Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த்தேசியச் சபைக் கனவு நனவாகுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த்தேசியச் சபைக் கனவு நனவாகுமா?
இலங்கேஸ்வரன்

 கடந்த 11ம் திகதி தமிழ் சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் தமிழ்க் கட்சிகளுக்கிடையே கலந்துரையாடல் ஒன்று மன்னாரில் இடம்பெற்றது. மன்னார் ஆயர் இராயப்பு ஜோசேப் இதற்கு தலைமை வகித்தார். கலந்துரையாடல் இரண்டு அமர்வுகளாக இடம்பெற்றது. முதலாவது அமர்வு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பதிவுசெய்வது தொடர்பான விடயத்தையும், வடமாகாணசபைத் தேர்தலில் ஒருமித்துப் போட்டியிடுவது என்பதையும் பற்றியது. இரண்டாவது அமர்வு கட்சிகளுக்கிடையே ஓர் இணக்கப்பாட்டை உருவாக்கி பொதுவேலைத் திட்டம், பொது அமைப்பு என்பவற்றை உருவாக்கும் நோக்கத்தையும் கொண்டிருந்தது.

 

ஆனாலும் முதலாவது அமர்வில் முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை என்றே தகவல்கள் வருகின்றன. சம்பந்தன் ஜனவரி மாதத்தில் பதிவு செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனக் கூறினாலும் அது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றே சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார். உண்மையில் பதிவு செய்வது தொடர்பில் சிறிய விருப்பம்கூட தமிழரசுக்கட்சித் தலைமையிடம் இருப்பதாகத் தெரியவில்லை. வெளியில் இவ்விவகாரம் பேசுபொருளாவதால் அவ்வப்போது காலத்தை இழுத்தடிக்கும் வகையில் காரணங்களைத் தேடுவது என்பதிலேயே அவர்கள் கவனத்தைக் குவிக்கின்றனர்.

 

ஆனால் தமிழரசுக்கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளுக்கு தங்களுடைய இருப்பைப் பேணவும், தங்களுடைய செயற்பாடுகளுக்கு ஒரு தளத்தை உருவாக்கவும் கூட்டமைப்பை கட்சியாகப் பதிவு செய்வதும் கட்சிக்கான கட்டமைப்புக்களை உருவாக்குவதும் அவசியமாகவுள்ளது. கட்சியைப் பதிவு செய்தால் தமிழரசுக்கட்சியின் தற்போதைய மேலாதிக்கம் இல்லாமல் போய்விடும் எனக்கருதி அக்கட்சியினார் பின்னடிக்கின்றனர்.

 

ரெலோவின் முயற்சியினால் கட்சிகளுக்கிடையே புரிந்துணர்வு உடன்படிக்கைக்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகின்றது. தமிழரசுக் கட்சிக்கும் ஏனைய கட்சிகளுக்குமிடையிலான பிரதிநிதித்துவ வீதாசாரம் 60:40 ஆக இருக்கவேண்டும் என அக்கட்சியினர் வாதிடுகின்றனர். நாம் கூட்டாக செயற்படுகின்றோம் என ஒரு கடிதத்தை தேர்தல் திணைக்களத்திடம் கொடுப்போம். ஆனால் கட்சியை தற்போது பதியத் தேவையில்லை என சுமந்திரன் ஒரு யோசனையை முன்வைத்துள்ளார். ஆனால் சுரேஷ் அதனை ஏற்கவில்லை. இந்த யோசனை ஏனைய கட்சிகள் தனித்து கூட்டமைப்பினை பதிவு செய்வதை இயலாமல் செய்துவிடும் என்பதால் அவர் காரசாரமாக எதிர்த்துள்ளார்.

 

ஏனைய கட்சிகள் 11ம் திகதி மீண்டும் மன்னாரில் உள்ள ரெலோ அலுவலகத்தில் கூடி கலந்துரையாடின. அதில் தமிழரசுக்கட்சி இணங்காவிட்டால் ஏனைய கட்சிகள் இணைந்து கூட்டமைப்பினை பதிவு செய்வது என்று முடிவெடுத்ததாகவே செய்திகள் வருகின்றன.

