Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

11500 வருடங்களுக்கு முன்பே இருந்த தமிழ் கடற்கரை நகரம்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

11500 வருடங்களுக்கு முன்பே இருந்த தமிழ் கடற்கரை நகரம்!!

பூம்புகார் – காவேரிப் பூம்பட்டினம். பண்டைக்கால சோழர்களின் தலைநகரம். இந்த நகரம் பற்றி தமிழ் பாடம் படிக்கும்போது கடலால் அழிந்துபோன நகரம் என்று மட்டும்சொல்லி முடித்துவிடுவார்கள். இந்த நகரம் எப்படி இருந்தது, ஏன் அழிந்தது, மக்கள் வாழ்க்கை முறை எப்படியிருந்தது என்ற உண்மைகளை அறிந்தால் உலக நாகரீங்களுக்கெல்லாம், ஏன் உலக மொழிகளுக்கெல்லாம் முன்னோடி நாம்தான் என்ற உண்மை வெளிப்படும்.

சோழர்களின் தலைநகமான பூம்புகார் தமிழகத்தின் தற்போதைய நாகை அருகே 11500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்தே இந்நகரம் இருந்ததாக ஆய்வில் தெரியவருகிறது. மிகப்பெரிய துறைமுகமாகவும், உலக வர்த்தகத்திற்கான சந்தையாகவும் இருந்திருகிறது. சிலப்பதிகாரம், பட்டினப்பாலை, மணிமேகலை உள்ளிட்ட நூல்களில் இந்நகரம் பற்றி போற்றுகின்றன. 2000 ஆண்டுகளுக்கு முன் கடல்கோளால் (சுனாமி) இந்நகரம் அழிந்துபோனது.இந்திய ஆழ்கடல் ஆராய்ச்சி நிலையம் பணப்பற்றாக்குறையால் இந்நகரம் பற்றி ஆராய்வதை நிறுத்திவிட்டது. திட்டமிட்டு நிறுத்தப்பட்டதா என்பது தெரியவில்லை.

பூம்புகார் நகரத்தையும், குஜராத்தின் கடற்கரையில் (மும்பைக்கு மேற்கே) இருந்த துவாரக நகரத்தையும் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்த இங்கிலாந்துக்காரர் கிரகாம் ஹன்காக் (Graham Hancock) ஒரு வீடியோவை (Underworld: Flooded Kingdoms Of The Ice Age) வெளியிட்டார். அதில் கடலுக்கடியில் இந்நகரம் இருந்த இடத்தில் இன்னும் கற்களாலான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச்சுவர், பாத்திரங்கள், குதிரைவடிவ பொம்மைகள், காணப்படுகின்றன. இந்த ஆராய்ச்சி முடிவுகளெல்லாம் வெளியானது 2002ல். இன்றுவரை அதுபற்றியெல்லாம் யாரும் கவலைப்படவில்லை.

தமிழர்கள் நாம் நம்மைப்பற்றி என்ன ஆராய்ச்சி செய்துள்ளோம்? இனியாவது தமிழக அரசு இந்த ஆராய்ச்சியை முன்னெடுக்குமா?

via இயற்கையே கடவுள்

தமிழ் -கருத்துக்களம்-

1017081_491186290949467_1200354629_n.jpg

 

தமிழன் வரலாறு என்றா கிண்டியன் வேணும் எண்டே ஆராச்சி செய்ய மாட்டான் 

தமிழ் நாட்டில் இன்னும் தமிழர்கள் இருக்கிறார்கள் தானே..
ஏன் சீமான், வைகோ போன்றவர்கள் தங்களது தொண்டர்களில் யாரையாவது இதுகளை
பற்றி ஆராய்ச்சி செய்ய சொல்லி ஆதரிக்க கூடாது? (அதுக்காகவாவது தாமில் நாட்டு சனம் அவர்களை திரும்பி பார்ப்பார்கள் )
இந்தியாவில் (கல்லூரிகளில்) உள்ள பெரிய பிழை அங்கே சுயமாக சிந்தித்து ஆராய்ச்சி
செய்வது குறைவு...தமிழ்நாடாவது அந்த வட்டத்திலிருந்து விடுபட்டால் தமிழ்நாட்டுக்காவது நல்லம்..இது போன்ற ஆராய்சிகளை "தமிழர்கள்" ஊக்குவிக்க வேண்டும் ..எல்லாத்துக்கும் "வடக்கே' பார்த்தால்....நாமம் தான்,


