Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓயாத அலைகள் 5 !!!!????

Featured Replies

ஓயாத அலைகள் 5 !!!!????

.......மாவிலாறு மற்றும் அதை அண்டியுள்ள ஈச்சிலம்பற்று போன்ற பகுதிகளை சிறிலங்கா அரசு கைப்பற்ற விரும்புவதற்கு வேறு காரணங்களும் உண்டு. வெருகல் பகுதியில் உள்ள இந்த இடங்களை கைப்பற்றி தக்க வைப்பதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விடுதலைப்புலிகளின் பிரதேசத்திற்கும் திருகோணமலையில் உள்ள விடுதலைப்புலிகளின் பிரதேசத்திற்குமான தரைவழித் தொடர்பை துண்டாட முடியும். இதன் மூலம் இரு மாவட்டங்களிலும் உள்ள விடுதலைப்புலிகளை தனிமைப்படுத்த முடியும். ஆகவே தற்பொழுது சிறிலங்கா இராணுவம் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கையானது மாவிலாறு அணை சம்பந்தப்பட்ட விடயமாக மட்டும் கருத முடியாது.........

.......சிறிலங்கா இராணுவம் வடக்கில் இருந்து படையினரையும் கனரக ஆயுதங்களையும் வரவழைத்து தனது முழுப் பலத்தையும் பயன்படுத்தி ஒரு பெரும் இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தால், அதை சமாளிக்கும் பலம் கிழக்கில் விடுதலைப்புலிகளுக்கு உள்ளதா என்ற ஒரு கேள்வி இங்கு எழுப்பப்படலாம். ஆனால் சிறிலங்கா இராணுவம் அவ்வாறான ஒரு நடவடிக்கையில் இறங்கினால் விடுதலைப்புலிகள் யாழ்குடா மீதோ, திருகோணமலை மீதோ பாய்ச்சல் நடத்துவார்கள் என்பதை சிறிலங்கா இராணுவம் நன்கு உணர்ந்தே உள்ளது. ஈச்சலம்பற்றை விட யாழ்குடாவும், திருகோணமலையும் முக்கியமானவை என்பதால், சிறிலங்கா இராணுவம் ஒரு பெரும் இராணுவ நடவடிக்கையில் இறங்காது என்று கருதலாம்.......

இது நாம் மூன்று நாட்களுக்கு முன்பு வெளியிட்ட செய்திகளின் ஆய்வின் சில பகுதிகள். இதில் கூறப்பட்டிருந்தது போன்றே திருகோணமலை மாவட்டத்தையும் மட்டக்களப்பு மாவட்டத்தையும் துண்டாடும் பொருட்டு இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்த சிறிலங்கா இராணுவம் கடைசியில் பலத்த இழப்புக்களை சந்தித்து பின்வாங்கி ஓடியது.

அதே வேளை மாவிலாறு நோக்கி சிறிலங்கா இராணுவம் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு படை நடவடிக்கையையே மேற்கொள்ளும் என்றும், பாரிய இராணுவ நடவடிக்கையில் இறங்காது என்றும் நாம் கருதியிருந்தோம். அப்படி சிறிலங்கா இராணுவம் பாரிய இராணுவ நடவடிக்கையில் இறங்கினால் விடுதலைப்புலிகள் திருகோணமலை நோக்கி பாய்ச்சலை ஆரம்பிப்பார்கள் என்பதை சிறிலங்கா இராணுவம் அறிந்திருக்கும் என்றும் கருதினோம். ஆனால் நாம் சிறிலங்கா இராணுவத்தின் புத்திசாலித்தனம் குறித்து அதிகமாக மதிப்பிட்டு விட்டோம். சிறிலங்கா இராணுவம் துணைத் தளபதியாகிய நந்தா மல்லிவாராய்ச்சியின் தலைமையில் "நீர்த்துளி" என்னும் பெயரில் தனது அனைத்த வளங்களையும் பயன்படுத்தி மாவிலாறு, ஈச்சலம்பற்று பகுதியை நோக்கி பாரிய படை நடவடிக்கையை மேற்கொண்டது.

தற்பொழுது திருகோணமலையின் முக்கிய நகராகிய மூதூரை நோக்கி விடுதலைப்புலிகள் தமது பாய்ச்சலையும் ஆரம்பித்துவிட்டார்கள். கட்டைபறிச்சான், தோப்பூர், செல்வநகர், மூதூர், என்று பல பகுதிகள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் வந்து கொண்டிருக்கின்றன. தற்பொழுது மாவிலாறுக்கு வடக்காக உள்ள மகிந்தபுரவில் சண்டை நடப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. மகிந்தபுரம் கைப்பற்றப்பட்டு விடுதலைப்புலிகளின் படையணிகள் தொடர்ச்சியாக சேருவில் பகுதி நோக்கியும் நகர்வார்களானால், அது சிறிலங்கா அரசுக்கு மிகப் பெரிய அவமானகரமான தோல்வியாகப் போய்விடும். சேருவில் பகுதிக்கு வருகின்ற நீரை தடுப்பதாக சொல்லியே மாவிலாறு நடவடிக்கையை சிறிலங்கா இராணுவம் ஆரம்பித்தது இங்கு குறிப்பிடத்த்கது.

விடுதலைப்புலிகளின் இந்த நடவடிக்கை வன்னியை மீட்பதற்காக விடுதலைப்புலிகள் மேற்கொண்ட ஓயாத அலைகள் 3 நடவடிக்கையே நினைவுபடுத்துகிறது. ஓயாத அலைகள் 3 ஒட்டுசுட்டானில் ஆரம்பமானது. ஓட்டுசுட்டான் பகுதியை கைப்பற்றிய படையணிக்கு கேணல் ஜெயம் தலைமை தாங்கி ஓயாத அலைகள் 3ஐ ஆரம்பித்து வைத்தார். தற்பொழுது கேணல் ஜெயம் கிழக்கில் நிற்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய நடவடிக்கையில் விடுதலைப்புலிகள் பல இடங்களை அதி வேகமாக மீட்டபடி முன்னேறி வருகிறார்கள். ஒட்டுசுட்டானில் ஆரம்பித்த ஓயாத அலைகள் 3 வன்னி மண்ணை மீட்டு ஆனையிறவையும் கைப்பற்றும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. அதே போன்று மூதூரை நோக்கிய இந்த படை நடவடிக்கை எவ்வாறான சாதனைகளை எல்லாம் நிகழ்த்தப்போகிறது என்பதை இப்போதே சொல்வது மிகக் கடினமே.

செய்தி ஆய்வு தொடரும்.................

http://www.webeelam.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.