 

ஏனைய கட்சிகளைப் பொறுத்தவரை தமிழரசுக் கட்சிக்கு அழுத்தம் கொடுப்பதற்கு இந்த வடமாகாணசபைத் தேர்தல் காலத்தையே உகந்த காலமாகக் கருதுகின்றனர். இதனால் உயர்ந்தபட்ச முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இவ் விவகாரத்தை பரந்துபட்டளவில் பேசுபொருளாக்குவதில் அவர்கள் ஓரளவு வெற்றி கண்டுள்ளனர் என்றே கூறவேண்டும்.

 

இரண்டாவது அமர்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சிவில்சமூகப் பிரதிநிதிகள் என்போரும் கலந்து கொண்டனர். எதிர்கால அரசியல் செயற்பாடு தொடர்பாக தமிழ் சிவில் சமூகம் ஒரு முன்மொழிவை எழுத்து வடிவில் வழங்கியிருந்தது. அதில் பின்வருவன அடங்கியிருந்தன.

 

(1) தமிழருக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவதற்கான பொதுவேலைத் திட்டத்தினை அடையாளம் காணல். கட்சிகளையும் மக்கள் குழுக்களையும் உள்ளடக்கிய பொது அமைப்பொன்றை உருவாக்குவது பற்றி ஆலோசித்தல்.

 

(2) அனைவரும் இணங்கக்கூடிய குறைந்தபட்ச அரசியல் நிலைப்பாட்டை அடையாளம் காண்பதற்கான செயல்முறையை முன்னெடுத்தல்.

 

(3) வடமாகாணசபைத் தேர்தல் தொடர்பாக பின்வரும் விடயங்கள் பற்றி உரையாடுதல்.

 

1. தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரித்தல்.

 

2. மாகாணசபையைக் கைப்பற்றியதன் பின்னர் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகளுக்கான முன்மொழிவுகளை அடையாளம் காணல்.

 

3. மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான செயன்முறையை அடையாளம் காணல்.

 

முதலாவது முன்மொழிவு கலந்துரையாடலுக்கு விடப்பட்டபோது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொது வேலைத்திட்டத்திற்கும், இறுதித் தீர்விற்குமிடையே நெருங்கிய பிணைப்பு இருக்கவேண்டும். அதனைப் பிரிக்கமுடியாது எனக் குறிப்பிட்டார்.

 

அவர் மேலும் குறிப்பிடுகையில் பொதுவேலைத்திட்டம் அதன் அடிப்படையிலான போராட்டங்கள் என்பவற்றினது இறுதி நோக்கம் ஓர் அரசியல் மாற்றத்தைக் கொண்டுவந்து, நடைபெற்றுக் கொண்டிருக்கும் இனப்படுகொலையை முற்றாக நிறுத்துவதாக அமையவேண்டும். அம் மாற்றத்திற்கான அழுத்தங்களாகவே பொதுவேலைத் திட்டங்கள் இருக்கமுடியும்.

 

எனவே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரைப் பொறுத்தவரை அரசியல் அழுத்தங்களைக் கொடுப்பதற்கான பொதுவேலைத் திட்டத்திற்கு இணங்குவதற்கு இறுதித் தீர்வு தொடர்பான இணக்கப்பாடு அவசியம். அந்த இணக்கப்பாடில்லாத பொதுவேலைத்திட்டத்திற்கு எம்மால் ஒத்துழைக்க முடியாது.

 

எமது இறுதி இலக்கு என்பது இரு தேசங்கள் ஒரு நாடு என்ற வகையில் அரசியல் தீர்வை எட்டுவதே. அதாவது எந்தத் தீர்வும் தமிழ் மக்களை ஒரு தேசமாக ஏற்றுக் கொள்வதாக இருக்கவேண்டும். சிங்களதேசமும், தமிழ்த்தேசமும் சில விட்டுக்கொடுப்புகளைச் செய்து இரு இறைமைகளையும் கூட்டி அரசியல் தீர்வை உருவாக்கலாம்.

