் போன பின்னர் அங்கே எதுவும் சாத்தியம் இல்லை... வயித்துக் குத்தை நம்புகிற மாதிரித்தான்... தமிழகத்து மக்களையும் நம்புகின்றீர்கள்... என்று நா கூசாது எதை எதையெல்லாமோ சொன்னார்.

புலம்பெயர் தேசங்களிலிருந்து சுற்றுலாவாக இலங்கை சென்று, சிறிலங்காவால் கவனிக்கப்பட்டு, அங்கிருந்து திரும்பி வந்ததும் 'அங்கே எந்தப் பிரச்சினையும் இல்லை..., எல்லாரும் சந்தோசமாக இருக்கின்றார்கள்..., அங்கே பாலாறு, தேனாறு மட்டுமல்ல, தொருக்களும் வீதிகளும்கூட வழுக்கிக் கொண்டு ஓடுகின்றன... என்றெல்லாம் எமக்கு நோய் முழுக்குச் செய்ய முற்பட்ட பலரை ஏற்கனவே சந்தித்திருந்ததால், வந்தவரது இலக்கும் துல்லியமாகப் புரிந்தது. 

சிங்கள தேசத்தில் மகிந்த பலமாக இருந்தாலென்ன..., பலவீனமாக இருந்தாலென்ன...? ஈமத் தமிழர்களது விடுதலைப் போராட்டம் சிங்கள தேசியத்தை உயர்த்துவதற்கோ, தாழ்த்துவதற்கோ ஆனது அல்ல. அது, தமிழீழ மக்களது அந்த மண்ணின் மீள் ஆளுகைக்கானது. விடுதலைப் புலிகளது களமுனைத் தோல்வியுடன் அத்தனையும் முடிந்துவிட்டது என்ற சிங்களக் கனவு வெகு விரைவில் கலைந்து போகும். அது சிங்கள ஆட்சியாளர்களுக்கும் புரியும். இதனால்தான், போராயுதங்கள் மூலமாகச் சிதைக்க முடியாத புலம்பெயர் தமிழர்கள்மீது, நோய் காவிகள் ஆக்கப்பட்ட கருத்தியல் சிதைவாளர்கள் மூலம் உளவியல் யுத்தத்தை சிங்கள ஆட்சியாளர்கள் தீவிரப்படுத்தியுள்ளார்கள். 

மாவீரர் தினத்தையும், முள்ளிவாய்க்கால் நாளையும் குறி வைத்து நகர்ந்த சிங்கள தேசத்தைப் புலம்பெயர் தமிழர்கள் தோற்கடித்துவிட்ட நிலையில், சிங்கள தேசியவாதம் புகுத்தப்பட்ட தமிழர்கள் மூலமான உளவியல் போரை சிங்களப் பேரினவாதம் முடுக்கிவிட்டுள்ளது. இது புலம்பெயர் தமிழர்களால் முறியடிக்கப்படாத சமர் அல்ல. இதனை நாம் புரிந்து கொண்டால் போதும். 

- அகத்தியன்

 

http://www.sankathi24.com/news/29506/64//d,fullart.aspx

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.