Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா.செயலர் தெரிவில்இலங்கைக்குஆரம்பத்திலேயே பெரும் பின்னடைவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா.செயலர் தெரிவில் இலங்கைக்கு ஆரம்பத்திலேயே பெரும் பின்னடைவு

ஐக்கிய நாடுகள் சபையில் அடுத்த செயலாளர் நாயகம் பதவிக்கு தனது மூத்த இராஜதந்திரியான ஜயந்த தனபாலவை நிறுத்தியிருக்கும் இலங்கைக்கு அத்தெரிவிற்கான ஆரம்பச் சுற்றிலேயே பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கின்றது.

பதினைந்து நாடுகளைக் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு சபையின் உறுப்பினர்களிடையே நடத்தப்பட்டபூர்வாங்க வாக்கெடுப்பு ஒன்றில் நான்காவது நிலையேகடைசி ஸ்தானமே ஜயந்த தனபாலவுக்குக் கிட்டியது.

களத்தில் நிற்கும் நால்வரில் தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் பன் கீ மூன் முதலாவது நிலையையும், இந்தியப் பிரதி நிதி சஷி தரூர் இரண்டாமிடத்தையும், தாய் லாந்துப் பிரதிப் பிரதமர் சுரகிரத் சத்திராதி மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

ஐ.நா. செயலாளர் நாயகத்தை ஐ.நா. சபையில் அங்கம் வகிக்கும் 192 நாடுகளும் சேர்ந்துதான் தெரிவு செய்யவேண்டும். அதற்கான முறையான தேர்தல் அல்லது தெரிவு இந்த வருட இறுதியில் நடைபெற இருக்கின்றது.

எனினும், அந்தத் தெரிவில் வல்லரசு களான ஐந்து நாடுகளின் விருப்பு வெறுப்பே முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. ஐ.நா. பாதுகாப்புச்சபையில் நிரந்தர உறுப்புரிமை பெற்ற இந்த ஐந்து நாடுகளும் பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா ஆகிய ஐந்தும் பாதுகாப்புச் சபையின் எந்த ஒரு பிரேரணையையும் தமது "வீட்டோ' மூலம் நிராகரிக்கச் செய்யும் அதிகாரம் கொண்டவை. அதுபோலவே ஐ.நா. செயலாளர் நாயகம் பதவிக்கும் களத்தில் நிற்கும்வேட்பாளர்கள் இந்த ஐந்து வல்லரசுகளின் ஏதாவது ஒன்றின் எதிர்ப்பைப் பெற்றாலும் அப்பதவிக்கு வர முடியாது.

ஆகவே, ஐந்து வல்லரசு நாடுகளின் விருப் புக்கும், தெரிவுக்கும் உரிய ஒருவரே ஐ.நா. செயலாளர் நாயகமாகத் தேர்ந்தெடுக்கப்பட முடியும்.

அந்த வகையில் இப்போது ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகள் இடம்பெறும் பாதுகாப்புச் சபையில் அடுத்த ஐ.நா. செயலாளர் நாயகம் தெரிவுக்காக நடத்தப்பட்ட பூர்வாங்க வாக்கெடுப்பு மிக முக்கியத்துவம் பெறுகின்றது.

இந்தத் தெரிவின் வாக்கெடுப்புப் பெறு பேறு உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட வில்லை. எனினும் அங்கத்துவ நாடுகள் ஒவ்வொன்றினதும் பிரதிநிதிகள் மூலம் பெறப் பட்ட தகவல்களின் அடிப்படையில் முடிவு களை ஐ.நா.சபைச் செய்தியாளர்கள் வெளி யிட்டுள்ளனர்.

களத்தில் போட்டியிலிருக்கும் நான்கு வேட்பாளர்களுக்கும் எனத் தனித்தனியாக வைக்கப்பட்ட மூன்று பெட்டிகளில் பாதுகாப் புச் சபையில் அங்கம் வகிக்கும் ஐந்து நிரந்தர, உறுப்பு நாடுகளையும் மற்றும் பத்து நாடு களையும் சேர்ந்த பிரதிநிதிகள் வாக்களித்த னர்.

ஊக்குவிப்பு (Encourage), எதிர்ப்பு (Discourage), கருத்து இல்லை (No opinion) என்ற அடிப்படையில் வாக்குகள் அளிக்கப்பட்டன. பெறுபேறு வருமாறு:

* பன் கீ மூன் (தென்கொரியா) : ஊக்குவிப்பு 12 , எதிர்ப்பு 01, கருத்து இல்லை 02.

* சஷி தரூர் (இந்தியா) : ஊக்குவிப்பு 10 , எதிர்ப்பு 02, கருத்து இல்லை 03.

