Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனா செல்லும் மகிந்தவின் திட்டம் என்ன? - செய்தித்துளிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீனா செல்லும் மகிந்தவின் திட்டம் என்ன? - செய்தித்துளிகள்
[ புதன்கிழமை, 22 மே 2013, 08:29 GMT ] [ கார்வண்ணன் ]

 

சிறிலங்கா அதிபரின் சீனப் பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையில் முக்கிய பல உடன்பாடுகள் கையெழுத்திடப்படவுள்ளதாக சீனாவுக்கான சிறிலங்கா தூதுவர் ரஞ்சித் உயங்கொட தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வரும் 27ம் நாள் தொடக்கம் 30ம் நாள் வரை சீனாவில் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இதனை உறுதிப்படுத்திய சீனாவுக்கான சிறிலங்கா தூதுவர் ரஞ்சித் உயங்கொட,

“சிறிலங்கா அதிபரின் பயணத்தின் போது, அரசியல், பொருளாதார, கலாசார மற்றும் சுற்றுலா தொடர்பான பல உடன்பாடுகள் இரு நாடுகளுக்கும் இடையில் கையெழுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீன அதிபர் ஜி ஜின்பிங், சீனப் பிரதமர் லி கெகியாங் ஆகியோரை சிறிலங்கா அதிபர் பெய்ஜிங்கில் தங்கியிருக்கும் போது சந்தித்துப் பேசுவார்.

அதேவேளை, சீனத் துணை அதிபர் லி யுவான்சாவோவை, சான்சி மாகாணத் தலைநகர் ஜியானில் நடைபெறவுள்ள சுற்றாடல் தொடர்பான மாநாட்டின் பக்க நிகழ்வாக அவர் சந்தித்துப் பேசவுள்ளார்.

அத்துடுன் வரும் 28ம் நாள் பெய்ஜிங்கில் இருநாட்டு வர்த்தகர்களும் தமக்கிடையிலான உறவுகளை விரிவுபடுத்திக் கொள்வது குறித்த கூட்டம் ஒன்றிலும் சிறிலங்கா அதிபர் பங்கேற்கவுள்ளார்” என்றும் ரஞ்சித் உயங்கொட தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பைத் திருத்தும் திட்டமில்லையாம்

வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக, மாகாணசபைகளின் அதிகாரங்களைப் பறிக்கும் அரசியலமைப்புத் திருத்தத்தை மேற்கொள்ளப் போவதில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இன்று கொழும்பில் அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா,

“அரசியலமைப்பில் மாற்றம் செய்யும் எந்த திட்டத்தையும் சிறிலங்கா அரசாங்கம் கொண்டிருக்கவில்லை.

தற்போதைய அரசியலமைப்பில் எத்தகைய மாற்றத்தை செய்வதானாலும், குறிப்பாக 13வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான மாற்றங்கள் எதுவும், எல்லா அரசியல் கட்சிகளும் பங்கேற்கும் தெரிவுக்குழுவின் மூலமே செய்யப்பட வேண்டும் என்பதை சிறிலங்கா அதிபர் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

இந்தநிலையில் அரசியலமைப்பு மாற்ற முயற்சிகள் ஏதும் இடம்பெறவில்லை.

13வது திருத்தம் தொடர்பான விவாதங்கள் நீண்டகாலமாகவே நடக்கின்றன. அது இப்போது தான் புதிதாக நடக்கின்ற விவாதம் அல்ல.

13வது திருத்தம் இன்னமும் கூட நடைமுறையில் உள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை சிறிலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமயவை சேர்ந்த அமைச்சரான சம்பிக்க ரணவக்க, அரசியலமைப்பைத் திருத்தும் யோசனையை தனிநபர் பிரேரணையாக அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக நேற்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு சொட்டு எண்ணெய் கூட ஈரானில் இருந்து இறக்குமதி செய்யவில்லையாம்

அமெரிக்கா விதித்துள்ள தடையினால், கடந்த ஆண்டு ஜுன் மாதத்துக்குப் பின்னர், ஈரானிடம் இருந்து ஒரு சொட்டு மசகு எண்ணெயைக் கூட சிறிலங்கா இறக்குமதி செய்யவில்லை என்று சிறிலங்காவின் பெற்றோலிய கைத்தொழில் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.

“ஈரானிடம் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா 2011ம் ஆண்டு ஜுன் மாதம் தடைவிதித்தது.

அதையடுத்து ஒரு ஆண்டு காலத்தில், நாட்டின் எரிபொருள் தேவையில் 20 வீதத்தை ஈடுசெய்யத்தளக்களவு எண்ணெயை முதல் அரையாண்டிலும், 10 வீதத்தை ஈடுசெய்யத்தக்களவு எண்ணெயை அடுத்த அரையாண்டிலும் சிறிலங்கா இறக்குமதி செய்தது.

அதன் பின்னர், அதாவது 2012 ஜுனுக்குப் பின்னர் ஒரு சொட்டு மசகு எண்ணெய் கூட ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்படவில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கு மேலும் கடனாளியாகிறது சிறிலங்கா

சீன அபிவிருத்தி வங்கியிடம் இருந்து 580 மில்லியன் டொலர் கடனைப் பெறுவதற்கு சிறிலங்கா உடன்பாடு ஒன்றில் கையெழுத்திடவுள்ளது.

2013ம் ஆண்டில் சிறிலங்காவில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்களுக்காகவே இந்தக் கடன் உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு நிதியமைச்சர் என்ற வகையில் சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி வழங்கியது.

சீன அபிவிருத்தி வழங்கி மற்றும் சீன ஏற்றுமதி இறக்குமதி வங்கி என்பன சிறிலங்காவின மின்சக்தி, வீதிகள், துறைமுகங்கள் அமைப்பு போன்ற உட்கட்டமைப்புப் பணிகளில் ஈடுபடும் சீன ஒப்பந்த நிறுவனங்கள் மற்றும் விநியோக நிறுவனங்களுக்கு கடன்களை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.com/view.php?20130522108309

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.