 

இவரது உரையைத் தொடர்ந்து பலத்த வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. சுரேஷ் பிரேமச்சந்திரன் 'உங்களது கொள்கை தனிநாட்டை அல்லது கூட்டுச் சமஸ்டியை மையப்படுத்தியதாகவே இருக்கும். இன்றைய சூழலில் அக்கொள்கையை முன்கொண்டு செல்வது கஸ்டம்' எனக் கூறினார். இதற்குப் பதிலளித்த கஜேந்திரகுமார், 'நாம் சமஸ்டிக்கு எதிரானவர்களல்ல. ஆனால் தேசத்தை அங்கீகரித்த சமஸ்டியினையே ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்றோம் என்றார். உடனே சுமந்திரன் சமஸ்டிக் கொள்கைக்கு நீங்கள் வந்ததையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம். எங்களுக்கும் உங்களுக்குமிடையே பெரிய இடைவெளி இல்லை என்றார்.

 

இதற்குப் பதிலளித்த கஜேந்திரகுமார், 'இல்லை பாரிய இடைவெளி இருக்கின்றது. நீங்கள் அதிகாரப்பகிர்வுப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். நாங்கள் சுயநிர்ணய உரிமைப் பாதையை தேர்ந்தெடுத்துள்ளோம். சுயநிர்ணய உரிமைப் பாதையின் மையக்கருத்து இறைமை அதிகாரம் தமிழ்மக்களிடம் உள்ளது என்பதாகும். இருக்கின்ற இறைமையை அங்கீகரிப்பது தான் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடு. ஆனால் அதிகாரப்பகிர்வுப்பாதை என்பது இறைமை அதிகாரம் சிங்கள அரசிடம் உள்ளது. தமிழர்கள் அதனைக் கேட்டுப் பெறுவது என்பதாகும். இரு தேசங்களினதும் இறைமையை கூட்டி உருவாக்கப்படும் ஒரு தீர்வில் பின்னர் வழங்கப்பட்ட அதிகாரங்களை சிங்கள தேசம் பறிக்கமுடியாது. இதைவிட 'கூட்டமைப்பு சமஷ்டி எனக் கூறினாலும் 13வது திருத்தத்திற்குள் அரசியல் தீர்வை முடக்குவதிலேயே அக்கறையாக உள்ளது' என்றார்.

 

இறுதியில் குறைந்தபட்ச அரசியல் தீர்வை அடையாளம் கண்டு உருவாக்குவதற்கென மூவரைக் கொண்டகுழு உருவாக்கப்பட்டது. சுமந்திரன், கஜேந்திரகுமார், குருபரன் ஆகியோர் இக்குழுவிற்கு ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டனர். இக்குழு இரண்டு வாரங்களுக்குள் அரசியல் தீர்வு வரைபை உருவாக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

 

தொடர்ந்து அரசியற் கட்சிகளையும், மக்கள் குழுக்களையும் இணைத்த தமிழ்த் தேசிய சபை ஒன்றினை உருவாக்குவது பற்றி கலந்துரையாடப்பட்டது. இது விடயத்தில் ஒருமித்த கருத்தே காணப்பட்டது. ஆனால் சம்பந்தன் பேசியபோது 'மக்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கலாம். கூட்டமைப்பு முடிவெடுக்கும்' எனக் கூறினார். கூட்டமைப்புக்கு மேலாக தீர்மானம் எடுக்கும் அமைப்பு இருக்கக்கூடாது என்பதையே அவரது கருத்து வெளிக்காட்டியது.