* சுரகித் சத்திராதி (தாய்லாந்து) : ஊக்கு விப்பு 07 , எதிர்ப்பு 03, கருத்து இல்லை 05.

* ஜயந்த தனபால (இலங்கை): ஊக்கு விப்பு 05 , எதிர்ப்பு 06, கருத்து இல்லை 04.

இந்த வேட்பாளர்கள் நால்வரில் எவரும் பாதுகாப்பு கவுன்ஸிலின் 15 உறுப்பினர்களி னதும் ஊக்குவிப்பைப் பெறாத காரணத்தால், இவர்களில் எவருக்காவது நிரந்தர உறுப்பு நாடுகள் ஐந்தும் எதிர்ப்பின்றி அதரவு தந்தனவா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.

வழமையாக ஐ.நா. செயலாளர் நாயகம் தெரிவின்போது போட்டியின் களத்தில் ஆரம்பம்முதலே நிற்பவர்கள் தெரிவாவ தில்லை. அத்தகையோருக்கு ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளில் ஏதோ ஒன்று எதிர்ப்புக் காட்ட, இறுதி நேரத்தில் ஐந்து நாடுகளுக்கும் ஏற்புடைய ஒருவரைக் கடைசி நேரத்தில் தேடிப்பிடித்துக் கண்டுபிடித்து அப்பதவிக்குக் கொண்டு வந்து நிறுத்தி அவரையே தெரிவு செய்வார்கள். இதுவே கடந்த கால அனுபவ மாக இருந்து வந்திருக்கின்றது.

தாம் தெரிவாவதற்கான பிரசாரத்தில் ஈடு படக்கூட முடியாமல் அதற்கு நேரமோ கால அவகாசமோ இல்லாமல் கடைசி நேரத்தில் போட்டிக்குள் கொண்டுவந்து செருகப்படு பவர்களே இப்பதவிக்குத் தெரிவு செய்யப் பட்டு வந்துள்ள நிலைமையில், இப்போதும் களத்தில் உள்ள நால்வரில் ஒருவரே அப்பதவிக்குத் தெரிவாவார் என்று கூறமுடியாமல் இருப்பதாக ஐ.நா. வட்டாரங்கள் கூறுகின்றன.

இம்முறை ஐ.நா. செயலாளர் நாயகம் பதவி ஆசிய நாட்டுக்கு உரியது என்ற இணக்கப் பாடு இராஜதந்திரிகள் மத்தியில் பொதுவாக இருப்பதால் ஆசிய நாடுகளைச் சேர்ந்த பிரதி நிதிகள் இப்பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

அதேவேளை, ஐ.நா. அபிவிருத்தித் திட் டத்தின் துருக்கியத் தலைவர் சேர்மல் டேர்வ்ஸ், ஜோர்தான் இளவரசரும், ஐ.நாவுக்கான அந் நாட்டுத் தூதுவருமான ஸிட் அல் ஹூசெய்ன், சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் கோ சொக் டொங்க் ஆகியோரும் இந்தப் பதவிக்கு கண் வைத்துள்ளனர்.

ஐ.நா. செயலாளர் நாயகமாக ஒருவர் ஒவ்வொன்றும் ஐந்து வருடங்கள் கொண்ட இரண்டு பதவிக்காலங்களை வகிக்கமுடி யும்

-உதயன்

என்னப்பா நம்மாளுக்கு ஊக்கிவிப்பைவிட எதிர்ப்பு அதிகமாக இருக்கு....!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்பா நம்மாளுக்கு ஊக்கிவிப்பைவிட எதிர்ப்பு அதிகமாக இருக்கு....!

என்னங்க தல இந்த மூர்க்கனைப்போய் "நம்மாளு" என்கிறீங்களே! மிகவும்வேதனையாக இருக்குதே :shock: :? :)

என்னங்க தல இந்த மூர்க்கனைப்போய் "நம்மாளு" என்கிறீங்களே! மிகவும்வேதனையாக இருக்குதே

சும்மா டமாசுக்கு.... :wink: :P :P

நாதாரி எக்கேடு கெட்டுப்போனா எண்டு இருக்க ஏலாதுதானே....! அதா சந்தோசத்தில ஒருக்கா மாத்தி சொன்னனான்...! :wink:

50000 சிறுபிள்ளைகளை வைத்து விபச்சாரம் செய்யும் கேவலமான நாடு சொந்த நாட்டு மக்களையே கொன்றொழிக்கும் நாடு. இதற்குள் ஜ.நா சபைத்தலைவர் பதவி. அந்த பதவியே கேவலமாகி விடும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.