Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அத்வானி ராஜினாமா நாடகமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

த்வானியின் ராஜினாமா விவகாரம் டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பிரதமர் பதவிக்கு குறிவைத்தே அவர் இந்த  ராஜினாமா நாடகத்தை அரங்கேற்றி இருப்பதாக அத்வானியின் நடவடிக்கைகளை நன்கு அறிந்த அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

பிரதமர் பதவி

பிரதமர் பதவி மீது அத்வானிக்கு இருக்கும் தீரா காதல் நாடறிந்த ஒன்று. தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதிலும், அதற்கு முன்னதாக அந்த பதவிக்கு வர துடியாய் துடித்தார் அத்வானி. ஆனால் பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தால் அத்வானி மீது படிந்த தீவிர இந்துத்துவா தலைவர் என்ற இமேஜ் அதற்கு வில்லனாய் அமைந்தது. அத்வானியை பிரதமராக ஏற்க தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் ஒப்புக்கொள்ளவில்லை என்பதால், மிதவாத முகமூடி கொண்ட வாஜ்பாய் பிரதமரானார்.

அதனைத்தொடர்ந்து 2005 ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலாவது தமது பிரதமர் பதவி கனவை நிறைவேற்றிவிடலாம் என எதிர்பார்த்திருந்தார் அத்வானி. இதற்காக தம்மீதான தீவிர இந்துத்துவா தலைவர் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் என்ற இமேஜை அகற்றுவதற்காக பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு முகம்மது அலி ஜின்னாவின் கல்லறைக்கு சென்று, அவரை மதச்சார்பற்ற தலைவர் என்றெல்லாம் புகழ்ந்தார். இதற்காக பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களிடம் நன்றாக வாங்கியும் கட்டிக்கொண்டார்.

நோக வைத்த மோடி

 

 

இருப்பினும் அத்வானியின் அந்த தந்திரம் அப்போதும் எடுபடவில்லை. 2005 தேர்தலிலும், அதனைத் தொடர்ந்து வந்த 2009 தேர்தலிலும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து மண்ணை கவ்வ, அத்வானியால் தனது கனவு பதவியை அடையவே முடியவில்லை. இதனால் அப்போதிருந்தே அத்வானி சற்று மனமுடைந்துதான் போனார். 

இருப்பினும் தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல, 2014 தேர்தலிலாவது தனது கனவை நிறைவேற்றிக்கொள்ளலாம் என்று இருந்தவருக்கு, குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி ரூபத்தில் வந்தது வினை. பா.ஜனதாவில் மோடிக்கு அதிகரித்த செல்வாக்கு, அவரை கட்சியின் அடுத்த பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் அளவுக்கு வளர்ந்ததால் நொந்தேபோனார் அத்வானி.

தளராத நம்பிக்கை

இருப்பினும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள நிதிஷ் குமார் போன்ற தலைவர்கள் மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள எதிர்ப்பு தெரிவித்து வருவதால், தனக்கான வாய்ப்பு இன்னும் மங்கிப்போய்விடவில்லை என்றே அத்வானி கருதினார்.

Modi%20as%20Chairman%20of%20BJP%20Electi

இந்நிலையில்தான் கடந்த ஞாயிறன்று கோவாவில் நடைபெற்ற பா.ஜனதா தேசிய செயற் குழு கூட்டத்தில், கட்சியின் தேர்தல் பிரச்சார குழு தலைவராக நரேந்திரமோடி தேர்வு செய்யப்பட்டார். இது மோடிதான் பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் என்பதை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்த, அதிர்ச்சி மற்றும் ஆத்திரத்தின் உச்சத்திற்கே சென்றார் அத்வானி.

அரசியல் தந்திரம்

இதனையடுத்துதான், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை தவிர இதர அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங்கிற்கு தமது உதவியாளர் மூலம் ராஜினாமா கடிதத்தை அனுப்பினார் அத்வானி. அதே சமயம் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்யவில்லை.

இங்குதான் இருக்கிறது அத்வானியின் சூட்சுமும், அரசியல் தந்திரமும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். அத்வானி தனது ராஜினாமா கடிதத்தில், "ஷியாமா பிரசாத் முகர்ஜி, தீன் தயாள் உபாத்யா, நானாஜி தேஷ்முக் மற்றும் வாஜ்பாய்  போன்ற பல்வேறு தலைவர்களின் கொள்கைகளோடு உருவாக்கப்பட்ட கட்சியில் தற்போது அந்த கொள்கைகள் இல்லை. எனவே, பாஜகவின் தேசிய செயற்குழுவில் இருந்தும், நாடாளுமன்றக் குழுவில் இருந்தும், தேர்தல் குழுவில் இருந்தும் விலகிக் கொள்வதாக முடிவு செய்துள்ளேன்" என்று கூறியுள்ளார்.

" அத்வானி குறிப்பிடுவதுபோன்று, ஷியாமா பிரசாத் முகர்ஜி, தீன் தயாள் உபாத்யா போன்ற தலைவர்கள் வகுத்த கொள்கைகள் பா.ஜனதாவில் இல்லை என்றால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகி பா.ஜனதாவுக்கே முழுக்கு போட வேண்டியதுதானே...? அடிப்படை உறுப்பினராக இன்னமும் நீடிப்பது ஏன்...? " என்று கேள்வி எழுப்பும் அரசியல் நோக்கர்கள், அதற்கான பதிலையும் சொல்கின்றனர். அதாவது "பா.ஜனதாவின் அடிப்படை உறுப்பினர் பதவியையும் துறந்துவிட்டால், அவரால் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர் பதவியில் நீடிக்க முடியாது. அதாவது பா.ஜனதாவில் நீடித்தால்தானே, தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிக்க முடியும்?" என்கின்றனர்.

அத்வானி போடும் அரசியல் கணக்கு

தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர் பதவியை கைவிடாததே, அத்வானிக்கு இன்னமும் பிரதமர்vp%20sing.jpg பதவியை கைப்பற்ற வாய்ப்புள்ளது என்ற நம்பிக்கைதான் காரணம். அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் எந்த ஒரு கட்சி அல்லது கூட்டணிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்காது.

அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படும்பொழுது தம்மை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தினால், காங்கிரசை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்காக இடதுசாரி கட்சிகளும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மோடியை விரும்பாத மதச்சார்பற்ற சக்திகளும் தம்மை நிச்சயம் ஆதரிக்கும் என அத்வானி கருதுகிறார்.

இடதுசாரிகள் எப்படி ஆதரிப்பார்கள்? என்ற கேள்விக்கு, 1980 களின் இறுதியில் காங்கிரஸ் ஆட்சியில் அமர்ந்துவிடக்கூடாது என்பதற்காக, வி.பி. சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசை பா.ஜனதா மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட ஒன்றுக்கொன்று முரண்பட்ட கட்சிகள் ஆதரித்தது போன்று இப்போதும் ஆதரிக்க வாய்ப்புள்ளதாக  அத்வானி எண்ணுவதாகவும், அதனை கருத்தில்கொண்டே அவர் இத்தகைய ராஜினாமா நாடகத்தை அரங்கேற்றி உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

அத்வானி கடந்த காலங்களிலும் இதேப்போன்று 2 முறை ராஜினாமா நாடகங்களை அரங்கேற்றி, பின்னர் அதனை வாபஸ் பெற்ற வரலாறு உள்ளதால், மேற்கூறிய கருத்துக்களை ஒதுக்கித்தள்ளிவிட முடியாது என்கிறது டெல்லி வட்டாரம்.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=15960

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.