 

சம்பந்தனின் இந்தக் கருத்தினால் கலந்துரையாடலை ஒழுங்குசெய்த சிவில் சமூகமும் குழம்பிப்போனது. 'கேட்பது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள்' என்பதுதான் உங்கள் நிலைப்பாடு என்றால் இந்தக் கலந்துரையாடலினால் எந்தவிதப் பலனும் இல்லை என சிவில் சமூத்தை சேர்ந்த யாழ்.பல்கலைக்கழக சட்டபீட விரிவுரையாளர் குருபரன் குறிப்பிட்டார். பல்வேறு பக்கதிலிருந்தும் சம்பந்தனை நோக்கி கேள்விக்கணைகள் எழும்பின. தமிழ்த்தேசிய சபை உருவாக்குவதை நீங்கள் ஏற்கிறீர்களா? இல்லையா? என்பதற்கு நேரடியாகப் பதில் கூறுங்கள் எனப் பலரும் ஒருமித்த குரலில் கேட்டனர். இந்த எதிர்ப்புகளுக்கு முகம்கொடுக்க முடியாமல் சம்பந்தன் தமிழ்த்தேசிய சபை உருவாக்குவதைத் தான் ஏற்பதாகக் குறிப்பிட்டார்.

 

தமிழ்த்தேசிய சபைக்கான முன்னோடிக்குழுவை உருவாக்குதல் என்பது பற்றி கலந்துரையாடல் தொடர்ந்து இடம்பெற்றது. சுரேஷ் பிரேமச்சந்திரன் தற்போது அந்த முன்னோடிக்குழுவை உருவாக்குவோம் என்ற யோசனையை முன்வைத்தார். ஒவ்வொரு கட்சியிலிருந்தும் 3 பேரையும் சிவில்சமூகம் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையான உறுப்பினர்களையும் முன்னோடிக்குழுவிற்கு அனுப்பலாம் என்ற ஆலோசனை சிவில்சமூகப் பிரதிநிதிகளினால் முன்வைக்கப்பட்டது. சம்பந்தனும், சுமந்திரனும் அதனை ஏற்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு தனி அமைப்பாக கருதவேண்டும். தனித்தனிக் கட்சிகளாக கருதக்கூடாது என சம்பந்தனும் சுமந்திரனும் வாதிட்டனர்.

 

கிழக்குப் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சிசபை உறுப்பினர்கள் என்போரையும் முன்னோடிக்குழுவிற்குள் உள்வாங்கவேண்டும் என சம்பந்தன் தெரிவித்தார்.

 

இவ்வாறு பலத்த வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றமையினால் முன்னோடிக்குழு அமைக்கும் முயற்சி வெற்றிபெறவில்லை. அடுத்த கூட்டத்தில் அது பற்றித் தீர்மானிப்பதாக முடிவெடுக்கப்பட்டது. முன்னோடிக் குழுவிற்குள் தமிழரசுக்கட்சியின் பெரும்பான்மை இருக்கவேண்டும் என்பதிலேயே சம்பந்தனும், சுமந்திரனும் அக்கறைப்பட்டமை விவாதத்தின்போது தெளிவாகத் தெரிந்தது.

 

மூன்றாவது முன்மொழிவாகிய மாகாணசபைத் தேர்தலைப் பொறுத்தவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும் வலுவாக முரண்பட்ட நிலையில் வாதிட்டனர். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 13வது திருத்தத்தையும் மாகாணசபை முறையையும் நாம் முழுமையாக நிராகரிப்பதாகக் குறிப்பிட்டார். இதனால் வரப்போகும் வடமாகாணசபைத் தேர்தலில் தாம் போட்டியிடாமல் புறக்கணிக்கப் போவதாகவும் குறிப்பிட்டார். எனினும் தவறானவர்கள் மாகாண நிர்வாகத்தை கைப்பற்றக்கூடாது என்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாணசபை முறையை பகிரங்கமாக நிராகரித்துவிட்டு சுயேட்சைக்குழு ஒன்றினை உருவாக்கி போட்டியிட்டால் தாம் ஆதரவளிக்கத் தயார் என்றும் குறிப்பிட்டார்.

