Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள கடற்படைக்கு இந்தியா உதவினால் மன்னிக்க முடியாத அக்கிரம

Featured Replies

854 பேருடன் தத்தளிக்கும் சிங்கள கடற்படைக்கு இந்தியா உதவினால் மன்னிக்க முடியாத அக்கிரமம்: மன்மோகனுக்கு வைகோ எச்சரிக்கை

[புதன்கிழமை, 2 ஓகஸ்ட் 2006, 16:14 ஈழம்] [புதினம் நிருபர்]

தமிழீழ கடற்பரப்பில் நுழைந்து முற்றுகைக்குள்ளாக்கி தற்போது சர்வதேச கடற்பரப்பில் தத்தளிக்கும் 854 சிங்கள இராணுவத்தினரைக் கொண்ட கப்பலை பாதுகாப்பாக மீட்க இந்தியா உதவக் கூடாது என்று தமிழ்நாட்டின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வைகோ இன்று புதன்கிழமை அனுப்பிய கடிதம்:

இலங்கை தீவில் போர் மேகங்கள் சூழ்ந்து உள்ளன. போர்நிறுத்த ஒப்பந்தத்தை திட்டமிட்டே மீறி உள்ள இலங்கையின் இனவாத சிங்கள அரசு, தமிழர்கள் மீது தனது இனக்கொலை தாக்குதலை தீவிரப்படுத்த முப்படைகளையும் ஏவி உள்ளது. பெண்கள், குழந்தைகள் உள்பட அப்பாவி தமிழர்கள் குண்டுவீச்சால் கொல்லப்படுகின்றனர்.

தமிழர்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் ஊடுருவக்கூடாது என்றும், தாக்குதல் நடத்தக் கூடாது என்றும் விடுதலைப் புலிகள் தெடர்ந்து செய்த எச்சரிக்கையை மீறி இலங்கை அரசு பீரங்கி தாக்குதலையும், குண்டுவீச்சையும் தொடர்ந்து நடத்துவதால் தமிழர் பகுதிகளையும், தமிழ் மக்களையும் பாதுகாக்க விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல் நடத்துகின்றனர். தமிழர்கள் மீது அறிவிக்கப்படாத யுத்தத்தை இலங்கை அரசு தொடுத்துவிட்டது.

இந்த சூழ்நிலையில் இலங்கை காவல்துறையைச் சேர்ந்த 44 பேர்களுக்கு தமிழ்நாட்டில் கோவையில் மத்திய பாதுகாப்பு காவல் துறை தளத்தில் இந்தியா பயிற்சி கொடுக்கின்ற செய்தி அதிர்ச்சி ஊட்டுகின்றது.

உடனடியாக இந்த பயிற்சி நிறுத்தப்பட்டு சிங்கள காவல்துறையினரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பன்னாட்டு ஊடகங்களின் வாயிலாக கிடைத்து உள்ள நம்பகரமான தகவல்களின்படி தமிழர் பகுதிகளில் தாக்குதல் நடத்துவதற்காக 854 ஆயுதந்தாங்கிய சிங்கள துருப்புக்களை ஏற்றிக் கொண்டு இலங்கை கடற்படை கப்பல் ஈடுபடுத்தப்படுகிறது என்ற செய்தியை நான் அறிகிறேன்.

அத்துடன் சம்பந்தப்பட்ட இலங்கை கடற்படை கப்பலுக்கு பாதுகாப்பு கொடுக்கவும், உதவி செய்யவும் இந்திய கடற்படையின் உதவியை நாடி இலங்கை அதிபர் ராஜபக்சே இந்திய பிரதமரிடம் பேசி உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

அப்படி ஏதாவது உதவியை இந்தியா இலங்கைக்கு செய்ய முற்பட்டால் அது மன்னிக்க முடியாத அக்கிரமமான செயல் ஆகும். தமிழர்களுக்கு எதிரான இலங்கையின் இராணுவ நடவடிக்கைக்கு துணை போகும் காரியமாகவே முடியும் என்பதை தெரிவிக்கிறேன்.

எனவே தமிழர்களுக்கு எதிராக அப்படிப்பட்ட கொடிய தவறினை இந்திய அரசு செய்ய முற்படாது என்று நம்புகிறேன்.

இந்தியர்களுக்கு எதிராகவும், தமிழர்களுக்கு எதிராகவும் உள்ள சிங்கள இனவாத குழுக்களால் ஆட்டுவிக்கப்படும் இலங்கை அரசுக்கு எந்தவிதமான உதவியையும் இந்தியா செய்யக்கூடாது என்பதை வேதனையோடு வலியுறுத்துகிறேன் என்று வைகோ அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்தி: இந்திய உதவிக்காக காத்திருக்கிறது 854 சிங்கள இராணுவத்தினரைக் கொண்ட கப்பல்

http://www.eelampage.com/?cn=27950

அட உது என்ன புதுமை..???

அதுசரி உது ஏன் இன்னும் சர்வதேச ஊடகங்களில் வரேல்லை...??? ஒருவேளை வினித்... சா இருக்காது...! வைகோ பொய் சொல்லுகிறாரோ...??

  • தொடங்கியவர்

சிங்கள இராணுவத்துக்கு உதவினால் தமிழ்நாட்டில் கடும் விளைவுகள் ஏற்படும்: பழ.நெடுமாறன் எச்சரிக்கை

[புதன்கிழமை, 2 ஓகஸ்ட் 2006, 16:50 ஈழம்] [ம.சேரமான்]

ஈழத் தமிழர்களை மனிதாபிமானமில்லாமல் கொன்று குவிக்கும் சிங்கள இராணுவத்துக்கு உதவுகிற இழிசெயலை இந்தியா செய்தால் தமிழ்நாட்டில் கடும் விளைவுகள் ஏற்படும் என்று தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் எச்சரித்துள்ளார்.

அவுஸ்திரேலிய இன்பத் தமிழ் வானொலிக்கு இன்று புதன்கிழமை பழ.நெடுமாறன் அளித்த நேர்காணல்:

திருகோணமலையில் வாழையடி வாழையாக வாழ்ந்து வந்த தமிழர்களைக் கொன்று குவித்த ஒரு இராணுவம்- அதுவும் அண்மையில் சில மாதங்களாக தொடர்ந்து இனவெறிப் படுகொலைகளை திருகோணமலை பகுதியில் செய்த சிங்கள இராணுவம், இன்றைக்கு விடுதலைப் புலிகளை எதிர்கொள்ள முடியாமல் தப்பி ஓடுவதற்கு, உயிர் பிழைப்பதற்கு இந்தியாவின் உதவியை நாடுகிறார்கள் என்ற செய்தி எங்களைப் போன்றவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.