Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழவிடுதலைப் போரட்டம் இல்லாமல் போயிருந்தால் இந்தியாவிலும் இந்தியாவுக்கு வெளியே இருக்கின்ற தமிழர்களுக்கும் இன உணர்வு ஏற்பட்டிருக்காது -தங்கப்பர்ச்சன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தாய் மண்ணுக்காக தோற்றுப்போன தங்கப்பர்ச்சன் – தமிழ் அவுஸ்திரேலியன்க்கு விசேட செவ்வி

[News Published On: Wed, Jun 19th, 2013 at 8:35 pm]

CleanPrintIcn_16x16.pngPdfIcn_16x16.pngEmailIcn_16x16.png

 

ஈழத்தில் தமிழர்களின் அவலங்களையும், விடுதலையின் தேவையையும் வெளிப்படுத்த 2002 இல் நான் ஈழத்திற்கு நேரில் சென்று மக்களின் அவலங்களையும் போரின் பாதிப்பையும் அறிந்துகொண்டேன். அதுமட்டுமல்லாமல் பல நாடுகளுக்கும் சென்று எமது மக்களைச் சந்திதேன் பலவகையான செய்திகளைத் திரட்டி திரைக்கதை ஒன்றை உருவாக்கினேன். அதற்கு ”தாய் மண்” என்று தலைப்பிட்டு திரைப்படமாக்க பலரையும் அணுகினேன். யாரும் முன்வரவில்லை அதில் தோற்றும் போனேன் என்கிறார் தங்கபர்ச்சன்…

அண்மையில் அவுஸ்ரேலியாவுக்கு வருகைதந்த வேளையில் உங்களுக்காக எங்களுடன் கதைத்த வேளையில்…..

Thangar2.jpg

ஈழத்தமிழர்கள் தங்களின் அடையாளத்தை பாதுகாக்கப் போராடிக்கொண்டிருக்கின்ற போக்கைப் பார்த்து நான் பிரமிக்கின்றேன். இதனைப் பார்த்து இந்தியத் தமிழர்களும் இதனோடு சேர்ந்திருக்கிறார்கள். ஒரு இனம் தனது மொழியைப் பாதுகாக்க வேண்டும் அதை அவுஸ்ரேலியாவிலும், கனடாவிலும் பிரித்தானியாவிலும் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர் செய்து கொண்டிருக்கின்றார்கள். ஈழவிடுதலைப் போரட்டம் இல்லாமல் போயிருந்தால் இந்தியாவிலும் இந்தியாவுக்கு வெளியே இருக்கின்ற தமிழர்களுக்கும் இந்த உணர்வு ஏற்பட்டிருக்காது. புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ் பள்ளிகளை நிறுவி, தமிழ் சங்கங்கள் அமைத்து தமிழ் வளர்க்கப் பாடுபடுவது மிகவும் சந்தோசத்தை தருகிறது.

இந்திய அரசியல் தலைவர்களும் சினிமாக்கரார்களும் சுயநலவாதிகளே….

தயவுசெய்து இந்திய அரசாங்கத்தையோ, தமிழ் நாட்டுத்தலைவர்களையோ, அரசியல் பிழைப்பு நடத்துகிறவர்களையோ நம்பி ஏமாந்து போகவேண்டாம். இந்திய அரசியல் என்பது பெரியார் போன்றவர்கள் அரசியல் நடாத்தியது போன்றில்லை, இவர்கள் கொடியும் காரும் கட்சித்தொண்டர்களும் குண்டர்களுமாக தங்களின் வருமானத்தைப் பெருக்கிக் கொண்டு இருக்கிறார்கள். ஒருவரை ஒருவர் மிரட்டிக் கொண்டு மக்களிடம் வாக்கு வேட்டையாட வழி சமைக்கிறார்கள். இதற்கு ஈழத்தமிழரின் துயரமும் பலிக்கடாவாக்கப்பட்டிருக்கிறது. டில்லி தமிழ்நாட்டு அரசியல் வாதிகளை நம்புவதுமில்லை, பயப்படுவதுமில்லை.

மே 17,18 காலப்பகுதிகளில் தமிழ் நாட்டுத் திரையரங்குகளில், வியாபாரநிலையங்களில் மக்கள் நிறைந்து தான் இருந்தனர். இப்படிப் பட்ட மக்களோ திரைத்துறையினரோ எந்தக் காலத்திலும் தமிழீழத்தை நோக்கிய போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்த முடியாது. திரைத்துறையினர் தங்களின் திரைப்படங்கள் புலம் பெயர்ந்த தேசங்களில் திரைக் காட்சிகள் நிறைய வேண்டும் என்றே மேடைகளில் உணர்ச்சி பொங்க பேசுகிறார்கள். வேறு ஒன்றும் இல்லை இந்த சினிமாக்காரரை நீங்கள் ஏன் நம்புகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினார் தங்கப்பர்ச்சன்

Thangar2.jpg

தமிழ் மொழி பற்றி…..

பத்து வருடங்கள் வாழ்ந்தாலும் பக்கத்து வீட்டுக்காரனின் பெயர் கூடத் தெரியாத வாழ்ககை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்  இந்த நிலையில் தமிழ் மொழிக்கு விழிப்புணர்வைத் தந்த பாரதியார், 28 வயதுக்குள் சினிமாப் பாடல் மூலம் பகுத்தறிவைத் தந்த பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம் போல் எங்களால் மொழிக்கு என் செய்விட முடியும்? ஆனாலும் உலகெல்லாம் உள்ள தமிழர்களை இணைக்கக் கூடிய பெரிய ஒரு கயிறு எமது மொழி. அந்த மொழிக்கு சிறந்த ஊடகங்கள் இருந்தால் தான் அந்த மொழி வளர்ச்சி அடையும், மொழி சிறப்பாக விதைக்கப் படும்போது எமது மக்களின் நாக்கில் இருந்து அழிந்து போகாமல் பாதுகாக்கப் படும் என்றார்..

http://www.tamilaustralian.com.au/web/2013/06/19/thankarbachchan-interview/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.