Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரக்கடிக்க சைடிஸ்க்காக ஏற்பட்ட சண்டை, கொலையில் முடிந்த பரிதாபம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரியலூர்: சின்ன சின்ன சண்டைக்கெல்லாம் கொலை செய்தால் உலகம் என்னாவது?, அந்த வகையில் சரக்கடிக்க சைடிஸ்க்காக ஏற்பட்ட சண்டை கொலையில் முடிந்துள்ளதுதான் வேதனை.

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள இடையகுறிச்சியை சேர்ந்தவர் குமார் (28). இவரது

மனைவி அம்சவள்ளி (25). இவர்களுக்கு அர்ச்சனா என்ற ஒரு வயது பெண் குழந்தை உள்ளது. இவர் சேலத்தில் உள்ள ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு

விடுமுறையில் சொந்த ஊரான இடையக்குறிச்சிக்கு வந்தார்.

கடந்த 12ஆம் தேதி குமாரும் அவரது நண்பர் சக்திவேலும் இடையகுறிச்சி டாஸ்மாக் கடையில் மது அருந்தினர். அப்போது, கடலூர் மாவட்டம் பிலாந்துறையை சேர்ந்த இளையராஜா என்பவர் இடையகுறிச்சியில் உள்ள தனது பெரியம்மா வீட்டில் தனது தம்பியின் திருமண பத்திரிகையை கொடுத்து விட்டு அவரும் அதே டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றார். அப்போது குமார், இளையராஜாவிடம் தனக்கு சைடிஸ்க்காக கறி வாங்கி தர கூறியதாக தெரிகிறது. அப்போது குமாருக்கும், இளைய ராஜாவுக்கும் தகராறு ஏற்பட்டது.

இதில் குமார் ஆத்திரம் அடைந்து இளையராஜாவை மது பாட்டிலால் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து இளையராஜா இடையகுறிச்சியை சேர்ந்த தனது பெரியம்மா மகன் முத்துவேலிடம், குமார் தன்னை தாக்கியது குறித்து கூறினார். குமாரின் மேல் கோபத்தில் இருந்த முத்துவேல் அவனை கொல்ல திட்டமிட்டான்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குமார் சேலம் செல்வதாக, குமார் தனது மனைவி அம்சவள்ளியிடம் கூறியதை கேட்டு குமாரை பின் தொடர்ந்தான். சேலம் செல்வதற்காக ஆண்டிமடத்திற்கு பஸ்சுக்காக காத்திருந்த குமாரை, முத்துவேலும், அவரது நண்பர் வீரமணியும் எதேச்சையாக ஆண்டிமடத்திற்கு மோட்டார் சைக்கிளில் போனபோது, அங்கு குமார் நிற்பதை கண்டனர். ஏற்கனவே இளையராஜாவை தாக்கிய சம்பவத்தில் குமாரின் மேல் கோபத்தில் இருந்த முத்துவேல், குமாரிடம் நைசாக பேசி மது அருந்தலாம் என்று அழைத்துள்ளனர்.

குமாரும் மது அருந்தும் ஆசையில் அவர்களுடன் பைக்கில் ஏறி கொண்டாராம். மூவரும் மது பாட்டில்கள் வாங்கி கொண்டு இடையகுறிச்சி அருகே உள்ள முந்திரிகாட்டிற்கு சென்று மது அருந்தினர். பின்னர் போதையில் இருந்த

முத்துவேல் தனது அண்ணன் இளையராஜாவை நேற்று நீதானே பீர் பாட்டிலால் அடித்தாய் என்று கேட்டு

குமாரிடம் தகராறு செய்தார். இந்த தகராறு முற்றவே முத்துவேல் தான் வைத்திருந்த பீர் பாட்டிலால்

குமார் தலையில் அடித்ததில் குமார் ரத்த வெள்ளத்தில் விழுந்தார்.

 

 

அதன்பிறகு குமாரின் மேல் ஏறி உட்கார்ந்து கழுத்தை நெரித்தும், காலால் மிதித்தும் குமார் உயிர் போகும் வரை அடித்து கொலை செய்துவிட்டு அந்த காட்டிலேயே குமாரின்  உடலை போட்டு விட்டு முத்துவேலும், அவனது கூட்டாளி வீரமணியும் தப்பிவிட்டனர்.

குமார் கொலை குறித்து தகவல் அறிந்த குவாகம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மணிகண்டன் சம்பவ இடத்திற்கு சென்றார்.  கொலை செய்யப்பட்ட குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

சம்பவ இடத்திற்கு அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தொல்காப்பியன், குவாகம் (பொறுப்பு) போலீஸ்

இன்ஸ்பெக்டர் சந்திரன், நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

இது குறித்து குமாரின் தம்பி ஆனந்த் கொடுத்த புகாரின் பேரில் குமாரை கொலை செய்ததாக முத்துவேல்,

மற்றும் அவரது நண்பர் வீரமணி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜெயங்கொண்டம் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.

கொலை நடந்து சில மணி நேரத்திலேயே கொலையாளிகள் கைது செய்யப்பட்டதில் காலரை உயர்த்தி

கொள்கிறார்கள் அரியலூர் போலீஸார்.

சின்ன சின்ன பிரச்னைக்கெல்லாம் கொலை செய்யும் முந்திரிக்காட்டு குணம் மாறவே மாறாது போல.

சி.ஆனந்தகுமார்

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=14905

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.