 

சம்பந்தனும், சுமந்திரனும் மாகாணசபை முறை தமிழ்மக்களின் அபிலாஷைகளைத் தீர்க்கப் போதுமானதல்ல என்பதை ஏற்றுக்கொண்டபோதும் அதனை நிராகரிப்பதற்கு மறுத்தனர். இதற்குப் பிரதானமாக இரண்டு காரணங்களைக் கூறினர். ஒன்று சர்வதேச சமூகம் வடமாகாணசபைத் தேர்தலில் கூட்டமைப்பு போட்டியிட்டு திடமான வெற்றியைப் பெறவேண்டும் என்று எதிர்பார்க்கின்றது. இரண்டாவது, இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் மாகாணசபை முறை உருவாக்கப்பட்டமையினால் இந்தியாவிற்கு இனப்பிரச்சினை விடயத்தில் தார்மீகப் பொறுப்பு இருக்கின்றது.

 

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்விரண்டு கருத்துக்களையும் நிராகரித்தார். 'சர்வதேச சமூகம் ஆட்சிமாற்றம் ஒன்றை மட்டும் விரும்புவதால் எதிர்காலத்தில் தனது ஆதரவு ஆட்சிக்கு நெருக்கடி வரக்கூடாது என்பதற்காக அரசியல் தீர்வை 13வது திருத்தத்துடன் முடக்க விரும்புகின்றது. நாம் அதற்கு துணைபோகமுடியாது. நாம் சர்வதேச சமூகத்திடம் எமது நிலைப்பாட்டை இடித்துக் கூறவேண்டும். வெறுமனவே அவர்களின் நிகழ்ச்சி நிரல்களுக்குப் பின்னால் இழுபட்டுப்போவதாக நாம் இருக்கக்கூடாது. தமிழ்மக்களுடைய பிரச்சினைகள் பற்றி தமிழ்மக்களை விட சர்வதேச சமூகத்திற்கு அதிகம் தெரியும். பூகோள அரசியல் காரணமாக அவர்களுக்கு தமிழ்மக்கள் தேவை. இது விடயத்தில் வெறும் கருவிகளாக மட்டும் நாம் இருக்கமுடியாது' எனக் கூறினார்.

 

இரண்டாவது கருத்தை நிராகரிக்கும் போது 'இலங்கை - இந்திய ஒப்பந்தம் வேறு. 13வது திருத்தம் வேறு எனக் குறிப்பிட்டார். இலங்கை - இந்திய ஒப்பந்தம் இலங்கையில் இந்தியாவின் செல்வாக்கினை நிலைநிறுத்துவதற்கான ஆவணம். ஒப்பந்தத்தின் இணைப்புகளில் இவை மிகத்தெளிவாக உள்ளன. 13வது திருத்தமே தமிழ்மக்களின் விவகாரத்துடன் தொடர்புடையது. அதனை நிராகரிப்பது இலங்கை - இந்திய ஒப்பந்தத்தினை நிராகரிப்பதாக அமையாது. அவ்வாறு நிராகரிக்கவேண்டிய அவசியமும் தமிழ்மக்களுக்கு இல்லை. இலங்கை - இந்திய ஒப்பந்தம் தமிழ்மக்கள் தொடர்பாக தார்மீகப் பொறுப்பைக் கொடுத்துவிடாது. நீண்டகாலமாக 13வது திருத்தத்தினை நிராகரித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது அதனை ஏற்பது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல' என்றும் குறிப்பிட்டார்.