தமிழன் வரலாறு என்றா கிண்டியன் வேணும் எண்டே ஆராச்சி செய்ய மாட்டான் 

 

தமிழன் வரலாற்றை தமிழன் தான் ஆராய்ந்து எழுதி ஆவணப்படுத்த வேண்டும்..
தமிழ்நாட்டில் கல்லூரிகளும் பல்கலைக்கழங்களும் இருக்கின்றனதானே
 

பல தமிழ் ஆராச்சிகளுக்கு இந்திய அரசு தடைவிதித்துள்ளது

"தமிழர்கள்" ஊக்குவிக்க வேண்டும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆதி காலம் தொட்டே தமிழர்களுக்கும் இந்தியாவிலுள்ள மற்றவர்களுக்கும் போராட்டம் தான் நடந்து வருகிறது. காரணம் இன்றிலிருந்து 2500 ஆண்டுகளுக்கு முன் இந்திய துனைக்கண்டம் முழுவதும் தமிழரும், தமிழும்தான் ஆட்சி செய்தது. சூழ்ச்சியினாலும், மோதல்களை தமிழர்களுக்கிடையே உருவாக்கியும் இன்று தமிழினம் அத்தனையையும் இழந்து நிற்கிறது. தமிழ், தமிழர் வரலாறு வெளியே வந்தால் தமிழன் விளித்துக்கொள்வான் என்பதனை அறிந்த எதிரிகள் இன்றுவரை தமிழ், தமிழர் வரலாறுகள் வெளியே வர அனுமதிப்பதில்லை. கட்டப்பட்ட கை, கால்களுடன் இந்தியம் என்ற மிகப்பெரிய பாரங்கல்லையும் சேர்த்து இழுத்துக்கொண்டுதான் ஒவ்வொரு தமிழனும் இன்று இந்தியாவில் இருக்கின்றனர்.  இதுதான் இன்றைய  தமிழ் நாட்டின் நிலை.

 

மட்டக்களப்பான் மடையன், யாழ்ப்பாணத்தான் தான் உயர்ந்தவன், இந்திய தமிழன் தீண்டப்படத்தகாதவன் எனும் மமதையோடு சிங்களத்தை கொண்டாடியவன் தமிழீழத் தமிழன்.

 

அதன் பலன் தமிழ்நாட்டு தமிழனின் மற்றும் தமிழீழத் தமிழனின் எதிரிகள்தான் இன்று ஆண்டுகொண்டிருக்கின்றனர். தமிழர்களாகிய நாம் அடிமைப்பட்டு கிடக்கிறோம் என்பது நமது மண்டையில் உறைத்தால்தானே விடுதலையை எதிர்நோக்குவோம். அதற்கான காலம் விரைவில் கனியும் என்பதுதான் என் எதிர்பார்ப்பு. உலக தமிழர்களாக நாம் இன்றைய சூழலில் ........... தமிழர் வைப்பகம், தமிழர் விமானச்சேவை, .........தமிழர் ஊடகம் .............இன்னும் பல..... எல்லாம் உலகளாவிய அளவில் நமக்கு வேண்டும். எனக்கு முந்திய தலைமுறை இவைகள் இல்லாமல் இருந்திருக்கலாம், இன்றைய என் தலைமுறை இவைகளை என் அடுத்த தலைமுறைக்கேனும் உருவாக்கியாகனும். இதுதான் இன்றைய தமிழர்களாகிய நம் முன்னால் உள்ள சவால். சவாலை சந்திக்க நீங்கள் தயாரா தமிழர்களே?

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில்  இருக்கிறது

குடும்பி  மட்டும் டில்லியில் இருக்கிறது

அங்க இங்க கைவைத்தால் பிரம்புடன் வந்து நிற்பார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.