 

விவாதம் நீண்டுகொண்டு போனபோதும் மாகாணசபை தேர்தல் தொடர்பாக எந்தவொரு உடன்பாடும் எட்டப்படவில்லை. கூட்டமைப்பு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதென ஏற்கனவே தீர்க்கமாக முடிவெடுத்துவிட்டது. பேச்சுக்கு மாகாணசபை முறையினை முழுமையான ஒன்றாக ஏற்கவில்லை எனக் கூறினாலும் வெளிப்படையாக அதனைச் சொல்ல அவர்கள் தயாராக இல்லை. ஏற்கவில்லை எனின் ஏன் போட்டியிடவேண்டும்? என்ற கேள்வி எழலாம் என்பதனால் வெளிப்படையாகக் கூறத் தயங்குகின்றனர்.

 

அவர்களைப் பொறுத்தவரை மாகாணசபை முறையை அரசியல் தீர்வின் ஆரம்பப்படியாக கருதுகின்றனர். தொடர்ந்து கட்டம் கட்டமாக முன்னேறலாம் என்பது அவர்களது கருத்தாக உள்ளது. ஆனால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆரம்பப்படியாகக் கூட அதனைக் கொள்ளமுடியாது என வாதிடுகின்றது.

 

இறுதியில் யூன் மாதம் 8ம் திகதி திரும்பவும் கூடுவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமாவது தமிழ்த் தேசிய சபை பற்றி ஓர் இணக்கப்பாட்டிற்கு வருவார்களா?

 

நம்பிக்கை கொள்ளும் அளவிற்கு களச்சூழல் இருப்பதாகத் தெரியவில்லை.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=918bc6a0-6cc4-453f-a715-7df0b3e746af

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்விரண்டு கருத்துக்களையும் நிராகரித்தார். 'சர்வதேச சமூகம் ஆட்சிமாற்றம் ஒன்றை மட்டும் விரும்புவதால் எதிர்காலத்தில் தனது ஆதரவு ஆட்சிக்கு நெருக்கடி வரக்கூடாது என்பதற்காக அரசியல் தீர்வை 13வது திருத்தத்துடன் முடக்க விரும்புகின்றது. நாம் அதற்கு துணைபோகமுடியாது. நாம் சர்வதேச சமூகத்திடம் எமது நிலைப்பாட்டை இடித்துக் கூறவேண்டும். வெறுமனவே அவர்களின் நிகழ்ச்சி நிரல்களுக்குப் பின்னால் இழுபட்டுப்போவதாக நாம் இருக்கக்கூடாது. தமிழ்மக்களுடைய பிரச்சினைகள் பற்றி தமிழ்மக்களை விட சர்வதேச சமூகத்திற்கு அதிகம் தெரியும். பூகோள அரசியல் காரணமாக அவர்களுக்கு தமிழ்மக்கள் தேவை. இது விடயத்தில் வெறும் கருவிகளாக மட்டும் நாம் இருக்கமுடியாது' எனக் கூறினார்.

 

இரண்டாவது கருத்தை நிராகரிக்கும் போது 'இலங்கை - இந்திய ஒப்பந்தம் வேறு. 13வது திருத்தம் வேறு எனக் குறிப்பிட்டார். இலங்கை - இந்திய ஒப்பந்தம் இலங்கையில் இந்தியாவின் செல்வாக்கினை நிலைநிறுத்துவதற்கான ஆவணம். ஒப்பந்தத்தின் இணைப்புகளில் இவை மிகத்தெளிவாக உள்ளன. 13வது திருத்தமே தமிழ்மக்களின் விவகாரத்துடன் தொடர்புடையது. அதனை நிராகரிப்பது இலங்கை - இந்திய ஒப்பந்தத்தினை நிராகரிப்பதாக அமையாது. அவ்வாறு நிராகரிக்கவேண்டிய அவசியமும் தமிழ்மக்களுக்கு இல்லை. இலங்கை - இந்திய ஒப்பந்தம் தமிழ்மக்கள் தொடர்பாக தார்மீகப் பொறுப்பைக் கொடுத்துவிடாது. நீண்டகாலமாக 13வது திருத்தத்தினை நிராகரித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது அதனை ஏற்பது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல' என்றும் குறிப்பிட்டார்.

மிகச் சரியான கருத்து 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.